search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "women"

    • சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தொடங்கி வைத்தார்.
    • தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் 17 ஆயிரம் பெண்களுக்கு உரிமைத்தொகை வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தில் விடுபட்ட பெண்களுக்கு 2-ம் கட்டமாக மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தொடங்கி வைத்தார்.

    அதன் தொடர்ச்சியாக, தஞ்சாவூர் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா நூற்றாண்டு அரங்கில் விடுபட்ட மகளிர்களுக்கு உரிமை தொகை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமையில் நடந்தது. மாவட்டம் முழுவதும் 17 ஆயிரம் பெண்களுக்கு உரிமை த்தொகை வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் எம்.பி.க்கள் கல்யாணசுந்தரம், ராமலிங்கம், எம்.எல்.ஏ.க்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், அண்ணாதுரை, தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், துணை மேயர்கள் அஞ்சுகம் பூபதி, தமிழழகன், ஊராட்சிக்குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, ஒன்றிய செயலாளர் முரசொலி, மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், கோட்டாட்சியர் இலக்கியா, தாசில்தார்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • பல பெண்கள் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சினைகளால் அவதிப்படுகிறார்கள்.
    • பெண்கள் தங்களுடைய உடல்நலனில் கவனம் செலுத்துவது இல்லை.

    குடும்பத்தினரின் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொள்ளும் பெண்கள் பலரும், தங்களுடைய உடல்நலனில் கவனம் செலுத்துவது இல்லை. இதனால் குறிப்பிட்ட வயதிற்கு பின்பு பல பெண்கள் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சினைகளால் அவதிப்படுகிறார்கள். இவற்றை தடுக்க பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள்.

    மனநலம்:

    உளவியல் ரீதியாக ஆண்களை விட பெண்கள், மனச்சோர்வு மற்றும் பதற்றத்தால் அதிக அளவில் பாதிக்கப்படுவதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மனச்சோர்வு, பெண்களுக்கு ஏற்படும் பொதுவான பிரச்சினையாக மாறி வருகிறது. கர்ப்ப காலத்திலும், அதற்கு பிறகும் இந்த விஷயத்தில் பெண்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஆனால், பலரும் இதை சாதாரணமாக எடுத்துக்கொள்கின்றனர்.

    அடிக்கடி மனச்சோர்வு, பதற்றம் ஏற்பட்டால் ஆரம்ப நிலையிலேயே உரிய மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். இதனை அலட்சியப்படுத்தினால் நாளடைவில் குடும்ப வாழ்க்கையிலும் பாதிப்பு ஏற்படக்கூடும். எனவே 2 வாரங்களுக்கு மேல் மனச்சோர்வு சார்ந்த பிரச்சினைகள் இருப்பதை உணர்ந்தால், அதை புறக்கணிக்காமல் மருத்துவரை அணுகுவது நல்லது.

    இதய நோய்கள்:

    சமீபத்தில் நடந்த ஆய்வு ஒன்றில், வாழ்க்கை முறை மாற்றத்தால் ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கும் அதிக அளவில் மாரடைப்பு ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது. சிறு சிறு அறிகுறிகளை கவனிக்காமல் பெண்கள் அலட்சியம் காட்டுவதுதான் இதற்கு முக்கிய காரணமாகும். மாரடைப்பு ஏற்படும்போது ஆண்களைப்போல இல்லாமல், பெண்களுக்கு வேறுவிதமான அறிகுறிகள் தென்படும்.

    நெஞ்சுவலி. மூச்சுத் திணறல், குமட்டல், வாந்தி, முதுகு, கழுத்து அல்லது தாடை வலி போன்ற அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை அணுக வேண்டியது அவசியமானது.

