search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "young girl"

    • தமிழரசன் ராணுவ வீரராக ஜம்மு காஷ்மீரில் வேலை பார்த்து வருகிறார்.
    • முத்துமாரியை இரும்பு கம்பியால் தங்கராஜ் சரமாரியாக தாக்கினார்.

    நெல்லை:

    நெல்லை அருகே உள்ள இட்டேரியை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது60), தொழிலாளி. இவரது மகன் தமிழரசன் ராணுவ வீரராக ஜம்மு காஷ்மீரில் வேலை பார்த்து வருகிறார்.இவருடைய மனைவி முத்துமாரி (28).

    2-வது திருமணத்திற்கு முயற்சி

    தங்கராஜின் மனைவி இறந்து விட்டதால் 2-வது திருமணத்திற்கு முயற்சி செய்து வந்துள்ளார். இந்த நிலையில் தமிழரசன் விடுமுறையில் சொந்த ஊர் வந்தார். அவரிடம் வீட்டை தனது பெயரில் எழுதி கேட்டு தங்கராஜ் தகராறு செய்து வந்தார்.

    மேலும் தமிழரசன், முத்துமாரி ஆகியோர் சேர்ந்து தங்கராஜ் 2-வது திருமணம் செய்யக்கூடாது என்று கண்டித்தனர். இதனால் அவர் ஆத்திரம் அடைந்தார்.

    கொலை

    நேற்று முன்தினம் தமிழரசன் கடைக்கு சென்ற நேரத்தில் தங்கராஜ் வீட்டுக்கு சென்று முத்து மாரியை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கினார். இதில் மண்டை உடைந்து ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட முத்துமாரி பரிதாபமாக இறந்தார்.

    இதையடுத்து தப்பியோடிய தங்கராஜ் மீது கொலை வழக்குப் பதிவு செய்து போலீசார் தேடி வருகிறார்கள்.

    உறவினர்கள் 2-வது நாளாக போராட்டம்

    இதற்கிடையே முத்துமாரி உடல் பிரேத பரிசோதனைக்காக ஐகிரவு ண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு திரண்ட அவரது உறவி னர்கள், தங்கராஜை போலீ சார் கைது செய்ய வேண்டும், அதுவரை உடலை வாங்க மாட்டோம் என கூறி போராட்டத்தில் ஈடுபட்ட னர்.

    அவர்களிடம் இன்ஸ்பெக்டர் தில்லை நாக ராஜன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் உடன்பாடு ஏற்படவில்லை. இதைத்தொடர்ந்து 2-வது நாளாக உடலை வாங்க மறுத்து முத்துமாரியின் உறவினர்கள் இன்றும் போ ராட்டத்தில் ஈடுபட்டு ள்ளனர்.

    • குரூப் தேர்வுகளுக்காக பவித்ரா வீட்டில் இருந்து படித்து வந்தார்.
    • பவித்ரா கடந்த 3 நாட்களாக மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது.

    நெல்லை:

    டவுன் தர்மராஜாகோவில் தெருவை சேர்ந்தவர் ரவிராஜ். இவரது மகள் பவித்ரா(வயது 18) பிளஸ்-2 படித்து முடித்து விட்டு குரூப் தேர்வுகளுக்காக வீட்டில் இருந்து படித்து வந்தார்.

    தூக்கு போட்டு தற்கொலை

    இந்நிலையில் பவித்ரா நேற்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்தார். தகவலின்பேரில் சம்பவஇடத்திற்கு சென்ற போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பவித்ராவுக்கு கடந்த 3 நாட்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டதாகவும், இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இளம்பெண் தற்கொலை செய்தது ஏன்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • விசாரணை நடத்தப்படும் என்று உறுதி அளித்ததால் உறவினர்கள் கலைந்து சென்றனர்.

    உசிலம்பட்டி

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை அடுத்த கே.போத்தப்பட்டியைச் சேர்ந்தவர் அமர்நாத். இவரது மனைவி மீனா. இவர்களுக்கு 5 வயதில் ஒரு ஆண் குழந்தையும், 3 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்த குழந்தை களுக்கு இன்று (26-ந்தேதி) காதணி விழா நடத்த இருந்த னர்.

