search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "water opening"

    • கடந்த 2 மாதங்களுக்கு மேலாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 100 கன அடிக்கும் கீழ் குறைந்து வருகிறது.
    • நேற்று 55 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 8 மணி அளவில் 54.83 அடியாக சரிந்தது.

    மேட்டூர்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை மற்றும் கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் ஆகியவற்றை பொறுத்தே மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் காணப்படும். இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 100 கன அடிக்கும் கீழ் குறைந்து வருகிறது.

    நேற்று 79 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 57 கன அடியாக சரிந்தது.

    இதற்கிடையே கோடை காலத்தில் அணைக்கு நீர்வரத்து போதுமானதாக இல்லாததால் கடந்த 11-ந் தேதி அணையில் இருந்து குடிநீர் தேவைக்கு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 1,500 கனஅடியாக குறைக்கப்பட்டது.

    இருப்பினும் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 100 கன அடிக்கும் கீழ் தொடர்ந்து நீடிப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. இதனால் நேற்று 55 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 8 மணி அளவில் 54.83 அடியாக சரிந்தது. நீர் இருப்பு 20.98 டி.எம்.சி.யாக உள்ளது.

    அணையில் நீர் இருப்பை கருத்தில் கொண்டு நேற்று மாலை முதல் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு 1500 கன அடியில் இருந்து வினாடிக்கு 1,200 கன அடியாக குறைக்கப்பட்டு உள்ளது.

    • பாசனத்திற்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து குறைந்து வருகிறது.
    • இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 71.96 அடியாக குறைந்துள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது.

    அதேநேரம் அணைக்கு வரும் நீர்வரத்தை விட பாசனத்திற்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 71.96 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 221 கனஅடியாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 2,000 கனஅடியாக தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் இன்று முதல் கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது.

    தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 700 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி என மொத்தம் 800 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 39.61 அடியாகவும், பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 2.42 அடியாகவும், வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 29.46 அடியாகவும் குறைந்து உள்ளது.

    • இன்று காலை 200 கனஅடியாக இருந்த நீர் வரத்து பின்னர் மதியம் 1000 கனஅடியாக உயர்ந்தது.
    • பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3231 மில்லியன் கனஅடி. இதில் 3073 மி.கனஅடி தண்ணீர் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று முதல் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான பூண்டி ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது.

    இன்று காலை 200 கனஅடியாக இருந்த நீர் வரத்து பின்னர் மதியம் 1000 கனஅடியாக உயர்ந்தது. இதனால் பூண்டி ஏரியில் இருந்து இன்று காலை கொசஸ்தலை ஆற்றில் தண்ணீர் திறப்பு 50 கனஅடியில் இருந்து 1000 கனஅடியாக உயர்த்தப்பட்டு உள்ளது.

    ஏரிக்கு தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளதால் உபரிநீர் திறப்பு மேலும் அதிகரிக்கப்படும் என்று தெரிகிறது. பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3231 மில்லியன் கனஅடி. இதில் 3073 மி.கனஅடி தண்ணீர் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பாசன நிலங்களுக்கு வினாடிக்கு 3000 கனஅடிவீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.
    • காலை நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 65.62 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் உள்ள 71 அடி உயரம் உள்ள வைகை அணையின்நீர்மட்டம் கடந்த மாதம் 9-ந்தேதி 70.51 அடியை எட்டியது. இதனையடுத்து நவம்பர் 10-ந்தேதி முதல் மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்காக கால்வாய் வழியாக தொடர்ந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    நவம்பர் 23-ந்தேதி முதல் மதுரை , சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட பாசனத்திற்காக ஆற்றின் வழியாக திறக்கப்பட்ட தண்ணீர் டிசம்பர் 8-ந்தேதி நிறுத்தப்பட்டது. அப்போது அணையின் நீர்மட்டம் 62.86 அடியாக குறைந்தது. அதன்பிறகு நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழை காரணமாகவும், முல்லைபெரியாற்று அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதாலும் கடந்த 11-ந்தேதி அணையின் நீர்மட்டம் 65.18 அடியாக உயர்ந்தது.