    தூக்கமின்மை:

    உடலில் ஏற்படும் பல்வேறு நோய்களுக்கும் அடிப்படை காரணமாக இருப்பது தூக்கமின்மை. இதயநோய், உடல் பருமன் மற்றும் மனச்சோர்வு போன்ற பாதிப்புகள் இதனால் ஏற்படுகின்றன. பெரியவர்களுக்கு இரவில் 7 முதல் 8 மணி நேர ஆழ்ந்த தூக்கம் அவசியமானது. தியானம், யோகா, மிதமான உடற்பயிற்சிகள் செய்வது. வெந்நீரில் குளிப்பது, நடைப்பயிற்சி மேற்கொள்வது போன்றவை தூக்கத்தை மேம்படுத்துவதற்கான எளிய வழிகளாகும்.

    மருத்துவ பரிசோதனைகள்:

    பெண்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் தேவையான மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். இதன்மூலம் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சினைகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து குணப்படுத்த முடியும். வயதை பொறுத்தும் சில பரிசோதனைகளை பெண்கள் கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்.

    கர்ப்பப்பை வாய்ப்புற்றுநோயை கண்டறிவதற்கான பேப் ஸ்மியர் சோதனைகள், மார்பக புற்றுநோயை கண்டுபிடிக்கும் மேமோகிராம் பரிசோதனை, ரத்த அழுத்த பரிசோதனைகள், எலும்பு தேய்மானத்தை கண்டறிய உதவும் பரிசோதனைகள், கால்சியம் குறைபாடு, பாலியல் சார்ந்த தொற்றுகளை கண்டறிய உதவும் எஸ்.டி.டி. ஸ்கிரீனிங், குடல் மற்றும் வயிறு சார்ந்த பிரச்சினைகளை கண்டறிய உதவும் கொலோனோஸ் கோபி போன்ற பரிசோதனைகளை மருத்துவரிடம் ஆலோசனை பெற்று மேற்கொள்வது நல்லது.

    • புற்றுநோய் பெண்களுக்கு அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது.
    • ரத்தப் பரிசோதனை மூலம் கொழுப்பின் அளவை கண்டறியலாம்.

    குடும்ப நலன் நாடும் பெண்கள் தங்கள் நலனில் போதிய அக்கறை கொள்ளாததால் பல்வேறு உடல்நல பாதிப்புகளுக்கு ஆளாகிறார்கள். குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒருசில பரிசோதனைகளை மேற்கொள்வதன் மூலம் பெரிய அளவிலான ஆபத்தில் இருந்து தற்காத்துக்கொள்ள முடியும். அதற்கு செய்ய வேண்டிய சில பரிசோதனைகள் குறித்து பார்ப்போம்..

    புற்றுநோய்

    உயிருக்கு அச்சுறுத்தலாக விளங்கும் புற்றுநோய் பெண்களுக்கு அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது. அதிலும் பல பெண்கள் கருப்பை வாய் புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். இளம் வயது பெண்கள் கூட இந்த புற்றுநோயால் அவதிக்குள்ளாகிறார்கள். அதனால் 20 வயதை கடந்த பெண்கள் கருப்பை வாய் புற்றுநோய் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

    மார்பக புற்றுநோயும் வயது வித்தியாசமின்றி பாதிப்பை ஏற்படுத்துவதால் அதற்குரிய பரிசோதனையையும் அவசியம் மேற்கொள்ள வேண்டும். 40 வயதை கடந்த பெண்கள் மார்பக புற்றுநோய்க்கான மேமோகிராம் சோதனையை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை செய்து கொள்வது நல்லது.

    கொழுப்பு பரிசோதனை

    ரத்தத்தில் கெட்ட கொழுப்பு அதிகம் சேர்ந்தால், பல்வேறு வகையான பிரச்சினைகள் ஏற்படலாம். அதனால் குறிப்பிட்ட காலகட்டத்தில் கொழுப்பு அளவை கண்டறிய வேண்டியது அவசியமானது. சாதாரண ரத்தப் பரிசோதனை மூலமே கொழுப்பின் அளவை கண்டறிந்துவிடலாம். அதனால் 5 ஆண்டு களுக்கு ஒருமுறையாவது கொழுப்பு பரிசோதனை மேற்கொள்ள வேண்டியது அவசியமானது. 20 வயதை கடந்த பெண்கள் இந்த பரிசோதனையை மேற்கொள்வது நல்லது.