    இந்த நிலையில் நேற்று அமர்நாத் மது குடித்து விட்டு ஆடல் பாடல் நிகழ்ச்சியை பார்ப்பதற்கு சென்று விட்டதாக கூறப் படுகிறது. காதணி விழா நடைபெற இருந்த நிலையில் கணவர் பொறுப்பில்லாமல் சென்று விட்டதால் மீனா மனமுடைந்தார். அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுபற்றி தகவல் கிடைத்ததும் உசிலம்பட்டி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீனா உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    முன்னதாக மீனா சாவில் மர்மம் இருப்பதாக கூறி அவரது உறவினர்கள் ஆம்புலன்சில் உடலை ஏற்றவிடாமல் தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டனர். அவர்கள் இதுதொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று உறுதி அளித்ததால் உறவினர்கள் கலைந்து சென்றனர்.

    • விருதுநகர் அருகே தோட்டத்து கிணற்றில் இளம்பெண் ஒருவர் பிணமாக கிடந்தார்.
    • தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஒத்தையால் கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் கற்பகம். இவரது மகள் நதியா(வயது23).

    நர்சிங் முடித்துள்ள இவருக்கு மனநல பாதிப்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கற்பகம் வேலைக்கு செல்லு ம்போது மகளையும் உடன் அழைத்துச்சென்று வந்தார்.

    சம்பவத்தன்று கற்பகம் வேலைக்கு செல்லும்போது மகளை வருமாறு அழைத்துள்ளார். ஆனால் அதற்கு நதியா வரவில்லை என கூறி மறுத்து விட்டார். இதையடுத்து கற்பகம் அக்கம் பக்கத்தை சேர்ந்தவர்களிடம் மகளை பார்த்துக்கொள்ளுமாறு கூறி வேலைக்கு சென்று விட்டார்.

    இந்தநிலையில் வீட்டில் இருந்த நதியா திடீரென மாயமானார். இதுகுறித்து தகவல் அறிந்த கற்பகம் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால் கிடைக்கவில்லை.

    இதற்கிடையே அதே ஊரை சேர்ந்த அனந்த பத்மநாபன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்து கிணற்றில் நதியா பிணமாக கிடப்பது தெரியவந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த சாத்தூர் தாலுகா போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக அரசு ஆஸ்ப த்திரிக்கு அனுப்பி வைத்தனர். நதியா கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • துணிகளை மொட்டை மாடியில் காய வைத்துவிட்டு வீட்டுக்குள் வரும்போது 2 நபர்கள் வீட்டுக்குள் புகுந்து கத்தியை காட்டி மிரட்டி உள்ளனர்.
    • இந்நிலையில் திடீரென பவித்ராவுக்கு போன் வந்ததால் அதிர்ச்சி அடைந்த கொள்ளையர்கள் தப்பி ஓடிவிட்டனர்‌.

    புதுச்சேரி:

    தவளக்குப்பம் அடுத்த புதுக்குப்பம் வீரன் கோவில் தெருவை சேர்ந்தவர் அறிவழகன் (வயது 54). இவருக்கு ஒரு மனைவி 3 மகள்கள் உள்ளனர்.

    இவரது மூத்த மகளை கல்பாக்கம் பகுதியில் திருமணம் செய்து வைத்துள்ளனர். அறிவழகன் அவரது மனைவி மற்றும் இளைய மகள் ஆகிய 3 பேரும் மூத்த மகளை பார்க்க சென்று விட்டனர். மற்றொரு மகளான பவித்ரா (வயது 22) வீட்டில் தனியாக இருந்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் துவைத்த துணிகளை மொட்டை மாடியில் காய வைத்துவிட்டு வீட்டுக்குள் வரும்போது 2 நபர்கள் வீட்டுக்குள் புகுந்து கத்தியை காட்டி மிரட்டி உள்ளனர்.

    பின்னர் அந்தப் பெண்ணை கையும் காலும் கட்டி வாயில் துணியை வைத்து அழுத்தி கட்டிலுக்கு அடியில் தள்ளி விட்டதாக கூறப்படுகிறது. அவரிடம் இருந்த செயினை பறித்த போது அது கவரிங் நகை என்று தெரிந்தவுடன் அதை போட்டு விட்டனர்.