    இதனால் சிவகங்கை மாவட்ட பாசனத்திற்காக ஆற்றின் வழியாக விநாடிக்கு 1200 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு நேற்று காலை 10 மணியுடன் நிறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து அணையிலிருந்து 669 கனஅடிமட்டும் தண்ணீர் திறக்கப்பட்டது.

    இந்நிலையில் இன்று காலை முதல் ராமநாதபுரம் மாவட்ட பூர்வீக பாசன நிலங்களுக்கு வினாடிக்கு 3000 கனஅடிவீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் வருகிற 21-ந்தேதி வரை வெளியேற்றப்படும். அதன்பிறகு வருகிற 22-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை 5 நாட்களுக்கு மதுரை மாவட்டத்தின் வைகை பூர்வீக பாசன பகுதிகளுக்கு ஆற்றின் வழியாக மீண்டும் தண்ணீர் திறக்கப்படும் என்று நீர்பாசனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இன்று காலை நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 65.62 அடியாக உள்ளது. நீர்வரத்து 1728 கனஅடி, திறப்பு 3669 கனஅடி, இருப்பு 4767 மி.கனஅடி.

    முல்லைபெரியாறு அணையின்நீர்மட்டம் 135.25 அடியாக உள்ளது. வரத்து 644 கனஅடி, திறப்பு 1500 கனஅடி, மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 56.10 அடி, அணைக்கு வரும் 80 கனஅடி முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126 .41 அடி, நீர்வரத்து மற்றும் திறப்பு 70.44 கனஅடி.

    • 5 மாவட்டங்களில் கரையோர வசிக்கும் மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
    • வைகை அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 65.16 அடியாக உள்ளது. நீர்வரத்து 1697 கனஅடி, திறப்பு 1869 கனஅடி, இருப்பு 4666 மி.கனஅடி.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் உள்ள 71 அடி உயரம் உள்ள வைகை அணையில் இருந்து திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. வடகிழக்கு பருவமழை கைகொடுத்ததால் கடந்த மாதம் 9-ந்தேதி அணையின் நீர்மட்டம் முழுகொள்ளளவை எட்டியது.

    இதனையடுத்து கடந்த மாதம் 29-ந்தேதி முதல் டிசம்பர் 8-ந்தேதி வரை ராமநாதபுரம், சிவகங்கை , மதுரை மாவட்டங்களில் உள்ள வைகை பூர்வீக பாசன பகுதிகளுக்கு வைகையாற்றில் இருந்து 15 நாட்களுக்கு மொத்தம் 2466 மி.கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனையடுத்து வைகை அணையில் இருந்து மீண்டும் டிசம்பர் 11-ந்தேதிசிவகங்கை மாவட்ட பூர்வீக பாசனபகுதி 2-க்கு வைகையாற்றில் இருந்து விநாடிக்கு 1200 கனஅடிவீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.

    வருகிற 4-ந்தேதி வரை 4 நாட்களுக்கு மொத்தம் 413 மி.கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படும். இதனையடுத்து டிசம்பர் 16-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை 5 நாட்களுக்கு ராமநாதபுரம் மாவட்ட பூர்வீக பாசன பகுதி 3-க்கு 1304 மி.கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படும். டிசம்பர் 22-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை 5 நாட்களுக்கு மதுரை மாவட்ட பூர்வீக பாசனபகுதி 1-க்கு மொத்தம் 229 மி.கனஅடி நீர் திறந்துவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதனால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் வைகை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு பொதுப்பணித்துறையினர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

