search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெள்ள அபாய எச்சரிக்கை"

    • 141 அடியை எட்டிய முல்லைப் பெரியாறு அணை.
    • 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு.

    முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கேரளா பகுதிக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இன்று 7 மணி நிலவரப்படி 141 அடியை முல்லைப் பெரியாறு அணை எட்டியது.

    இதனால், கேரளா பகுதிக்கு 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்றைய நிலவரப்படி, முழு கொள்ளளவான 44.28 அடியில், நீர் இருப்பு 24.44 அடியாக உள்ளது.
    • நுரை பொங்கி செல்வதால் அப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர்.

    ஓசூர்:

    கர்நாடக மாநிலத்தில் தென்பெண்ணை ஆற்று நீர் பிடிப்பு பகுதிகளான பெங்களூர் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

    இதன் காரணமாக ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்றைய நிலவரப்படி, முழு கொள்ளளவான 44.28 அடியில், நீர் இருப்பு 24.44 அடியாக உள்ளது.

    கடந்த சில மாதங்களாக கெலவரப்பள்ளி அணையில் ஷட்டர் மதகுகள் மற்றும் பராமரிப்பு காரணமாக பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், அணையில் நீர் தேக்கி வைக்கப்படுவதில்லை. இதனால் தொடர்ந்து அணைக்கு வரும் நீர் அப்படியே திறந்து விடப்பட்டு வருகிறது. நேற்று வினாடிக்கு 1,234 கனஅடி நீர் வந்தது. இன்றும் அதேஅளவு தண்ணீர் அணைக்கு வந்தது. அணையின் பாதுகாப்பு கருதி, வினாடிக்கு 1,120 கனஅடி நீர் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டது.

    இதனிடையே பெங்களூர் புறநகர் பகுதிகளில் இயங்கி வரும் தொழிற்சாலைகளின் ரசாயன கழிவுகள் மற்றும் அந்த பகுதிகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் கலப்பதால் அணைக்கு வரும் வரும் நீர், ரசாயன கலவையுடன் நுரையும் நுங்குமாக துர்நாற்றத்துடன் பொங்கி வருகிறது.

    அதேபோல அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரும், நுரை பொங்கி செல்வதால் அப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர். கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்திருப்பதால், தென்பெண்ணை ஆற்றங்கரையோரத்தில் உள்ள சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

    • 49 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் தற்போது 39 அடி அளவு உயர்ந்துள்ளது.
    • பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    மாரண்டஅள்ளி:

    தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை பெய்ய தொடங்கியுள்ளதால் தருமபுரி, கிருஷ்ணகிரி உள்பட 13 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்து இருந்தது.

    தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி, பாலக்கோடு, பென்னாகரம், ஒகேனக்கல் ஆகிய பகுதிகளில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

    இந்நிலையில் மாலையில் மழை பெய்ய தொடங்கியது. சிறிது நேரத்தில் கனமழையாக பெய்ய தொடங்கி விடிய, விடிய பெய்தது.

    இதைத்தொடர்ந்து பாலக்கோடு அருகே பஞ்சப்பள்ளி சின்னாறு அனணயின் நீர்வரத்து பகுதியான கிருஷ்ணகிரி மாவட்டம் எல்லை பகுதியான தளி, அஞ்செட்டி, தேன்கனிக்கோட்டை மற்றும் பஞ்சப்பள்ளி உள்ளிட்ட காப்புக்காடு பகுதிகளிலும் தொடர் கனமழை காரணமாக இன்று காலை திடீரென நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.

    இதனால் சின்னாற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு கரைபுரண்டு ஓடியது. சின்னாற்றில் வெள்ள பெருக்கு காரணமாக பாலக்கோட்டில் உள்ள பஞ்சப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. 49 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் தற்போது 39 அடி அளவு உயர்ந்துள்ளது.