    பின்னர் வீடு முழுக்க நகை, பணம் ஏதாவது வைத்து இருக்கிறார்களா என்று தேடிப் பார்த்துள்ளனர்.

    ஆனால் நகை, பணம் ஏதும் இல்லை. இந்நிலையில் திடீரென பவித்ராவுக்கு போன் வந்ததால் அதிர்ச்சி அடைந்த கொள்ளையர்கள் தப்பி ஓடிவிட்டனர். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வந்த பவித்ரா சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்தபோது பவித்ரா கட்டப்பட்டிருப்பது தெரியவந்தது. உடனடியாக அவரை அப்பகுதி மக்கள் மீட்டனர். பின்னர் தவளக்குப்பம் போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சோதனை நடத்தினர்.

    மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணை கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்குஅனுப்பி வைத்தனர்.

    வீடுகளுக்கு மத்தியில் கடற்கரை ஓரமாக உள்ள வீட்டில் பட்டப்பகலில் பெண்ணை கட்டிப்போட்டு திருட முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • இளம்பெண்ணிடம் நகை பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    • அவர் கரிசல்பட்டியை சேர்ந்த மாரிமுத்து என தெரியவந்தது.

    திருமங்கலம்

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதியை சேர்ந்தவர் ஞானகுரு. இவரது மனைவி தங்கேஸ்வரி(வயது40). இவர்களது மகள் கவிதா. நேற்று திருநகரில் உள்ள தனது தந்தையை பார்ப்பதற்காக தங்கேஸ்வரி தனது மகளுடன் புறப்பட்டார். இதற்காக வத்திராயிருப்பில் இருந்து பஸ்சில் திருமங்கலம் வந்த அவர்கள் திருநகர் செல்ல பஸ்சுக்காக காத்திருந்தனர்.

    அப்போது திடீரென ஒரு வாலிபர் கவிதா அணிந்திருந்த 1 பவுன் நகையை பறித்துக் கொண்டு ஓடினார். உடனே அங்கு ஊருக்கு செல்வதற்காக காத்திருந்த விருதுநகரை சேர்ந்த சில போலீசார் விரைந்து செயல்பட்டு நகை பறித்த அவரை விரட்டிச்சென்று பிடித்தனர். திருமங்கலம் நகர் போலீசில் ஒப்படைக்கப்பட்ட அந்த நபரிடம் விசாரணை நடத்தியபோது, அவர் கரிசல்பட்டியை சேர்ந்த மாரிமுத்து(29) என தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.

    • பொது மக்கள் வாலிபர்களுக்கு தர்ம அடி கொடுத்தனர்.
    • கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி ஹைகிரவுண்ட் பகுதியில் இரவு நேரத்தில் வயதான பாட்டியிடம் 2 வாலிபர்கள் வாக்கு வாதம் செய்வதை சிலர் பார்த்தனர். அவர்கள் அருகில் சென்று விசாரித்த போது, 2 வாலிபர்களும் போதையில் இருப்பது தெரியவந்தது.

    இதனையடுத்து பாட்டியிடம் விசாரித்தபோது, அவர் ஒரு உணவகத்தில் தூய்மை பணி செய்வதாகவும் வேலை முடிந்து நள்ளிரவில் வீடு திரும்பும்போது இந்த வாலிபர்கள் பாலியல் சீண்டல் செய்ய முற்பட்டதாகவும் தெரிவித்தார்.

    இதை தொடர்ந்து பொது மக்கள் அந்த வாலிபர்களுக்கு தர்ம அடி கொடுத்தனர். மூதாட்டியிடம் வாக்கு வாதம் செய்தவர்கள், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் என்பதும் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. மது போதையில் இருந்த அவர்கள், நள்ளிரவில் தனியாக நடந்து சென்றது பருவ மங்கை என நினைத்து பாட்டியிடம் வம்பு செய்ததும் இந்த சம்பவத்தில் மேலும் 2 மாணவர்களுக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. அவர்களையும் அழைத்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

    இச்சம்பவம் கன்னியாகுமரி பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • ஐஸ்வர்யாவும், பிரைண்ட்நகர் 1-வது தெருவை சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவரும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
    • கணவன்-மனைவிக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி பிரைண்ட் நகர் 13-வது நகரை சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மனைவி சாந்தி (வயது47).