    தைராய்டு பரிசோதனை

    கழுத்து பகுதியில் அமைந்திருக்கும் தைராய்டு சுரப்பியின் முக்கியமான பணி, தைராக்சின் என்ற ஹார்மோனை சுரப்பதுதான். இந்த ஹார்மோன் சுரப்பு அதிகமானால் ஹைப்பர் தைராய்டிசம், குறைந்தால் ஹைப்போ தைராய்டிசம் என்ற பாதிப்பு உண்டாகும். ஆரம்ப நிலையிலேயே தைராய்டு சுரப்பியின் செயல்பாடுகளில் ஏற்படும் மாற்றத்தை கண்டறிந்தால் மருந்துகளின் மூலம் குணப்படுத்திவிட முடியும்.

    கழுத்தில் வீக்கம் அல்லது கட்டி இருந்தால் அது பெரும்பாலும் தைராய்டு கட்டியாக இருக்க வாய்ப்புள்ளது. குறிப்பிட்ட இடைவெளியில் பரிசோதனை செய்வதன் மூலமே கண்டறிய முடியும். ஆரம்ப நிலையிலேயே பரிசோதனை செய்துவிட்டால் நோய் பாதிப்பின் வீரியத்தை கட்டுப்படுத்திவிடலாம்.

    கண்பார்வை பரிசோதனை

    பெண்கள் பலரும் கண் பார்வை பரிசோதனை மேற்கொள்வதற்கு ஆர்வம் காட்டுவதில்லை. அதன் அவசியத்தை புரிந்து கொள்வதுமில்லை. கண் பார்வையில் சிறு குறைபாடு தென்படும்போதே கவனம் செலுத்தாமல் அலட்சியப்படுத்திவிடுகிறார்கள்.

    நாளடைவில் கண் பார்வை குறைபாடு பிரச்சினை அதிகரிக்க தொடங்கிவிடுகிறது. ஆண்டுக்கு ஒருமுறையாவது கண் பரிசோதனை மேற்கொள்வது நல்லது. கண்ணாடி அணியுமாறு மருத்துவர் பரிந்துரைத்த நபர்கள் 6 மாதங்களுக்கு ஒரு முறை பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.

    எலும்பு அடர்த்தி சோதனை

    எலும்புகள் பலவீனம் அடைந்தால் ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் நோய் பாதிப்பை எதிர்கொள்ள நேரிடும். எலும்புகளின் அடர்த்தியில் மாறுபாடு ஏற்படும்போது கடுமையான விளைவுகளை அனுபவிக்க நேரிடும். எலும்பின் அடர்த்தியை முன்கூட்டியே பரிசோதனை செய்து அறிந்து கொண்டால் இந்த நோய் பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்ள முடியும்.

    பெண்கள் 5 வருடங்களுக்கு ஒருமுறை இந்த பரிசோதனையை மேற்கொள்வது நல்லது. அதிலும் 65 வயதை கடந்த பெண்கள் கட்டாயம் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மாதவிடாய் நிற்கும் காலகட்டமான மெனோபாஸ் சமயத்தில் கட்டாயம் பரிசோதனை செய்ய வேண்டும்.

    • ஆர்.டி.ஓ. மூலம் கள ஆய்வு செய்து விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
    • இதனை ஏற்று பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கட்கிழமை அன்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறுவது வழக்கம்.

    நேற்று கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்க கூட்டத்தில் கலெக்டர் மகாபாரதி, டிஆர்ஓ. மணிமேகலை ஆகியோர் மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று அதற்குரிய பதிலை அளித்தனர்.

    கூட்ட அரங்கில் மனு கொடுக்க வந்த மக்கள் மற்றும் அதிகாரிகள் கூட்டம் நிரம்பி வழிந்த நிலையில் 60க்கும் மேற்பட்ட பெண்கள் ஒரே நேரத்தில் கூட்ட அரங்கிற்குள் நுழைந்து கலெக்டரை முற்றுகையி ட்டனர்.

    தொடர்ந்து தங்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்கா ததால் உடனடியாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். போலீசாரால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையில் கலெக்டர் மகாபாரதி பெண்களிடம் தங்களது விண்ணப்பங்கள் பரிசீலனையும் உள்ளது.

    ஆர்.டி.ஓ. மூலம் கள ஆய்வு செய்து விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

    இதனை ஏற்று பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    மயிலாடுதுறை மாவட்டத்தில் விண்ணப்பித்த பத்தாயிரத்திற்கும் மேற்ப ட்டோருக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்காமல் மறு விண்ணப்பம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    அந்த குறிப்பிட்ட காலகட்டத்தில் பதிவு செய்ய தாமதமா னவர்களை உடனடியாக பதிய பதிவு செய்யப்படும் என உத்தரவிட்டனர்.

    • 50-க்கும் மேற்பட்டோருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. அதில் அனைவரும் வீடு கட்டி வசித்து வருகின்றனர்.
    • அதில் 20-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு அப்பகுதியில் உள்ள கோவில் நிலம் வழியாக சென்று வந்ததாக கூறப்படுகிறது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா சோழசிராமணி அண்ணா நகர் பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 50-க்கும் மேற்பட்டோருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. அதில் அனைவரும் வீடு கட்டி வசித்து வருகின்றனர். அதில் 20-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு அப்பகுதியில் உள்ள கோவில் நிலம் வழியாக சென்று வந்ததாக கூறப்படுகிறது. இந்த கோவில் இடத்திற்கு தற்போது கம்பி வேலி அமைத்து வழக்கமாக செல்லும் பாதை மறிக்கப்பட்டதால் அப்பகுதியில் வசித்து வரும் மக்கள் செல்ல முடியாமல் சிரமம் அடைந்துள்ளனர்.

    இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் நாமக்கல் மாவட்ட கலெக்டர் உள்ளிட்டோருக்கு மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் உடனடியாக அந்த கம்பி வேலியை அகற்ற வலியுறுத்தி ஜேடர்பாளையம்- திருச்செங்கோடு பிரதான சாலையில் 30-க்கும் மேற்பட்ட பெண்கள் திடீர் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்து வந்த வருவாய்த்துறை மற்றும் போலீஸ் துறை அதிகாரிகள் அவர்களுடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இந்த சாலை மறியலால் ½ மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    • குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • விக்கிரமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன், காமாட்சி உள்பட போலீசார் மறியலில் ஈடு பட்ட பெண்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் சோழ வந்தான் அருகே உள்ள செல்லம்பட்டி ஒன்றியம் விக்கிரமங்கலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கீழப்பட்டி கிராமத்தில் கடந்த சில மாதங்களாக குடிநீர் சரியாக கிடைக்க வில்லை.

    இது குறித்து பல முறை ஊராட்சி மன்ற தலைவர் பூங்கொடி பாண்டியிடம் புகார் கொடுக்கப்பட்டது. இதன் பேரில் ஊராட்சி நிர் வாகம் சார்பில் அருகில் உள்ள கம்மாயில் போர் வெல் போட்டு குடிநீர் எடுக்க ஏற்பாடு செய்தனர்.

    இதில் தனிநபர் ஒருவர் குடிநீர் எடுக்கக் கூடாது என்று தகராறு செய்ததாக வும் இதனால் இக்கிராமத் திற்கு குடிநீர் கிடைக்காமல் இப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் இன்று காலை கீழப்பட்டி அரசு பள்ளி மெயின் ரோட்டில் காலி குளத்துடன் பெண்கள் மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து விக்கிரமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் முருகே சன், காமாட்சி உள்பட போலீசார் மறியலில் ஈடு பட்ட பெண்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    இதில் குடிநீர் பிரச் சினைக்கு தீர்வு காணப்படும் என்று தெரிவித்ததன் பேரில் மறியலில் ஈடுபட்ட பெண்கள் மற்றும் கிராம பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    • சத்துணவு மாத விழாவில் கவர்னர் தமிழிசை பங்கேற்று பேசியதாவது:-
    • ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி ஜவகர் நகரில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறையின் கீழ் நடந்த சத்துணவு மாத விழாவில் கவர்னர் தமிழிசை பங்கேற்று பேசியதாவது:-

