search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sari"

    திருச்சி அருகே நெல் அறுவடை எந்திரத்தில் சேலை சிக்கியதில் பெண் தலை துண்டாகி துடிதுடித்து இறந்தார்.
    மண்ணச்சநல்லூர்:

    திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள ராசாம்பாளையம் மேலகொட்டம் பகுதியை சேர்ந்தவர் தமிழரசன். இவரது மனைவி சித்ரா (வயது 35). இவர் நெல் அறுவடை பணிக்கு சென்று வந்தார். 

    நேற்று மாலை மண்ணச்சநல்லூர் அருகே மேலசீதேவிமங்கலம் வயலில் நடைபெற்று வந்த அறுவடை பணியில் ஈடுபட்டார். அங்கு அறுவடை எந்திரம் மூலம் நெல் அறுவடை செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வந்தது. இந்தநிலையில் பணியில் ஈடுபட்டிருந்த சித்ராவின் சேலை திடீரென அறுவடை எந்திரத்தில் சிக்கிக் கொண்டது. அதனை எடுக்க முயல்வதற்குள் சித்ராவின் தலை எந்திரத்தில் சிக்கியதில் அவர் தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். எந்திரத்தின் சத்தம் அதிகமாக இருந்ததால், சித்ரா சிக்கியதை அங்கு பணியில் ஈடுபட்டிருந்த யாரும் கவனிக்க வில்லை. 

    இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்ததும் மண்ணச்சநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். 

    பின்னர் சித்ரா உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத் திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக அறுவடை எந்திரத்தின் டிரைவர் ராதாகிருஷ்ணனை கைது செய்தனர்.
    விளையாடும் போது தொட்டில் சேலை கழுத்தில் இறுகி சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சி டி.நல்லிக் கவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் ரவிந்திரன் (வயது 40). தொழிலாளி.

    இவரது மகள் ஸ்ரீசாதனா (9) அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று ரவிந்திரனும், அவரது மனைவியும் வேலைக்கு சென்றனர். வீட்டில் ஸ்ரீசாதனா தனது தம்பி மற்றும் உறவினர்களின் குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடினார். பாட்டி லோகநாயகி குழந்தைகளை கவனித்துள்ளார்.

    குழந்தைகள் வீட்டுக்குள்ளும், வெளியேயும் தொட்டில் கட்டி அதில் கால்களை இரு புறமும் போட்டவாறு அமர்ந்து சுற்றி, சுற்றி விளையாடியதாக தெரிகிறது.

    அப்போது வீட்டுக்குள் ஸ்ரீசாதனா விளையாடிக் கொண்டிருந்த தொட்டிலில் எதிர் பாராத விதமாக சேலை துணி அவரது கழுத்தில் இறுக்கியது. இதில் அவள் பரிதாபமாக இறந்தாள்.

    இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பாட்டி லோகநாயகி சத்தம் போட்டார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அவர்கள் ஸ்ரீசாதனாவை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஸ்ரீசாதனா இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பொள்ளாச்சி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலைக்கு உலைவைக்கும் இளையதலைமுறை மாற வேண்டும். இல்லாவிட்டால் தமிழ் இனப்பெண்களின் அடையாளமான சேலை காட்சிப்பொருளாகிப் போகும்.
    சேலை என்றாலே அதை நூலால் நெய்யப்பட்ட காந்தம் எனலாம். சேலைகள் பெண்களை மட்டுமல்ல ஆண்களையும் பெரிதும் கவர்கின்றது.

    என்ன தான் மெடி, சுடிதார், ஜீன்ஸ் என ஆயிரம் உடைகள் வந்தாலும், சேலை கட்டி வீதியில் உலாவரும் பெண்கள் வெளிப்படுத்தும் அழகே அழகுதான்.

    அதனால் தான் கவியரசு வைரமுத்து ‘சேலைச் சோலையே...’ என்று பாடி சேலையை சோலைக்கு ஒப்புமைப்படுத்தி மகிழ்கிறார். இன்னொரு கவிஞர்கூட, காஞ்சிப் பட்டு உடுத்திக் கஸ்தூரிப் பொட்டுவைத்து நேரில் தோன்றும் பெண்ணொருத்தி தேவதைபோல் தோற்றமளிப்பதாகப் புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.

    அன்றாடம் சேலையின் பெருமைகள் நமது செவிகளில் தேன் பாய்ச்சி கொண்டுதானே இருக்கிறது. அப்பேர்ப்பட்ட பெருமை பெற்ற சேலைகளுக்கு, அவை தோன்றி வளர்ந்து முழுமை பெற்றதற்கும் ஒரு வரலாறு உண்டு. அதைத் தெரிந்துகொள்ள நமக்கெல்லாம் ஆவல் பிறக்கிறதல்லவா?

    சேலை, சீலை, சீரை இந்த மூன்று சொற்களுமே பண்டைக்காலத்தில் துணி என்ற பொதுவான பொருளையே குறிப்பதாக விளங்கின. இப்போதுதான் அவை பெண்கள் தங்கள் இடையில் தொடங்கி உடல் முழுவதும் சுற்றிக்கொள்ளும், ஆடை வகையாகக் கருதப்படுகிறது.

    இந்தியப் பெண்கள் பின்பற்றும் சேலை அலங்காரம் உலகத்தில் உள்ள அனைத்துப் பெண்ணுடைகளிலும் தலைசிறந்ததாகப் புகழப்படுகின்றது.

    இந்தியாவில் பெண்கள், சேலை உடுத்திக்கொள்வது எப்போது தோன்றியது என்பதற்குச் சரியான ஆதாரங்கள் இல்லை. ஆனால் ஆதியில் பெண்கள் தங்கள் இடையில் சொருகிக் கொண்ட சிறுதுணி வளர்ச்சியடைந்து சேலையாக மாறி இருக்காலாம் என்று நம்பப்படுகிறது. ஆனால் பெண்கள் தற்போது அணியும் கண்ணைக் கவரும் சேலை முறை ஆரிய மக்கள் இந்தியாவிற்கு வருவதற்கு முன்னரே தோன்றியது என்பதை மட்டும் நிச்சயமாகச் சொல்லலாம்.

    பண்டைக்காலத்தில் நாகரிக வளர்ச்சி பெற்றிருந்த நாடுகளான சுமேரியா, அசிரியா, எகிப்து பகுதிகளில் (ஏறக்குறைய கி.மு. 3500-ம் ஆண்டு) பயன்படுத்தியிருக்கலாம் எனக் கணிக்கப்படுகிற ஒரு சேலை கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. அது இந்தியச் சேலை வகையைப் போலவே தோற்றமளிக்கிறதாம்.

    ஆதியில் பெண்கள், இடையை மறைக்க ஒரு துணியையும், மார்பை மறைக்க தாவணி போன்றதொரு துணியையும் பயன்படுத்தியிருக்கலாம். முந்தானை அணியும் முறை வேதகாலத்திலேயே உண்டாகியிருக்கலாம். தார்போட்டுக்கட்டும் பழக்கம் மத்திய இந்தியாவில் தோன்றி தென்னாட்டுக்குப் பரவியதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.



    டாக்டர் குரியே என்பவர் சேலையின் வளர்ச்சிக் காலத்தை மூன்று பிரிவாகப்பிரிக்கிறார். ஆதிகாலம் முதல் கி.மு. 320 வரை முதல் பிரிவு. இக்காலத்தின் இறுதியில் தோன்றிய சிற்பங்களும் இலக்கியங்களும் தார்போட்டுக்கட்டும் முறை, தார் போடாமல் கட்டும் முறை, சேலை ரவிக்கை அணியும் முறை ஆகிய மூன்று வகைகளில், பெண்கள் சேலையை உடுத்தி வந்ததாகச் சுட்டிக்காட்டுகின்றன.

    இரண்டாவது காலம் கி.மு. 320-ல் இருந்து கி.பி. 320 வரை. இக்காலத்தில்தான் முன்கொசுவம் வைத்துக் கட்டும்முறை, குடகு முறை பாவாடை-தாவணி அணியும் முறை ஆகியவை தோன்றியதாம்.

    மூன்றாவது பிரிவு கி.பி. 320-ல் இருந்து 1100 வரை உள்ள காலத்தை உள்ளடக்கியது. நிலப்பகுதியின் சூழ்நிலைக்கும், தட்ப வெப்பநிலைக்கும் ஏற்றாற்போல் சேலை அணியும் முறையில் பல மாறுதல்கள் தோன்றியது இக்காலத்தில் தான்.

    ராஜசேகரர் என்பவர் 10-ம் நூற்றாண்டில் இருந்து சேலை கட்டும் முறையை நான்கு வகைகளாகப் பிரித்திருக்கின்றார். ஒன்று, முன் கொசுவம் வைத்து, இடையில் உடுத்தி முந்தானையை இடத்தோளில் போட்டுக் கொள்ளுதல். இவற்றில் வங்காளம், குஜராத் பகுதிகளில் முந்தானை இடும் முறை மாறுபடுகின்றது.

    இரண்டாவதாக, தார் போட்டுக் கட்டும் முறை. இம்முறை மராட்டியத்திலும், மத்திய இந்தியாவிலும் அதிகமாக் காணப்படுகிறது. மூன்றாவது, பாவாடை, தாவணி அணியும் முறை. இதில் சேலையின் அளவு குறைந்தும், பாவாடை பெரியதாகவும் காணப்படும். அடுத்தது, ஆதிவாசிகளும், மலைவாழ் மக்களும் உடுத்தும் அகலம் குறைந்த சேலை முறை.

    இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும், ராஜசேகரர் கூறிய நான்கு முறைப்படிதான் சேலை கட்டும் முறை தற்போது நடைமுறையில் உள்ளது. ஆனால் எல்லா இடங்களிலும் தற்போது பெண்கள் ஒரே மாதிரி சேலை உடுத்துவதற்கு முயற்சித்து வருகின்றனர். தார்போட்டுக் கட்டும் பழைய முறைகள் முற்றிலும் இந்தியாவில் அழிந்துவிடவில்லை. ஆனால் முன் கொசுவம் வைத்துக் கட்டும் முறையையே இளம்பெண்கள் பெரிதும் விரும்புகின்றனர்.

    இறுதியாக புதுமைகள் விரும்பும் தமிழ் பெண்களுக்கு ஒரு செய்தி. சேலை என்பது நீங்கள் உடம்பில் சுற்றிக்கொள்ள உபயோகப்படுத்தும் ஆடைவகை மட்டுமல்ல. அது நமது பாரம்பரியம். அது நமது கலாசாரம். அது உங்களைத் தமிழ் இனப் பெண்கள் என்று உலகமே அறிந்து புரிந்து கொள்ளப் பயன்படும் அடையாளமும்கூட.

    தற்காலத்தில் பல்வேறு காரணங்களுக்காக அன்னிய முறை ஆடைகளையே பெரிதும் விரும்பி அணிகிறார்கள். புதுமைகளை வரவேற்க வேண்டியதுதான்.

    ஆனால், அவை நம் அடையாளங்களையே அழித்து ஒழித்துவிடக்கூடிய அளவுக்கு ஆதரவு கரம் நீட்டலாமா? சேலைக்கு உலைவைக்கும் இளையதலைமுறை மாற வேண்டும். இல்லாவிட்டால் தமிழ் இனப்பெண்களின் அடையாளமான சேலை காட்சிப்பொருளாகிப் போகும்.

    எழுத்தாளர் எல்.பிரைட்
    ×