search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Worker killed"

    • ரெயில் மோதி தொழிலாளி பலியானார்.
    • தண்டவாளத்தை கடக்கும் போது ரெயில் மோதி இறந்தாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள புது நெடுங்குளம் கிரா மத்தை சேர்ந்தவர் முத்து மணி(வயது35). இவர் அதே பகுதியில் உள்ள கல் உடைக்கும் ஆலையில் பணி யாற்றி வந்தார். இவரது மனைவி சுப்புலட்சுமி.

    இந்தநிலையில் இன்று காலை முத்துமணி வீட்டில் இருந்து அருகில் உள்ள வடகரை தண்டவாள பகுதிக்கு சென்றதாக கூறப் படுகிறது. அப்போது அந்த வழியாக வந்த ரெயில் முத்துமணி மீது மோதியது. இதில் உடல் சிதறி அவர் சம்பவ இடத்திலேயே பரிதா பமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த விருதுநகர் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    முத்துமணி குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொ ண்டாரா? அல்லது தண்ட வாளத்தை கடக்கும் போது ரெயில் மோதி இறந்தாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • அலங்காநல்லூர் அருகே லாரி மோதி தொழிலாளி பலியானார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே குமாரத்தை சேர்ந்தவர் ஜெயசூர்யா (வயது25), கட்டிட தொழிலாளி. இவர் இரு சக்கர வாகனத்தில் பாசிங்காபுரம் பகுதியில் இருந்து குமாரம் நோக்கி வந்து கொண்டிருந்தார். ரங்கராஜபுரம் அருகே வந்தபோது எதிரே வந்த சரக்கு லாரி ஜெயசூர்யா ஓட்டி வந்த பைக் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    இச்சம்பவம் குறித்து அலங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    • மொபட்டில் சோலார் நோக்கி சென்று கொண்டி ருந்தார்.
    • சாலையோரம் நின்றிருந்த சரக்கு வாகனம் மீது பயங்கரமாக மோதியது.

    ஈரோடு:

    ஈரோடு அடுத்த சின்னி யம்பாளையத்தை சேர்ந்த வர் சதீஷ் குமார் (31). இவர் ஈரோடு பொன் வீதியில் உள்ள நகை கடையில் வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் சம்பவத்த ன்று இரவு 8 மணியளவில் வேலை முடிந்து தனது மொபட்டில் சோலார் நோக்கி சென்று கொண்டி ருந்தார்.

    அப்போது மோள கவுண்டன் பாளையம் பகுதியை கடக்க முற்பட்ட போது சதீஷ்குமாரின் மொபட் எதிர்பாராத விதமாக சாலையோரம் நின்றிருந்த சரக்கு வாகனம் மீது பயங்கரமாக மோதியது.

    இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த சதீஷ் குமாரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு சதீஷ்குமார் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இச்சம்பவம் குறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கணபதி (வயது 50). இவர் நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில்பராமரிப்பு துப்புரவாளராகப் பணியாற்றி வந்தார்.
    • இவர் வழியில், வேகத்தடையில் நிலைத்தடுமாறி கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தார்,சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்,

    கடலூர்:

    நெய்வேலியில் வட்டம் 13-ல் வசித்து வருபவர் கணபதி (வயது 50). இவர் நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்திற்கு சொந்தமான நீச்சல் குளத்தில் ஒப்பந்த அடிப்படையில் பராமரிப்பு துப்புரவாளராகப் பணியாற்றி வந்தார்.இந்நிலையில் தனது மோட்டார் சைக்கிளில் குறவன்குப்பத்திற்கு நேற்று புறப்பட்டுச் சென்றார். வேலுடையான்பட்டு கோயில் அருகே சென்றபோது வேகத்தடையில் நிலைத்தடுமாறி கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தார்.