    இளம்பெண் தற்கொலை

    இவர்களது மூத்தமகள் ஐஸ்வர்யா (22). இவரும் பிரைண்ட்நகர் 1-வது தெருவை சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவரும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். சண்முகசுந்தரம் ஆட்டோ டிரைவராக உள்ளார்.

    திருமணத்திற்கு பின்னர் இவர்கள் 3 சென்ட் பகுதியில் வசித்து வந்தனர். இவர்களுக்கு நித்யா (1½) என்ற பெண் குழந்தை உள்ளது. கணவன்-மனைவிக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும் ஐஸ்வர்யாவுக்கு உடல்நலக்குறைவும் ஏற்பட்டுள்ளது.

    இதைத்தொடர்ந்து அவர் பிரைண்ட்நகர் 13-வது தெருவில் உள்ள தாய் வீட்டிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்றுள்ளார். நேற்று வழக்கம் போல சாந்தி உப்பளத்திற்கு வேலைக்கு சென்றுவிட்டார்.

    இந்நிலையில் வெறுப்படைந்த ஐஸ்வர்யா வீட்டில் இருந்த துக்குப்போட்டு தற்கொைல செய்து கொண்டார். வேலை முடிந்து சாந்தி வீட்டிற்கு வந்த போது, ஐஸ்வர்யா தூக்கிட்ட நிலையில் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    ஆர்.டி.ஓ. விசாரணை

    சம்பவ இடத்திற்கு டி.எஸ்.பி. சத்தியராஜ், தென்பாகம் இன்ஸ்பெக்டர் ராஜாராம், சப்-இன்ஸ்பெக்டர் கங்கைநாத பாண்டியன் மற்றும் போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் ஆகி 4 ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ. சஞ்சிவ்குமார் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது

    • விருதுநகர் மாவட்டத்தில் இளம்பெண் உள்பட 3 பேர் மாயமானார்கள்.
    • விருதுநகர் மேற்கு போலீசில் மகனை கண்டுபிடித்து தருமாறு புகார் அளித்தார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள குள்ளகவுண்டன்பட்டி இந்திரா காலனியை சேர்ந்த வர் சரவ ணன்(வயது38). இவரது மனைவி கற்பக வள்ளி. இவர்கள் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு 2 குழந்தைகளுடன் தாய் வீட்டுக்கு சென்றார். அங்கிருந்து ஏழாயிரம்பண்ணையில் உள்ள கடைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் மாயமானார். இந்த நிலையில் ஏழாயிரம்பண்ணை போலீஸ் நிலையில் மனைவியை கண்டுபிடித்து தருமாறு சரவணன் புகார் செய்தார். அதில் ரவிக்குமார் என்பவர் தனது மனைவிக்கு பழக்கம் இருந்ததாகவும், அவர் அழைத்து சென்றிருக்கலாம் என சந்தேகம் இருப்பதாகவும் கூறியுள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகாசி விஜயலட்சுமி காலனியை சேர்ந்தவர் திருவேட்டை(56), பட்டாசு தொழிலாளி. மதுரையில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றவர் மாயமானார். எங்கு சென்றார் என்பது தெரியவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து அவரது மனைவி ராஜேஸ்வரி அளித்த புகாரின்பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர் முத்தால்நகரை சேர்ந்தவர் தங்கவேல். இவரது மகன் வீரபெருமாள்(23). கட்டிடத்தொழிலாளியான இவர் வேலைக்காக ராஜபாளையம் சென்றார். இரவு 10 மணிக்கு உணவு சாப்பிட்டு கொண்டிருப்பதாக தந்தையிடம் போனில் தெரிவித்தார். அதன் பின்னர் போன் அணைந்து விட்டது.அதன் பின்னர் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை. நண்பரிடம் விசாரித்த போது வீட்டிற்கு சென்றதாக தெரிவித்துள்ளார். ஆனால் வீட்டிற்கு வரவில்லை. இதையடுத்து தங்கவேல் விருதுநகர் மேற்கு போலீசில் மகனை கண்டுபிடித்து தருமாறு புகார் அளித்தார். போலீசார் வீரபெருமாளை தேடி வருகின்றனர்.