    சிவகங்கை மாவட்ட பூர்வீக பாசன பகுதிகளுக்கு அணையிலிருந்து வைகையாற்றில் நேற்றுமுதல் வருகிற 13-ந்தேதி வரை விநாடிக்கு 2000 கனஅடியும், 14-ந்தேதி விநாடிக்கு 1180 கனஅடிவீதமும் தண்ணீர் திறந்துவிடப்படும். ராமநாதபுரம் மாவட்ட பூர்வீக பாசன பகுதிகளுக்கு வருகிற 16-ந்தேதி விநாடிக்கு 3000 கனஅடியும், 17-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை விநாடிக்கு 2300 கனஅடிவீதமும், டிசம்பர் 20-ந்தேதி விநாடிக்கு 1120 கனஅடிவீதமும், தண்ணீர் திறக்கப்படும்.

    மதுரை மாவட்ட பூர்வீக பாசனத்திற்காக 22-ந்தேதி விநாடிக்கு 600 கனஅடியும், 23-ந்தேதி விநாடிக்கு 565 கனஅடியும், 24 மற்றும் 25-ந்தேதிகளில் விநாடிக்கு 500 கனஅடியும், 26-ந்தேதி விநாடிக்கு 400 கனஅடிவீதமும் தண்ணீர் திறக்கப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    வைகை அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 65.16 அடியாக உள்ளது. நீர்வரத்து 1697 கனஅடி, திறப்பு 1869 கனஅடி, இருப்பு 4666 மி.கனஅடி.

    முல்லைபெரியாறு அணையின்நீர்மட்டம் 136.15 அடியாக உள்ளது. வரத்து 1248 கனஅடி, திறப்பு 1500 கனஅடி, இருப்பு 6156 மி.கனஅடியாக உள்ளது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் முழுகொள்ளளவை எட்டியதால் உபரிநீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதேபோல் சோத்துப்பாறை அணையின்நீர்மட்டமும் முழுகொள்ளளவை எட்டியதால் அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    மாவட்டத்தில் மழையளவு குறைந்தபோதிலும் கும்பக்கரை அருவியில் தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் இன்று 40-வது நாளாக பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடைவிதித்துள்ளனர்.

    • மழை குறைந்ததால் ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு படிப்படியாக குறைக்கப்பட்டது.
    • ஏரிக்கு 750 கனஅடி தண்ணீர் வருகிறது. 1456 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    திருவள்ளூர்:

    மிச்சாங் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது.

    இதனால் குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை ஏரிகள் முழுகொள்ளளவை எட்டியது. தொடர்ந்து பலத்த மழை பெய்ததால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து சுமார் 8 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் திறக்கப்பட்டது.

    பின்னர் மழை குறைந்ததால் ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு படிப்படியாக குறைக்கப்பட்டது.

    இன்று காலை நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் வரத்து 1091 கனஅடியாக குறைந்து உள்ளது. இதனால் ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பும் 1500 கனஅடியாக குறைக்கப்பட்டு உள்ளது.

    செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த உயரம் 24 அடி. இதில் 22.64 அடிக்கு தண்ணீர் உள்ளது. மொத்த கொள்ளளவான 3645 மில்லியன் கனஅடியில் 3284 மி.கனஅடி தண்ணீர் உள்ளது.

    இதேபோல் புழல், சோழவரம் ஏரிகளுக்கும் தண்ணீர் வரத்து குறைந்து உள்ளது. புழல் ஏரிக்கு இன்று காலை நிலவரப்படி 239 கனஅடி மட்டுமே தண்ணீர் வருகிறது. இதனால் உபரிநீர் திறப்பு 239 கனஅடியாக உள்ளது. ஏரியின் மொத்த உயரமான 21.20 அடியில் 20.21 அடிக்கு தண்ணீர் உள்ளது. மொத்த கொள்ளளவான 3300மி.கனஅடியில் 3054மி.கனஅடி தண்ணீர் நிரம்பி இருக்கிறது.

    சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவான 1081மி.கனஅடியில் 790மி.கனஅடிதண்ணீர் உள்ளது. ஏரிக்கு 750 கனஅடி தண்ணீர் வருகிறது. 1456 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவான 3231 மி.கனஅடியில் 2924மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 1610கனஅடி தண்ணீர் வருகிறது. 1009 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் மொத்த கொள்ளளவான 500 மி.கனஅடி முழுவதும் நிரம்பி உள்ளது. ஏரிக்கு வரும் 118 கனஅடி தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.

    • ஏரியின் மொத்த நீர் மட்ட அளவு 47.50 அடியில் 46 கன அடியை கடந்த சில தினங்களுக்கு முன்பாக எட்டியது.
    • வெள்ளாற்றின் கரையோரம் வசிப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அவர் கூறினார்.

    சேத்தியாத்தோப்பு:

    கடலூர் மாவட்டத்தில் கடலூர், வடலூர், சேத்தியாத்தோப்பு, ஸ்ரீ முஷ்ணம், விருத்தாசலம், திட்டக்குடி, தொழுதூர், பண்ருட்டி, நெய்வேலி, சிதம்பரம், புவனகிரி ஆகிய பகுதிகளில் நேற்று இரவு 7 மணிக்கு மழை பெய்யத் தொடங்கியது. நள்ளிரவு 12 மணி வரை மழை கொட்டித் தீர்த்தது.

    விடியற்காலை 6 மணிவரை லேசான மழை பெய்தது. ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. இதில் சேத்தியாத்தோப்பு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இரவு 17 செ.மீ. மழை பதிவாகியது. இதனால் வெள்ளாற்றில் நீர்வரத்து அதிகரித்து சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு தனது முழுக் கொள்ளளவான 7.5 அடியை எட்டியது.

    இதனைத் தொடர்ந்து சேத்தியாத்தோப்பு அணைக்கட்டிற்கு நீர் வந்த வண்ணம் உள்ளதால் பொதுப்பணித் துறை நீர்ப்பாசனப் பிரிவினர் உபரி நீரை வெளியேற்ற முடிவு செய்தனர். அணைக்கட்டில் 20 மதகுகள் உள்ளன. இதில் 4 மதகுகளை மட்டும் திறந்து விநாடிக்கு 600 கன அடிநீர் வெளியேற்றப்படுகிறது.

    மேலும், கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாக விளங்கி வருவது வீராணம் ஏரியாகும். 14 கிலோ மீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படும் இந்த ஏரி 5 கிலோ மீட்டர் அகலம் உடையது. ஏரியின் மொத்த நீர் மட்ட அளவு 47.50 அடியில் 46 கன அடியை கடந்த சில தினங்களுக்கு முன்பாக எட்டியது.

    தற்போது பெய்த மழையில் வீராணம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்ததால் வீராணம் ஏரியின் வி.என்.எஸ்.எஸ். மதகு, பாழ் வாய்க்கால்கள் மூலம் தலா 300 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. மேலும், சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோடு குமார உடைப்பு வழியாகவும் 300 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இந்த நீர் அனைத்தும் பல்வேறு வாய்க் கால்கள் வழியாக பரங்கிப் பேட்டைக்கு சென்று வங்கக் கடலில் கலக்கிறது.

    நீர் வரத்தை பொறுத்து சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு, வீராணம் ஏரியில் இருந்து வெளி யேற்றப்படும் நீரின் அளவு கூடுதலாவதற்கு வாய்ப்பு உள்ளதாக செயற்பொறியாளர் அடைக்காப்பான் கூறினார். மேலும், வெள்ளாற்றின் கரையோரம் வசிப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அவர் கூறினார். 

    • 5-வது நாளாக இன்றும் திறந்துவிடப்பட்டுள்ளது
    • கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத் தில் சாத்தனூர், செண்பகத் தோப்பு மற்றும் மிருகண்டா நதி அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. திருவண்ணாமலை மாவட் டம் தண்டராம்பட்டு அடுத்த சாத்தனூர் அணையின் நீர் மட்டம் 119 அடியாகும். தென் மேற்கு பருவ மழை காலத் தில் அணைக்கு நீர்வரத்து இருந்தது.

