என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "woman killed"
கமுதி:
கமுதி அருகேயுள்ள அபிராமம் நகரத்தார் குறிச்சியைச் சேர்ந்தவர் செல்லப்பாண்டி (வயது 42). கூலி தொழிலாளி. இவரது மனைவி ராக்கி (38). இவர்களுக்கு ஒரு மகளும், 2 மகனும் உள்ளனர்.
கடந்த சில மாதமாக செல்லப்பாண்டி சரியாக வேலைக்குச் செல்லாமல் ஊர் சுற்றி வந்தார். இதனால் அவரால் வீட்டுச் செலவுக்கு பணம் கொடுக்க முடியவில்லை. கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இந்த நிலையில் ராக்கியின் நடத்தையில் செல்லப்பாண்டிக்கு சந்தேகம் ஏற்பட்டது. ராக்கியை அவதூறாக பேசினார்.
இந்த நிலையில் ராக்கி இன்று வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு ஆவேசமாக வந்த செல்லப்பாண்டி சரமாரியாக ராக்கியை அரிவாளால் வெட்டினார்.
இதைப்பார்த்த அவர்களது குழந்தைகள் அலறித்துடித்தனர். ரத்த வெள்ளத்தில் மிதந்த ராக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இந்த கொலை குறித்து அபிராமம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கமுதி போலீஸ் துணை சூப்பிரண்டு சண்முகசுந்தரம் உத்தரவின் பேரில் அபிராமம் இன்ஸ் பெக்டர் ஜெயராணி, சப்-இன்ஸ் பெக்டர்கள் முருகன், சித்ராதேவி மற்றும் போலீசார் விரைந்து சென்று ராக்கியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் தீவிர விசாரணை நடத்தி தலைமறைவாக இருந்த செல்லப்பாண்டியை கைது செய்தனர்.
வடபழனி குமரன் காலனியை சேர்ந்தவர் கோவிந்தம்மாள் (வயது 55). 7 ஆண்டுகளுக்கு முன்பு தனது மகன்களின் திருமணத்திற்காக நெசப்பாக்கம் பாரதி நகரைச் சேர்ந்த பூ வியாபாரி திருலோகசுந்தரியிடம் ரூ.1 லட்சம் பணம் மற்றும் ஒரு பவுன் நகை கடனாக வாங்கினார்.
கடன் பிரச்சினையால் தவித்து வந்த கோவிந்தம்மாள் பணத்தை திருப்பி செலுத்த முடியவில்லை. திருலோகசுந்தரி தொடர்ந்து பணத்தை கேட்டு வந்ததால் மன உளைச்சலில் இருந்த கோவிந்தம்மாள் நேற்று அதிகாலை நெசப்பாக்கத்தில் உள்ள திருலோகசுந்தரியின் வீட்டிற்கு சென்ற கோவிந்தம்மாள் திடீரென மண்எண்ணை ஊற்றி தீக்குளித்தார்.
இதில் படுகாயமடைந்த கோவிந்தம்மாளை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு கோவிந்தம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து எம்.ஜி.ஆர். நகர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
புதுச்சேரி:
மடுகரை பெரியகாலனி ராம்ஜி நகரை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவரது மகன் ஜெகன் (வயது34), வியாபாரி. இவர் நேற்று இரவு மேட்டுப்பாளையத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டு இருந்தார்.
ஏம்பலம் ரோட்டில் ஒரு தனியார் பெட்ரோல் பங்க் அருகே சென்ற போது எதிர்பாராதவிதமாக சாலையோரத்தில் இருந்த புளியமரத்தில் மோட்டார் சைக்கிள் அதிவேகமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஜெகன் தலையில் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அந்த வழியாக சென்றவர்கள் ஜெகனை மீட்டு கரிக்கலாம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி ஜெகன் இறந்து போனார். இந்த விபத்து குறித்து வில்லியனூர் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புனிதராஜ், உதவி சப்-இன்ஸ்பெக்டர் பில்டர் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வில்லியனூர் அருகே அரியூர் பாரதிநகரை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி சுலோசனா (வயது51). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். நேற்று சுலோசனா வெளியே சென்று விட்டு அங்குள்ள சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் சுலோசனா மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் சுலோசனா படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுகுறித்த புகாரின் பேரில் வில்லியனூர் போக்குவரத்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
பேரையூர்:
திருமங்கலத்தை அடுத்த டி.கல்லுப்பட்டி அருகே உள்ள சத்திரப்பட்டியைச் சேர்ந்தவர் பரமேஸ்வரன் விவசாயி. இவரது மனைவி மாரியம்மாள் (வயது 37). இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
இந்த நிலையில் சத்திரப்பட்டி பகுதியில் உள்ள இவர்களது தோட்டத்தில் மாரியம்மாள் கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.
இதுகுறித்து உடனடியாக டி.கல்லுப்பட்டி போலீசாருக்கு பரமேஸ்வரன் தகவல் கொடுத்தார். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து மாரியம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் பரமேஸ்வரன் தன்னுடைய மனைவியை தனது சகோதரர் சொத்துப் பிரச்சினை காரணமாக கொலை செய்திருக்கலாம் என சந்தேகம் உள்ளதாக போலீசிடம் புகார் கொடுத்துள்ளார்.