    உடனடியாக அருகில் உள்ள பொதுமக்கள் அவரை மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த கணபதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இது குறித்து அவரது மனைவி செல்வி கொடுத்த புகாரின் பேரில் நெய்வேலி நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    சென்னையில் இருந்து ஏற்காட்டுக்குச் சென்ற கார் இவர்கள் மீது மோதியது. இதில் உத்திராணம் சம்பவ இடத்தில் உயிரிழந்தார் வெங்கடேசன் பலத்த காய மடைந்தார்

    கள்ளக்குறிச்சி :

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா ஆர்.ஆர். குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வெங்க டேசன், அவருடைய நண்பர் உத்திராணம். இருவரும் உளுந்தூர்பேட்டைக்கு சொந்த வேலையாக சென்று மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினர். அப்போது சென்னையில் இருந்து ஏற்காட்டுக்குச் சென்ற கார் இவர்கள் மீது மோதியது. இதில் உத்திராணம் சம்பவ இடத்தில் உயிரிழந்தார் வெங்கடேசன் பலத்த காய மடைந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் சப்-இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கிருந்த உத்தி ரானம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், படுகாய மடைந்த வெங்கடேசனை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை கைப்பற்றி, தப்பியோடிய டிரைவரை தேடி வருகின்றனர்.

    • உறவினர்கள் போலீசில் புகார் அளித்தனர்.
    • கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

    கோத்தகிரி,

    மேற்குவங்காளத்தை சேர்ந்தவர் சம்யூரி இஸ்லாம் (வயது40) கூலி தொழிலாளி. சம்பவத்தன்று இவர் குன்னூரில் இருந்து கோத்தகிரி கட்டபெட்டு பகுதியில் பணி செய்வ தற்காக அரசு பஸ்சில் சென்றார். பின்னர் அவர் இறங்கும் இடம் வந்தவுடன் பஸ்சில் இருந்து இறங்குவதற்க்காக ஓடும் பஸ்சின் படிக்கட்டு பகுதியில் வந்து நின்றார். அப்போது எதிர்பாராமல் நிலைதடுமாறி அவர் கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்ப்பட்டது. காயம் அடைந்த அவரை ஆம்புலன்ஸ் மூலம் குன்னூர் மருத்துவமனைக்கு அழைத்து சென்று மேல் சிகைச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து அவருடன் பணியாற்றிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • திருமங்கலத்தில் விபத்தில் பட்டாசு ஆலை தொழிலாளி பலியானார்.
    • இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    சிவகாசியை சேர்ந்தவர் மாரிச்சாமி (வயது50). பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வந்தார். இவர் தனது உறவினர்கள் கணேசன் மற்றும் போசுடன் காரியாபட்டியில் நடக்கும் திருமண நிகழ்ச்சிக்காக மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். ஆவல்சூரன்பட்டி அருகே வந்த போது அங்கிருந்த கண்மாய் பாலத்தில் ஏறிய போது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச்சுவரில் மோதியது. இதனால் மோட்டார் சைக்கிளில் இருந்த 3 பேரும் தூக்கி வீசப்பட்டு பாலத்திற்கு கீழே விழுந்தனர்.

    இதில் படுகாயமடைந்த மாரிச்சாமி சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து தகவலறிந்த கள்ளிக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாரிச்சாமி உடலை மீட்டு திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அருகில் காயங்களுடன் கிடந்த கணேசன், போஸ் ஆகியோரை மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இவர் இருசக்கர வாகனத்தில் பொர சப்பட்டு அருகில் உள்ள முனியப்பன் கோவில் பகுதியில் சென்று கொண்டிருந்தார்,
    • அங்கு எதிரே நடந்து வந்தவர் மீது எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் மோதியது.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே மூங்கில்துறைப்பட்டை அடுத்த ஈருடையாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் ஈசாக் (வயது 43) கூலி தொழிலாளி. இவர் இருசக்கர வாகனத்தில் பொர சப்பட்டு அருகில் உள்ள முனியப்பன் கோவில் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு எதிரே நடந்து வந்தவர் மீது எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஈசாக் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் அனு மதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ஈசாக் இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் மூங்கில்துறைப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அருப்புக்கோட்டை அருகே வாகனம் மோதிய விபத்தில் தொழிலாளி-மூதாட்டி பலியாகினர்.
    • இதுகுறித்து எம்.ரெட்டியபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள தும்மு சின்னம்ப ட்டியை சேர்ந்தவர் கோபால். இவரது மகன் இளையராஜா (வயது 27). இவர் அதே பகுதியில் உள்ள கல்குவாரியில் வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று மதியம் இவர் மோட்டார் சைக்கிளில் காளையார் கரிசல்குளத்தில் உள்ள ஓட்டலில் சாப்பாடு வாங்கி விட்டு புறப்பட்டார்.

    கரிசல்குளம் தொழிற்பயிற்சி கூடம் அருகே வந்தபோது அந்த வழியாக வந்த அடையா ளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் இளைய ராஜா தூக்கி வீசப்பட்டார்.