    தென் பெண்ணையாறு நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால், அணை யின் நீர்மட்டம் உயர்ந்தது. 116 அடியை கடந்தும், நீர்வரத்து கிராமங்களில் பெய்துவரும் தொடர்ந்து அதிகரித்ததால், மழையால் கலசப்பாக்கம் கடந்த செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் அணையில் இருந்து தென் பெண்ணையாற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இந்நிலையில், வட கிழக்கு பருவமழை பெய்ய தொடங் கியதால், கிருஷ்ணகிரி அணையின் நீர்மட்டம் உயர்ந்து, தென் பெண்ணை யாற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும், நீர்பிடிப்பு பகுதியில் பெய்யும் மழையால், சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது.

    அணையின் நீர்மட்டம் 117 அடியை எட்டியதால், அணை யில்இருந்து தென்பெண்ணை யாற்றில் கடந்த 7-ம் தேதி முதல் தொடர்ந்து 5-வது நாளாக இன்றும் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

    அணைக்கு வரும் விநாடிக்கு 950 கனஅடி தண்ணீரும், தென்பெண்ணை யாற்றில் முழுமையாக வெளியேற்றப்படுகிறது. அணையில் 6,875 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. அணை பகுதியில் 1.40 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.

    ஜவ்வாதுமலை அடிவார அருகே உள்ளமிருகண்டாநதி அணை மற்றும் சந்தவாசல் அருகே உள்ள செண்பகத் தோப்பு அணைக்கு நீர்வரத்து அதிகரித் துள்ளது.

    22.97 அடி உயரம் உள்ள மிருகண்டா நதி அணையின் நீர்மட்டம் 18.04 அடியாக உள்ளது. அணையில் 60.802 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. அணைக்கு

    வரும் விநாடிக்கு 82 கனஅடி தண்ணீரும் செய்யாற்றில் வெளி யேற்றப்படுகிறது. இதேபோல், 62.32 அடி உயரம் கொண்ட செண்பகத் தோப்பு அணையின் நீர் மட்டம் 51 அடியை எட்டியது. அணையில் 180.291 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது.

    அணைக்கு வரும் விநாடிக்கு 28 கனஅடி 28 தண்ணீரும் கமண்டலநதியில் வெளியேற்றப்படுகிறது. அணை பகுதியில் 4.20 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப் பட்டுள்ளதால் கரையோரத் தில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட் டுள்ளது.

    • பாசனத்திற்கு பயன்படும் வகையில் நொய்யல் ஆற்றில் 1992-ம் ஆண்டு ரூ.13.51 கோடி ரூபாய் செலவில் சின்ன முத்தூர் பகுதியில் தடுப்பணை கட்டப்பட்டது.
    • மழை காலத்தில் நொய்யல் ஆற்றில் வரும் வெள்ளநீரை, பாசனத்திற்கு திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    முத்தூர்:

    நொய்யல் ஆற்றில் இருந்து செல்லும் தண்ணீர் காவிரியுடன் கலந்து தண்ணீர் சென்றது. பாசனத்திற்கு பயன்படும் வகையில் நொய்யல் ஆற்றில் 1992-ம் ஆண்டு ரூ.13.51 கோடி ரூபாய் செலவில் சின்ன முத்தூர் பகுதியில் தடுப்பணை கட்டப்பட்டது. இதிலிருந்து கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலூகாவில் உள்ள 300 ஏக்கர் பரப்பளவுள்ள அணைப்பாளையம் தடுப்பணைக்கு, ஊட்டுக்கால்வாய் வழியாக திறக்கப்படும். இதன் மூலம் கே.பரமத்தி, அரவக்குறிச்சி, கரூர் தாலூக்காவில் உள்ள 20 ஆயிரம் ஏக்கர் பாசனம் பெறும் வகையில் கால்வாய்கள் உள்ளது.