போலீஸ் விசாரணையில் கணவன்-மனைவிக்கு இடையே தகராறில் பரமேஸ்வரனே மனைவியை கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அரக்கோணம்:
அரக்கோணம் அருகே நாகவேடு காலனியை சேர்ந்தவர் தியாகராஜன் என்ற கோபி (வயது 38), காஞ்சீபுரத்தில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி வளர்மதி (31). இவர்களுக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகிறது. 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
நேற்று காலை தியாகராஜன் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டார். காலை 10.30 மணியளவில் வீட்டின் கழிப்பறையில் இருந்து அலறல் சத்தம் கேட்டது. அக்கம், பக்கத்தில் உள்ளவர்கள் சென்று பார்த்தபோது வளர்மதி தீயில் எரிந்த நிலையில் தீக்காயத்துடன் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த அரக்கோணம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா, சப்-இன்ஸ்பெக்டர்கள் விநாயகம், மணிவாசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் வளர்மதியின் தந்தை பொன்னுரங்கம் எனது மகள் சாவில் சந்தேகம் உள்ளது, அவரது சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசில் புகார் மனு கொடுத்தார். துணை போலீஸ் சூப்பிரண்டு எஸ்.கே.துரைப்பாண்டியன் புகார் மனு மீது தீவிர விசாரணை நடத்த போலீசாருக்கு உத்தரவிட்டார்.
விழுப்புரம்:
திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியை சேர்ந்தவர் மணி. இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 70). இவர் கடந்த 9-ந் தேதி திருவண்ணாமலையில் நடைபெற்ற தீபவிழாவை பார்க்க மன்னார்குடியில் இருந்து திருப்பதி செல்லும் பாமினி எக்ஸ்பிரஸ் ரெயிலில் திருவண்ணாமலை சென்றார்.
இவர் என்ஜினுக்கு அடுத்த பெட்டியில் அமர்ந்து பயணம் செய்தார். இந்த ரெயில் திருவண்ணாமலை ரெயில் நிலையம் சென்றடைந்தது. அப்போது அதில் பயணம் செய்த ராஜேஸ்வரி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.
இது குறித்து ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அங்கு விரைந்து சென்று ராஜேஸ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரி சோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் ராஜேஸ்வரியின் மகள் ரம்யா விழுப்புரம் ரெயில்வே போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தினர்.
விழுப்புரம்-திருக்கோவிலூர் இடையே ஓடும் ரெயிலில் யாரோ மர்ம மனிதர் அவரை கழுத்தை அறுத்து கொன்று விட்டு அவர் அணிந்திருந்த நகை மற்றும் 2 செல்போன்களையும் எடுத்து சென்றது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து கொலையாளியை பிடிக்க ரெயில்வே ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவின்பேரில் டி.ஐ.ஜி. செந்தில்குமாரி, போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார்தாகூர் ஆகியோர் மேற்பார்வையில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் திருச்சி சுப்பிரமணியன், மதுரை மன்னர்மன்னன் ஆகியோர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். மேலும் ‘சைபர்கிரைம்’ போலீசாரின் உதவியுடன் ராஜேஸ்வரியின் செல்போன் இருக்கும் இடம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் திருவண்ணாமலையில் அது இருப்பது கண்டறியப்பட்டது.
இதன் பின்னர் தனிப்படை போலீசார் திருவண்ணாமலை சென்றனர். அங்கு தேனிமலை பகுதியில் நின்ற ஒரு வாலிபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தார்.
அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை கூறினார். இதனால் போலீசார் அந்த வாலிபரை பிடித்து விழுப்புரம் ரெயில்வே போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரணையை மேற்கொண்டனர்.
அப்போது அவர் திருவண்ணாமலை மாவட்டம் தேனிமலை பள்ளிக்கூட தெருவை சேர்ந்த ஆனந்தன் (37) என்பது தெரிந்தது. மேலும் ராஜேஸ்வரியை கழுத்தை அறுத்து கொன்றதையும் அவர் ஒப்புக்கொண்டார். அதனை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.
அவர் போலீசில் ஆனந்தன் அளித்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-
நான் கூலித்தொழிலாளி. தினமும் திருவண்ணா மலையில் இருந்து விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு ரெயிலில் சென்று வேலை செய்து வந்தேன். சம்பவத்தன்று வேலை முடிந்து விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலை செல்லும் பாமினி எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்றேன். அப்போது நான் இருந்த பெட்டியில் மூதாட்டி ராஜேஸ்வரி மட்டும் தனியாக இருந்தார். அவர் மூக்குத்தி அணிந்திருந்தார். அதை பறிக்க திட்டமிட்டேன். பின்னர் நான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ராஜேஸ்வரியிடம் சென்று மூக்குத்தியை கழற்றி கொடு. இல்லையென்றால் குத்தி கொன்று விடுவேன் என்று மிரட்டினேன். ஆனால் அவர் மூக்குத்தியை கழற்றி கொடுக்க மறுத்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த நான் கழுத்தை அறுத்து கொன்றேன்.