    சின்னாறு செல்லும் தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஆத்துக்கொட்டாய், கரகூர், அத்திமுட்லு, மாரண்டஅள்ளி. பஞ்சப்பள்ளி, சாமனூர், தொல்லகாது உள்ளிட்ட பகுதிகளில் ஆறு செல்லும் வழித்தடங்களில் வெள்ள பெருக்கெடுத்து ஓடுவதால் ஆற்றின் கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

    • அணையின் மொத்த கொள்ளளவு 119 அடியாக உள்ள நிலையில் தற்போது நீரின் அளவு 117 அடியை எட்டி உள்ளது.
    • மழையின் காரணமாக வினாடிக்கு 3000 கன அடி நீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் இருந்து இன்று காலை தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் அணையின் கரையோரம் உள்ள மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை மாவட்ட மக்களின் தண்ணீர் தேவை மற்றும் திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய 4 மாவட்ட விவசாயிகளின் விவசாய தேவைக்கான தண்ணீர் தேவைகளை சாத்தனூர் அணை பூர்த்தி செய்து வருகிறது.

    சாத்தனூர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக வினாடிக்கு 3000 கன அடி நீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.

    அணையின் மொத்த கொள்ளளவு 119 அடியாக உள்ள நிலையில் தற்போது நீரின் அளவு 117 அடியை எட்டி உள்ளது.

    அணையில் இருந்து இன்று காலை 500 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

    இதனால் 4 மாவட்டங்களின் அணையின் கரையோரம் உள்ள மக்கள் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, கால்நடைகளை ஆற்றில் இறக்கவும் கூடாது என நீர்ப்பாசன துறை மற்றும் வருவாய் துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    அணைக்கு வரும் நீரின் அளவைப் பொறுத்து மேலும் கூடுதல் நீர் அணையில் இருந்து திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கோவை பில்லூர் அணை பலத்த மழையால் நீர் வரத்து அதிகரித்து நிரம்பியது.
    • பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    சத்தியமங்கலம்:

    கேரள மாநிலத்தில் பருவ மழை தீவிரமடைந்து வருகிறது. இதேபோல் கடந்த சில நாட்களாக கோவை, நீலகிரி பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருவதால் அணைகளில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

    இந்நிலையில் கோவை பில்லூர் அணை பலத்த மழையால் நீர் வரத்து அதிகரித்து நிரம்பியது. இதனால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    இந்நிலையில் இன்று காலை பில்லூர் அணையிலிருந்து உபரி நீராக 14,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் தெங்குமரஹாடா, மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    இதனால் கள்ளட்டி, ஊதிக்குப்பம் பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த பகுதி கிராம மக்கள் மாயற்றை கடந்து தான் வியாபாரம் மற்றும் வேலைக்கு செல்ல வேண்டும்.

    இதேபோல் இந்த கிராமத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகள் பள்ளிகளுக்கும் மாயாற்றக் கடந்து தான் செல்ல வேண்டும். இந்நிலையில் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக அதிகாரிகள் எச்சரித்து உள்ளதால் இப்போது மக்கள் செய்வது தெரியாமல் திகைத்து வருகின்றனர்.

    ஏற்கனவே மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது இப்பகுதி மக்கள் ஆபத்தான முறையில் ஆற்றை கடப்பதும் பரிசலில் செல்வதும் இருந்து வருகின்றனர்.

    இதனால் இந்த பகுதியில் தொங்கு பாலம் அமைத்து தர வேண்டும் என இப்பகுதி மக்கள் நீண்ட வருடங்களாகவே கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

    • விழுப்புரம் உள்பட 5 மாவட்டங்களில் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
    • தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் மற்றும் நீர்வளத்துறை மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 404 கனஅடி இருந்தது. அணையின் மொத்த கொள்ளவான 52 அடியில் நீர்மட்டம் 50.65 அடியாகும். அணையில் இருந்து வினாடிக்கு 12 கனஅடி திறக்கப்பட்டது. இந்த நிலையில் அணையில் இருந்து விநாடிக்கு 600 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.

