search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "wishes"

    செழிப்பு மற்றும் நன்மதிப்பு நிறைந்த ஒளி மயமான எதிர்காலத்தை இந்த புத்தாண்டு கொண்டு வரும் என்று கவர்னர் பன்வாரிலால் புரோகித் வாழ்த்து தெரிவித்துள்ளார். #TNGovernor #Newyear
    சென்னை:

    கவர்னர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

    புத்தாண்டையொட்டி என்னுடைய இதயங்கனிந்த வாழ்த்துக்களை தமிழக மக்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். செழிப்பு மற்றும் நன்மதிப்பு நிறைந்த ஒளி மயமான எதிர்காலத்தை இந்த புத்தாண்டு கொண்டு வரும் என்று நம்புவோம். இது என்னுடைய அதீதமான நம்பிக்கை. மேலும் தமிழக மக்கள் இதுவரை உணர்ந்திராத மகிழ்ச்சியின் எல்லையை அடையவேண்டும் என்பது என்னுடைய விருப்பமாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #TNGovernor #Newyear
    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணுவின் பிறந்தநாளுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வாழ்த்து தெரிவித்துள்ளார். #Nallakannu #Thirunavukkarasar
    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

    இன்று பிறந்தநாள் காணும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணுவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை எனது சார்பிலும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பிலும் தெரிவித்துக் கொள்கிறேன். நல்லக்கண்ணு அரசியலில் நேர்மையானவர், தூய்மையானவர். அனைவரிடத்திலும் அன்பாக பழகும் சிறந்த பண்பாளர்.

    அவர் நல்ல உடல்நலத்துடன் நூற்றாண்டுக்கும் மேலாக வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டி, தொடர்ந்து அவர் அவரது கட்சிக்கும், பொது மக்களுக்கும் தொண்டாற்றிட எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Nallakannu #Thirunavukkarasar
    நாடு முழுவதும் நாளை கொண்டாடப்பட உள்ள கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தலைவர்கள் கிறிஸ்தவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். #Christmas
    சென்னை:

    கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி:-


    இறைமகன் இயேசு மனிதராய் அவதரித்த புனித நாளை கிறிஸ்துமஸ் பெருவிழாவாகக் கொண்டாடி மகிழும் அன்புச் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எங்கள் இதயங்கனிந்த கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

    ஏழைகளையும், எளிய மனத்தோரையும், கைவிடப்பட்டோரையும் ‘‘இறைவனின் பிள்ளைகள் நீங்கள்’’ என்று வாஞ்சையோடு அரவணைத்து மானிட இனம் நல்வழியில் வாழ, புதிய ஏற்பாடுகளை போதித்த இயேசு பெருமான், தன் போதனைகளாலும், வாழ்ந்து காட்டிய நெறிகளாலும், நம் அனைவரின் வணக்கத்திற்குரியவராகத் திகழ்கிறார்.

    இயேசுபிரான் போதித்த அன்பு, மன்னிப்பு, சகோதரத்துவம், பகிர்ந்து வாழ்தல் என்னும் உயரிய நெறிகளை வாழ்வில் நாமும் கடைபிடிக்க உறுதி ஏற்போம். அதுவே உண்மையான கிறிஸ்துமஸ் வழிபாடு.

    கிறிஸ்துமஸ் விழாவை சிறப்பாகக் கொண்டாடி மகிழும் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்களை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்வதோடு புதிதாகப் பிறக்க உள்ள ஆண்டில் மகிழ்ச்சியும், அமைதியும் பொங்கிட எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்து மகிழ்கிறோம்.

    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்:-


    சிறுபான்மை மக்களுக்கு உரிய மரியாதையும், கவுரவமும் தந்து அனைவரையும் ஒன்றாக மதித்து நடந்திடும் நல்லரசுகள் மத்தியிலும், மாநிலத்திலும் ஏற்பட இயேசு கிறிஸ்து அருள் பாலிக்கட்டும்.

    உயர்ந்த நற்பண்புகளை உலகில் விதைத்த இயேசு கிறிஸ்து பிறந்த இப்புனித நாளில் கிறிஸ்தவ பெருமக்கள் அனைவரின் வாழ்வில் வளமும், நலமும் பெருகிட உளமாற வாழ்த்துகிறேன். அனைத்து கிறிஸ்துவ சகோதர, சகோதரிகளுக்கு கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:-

    மனிதர்களுக்கு அன்பு, கருணை மற்றும் மன்னிப்பை போதித்த இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளை கிறிஸ்துமஸ் திருநாளாக கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    நாட்டில் அமைதி நிலவ வேண்டும், பொறாமைகள் அகல வேண்டும், ஏழைகளின் துயரங்கள் நீங்க வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பம் ஆகும். அதை நனவாக்க உழைப்போம் என இயேசுபிரான் அவதரித்த இந்த நன்நாளில் அனைவரும் உறுதி ஏற்போம்.

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ:-

    பகையும் வெறுப்பும் வளர்ந்து படுகொலைகளும் பஞ்சமா பாதகங்களும் அனைத்து மக்களையும் அச்சுறுத்திக்கொண்டு இருக்கக்கூடிய அபாயகரமான சூழல் வளர்ந்து வரும் இன்றைய நிலையில் சிலுவையைச் சுமந்து சித்திரவதைகளைத் தாங்கி, கல்வாரியில் ரத்தம் சிந்திய இயேசு பெருமானின் மனித நேய அமுத மொழிகள், தமிழ் நாட்டுக்கு இன்றியமையாத தேவை ஆகும்.

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன்:-

    த.மா.கா என்றும் கிறிஸ்தவ மக்களின் தோழனாக, அரணாக, பாதுகாவலராக இருக்கும் என்பதை உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன். இயேசு கிறிஸ்துவின் எளிய நடையையும், நற்பண்புகளையும் பின்பற்றி வருகின்ற கிறிஸ்தவ சமுதாய மக்கள் எல்லோரும் அவரின் நெறிமுறைகளை தொடர்ந்து கடைபிடித்து நல்வாழ்க்கை வாழவும், வாழ்வில் முன்னேற்றம் காணவும், நல்லது ஓங்கவும், அல்லது அழியவும் இறைவன் துணை நிற்க வேண்டி, கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்ஆர். தனபாலன்:-

    இயேசுவின் கட்டளைகளையும், போதனைகளையும் ஏற்றுக்கொண்டு அமைதியான வழியில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்வில் எல்லோருடைய அன்பையும், ஆதரவையும் பெற்று சமாதானத்தோடு வாழ்ந்திட வேண்டும் என்று பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் வாழ்த்துகிறேன்.

    ஏழை, எளியோர் ஆதரவற்ற முதியோர் இல்லங்களுக்கு பார்வையற்றோர், வாய்பேச முடியாத கேட்கும் திறனற்றவர்கள், தொழுநோயாளிகள் என்று சமூகத்தால் நிராகரிக்கப்பட்ட அப்பாவிகளுக்காக தேவகுமாரன் பிறந்த இந்நாளில் பிரார்த்தனைகள் செய்யப்படுவதோடு அவர்களுக்கு அன்னதானமும், பல்வேறு கிறிஸ்துவ தொண்டு நிறுவனங்கள் சார்பில் வழங்கப்படுகின்றன. இந்நாளில் நம் நாட்டில் உள்ள அனைத்து கிறிஸ்துவ பெருமக்களுக்கும் இனிய ‘‘கிறிஸ்துமஸ்’’ நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    பா.ம.க. இளைஞர் அணித்தலைவர் அன்புமணி ராமதாஸ், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர், தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம் ஆகியோரும் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளனர். #Christmas
    இயேசு பிரான் பிறந்த இனிய நாளில், உலகெங்கும் அன்பும், அமைதியும், சகோதரத்துவமும் தழைத்தோங்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்து கூறி உள்ளார். #Christmas #EdappadiPalaniswami
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள “கிறிஸ்துமஸ்” திருநாள் வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது:-

    இரக்கத்தின் மறுஉருவான இயேசுபிரான் அவதரித்த தினமான கிறிஸ்துமஸ் திருநாளை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழும் கிறிஸ்துவப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    அன்பே வாழ்வின் நெறி என்று வாழ்ந்த இயேசு பிரான் அவதரித்த இத்திருநாளில், அத்திருமகனார் போதித்த, ‘‘உங்கள் பகைவர்களை நேசியுங்கள்’’, ‘‘உங்களை சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்”, ‘‘உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்”, ‘‘உங்களை துன்பப்படுத்துகிறவர்களுக்காக இறைவனிடம் பிரார்த்தியுங்கள்”, போன்ற அருளுரைகளை மக்கள் அனைவரும் பின்பற்றி வாழ்ந்தால், உலகில் அமைதியும் மகிழ்ச்சியும் பெருகும்.

    அம்மா, இந்தியாவிலேயே முதல் முறையாக கிறிஸ்துவ மக்களின் நல்வாழ்விற்காக தமிழ்நாட்டைச் சேர்ந்த கிறிஸ்துவப் பெருமக்கள் ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொள்வதற்கு நிதியுதவி வழங்கும் சிறப்பு திட்டம், கிறிஸ்துவ தேவாலயங்களை பழுது பார்த்தல் மற்றும் சீரமைக்கும் பணிகளுக்காக அரசின் மானிய உதவி வழங்குதல் போன்ற பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி, செயல்படுத்தினார். கிறிஸ்துவ மக்களின் நலனில் அக்கறை கொண்ட அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசும், தொடர்ந்து அத்திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருவதால், இதுவரை 3,236 கிறிஸ்துவப் பெருமக்கள் ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொண்டு பயனடைந்துள்ளனர்.



    இயேசு பிரான் பிறந்த இனிய நாளில், உலகெங்கும் அன்பும், அமைதியும், சகோதரத்துவமும் தழைத்தோங்க வேண்டும் என்று வாழ்த்தி, கிறிஸ்துவப் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார். #Christmas #EdappadiPalaniswami

    ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி திருநாளில் பகவத் கீதை போதித்த கடமையின் சிறப்பையும், பயன் கருதாப் பணியின் உயர்வையும் மக்கள் மனதில் நிறுத்தி மகிழ்வுடன் வாழ வேண்டுமென்று முதல்-அமைச்சர் வாழ்த்து தெரிவித்துள்ளார். #EdappadiPalaniswami #KrishnaJeyanthi
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது:-

    பகவத் கீதை மூலம் மனித வாழ்க்கையின் நெறியினை உலகுக்கு உணர்த்திய பகவான் மகாவிஷ்ணு, கிருஷ்ணராக அவதரித்த திருநாளான ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி திருநாளை கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொளகிறேன்.

    “அறம் பிறழ்கின்ற போது நான் இவ்வுலகில் அவதரிப்பேன்” என்ற கிருஷ்ணர் பிறந்த இத்திருநாளில், மக்கள் கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்த வெண்ணெய், தயிர், பழங்கள், இனிப்புகள், பலகாரங்களை படைத்து, குழந்தைகளின் பிஞ்சு காலடிகளை வீட்டின் வழிநெடுக பதித்து, பகவான் கிருஷ்ணரே தங்கள் வீட்டிற்கு வந்தருளியதாக பாவித்து, கிருஷ்ண பகவானை போற்றி வணங்கி, ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி திருநாளை உற்சாகமாக கொண்டாடுவார்கள்.



    ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி திருநாளில், பகவத் கீதை போதித்த கடமையின் சிறப்பையும், பயன் கருதாப் பணியின் உயர்வையும் மக்கள் அனைவரும் மனதில் நிறுத்தி, கடமை உணர்வுடனும், மகிழ்வுடனும் வாழ வேண்டுமென்று வாழ்த்தி, அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். #EdappadiPalaniswami #KrishnaJeyanthi

    இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் 18-வது ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கங்களை வென்றுள்ள இந்திய வீரர்கள் அனைவருக்கும் திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். #AsianGames2018 #MKStalin
    சென்னை:

    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்தோனேஷியாவில் நடைபெற்று வரும் 18-வது ஆசிய விளையாட்டு போட்டியில் தொடர்ந்து பதக்கங்களை வென்று வரும் இந்திய வீரர்கள் அனைவருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். அதில், தமிழகத்தைச் சார்ந்த வீரர்களும் வெற்றிவாகை சூடி வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை வென்றிருப்பது மன மகிழ்ச்சியளிக்கிறது.

    குறிப்பாக, 4x400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த ஆரோக்கிய ராஜீவ் வெள்ளிப் பதக்கமும், 400 மீட்டர் ஆடவருக்கான தடைதாண்டும் ஓட்டப்போட்டியில் தருண் அய்யாச்சாமி வெள்ளிப்பதக்கத்தையும் தட்டிச் சென்றிருக்கின்றனர்.



    ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு ஸ்குவாஷ் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த சவுரவ் கோஷல் வெண்கலப்பதக்கமும், டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் வெண்கலப்பதக்கத்தையும் வென்று பெருமை சேர்த்திருக்கிறார்கள்.

    அதேபோல், ஸ்குவாஷ் போட்டிகளில் வெண்கலப் பதக்கங்களை வென்றிருக்கும் தீபிகா பல்லிகல், ஜோஷ்னா சின்னப்பா ஆகியோருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து, சர்வதேச அளவிலான போட்டிகளில் மென்மேலும் பல பதக்கங்ளை வாங்கிக் குவித்து தமிழ்நாட்டிற்கும், இந்திய திருநாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  #AsianGames2018 #MKStalin
    பிறந்த நாளையொட்டி முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு கவர்னர் கிரண்பேடி சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். #governorkiranbedi #CMNarayanasamy
    புதுச்சேரி:

    புதுவை கவர்னராக கிரண்பேடி பொறுப்பேற்றது முதல் முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கும், கவர்னர் கிரண்பேடிக்கும் தொடர்ந்து மோதல் போக்கு இருந்து வருகிறது.

    அரசு மீது கவர்னர் கிரண்பேடி குற்றம் சாட்டுவதும், புதுவை மாநில வளர்ச்சிக்கு கவர்னர் கிரண்பேடி தடையாக உள்ளார் என்றும் நாராயணசாமியும், ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி வந்தனர்.

    ஒரு சில சமயங்களில் இந்த மோதல் உச்சக்கட்டத்தை அடைவதும் அதன் பிறகு சமாதானமாகி இருவரும் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்பது என வழக்கமாக இருந்து வருகிறது.



    கவர்னர் கிரண்பேடி பதவி ஏற்ற சில நாட்களில் 2 ஆண்டுகள் மட்டுமே புதுவையில் பணிபுரிவேன் என்றும் அதற்கு மேல் ஒரு நிமிடம் கூட புதுவையில் இருக்க மாட்டேன் என்று கூறி இருந்தார். ஆனால், தற்போது புதுவையில் தொடர்ந்து கவர்னராக பணியாற்றுவேன் என்று கிரண்பேடி தெரிவித்தார்.

    இந்த நிலையில் கவர்னர் கிரண்பேடி பதவி ஏற்று இன்றுடன் 2 ஆண்டு நிறைவடைந்ததையொட்டி கவர்னர் கிரண்பேடி புதுவையில் இருந்து பெட்டி படுக்கையுடன் வெளியேற வேண்டும் என்றும், கவர்னர் கிரண்பேடியால் புதுவை மாநிலம் ஒரு சதவீதம் கூட வளர்ச்சி அடையவில்லை என்றும் நாராயணசாமி கடந்த 2 நாட்களுக்கு முன்பு கடுமையாக தாக்கி பேசினார்.

    மேலும் கவர்னர் கிரண்பேடியின் அழைப்பு விடுத்த விழாவில் தன்மானமுள்ளவர்கள் யாரும் பங்கேற்க மாட்டார்கள் என்றும் நாராயணசாமி அறிவித்தார்.

    அதன்படி நேற்று மாலை கவர்னர் கிரண்பேடி அழைத்த விழாவில் அமைச்சர்கள் மற்றும் காங்கிரஸ், தி.மு.க., அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் யாரும் பங்கேற்கவில்லை.

    இந்த நிலையில் கவர்னர் கிரண்பேடி வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தூய்மை பணியை சைக்கிளில் சென்று பார்வையிடுவது வழக்கம்.

    ஆனால், இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 7 மணிக்கு கவர்னர் கிரண்பேடி ராஜ்நிவாசில் இருந்து திடீரென சைக்கிளில் புறப்பட்டார். துப்புரவு பணிகளை பார்வையிட்டபடி வந்த அவர் வழியில் துப்புரவு பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டினார்.

    அதன் பின்னர் எல்லையம்மன் கோவில் தெருவில் உள்ள முதல்-அமைச்சர் நாராயணசாமி வீட்டுக்கு கவர்னர் கிரண்பேடி வந்தார். கவர்னரை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் திகைத்து போனார்கள்.

    இது பற்றி வீட்டு மாடியில் இருந்த நாராயணசாமிக்கு தகவல் தெரிவித்தனர். அப்போது நாராயணசாமி குளித்து கொண்டு இருந்தார்.

    அதுவரை கவர்னர் கிரண்பேடி வீட்டு வராண்டாவில் காத்து இருந்தார். சுமார் 10 நிமிடத்துக்கு பிறகு நாராயணசாமி வீட்டின் மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தார்.

    இதையடுத்து நாளை பிறந்த நாளையொட்டி முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு கவர்னர் கிரண்பேடி சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

    பதிலுக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமியும் கவர்னர் கிரண்பேடிக்கு சால்வை அணிவித்து 2 ஆண்டு பணி நிறைவடைந்ததையொடடி வாழ்த்து தெரிவித்தார்.

    இதையடுத்து கவர்னர் கிரண்பேடியை முதல்-அமைச்சர் நாராயணசாமி வீட்டு வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தார்.

    இதன் பின்னர் கவர்னர் கிரண்பேடி சைக்கிளில் கந்தப்ப முதலியார் வீதியில் உள்ள சபாநாயகர் வைத்திலிங்கம் வீட்டுக்கு சென்றார். அங்கு சபாநாயகர் வைத்திலிங்கத்தை சந்தித்து அவருக்கு சால்வை அணிவித்தார்.

    அதே போல் சபாநாயகர் வைத்திலிங்கமும் பதிலுக்கு கவர்னர் கிரண்பேடிக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.  #governorkiranbedi #CMNarayanasamy

    ×