    படுகாயம் அடைந்த அவரை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இளையராஜா பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து எம்.ரெட்டியபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர் பெத்தனாட்சி நகரை சேர்ந்தவர் மாத வன். இவரது மனைவி பரமேஸ்வரி (66). இவர் சம்பவத்தன்று மதுரை ரோட்டில் உள்ள போக்கு வரத்து பணிமனை முன்பு கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த கார்பரமேஸ்வரி மீது மோதியது.

    இதில் படுகாயம் அடைந்த அவர் பரிதாபமாக இறந்தார். பாண்டியன் நகர் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

    • படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ேகாவை,

    கோவை மதுக்கரை அருகே உள்ள பாலத்துறையை சேர்ந்தவர் ஹரிதாஸ் (வயது 32). கூலித் தொழிலாளி. சம்பவத்தன்று இவர் வீட்டின் அருேக உள்ள முருங்கை மரத்தை வெட்டினார். அப்போது முருங்கை மரம் அந்த வழியாக சென்ற உயர் அழுத்த மின்சார வயர் மீது விழுந்தது. இதனை பார்க்காமல் ஹரிதாஸ் மரத்தை பிடித்து இழுத்தார். அப்போது கண்இமைக்கும் நேரத்தில் அவரை மின்சாரம் தாக்கி தூக்கி வீசியது. இதில் உடல் கருகிய அவர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்.இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் உயிருக்கு போராடிய ஹரிதாசை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே ஹரிதாஸ் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் மதுரையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒரு தொழிலாளி இறந்தார்.
    • இதனால் பட்டாசு ஆலை விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசியை அடுத்த செங்கமலபட்டியில் கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இங்கு அருகில் உள்ள கிராமங்களை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த 19-ந் தேதி பட்டாசு தயாரிக்கும் பணியில் திருத்தங்கல் மேலமாட வீதியை சேர்ந்த ரவி(வயது58), சாமுவேல் ஜெயராஜ் உள்பட தொழிலாளர்கள் வேலை பார்த்து கொண்டிருந்தனர்.

    அவர்கள் ஆலையில் உள்ள தனி அறையில் பட்டாசு தயாரிப்பதற்காக மருந்துகளை தயார் செய்து கொண்டிருந்தனர். அப்போது மருந்துகளுக்குள் உராய்வு ஏற்பட்டதால் திடீரென தீப்பிடித்தது.

    இதில் அங்கிருந்த பட்டாசுகள் வெடித்தன. இதன் காரணமாக கட்டிடம் இடிந்து தரைமட்டமாகியது. இதில் சிக்கிய ரவி படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த விபத்தில் சாமுவேல் ஜெயராஜூம் படுகாயமடைந்தார். இதுபற்றி தகவல் கிடைத்ததும் சிவகாசி தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

    சாமுவேல் ஜெயராஜை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

    இருந்த போதிலும் சிகிச்சை பலனிளிக்காமல் சாமுவேல் ஜெயராஜ் இன்று அதிகாலை பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விபத்தில் சிக்கிய ரவி ஏற்கனவே பலியான நிலையில் தற்போது சாமுவேல் ஜெயராஜூம் பலியாகிவிட்டார். இதனால் பட்டாசு ஆலை விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.

    • வீராசாமி ( வயது 23). இவர் பரமத்தி வேலூர் பகுதியில் உள்ள தனியார் லேத் பட்டறையில் வேலை பார்த்து வந்தார்.
    • தனியார் கல்லூரி அருகே சென்று கொண்டி ருந்தபோது, எதிர்பாராத விதமாக முன்னாள் சென்று கொண்டிருந்த லாரி மீது மோதினார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் அய்யாவு. இவரது மகன் வீராசாமி ( வயது 23). இவர் பரமத்தி வேலூர் பகுதியில் உள்ள தனியார் லேத் பட்டறையில் வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று இரவு, பரமத்தி வேலூரில் இருந்து சேந்தமங்கலத்திற்கு கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள தனியார் கல்லூரி அருகே சென்று கொண்டி ருந்தபோது, எதிர்பாராத விதமாக முன்னாள் சென்று கொண்டிருந்த லாரி மீது மோதினார்.

    இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த வீராசாமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே பலியானார். அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து பரமத்தி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் பரமத்தி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, வீராசாமி உடலை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×