    திருப்பூர் சாயக்கழிவு தண்ணீர் அதிக அளவு கலந்து நொய்யல் ஆற்றில் சென்றதால் தடுப்பணைக்கு தண்ணீர் திறந்து விடுவது 2004-க்கு பிறகு நிறுத்தப்பட்டது. மழை காலத்தில் நொய்யல் ஆற்றில் வரும் வெள்ளநீரை, பாசனத்திற்கு திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். 15 வருடங்கள் கழித்து 2019-ல் முத்தூர் தடுப்பணையில் இருந்து நொய்யல் வெள்ளநீர் அப்போது திறக்கப்பட்டது. இந்த ஆண்டு நொய்யல் நீர் பிடிப்பு பகுதியில் கன மழை பெய்ததால் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. தற்போது செல்லும் வெள்ளநீரில் டிடிஎஸ் 660 க்கும் குறைவாக உள்ளது.

    இதையடுத்து குப்பகவுண்டன்வலசு அருகே உள்ள அணைப்பாளையம் தடுப்பணைக்கு தண்ணீர் நேற்று முதல் ஊட்டு கால்வாய் வழியாக வினாடிக்கு 160 கன அடி வீதம் சின்னமுத்தூர் நொய்யல் தடுப்பணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. தற்போது நொய்யல் ஆற்றில் மழை நீர் வந்து கொண்டிருப்பதால் 5-ம் ஆண்டாக அணைப்பளையம் தடுப்பணைக்கு தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. ஊட்டு கால்வாய்க்கு திறந்தது போக நொய்யல் ஆற்றில் 250 கன அடி வரை காவிரிக்கு சென்றது. தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் அப்பகுதி விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • அணையின் மொத்த கொள்ளளவு 119 அடியாக உள்ள நிலையில் தற்போது நீரின் அளவு 117 அடியை எட்டி உள்ளது.
    • மழையின் காரணமாக வினாடிக்கு 3000 கன அடி நீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் இருந்து இன்று காலை தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் அணையின் கரையோரம் உள்ள மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை மாவட்ட மக்களின் தண்ணீர் தேவை மற்றும் திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய 4 மாவட்ட விவசாயிகளின் விவசாய தேவைக்கான தண்ணீர் தேவைகளை சாத்தனூர் அணை பூர்த்தி செய்து வருகிறது.

    சாத்தனூர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக வினாடிக்கு 3000 கன அடி நீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.

    அணையின் மொத்த கொள்ளளவு 119 அடியாக உள்ள நிலையில் தற்போது நீரின் அளவு 117 அடியை எட்டி உள்ளது.

    அணையில் இருந்து இன்று காலை 500 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

    இதனால் 4 மாவட்டங்களின் அணையின் கரையோரம் உள்ள மக்கள் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, கால்நடைகளை ஆற்றில் இறக்கவும் கூடாது என நீர்ப்பாசன துறை மற்றும் வருவாய் துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    அணைக்கு வரும் நீரின் அளவைப் பொறுத்து மேலும் கூடுதல் நீர் அணையில் இருந்து திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • லங்கள் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு ஆண்டுக்கு 2 மண்டலங்கள் வீதம் சுழற்சி முறையில் பாசனத்திற்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.
    • கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 94 ஆயிரத்து 68 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

    உடுமலை:

    உடுமலை அடுத்த திருமூர்த்தி அணையை ஆதாரமாக கொண்டு கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 3 லட்சத்து 76 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பி.ஏ.பி. திட்டத்தின் கீழ் பாசன வசதி பெற்று வருகிறது. இதற்காக நிலங்கள் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு ஆண்டுக்கு 2 மண்டலங்கள் வீதம் சுழற்சி முறையில் பாசனத்திற்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.