பின்னர் அவர் அணிந்திருந்த ½ பவுன் மூக்குத்தியை பறித்தேன். மேலும் அவர் வைத்திருந்த 2 செல்போன்களையும் எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டேன். ஆனால், போலீசார் துப்பு துலக்கி என்னை கைது செய்து விட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனை தொடர்ந்து ஆனந்தனை போலீசார் விழுப்புரம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து ஆனந்தன் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
பாபநாசம்:
பாபநாசம் அருகே பண்டாரவாடை பார்வதிபுரம் அந்தோணியார் கோவில் தெருவைச் சேர்ந்த ஜோசப் மனைவி எலிசபெத்ராணி (வயது 51). இவருக்கு 3 மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில் அதே பகுதியில் வசித்து வரும் எலிசபெத் ராணியின் அண்ணன் மைக்கேல் தாசுக்கும், எலிசபெத் ராணி குடும்பத்தினருக்கும் குடும்ப பிரச்சனை காரணமாக முன் விரோதம் இருந்து வந்தது.
கடந்த 7-ந் தேதி மைக்கேல்தாஸ், அவருடைய மனைவி ஜெயமேரி, மகன் பவுல்ராஜ், மகள்கள் ஜாய்ஸ்மேரி, கில்ட்டா மேரி ஆகிய 5 பேரும் எலிசபெத்ராணியின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து அவரை தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த எலிசபெத்ராணி கும்பகோணம் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று காலை அவர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார்.
இதுகுறித்து எலிச பெத்ராணியின் மகன் செல்வமணி பாபநாசம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகரத்தினம், சப்-இன்ஸ்பெக்டர்கள் கலைச்செல்வன், உமாபதி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் ஆகியோர் வழக்குபதிவு செய்து மைக்கேல்தாஸ், ஜெயமேரி, பவுல்ராஜ், ஜாய்ஸ்மேரி ஆகிய 4 பேரையும் கைது செய்து பாபநாசம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட் ராஜசேகர் அவர்கள் 4 பேரையும் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். மேலும் தலைமறைவான கில்ட்டா மேரியை போலீசார் தேடி வருகிறார்கள்.
ஸ்ரீமுஷ்ணம்:
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அடுத்த அழகாபுரத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 33). இவரது மனைவி சரளா(30) இவர்களுக்கு திருமாணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. திருமணத்துக்கு பிறகு ஆறுமுகம் தனது மனைவியுடன் கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பை அடுத்த பாளையங்கோட்டை வடக்குபாளையத்தில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சரளாவிற்கு பெண் குழந்தை இறந்த நிலையில் பிறந்தது. அதன்பிறகு அவர் கர்ப்பம் ஆகவில்லை.
இதனால் ஆறுமுகம் சரளாவிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தார். இந்தநிலையில் கணவன்-மனைவிக் கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த ஆறுமுகம் தரையில் கிடந்த இரும்பு பைப்பால் சரளாவை சரமாரியாக தாக்கினார். இதில் படுகாயமடைந்த சரளாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனளிக்காமல் சரளா நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து சோழத்தரம் போலீசில் சரளாவின் தாய் சாரதாம்மாள் புகார் செய்தார். அதன்பேரில் சோழத்தரம் போலீசார் ஆறுமுகம் மீது கொலை வழக்குபதிவு செய்து அவரை கைது செய்தனர்.
கச்சிராயப்பாளையம்:
விழுப்புரம் மாவட்டம் கச்சிராயப்பாளையம் அருகே உள்ள பன்னிப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் பித்தன். கூலி தொழிலாளி. இவரது மனைவி ராமாயி (வயது 63).
நேற்று ராமாயி தனது மகன் சீனிவாசனிடம் அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று வருவதாக கூறி சென்றார். வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.
இதனால் கவலை அடைந்த சீனிவாசன் உறவினர் வீட்டுக்கு சென்று பார்த்தார். அங்கு அவரது தாய் இல்லை. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவரும், உறவினர்களும் ராமாயியை அக்கம் பக்கத்தில் தேடினர்.
இந்த நிலையில் பன்னிப்பாடி-முண்டியூர் செல்லும் சாலையில் காட்டுப்பகுதியில் ராமாயி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதனை தொடர்ந்து அவர்கள் கரியாலூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ராமாயியின் உடலை பார்வையிட்டனர். அவரது தலையில் பலத்த காயம் இருந்தது. மேலும் அவரது உடல் அருகே ரத்தம் படிந்த நிலையில் கல் ஒன்றும் கிடந்தது.
எனவே மர்ம மனிதர்கள் ராமாயியை தாக்கி அவரது தலையில் கல்லை போட்டு கொடூரமான முறையில் கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். மேலும் அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார்? முன்விரோதம் காரணமா? என்பது உள்பட பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பின்பு அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தலையில் கல்லை போட்டு பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்