    இது குறித்து நீர்வளத்துறை அலுவலர்கள் கூறியதாவது:-

    கிருஷ்ணகிரி அணையில் தற்போது 50.65 அடிக்கு தண்ணீர் இருப்பு உள்ளது. அணையின் 50.50 அடிக்கு தண்ணீர் இருப்பு வைக்க முடிவு செய்து, விநாடிக்கு 600 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

    மேலும், எதிர்வரும் மழை மற்றும் கெலவரப்பள்ளி அணையில் திறக்கப்படும் நீரின் அளவை பொறுத்து, கிருஷ்ணகிரி அணையில் திறந்துவிடப்படும் நீரின் அளவு இருக்கும். எனவே, வழக்கமான மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணமலை, கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

    குறிப்பாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காவேரிப்பட்டணம், பென்னேஸ்வரமடம், நெடுங்கல், தர்மபுரி மாவட்டம் இருமத்தூர் பகுதியில் தென்பெண்ணை ஆற்றங்கரையோரத்தில் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் மற்றும் நீர்வளத்துறை மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 

    • தங்கள் கால்நடைகளை ஆற்றங்கரையோரம் கொண்டு செல்ல வேண்டாம்.
    • தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும்.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

    கிருஷ்ணகிரி அணை நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால், அணைக்கு வரும் நீரின் வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. அணையின் மொத்த உயரம் 52 அடியாகும் (1666.26 மில்லியன் கன அடி). நேற்று (29ம் தேதி) நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 48.25 அடியாக (1262.11 மில்லியன் கனஅடி) உள்ளது. நேற்று மாலை நிலவரப்படி அணைக்கு விநாடிக்கு 456 கன அடி தண்ணீர் வந்துள்ளது. தொடர்ந்து அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரிக்கும் பட்சத்தில், அணையின் பாதுகாப்பு கருதி மேற்கொண்டு வரும் உபரிநீர் முழுவதும் தென்பெண்ணை ஆற்றில் எப்போது வேண்டுமானாலும் வெளியேற்றப்பட வாய்ப்பு உள்ளது.

    எனவே, தென்பெண்ணை ஆற்றங்கரையோரத்தில் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் நீர்வளத்துறை மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படுகிறது. எனவே பொதுமக்கள், ஆற்றங்கரையோரம் செல்ல வேண்டாம். அதே போல தங்கள் கால்நடைகளை ஆற்றங்கரையோரம் கொண்டு செல்ல வேண்டாம். குளிப்பதற்கோ, காலை கடன்களை கழிப்பதற்கோ, துணி துவைப்பதற்கோ ஆற்றுக்கு செல்ல வேண்டுமா எனவும் எச்சரிக்கப்படுகிறது.

    மேலும், தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும்.

    இவ்வாறு தனது செய்திக்குறிப்பில் மாவட்ட ஆட்சியர் சரயு தெரிவித்துள்ளார்.

    இதனிடையே கிருஷ்ணகிரி அணை இடதுபுறம் நீட்டிப்பு பாளேகுளி - சந்தூர் ஏரி பாசன விவசாயிகள் சங்க பயனாளிகள் சங்கத்தின் தலைவர் சிவகுரு கூறியது, கோடை வெயிலின் தாக்கம் காரணமாக, பாலேகுளி ஏரி முதல் வேலம்பட்டி, வீரமலை வழியாக சந்தூர் வரை உள்ள 28 ஏரிகளில் தண்ணீர் குறைந்து காணப்படுகிறது.

    தற்போது, அணையில் இருந்து இடது புறக்கால்வாய் வழியாக உபரிநீர் பாலேகுளி ஏரிக்கு திறந்துவிட வேண்டும். பின்னர், அங்கிருந்து 28 ஏரிகளுக்கு தண்ணீர் கால்வாய் வழியாக கொண்டு செல்ல வேண்டும் என்றார்.

    • அணைக்கு வரும் மழை நீரின்வரத்து வேகமாக அதிகரிப்பு.
    • வைகை ஆற்றில் இறங்க பொதுமக்கள் முயற்சிக்க வேண்டாம் என அறிவுறுத்தல்

    வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதை தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் தேனி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான குளம், கண்மாய் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி விட்டன. 71 அடி உயரம் கொண்ட வைகை அணை இந்த ஆண்டில் 2வது முறையாக முழு கொள்ளளவை எட்டியது.