    • கல்லூரி படிப்பை முடித்துவிட்டு பிரியா வீட்டில் இருந்து வந்தார்.
    • பிரியாவை அவரது பெற்றோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள கல்லூரணி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவரது மகள் பிரியா (வயது 24). இவர் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.

    இந்நிலையில் பிரியாவிற்கு அவரது பெற்றோர் திருமண ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் பிரியாவிற்கு அதில் உடன்பாடு இல்லாததால் கடந்த 24-ந்தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வயலுக்கு தெளிக்கும் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயக்கம் அடைந்தார்.

    சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்த பெற்றோர், பிரியா மயக்கநிலையில் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். நேற்று மாலை சிகிச்சை பலனளிக்காமல் பிரியா பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டைவிட்டு வெளியேறினார்.
    • 2 பேரும் மேஜர் என்பதால் சேர்ந்து வாழ எவ்வித இடையூறும் செய்யக்கூடாது என இரு வீட்டாரிடமும் எழுதி வாங்கிக்கொண்டனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா வடமதுரை அருகே உள்ள தென்னம்பட்டியை சேர்ந்தவர் பிரியா (வயது 23). கணிதவியல் பட்டதாரி. இவரை கடந்த 16ஆம் தேதி முதல் காணவில்லை என்று அவரது தந்தை வடமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதனை தொடர்ந்து பிரியா எங்கு சென்றார் என்பது குறித்து வடமதுரை போலீசார் விசாரணை செய்து வந்தனர்.

    இந்நிலையில் பிரியா வேடசந்தூர் ஆத்துமேட்டில் பூக்கடை வைத்திருக்கும் பி.ஏ. தமிழ் பட்டதாரியான மனோபாலாஜி (வயது 23) என்பவரை கடந்த 4 வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இந்த காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டைவிட்டு வெளியேறினார். பின்னர் தனது காதலனை மணப்பாறை அருகில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டார்.

    பின்னர் தங்கள் வீட்டிற்கு சென்றால் எப்படியும் பிரச்சினை செய்து பிரித்து விடுவார்கள் என நினைத்து மணக்கோலத்தில் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். வடமதுரை போலீசார் இருதரப்பு பெற்றோரையும் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 2 பேரும் மேஜர் என்பதால் அவர்கள் சேர்ந்து வாழ எவ்வித இடையூறும் செய்யக்கூடாது என இரு வீட்டாரிடமும் எழுதி வாங்கிக்கொண்டனர்.

    பிரியாவின் குடும்பத்தினர் தங்களுடன் வருமாறு அழைத்தபோதும் தான் கணவருடன் தான் செல்வேன் என அவர் உறுதியாக கூறினார். இதனையடுத்து காதல் ஜோடிகளை போலீசார் வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.

    • சாத்தூர் அருகே பட்டாசு வேலைக்கு சென்ற இளம்பெண் மர்மமான முறையில் இறந்தார்.
    • இந்த சம்பவம் தொடர்பாக சாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள சிந்தப்புலி கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகள் ராஜபாண்டி (வயது 33).இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவையில் உள்ள ஒரு மில்லில் வேலை பார்த்தார்.

    அப்போது எந்திரத்தில் சிக்கிய விபத்தில் இவரது கை ஊனமானது. அதே மில்லில் வேலை பார்த்த விஜய் என்பவரை திரு மணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மின்சாரம் தாக்கி விஜய் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து ராஜபாண்டி தனது 2 குழந்தைகளை அழைத்துக் கொண்டு சிந்தப்புலியில் உள்ள தாய் வீட்டுக்கு வந்து விட்டார். இங்கிருந்து அவர் வெற்றிலையூரணியில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று ராஜ பாண்டி வழக்கம்போல் வேலைக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென் றார். ஆனால் அவர் பட்டாசு ஆலைக்கு செல்லவில்லை. செல்போனும் சுவிட்ஆப் செய்யப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் ராஜபாண்டியை பல்வேறு இடங்களில் தேடி பார்த்த னர். இந்த நிலையில் சிந்தப்புலி -மேட்டமலை இடையே உள்ள உப்போடையில் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் ராஜபாண்டி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது 2 கால்களும் மடங்கிய நிலையில் இருந்தன. சில இடங்களில் காயங்கள் இருந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த சாத்தூர் போலீசார் சம்பவஇடம் வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக சாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜபாண்டி கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×