    மேலும் பழைய ஆயக்கட்டு பாசனத்தில் தளி வாய்க்கால் மூலமாக 2 ஆயிரத்து786 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. அத்துடன் குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நடப்பு ஆண்டில் தென்மேற்கு பருவமழை கை கொடுக்க வில்லை. இதனால் திருமூர்த்தி அணைப்பகுதி மற்றும் பாசன பரப்புகளில் கடும் வறட்சி நிலவி வந்தது. அதைத்தொடர்ந்து கடந்த மாதம் 1-ந்தேதி தேதி பி.ஏ.பி. தொகுப்பு அணைகளில் இருந்து காண்டூர் கால்வாய் மூலமாக திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக அணையின் நீர் இருப்பு வேகமாக உயர்ந்து வந்தது. அதைத் தொடர்ந்து விவசாயிகள் விடுத்த கோரிக்கையின் பேரில் 4- ம் மண்டல பாசனத்தில் கருகும் நிலையில் உள்ள பயிர்களை காப்பாற்றவும் மற்றும் கால்நடைகளின் குடிநீர் தேவைக்காகவும் கடந்த மாதம் 20- ந்தேதி தேதி, இந்த மாதம் 11-ந் தேதி வரை மொத்தம் 21 நாட்களுக்குள் ஒரு சுற்றுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன் மூலம் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 94 ஆயிரத்து 68 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

    இந்த நிலையில் பி.ஏ.பி. பிரதான கால்வாயில் பொள்ளாச்சி தாலுகா சீலக்காம்பட்டி அருகே கடந்த மாதம் 22-ந் தேதி உடைப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து தண்ணீர் நிறுத்தப்பட்டு சீரமைப்பு பணி நடைபெற்றது. பின்னர் 24-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த சூழலில் கடந்த 3-ந் தேதி சீலக்காம்பட்டி, மலையாண்டி பட்டினத்திற்கு இடைப்பட்ட பகுதியில் பி.ஏ.பி. பிரதான கால்வாயில் மீண்டும் உடைப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து சீரமைப்பு பணி முடிக்கப்பட்டு 5-ந்தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் பாசன நிலங்களுக்கு தண்ணீர் வழங்க முடியாத சூழல் ஏற்பட்டது. அதை தொடர்ந்து அதிகாரிகள் தரப்பில் 7 நாட்களுக்கு கூடுதலாக தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டது. இருந்தபோதிலும் பாசன நிலங்கள் முழுமையாக தண்ணீரை பெற இயலாத நிலை ஏற்பட்டது. அதை தொடர்ந்து அதிகாரிகள் தரப்பில் கூடுதலாக தண்ணீர் கோரி கருத்துரு அனுப்பப்ப ட்டது. அதன் பேரில் இன்று முதல் வருகிற 24-ந்தேதி வரை காலநீட்டிப்பு செய்து அரசு உத்தரவிட்டு உள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    • குடிநீருக்காக மட்டும் வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
    • இனி வரும் நாட்களில் நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது.

    சேலம்:

    கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பருவ மழை போதுமான அளவு பெய்யவில்லை. மேலும் கர்நாடக அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு உரிய அளவு தண்ணீர் திறக்கப்படவில்லை.

    இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வந்தது. அணையில் போதுமான தண்ணீர் இல்லாததால் கடந்த 10-ந் தேதி காலை 6 மணிக்கு மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. குடிநீருக்காக மட்டும் வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    இதற்கிடையே தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் மேட்டூர் அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று காலை 15 ஆயிரத்து 260 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 15 ஆயிரத்து 433 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

    கடந்த 10-ந் தேதி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 30.99 அடியாக இருந்த நிலையில் படிப்படியாக உயர்ந்து இன்று காலை 41.1 அடியாக உயர்ந்தது. இதனால் கடந்த 5 நாட்களில் மட்டும் மேட்டூர் அணை நீர்மட்டம் 10 அடி உயர்ந்துள்ளது குறிப்பிட தக்கது. இனி வரும் நாட்களில் நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ×