search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊராட்சிமன்ற அலுவலகம் முன்பு 2 பெண்கள் சாகும் வரை உண்ணாவிரதம்
    X

    உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்களை படத்தில் காணலாம்.

    ஊராட்சிமன்ற அலுவலகம் முன்பு 2 பெண்கள் சாகும் வரை உண்ணாவிரதம்

    • ஊராட்சிமன்ற அலுவலகம் முன்பு 2 பெண்கள் சாகும் வரை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.
    • இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள தளக்காவூர் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்னர் 100 நாள் வேலை வாய்ப்பு பணி வழங்காததை கண்டித்தும், ஓராண்டாக ஊதியம் வழங் கவில்லை எனக் கூறி இரு பெண்கள் சாகும் வரை உண்ணாவிரதம் போராட் டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    தளக்காவூரைச் சேர்ந்த நாச்சன்மை என்பவர், மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் 100 நாள் வேலை திட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி தனது உறவினர்கள் பெயர்களை விதிமுறைக்கு மீறி சேர்த் துள்ளதை உயர் அதிகாரி களுக்கு தெரிவித்தார்.

    இதைத் தொடர்ந்து, அவரை ஊராட்சி மன்றத் தலைவி தமிழ்ச்செல்வி 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட பணியில் இருந்து விடுபட்ட தாக கூறப்படு கிறது. இதே போல் கடந்தாண்டு 100 நாள் வேலை வாய்ப்பு திட் டத்தில் பணித்தள பொறுப் பாளராக பணியாற்றிய லட்சுமி என்பவருக்கு ஓராண்டாக ஊதியம் வழங் காததை கண்டித்தும், இரு பெண்களும் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தகவல் அறிந்து வந்த நாச்சியாபுரம் காவல்துறை யினர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    Next Story
    ×