    மருத்துவர் என்ற முறையில் அனைவருக்கும் ஊட்டச்சத்து தேவை என்று சொல்வேன். உலக சுகாதார நிறுவனம் கூறுவது, இந்திய பெண்களில் 70 சதவீதம் பேர் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. நன்கு சாப்பிட்டால் போதும். தினமும் முருங்கை கீரை உட்பட ஒரு கீரை, காய்கறிகள்,வாழைத்தண்டு, சுரைக்காய் சாப்பிட வேண்டும்.

    விலை உயர்ந்ததுதான் சத்து என்று நினைக்காதீர்கள். கீரை, காய்கறிகளில் அதிக சத்து உள்ளது. ஆயிரம் ரூபாய் சத்து மாவுவிட முருங்கை கீரையில் அதிக சத்து உள்ளது. காய்கறிகளில் ஊட்டச்சத்து உள்ளது.

    தமிழக, புதுவை உணவு பழக்கத்துக்கு இணையாக வேறு உணவு பழக்கம் இல்லை. சோற்றுடன் முதலில் பருப்பு நெய், அடுத்து சாம்பார், ரசம், மோர், காய்கறிகள் சாப்பிடுகிறோம். இது சரிவிகித உணவு. நெய் நல்ல கொழுப்பு. பசுவிடம் இருந்து வரும் எதுவும் கெட்டது இல்லை. நல்ல பசும்பால் சாப்பிட்டால் யாரும் குண்டாக மாட்டார்கள்.

    உலகிலேயே சாப்பிட்டு விட்டு செரிக்க ரசம் சாப்பிடுவது இங்கு மட்டும்தான். உலகில் எங்கும் கிடையாது. முன்னோர் நன்கு சிந்தித்துள்ளனர். கரோனா வந்தவுடன் சாப்பிட சொன்ன விஷயங்கள் அனைத்தும் ரசத்தில் உள்ளது. இது தமிழகம், புதுவை தாண்டி எங்கும் இல்லை.

    எல்லா சத்தும் இருந்தாலும் ஆர்டர் செய்து பீட்சா பர்கர் சாப்பிடுகிறோம். நம் உணவை ஆர்டரா சாப்பிடாமல் ஆர்டர் போட்டு சாப்பிடுறோம். நம் உணவு பழக்கத்தை கடைபிடிக்கவேண்டும். கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் தர முதல் அமைச்சரிடம் சொல்லியுள்ளேன். கண்டிப்பாக கொடுக்கப்படும்.

    பெண்கள் நன்றாக சாப்பிட வேண்டும். எதை யாவது சாப்பிடக்கூடாது. ஊட்டச்சத்துடன் சாப்பிட வேண்டும். பெண்கள் சிறந்து இருக்க ஊட்டசத்து உணவு சாப்பிட வேண்டும். தியாகி போல் இருக்கக்கூடாது. அனைவரும் சாப்பிட்டு விட்டு மீதமுள்ளதை சாப்பிடக்கூடாது. பெண்கள் நன்றாக இருந்தால்தான் குடும்பத்தை காக்க முடியும்.

    யார் என்ன சொன்னாலும் சரியாக சாப்பிடுங்கள். வீட்டையும், நாட்டையும் பார்க்க வேண்டும் என்பதால் ஊட்டச்சத்து உணவு சாப்பிடுங்கள். பெண்கள் ருசித்து மகிழ்ச்சியாக சாப்பிடுங்கள். காலையில் பழையதில் இருக்கும் ஊட்டச் சத்து எதிலும் இல்லை.

    நானும் காலையில் பழையதுதான் சாப்பிட்டேன். புதுமை பெண்ணாக இருந்தாலும் நான் சாப்பிடுவது பழையதுதான். பூரி, வடை காலையில் சாப்பிடுவதை தவிருங்கள். உப்பு, எண்ணெய் குறையுங்கள.

    இவ்வாறு தமிழிசை பேசினார்.

    நிகழ்ச்சியில் எம்எல்ஏ சிவசங்கர், துறை இயக்குநர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

    • பெண்களை மீண்டும் விண்ணப்பிக்க சொல்வது ஏமாற்று வேலை என்று ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டினார்.
    • பூர்த்தி செய்யப்படாத அல்லது பூர்த்தி செய்யப்பட்டு தகுதி இல்லாத மனுக்களை எல்லாம் மேல்முறையீடு செய்யலாம் என்று சொல்லி வருகிறது.

    மதுரை

    மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் மேலக்கால் கச்சராயிருப்பு, தென்கரை ஆகிய பகுதிகளில் இளைஞர் பாசறை உறுப்பி னர் சேர்க்கை முகாம் நடை பெற்றது. ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமை தாங்கினார். முகாமை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதய குமார் தொடங்கி வைத்தார்.

    முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழரசன், மாணிக்கம், மாநில அம்மா பேரவை துணை செயலாளர் வெற்றிவேல், மாவட்ட அவை தலைவர் முருகன், மாநில எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளர் சிவசுப்பிரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-

    தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் அனைவருக்கும் மகளிர் உரிமை தொகை வழங்குவோம் என்று கூறியது. ஆட்சிக்கு வந்த பிறகு மகளிர் உரிமை தொகை திட்டத்தில் 2 கோடியே 20 லட்சம் மனுக்கள் விநியோகிக்கப் பட்டதாக செய்திகள் சொல்லப்படுகிறது. அதிலே பூர்த்தி செய்யப்பட்ட ஒரு கோடியே 60 லட்சம் மனுக்க ளில் ஏறத்தாழ 60 லட்சம் அரசின் சார்பிலே தள்ளு படி செய்யப்பட்டிருக்கிறது.

    தகுதி இல்லை என்கிற காரணத்தினால் தள்ளுபடி செய்திருப்பது பெண்களுடைய வேத னையை இந்த அரசு சம்பாதித்திருக்கிறது. தகுதி உள்ள மனுக்கள் என்று அரசால் ஏற்றுக்கொள்ளப் பட்டு அதில் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு இன்னும் முழுமையாக 100 சதவீதம் கொடுக்கப்படவில்லை என்கிற உண்மை தகவல் வெளியாகியுள்ளது.

    தற்போது 1 கோடியே 20 லட்சம் மனுக்கள் பூர்த்தி செய்யப்படாத அல்லது பூர்த்தி செய்யப்பட்டு தகுதி இல்லாத மனுக்களை எல்லாம் மேல்முறையீடு செய்யலாம் என்று சொல்லி வருகிறது.

    பொதுவாக ஏற்கனவே நிர்ணயித்த வருமானம், சொத்து, மின் கட்டணம் இவைகளில் எதாவது விதியை தளர்த்தினால் அதிலே பயனாளிகளை உள்ளே கொண்டு வரலாம்.ஏற்கனவே அரசு தகுதி இல்லை என்று அரசே தள்ளுபடி செய்துவிட்டு, தற்போது முழுக்க முழுக்க ஒரு மோசடியாக ஏமாற்று வேலையாக மக்களை அலைக்கழிப்பு செய்கிறது. இன்றைக்கு ஒரு கோடி ரூ.20 லட்சம் குடும்பங்கள் மட்டுமல்ல, 2 கோடி 20 லட்சம் பேருக்கு மகளிர் உரிமை தொகை திட்டத்தை தி.மு.க. அரசு வழங்க முடியும்.

    தேர்தல் வாக்குறுதியில் நாங்கள் ஒரு கோடி பேருக்கு தான் வழங்குவோம் என்று ஏன் கூறவில்லை? தற்போது முதலமைச்சர் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு உரிமை தொகை திட்டத்தை வழங்கி உள்ளோம் என்று கூறி யுள்ளார். ஆனால் இதில் 50 சதவீத மக்களுக்குத்தான் வழங்கப்பட்டுள்ளது முழுமையாக வழங்கப் பட்டது என்று முதலமைச்சர் கூறினால் மாவட்ட வாரியாக பட்டியலை வெளியிட தயாரா?

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முற்போக்கு கழக மாநாட்டில் தீர்மானம்
    • பெண்கள் அனைத்து பஸ்களிலும் இலவசமாக பயணிக்க அறிவிப்பு செய்ய வேண்டும்.

    புதுச்சேரி:

    அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தின் புதுவை மாநில 9-வது மாநாடு புதுவை தமிழ் சங்கத்தில் நடந்தது.

    மாநாட்டிற்கு மல்லிகா, மீனாட்சி, அற்புத மேரி தலைமை வகித்தனர். அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழக புதுவை மாநில செயலாளர் விஜயா வரவேற்றார். மாநாடை இந்திய கம்யூனிஸ்டு கட்சி மார்க்சிஸ்ட்டு - லெனினிஸ்ட் மாநில செயலர் புருஷோத்தமன் தொடங்கி வைத்தார். தேசிய தலைவர் டாக்டர் ரத்திராவ் சிறப்புரையாற்றினார். மத்திய கமிட்டி உறுப்பினர் முருகன், மாவட்ட செயலர் முருகன் ஆகியோர் பேசினர். வேலை அறிக்கையை மாநில செயலாளர் விஜயா சமர்பித்தார்.

    மாநாட்டில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    மகளிர் ஆணையத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். மகளிர் உரிமைத்தொகை அனைத்து பெண்களுக்கும் வழங்க வேண்டும். பெண்கள் அனைத்து பஸ்களிலும் இலவசமாக பயணிக்க அறிவிப்பு செய்ய வேண்டும்.

    உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும். ரேஷன்கடைகளை திறக்க வேண்டும். நகர்ப்புற வேலை உறுதி திட்டம் கொண்டுவர வேண்டும். பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை செயல்படுத்தும் வகையில் சட்ட திருத்தம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    • மகளிர் உரிமைத்தொகை பெற விண்ணப்பித்த 56.50 லட்சம் பெண்களின் மனுக்களை நிராகரித்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டினார்.
    • அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

    மதுரை

    மதுரையில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கி கூறியதாவது:-

    புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை 100 சதவீதம் நிறைவேற்றி னார்கள். கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாத அவல நிலையை உருவாக்கியுள்ளனர்.

    தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்குவோம் என்று ஸ்டாலின் கூறினார். ஆனால் தற்பொழுது ஒரு கோடியே 63 லட்சம் மக்களிடத்தில் மனுக்களை பெற்று இதில், ஒரு கோடியை 6 லட்சம் பேருக்கு தான் வழங்குவோம் என்று கூறியுள்ளனர். 56.50 லட்சம் மனுக்களை தள்ளுபடி செய்தனர் இதனால் விண்ணப்பித்த மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஒரு கோடியே 98 லட்சம் குடும்பங்களுக்கு மாதந்தோறும் 20 கிலோ அரிசி திட்டத்தை வழங்கினார். அதேபோல் அனைத்து குடும்பங்க ளுக்கும் மிக்சி கிரைண்டர் வழங்கினார். 52 லட்சம் மாணவர்களுக்கு மடிக்க ணினி வழங்கப்பட்டது. கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் அரசாக அதி.மு.க. அரசு இருந்தது .ஆனால் கொடுத்த வாக்கு றுதியை நிறைவேற்றாமல் முரண்பட்ட அரசாக தி.மு.க. ஆட்சி இருக்கிறது.

    கல்வி கடனை ரத்து செய்வோம், ஐந்து பவுன் நகைஅடகு வைத்தால் ரத்து செய்வோம், நீட் தேர்வை ரத்து கூறினார்கள் ஆனால் எதையும் நிறைவேற்ற வில்லை.

    அனைத்து மக்களையும் சமமாக பார்ப்பேன் என்று பதவி பிரமாணம் ஏற்றுஇன்றைக்கு இறையாண்மைக்கு எதிராக உதயநிதி பேசுவதால் அவரது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

    நான் டெல்டாக்காரன் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் இன்றைக்கு விவசாயிகளை நடுரோட்டில் நிற்க வைத்து விட்டார் .இன்றைக்கு சொத்து வரி உயர்வு, மின்கட்டண உயர்வு, இதற்கு தீர்வு காணாமல் அதை திசை திருப்ப சனாதனம் பற்றி உதயநிதி பேசுகிறார்.இதற்கு ஆதரவாக ஸ்டாலின் திராவிட தலைவர்களை ஒப்பிட்டு அறிக்கை வெளியிட்டு வருகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மகளிர் நல இலவச மருத்துவ முகாம் நடந்தது.
    • 20க்கும் மேற்பட்ட மருத்துவ பணியாளர்கள் கலந்து கொண்டு பெண்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கினர்.

    தேவகோட்டை

    தேவகோட்டை ரோட்டரி சங்கம், மதுரை குரு மருத்துவமனை இணைந்து மகளிர் நல இலவச மருத்துவ ஆலோசனை முகாமை நடத்தியது. முகாமினை முன்னாள் துணை ஆளுநர் கணேசன் தொடங்கி வைத்தார். ரோட்டரி சங்கத் தலைவர் ஊடிவயல் கதிரேசன் வரவேற்றார். குரு மருத்துவ மனை குழந்தையின்மை மற்றும் மகளிர் நல சிறப்பு மருத்துவர் டாக்டர் கல்பனா தலைமையில் சுமார் 20க்கும் மேற்பட்ட மருத்துவ பணியாளர்கள் கலந்து கொண்டு பெண்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கினர்.

    குழந்தை இல்லாதவர்கள், நீர்க்கட்டி, கர்ப்பப்பவை கட்டி, சினைப்பையில் கட்டி உள்ளவர்கள் கருமுட்டை குறைபாடு விந்தணு குறைபாடு கர்ப்பப்பை புற்றுநோய் அதிக ரத்தப்போக்கு மார்பக புற்று நோய் மற்றும் பல்வேறு குறைபாடுகள் உள்ளவர்கள் அதிக அளவில் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ரோட்டரி சங்க செயலாளர் திருவேங்கடம், பொருளாளர் ராமநாதன், கம்யூனிட்டி சர்வீஸ் சேர்மன் சந்திரசேகரன், நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • ஊராட்சிமன்ற அலுவலகம் முன்பு 2 பெண்கள் சாகும் வரை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.
    • இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள தளக்காவூர் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்னர் 100 நாள் வேலை வாய்ப்பு பணி வழங்காததை கண்டித்தும், ஓராண்டாக ஊதியம் வழங் கவில்லை எனக் கூறி இரு பெண்கள் சாகும் வரை உண்ணாவிரதம் போராட் டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    தளக்காவூரைச் சேர்ந்த நாச்சன்மை என்பவர், மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் 100 நாள் வேலை திட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி தனது உறவினர்கள் பெயர்களை விதிமுறைக்கு மீறி சேர்த் துள்ளதை உயர் அதிகாரி களுக்கு தெரிவித்தார்.

    இதைத் தொடர்ந்து, அவரை ஊராட்சி மன்றத் தலைவி தமிழ்ச்செல்வி 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட பணியில் இருந்து விடுபட்ட தாக கூறப்படு கிறது. இதே போல் கடந்தாண்டு 100 நாள் வேலை வாய்ப்பு திட் டத்தில் பணித்தள பொறுப் பாளராக பணியாற்றிய லட்சுமி என்பவருக்கு ஓராண்டாக ஊதியம் வழங் காததை கண்டித்தும், இரு பெண்களும் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தகவல் அறிந்து வந்த நாச்சியாபுரம் காவல்துறை யினர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    ×