என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி லேத் பட்டறை ஊழியர் பலி
- வீராசாமி ( வயது 23). இவர் பரமத்தி வேலூர் பகுதியில் உள்ள தனியார் லேத் பட்டறையில் வேலை பார்த்து வந்தார்.
- தனியார் கல்லூரி அருகே சென்று கொண்டி ருந்தபோது, எதிர்பாராத விதமாக முன்னாள் சென்று கொண்டிருந்த லாரி மீது மோதினார்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் அய்யாவு. இவரது மகன் வீராசாமி ( வயது 23). இவர் பரமத்தி வேலூர் பகுதியில் உள்ள தனியார் லேத் பட்டறையில் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு, பரமத்தி வேலூரில் இருந்து சேந்தமங்கலத்திற்கு கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள தனியார் கல்லூரி அருகே சென்று கொண்டி ருந்தபோது, எதிர்பாராத விதமாக முன்னாள் சென்று கொண்டிருந்த லாரி மீது மோதினார்.
இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த வீராசாமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே பலியானார். அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து பரமத்தி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் பரமத்தி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, வீராசாமி உடலை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்