    பலத்த மழை காரணமாக நேற்று இரவு 7 மணியில் இருந்து அணைக்கு வரும் நீரின் வரத்து வேகமாக அதிகரித்தது. இதையடுத்து அணையில் இருந்து முதல்கட்டமாக 5,399 கனஅடி உபரிநீர் திறந்து விடப்பட்டது. இது படிப்படியாக அதிகரிக்கப்பட்டு இரவு 8,900 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. 


    இதனால் தேனி, திண்டுக்கல்,மதுரை,சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள வைகை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வைகை அணையில் இருந்து திறக்கப்படும் உபரிநீரின் அளவு மேலும் அதிகரிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனால் வைகை ஆற்றில் இறங்கவோ அல்லது கடக்கவோ பொதுமக்கள் முயற்சிக்க வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • சாத்தனூர் அணையில் தண்ணீர் திறப்பு
    • கடந்த 3 வாரங்களாக நீர்வரத்து அதிகரிப்பு

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த சாத்தனூர் அணைக்கு கடந்த 3 வாரங்களாக நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தது.

    கிருஷ்ணகிரி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு மற்றும் தென் பெண்ணையாறு நீர்பிடிப்பு பகுதியில் கனமழை காரணமாக நீர்வரத்து ஏற்பட்டது. இதனால், சாத்தனூர் அணையில் இருந்து தென்பெண்ணையாற்றில் நேற்று தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

    இதனால் தென் பெண்ணையாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், சாத்தனூர் அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்தது. 119 அடி உயரம் கொண்ட அணையில் நீர்மட்டம் 117 அடியாக தொடர்ந்து பராமரிக்கப்படுகிறது.

    அணையில் இருந்து கடந்த 26-ம் தேதி விநாடிக்கு 2,800 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்ட நிலையில், நீர்வரத்து அதிகரித்ததால் நேற்று முன்தினம் (27-ந் தேதி) மாலை விநாடிக்கு 4,250 கனஅடி வெளி யேற்றப்பட்டுள்ளது.

    இந்நிலையில், அணைக்கு வரும் நீர்வரத்து சற்று குறைந்துள்ளது. நேற்று காலை நிலவரப்படி விநாடிக்கு 3,464 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் பாதுகாப்பு கருதி, அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் அப்படியே வெளி யேற்றப்படுகிறது.

    அணையில் 6,875 மில்லியன் கனஅடி தண்ணீர்இருப்பு உள்ளது. அணை பகுதியில் 12.2 மி.மீ., மழை பெய்துள்ளது. தென்பெண்ணையாற்றில் அதிகளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், கரையோர கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.

    ஆற்றில் குளிக்கவும், கால்நடைகளை பராமரிக்கவும் வேண்டாம் என அறிவுறுத்தப் பட்டுள்ளது.

    59.04 அடி உயரம் உள்ள குப்பநத்தம் அணையின் நீர்மட்டம் 57 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் 644.30 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. 92 சதவீதம் தண்ணீர் இருப்பு உள்ளது. அணைக்கு விநாடிக்கு 156 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 100 கனஅடி தண்ணீர் செய்யாற்றில் வெளி யேற்றப்படுகிறது.

    62.32 அடி உயரம் உள்ள செண்பகத்தோப்பு அணையில் நீர்மட்டம் 49.40 அடியாக உள்ளது.

    • கொள்ளிடம் ஆற்று கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது
    • கலெக்டர் ரமணசரஸ்வதி வேண்டுகோள்

    அரியலூர்:

    காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகமாக உள்ளது. இதனால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 120 அடியை ஏற்கனவே எட்டியுள்ளது. இதை தொடர்ந்து, அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் காவிரி ஆற்றில் சுமார் 1,20,000 கன அடி அளவிற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    இதன் காரணமாக, கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகளவில் வந்து கொண்டிருக்கிறது. எனவே, அரியலூர் மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்றின் கரையோரத்தில் உள்ள கிராம மக்கள் ஆற்றில் குளிக்கவோ, நீந்தவோ, துணிகளை துவைக்கவோ, மீன் பிடிக்கவோ, பொழுது போக்கவோ மற்றும் கால்நடைகளை குளிப்பாட்டவோ செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    கரையோர கிராமங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. மேலும், பாதுகாப்பற்ற கரையோர பகுதிகளில் நின்று கொண்டு பொதுமக்கள் செல்போனில் 'செல்பி" எடுப்பதை தவிர்க்க வேண்டும். ஆறு மற்றும் கால்வாய்களில் அதிகளவு தண்ணீர் வந்து கொண்டிருப்பதால், அந்த பகுதிகளுக்கு தங்களது குழந்தைகளை விளையாட செல்ல விடாமல் பெற்றோர்கள் பாதுகாப்பாக வைத்து கொள்ள வேண்டும்.

    விவசாயிகள் தங்களின் கால்நடைகளை ஆற்றின் நடுவே அமைந்துள்ள திட்டுகளில் மேய்ச்சலுக்கு விடுவதை தவிர்க்கவும், நீர்நிலைகள் வழியாக அழைத்து செல்வதை தவிர்க்கவும் வேண்டும் என அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    • நீர்வரத்து படிபடியாக அதிகரிக்க தொடங்கி உள்ளது.
    • வருவாய்த்துறை அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    கிருஷ்ணகிரி,

    தென்பெண்ணை நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து படிபடியாக அதிகரிக்க தொடங்கி உள்ளது.

    அதன்படி, கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து நேற்று முன்தினம் வினாடிக்கு 623 கனஅடியாக இருந்தது. கெலவரப்பள்ளி அணையில் திறந்து விடப்பட்ட தண்ணீரும், மார்கண்டேய நதியில் இருந்து வரும் தண்ணீரால், கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து நேற்று காலை வினாடிக்கு 4836 கனஅடியாக அதிகரித்தது. பிற்பகல் 1 மணியளவில் நீர்வரத்து

    வினாடிக்கு 5,800 கனஅடியாக அதிகரித்தது. மேலும், அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் நீர்மட்டம்

    50.30 அடி உள்ளதால், அணையின் பாது காப்பினை கருதி, 3 சிறிய மதகுகள், பிரதான 2, 5, 7 மதகுகளில் வினாடிக்கு 6,100 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

    இதனால் தென்பெ ண்ணை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, அணை பூங்காவிற்குள் செல்லும் தரைப்பாலம் மூழ்கி தண்ணீர் சீறி பாய்ந்து, செல்கிறது. ஆற்றில் வெள்ள ப்பெருக்கு ஏற்பட்டுள்ள தாலும், தொடர்ந்து பெய்யும் மழையை பொறுத்து தண்ணீர் நீர் திறப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    மேலும், தென்பெண்ணை ஆற்றினை கடக்கவோ, குளிக்கவோ கூடாது. கால்நடைகளை ஆற்று பகுதிக்கு அழைத்துச் செல்ல கூடாது என பொதுப்பணித்துறை அலு வலர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    இதே போல், ஊத்தங்கரை தாலுகா பாம்பாறு அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 148 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை வினாடிக்கு 215 கனஅடியாக அதிகரித்தது. அணையின் மொத்த கொள்ளளவான 19.60 அடியில் நீர்மட்டம் 17.75 அடிக்கு உள்ளது. நீர்வரத்து முழுவதும் ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது.

    சூளகிரி அருகே உள்ள சின்னார் அணைக்கு நீர்வரத்து நேற்று முன்தினம் வினாடிக்கு 85 கனஅடியாக இருந்தது. நேற்று காலை வினாடிக்கு 60 கனஅடியாக சரிந்தது.

    அணையின் மொத்த கொள்ளளவான 32.80 அடியில் நீர்மட்டம் 30.35 அடிக்கு உள்ளது. மாவட்டத்தில் நேற்று காலை மணி நிலவர ப்படி, மாவட்டத்தில் அதிகபட்சமாக ஓசூரில் 78 மில்லி மீட்டர் மழை பதிவாகியது. போச்சம்பள்ளி 48, அஞ்செட்டி 45, தேன்கனிக்கோட்டை 34, ஊத்தங்கரை 32.40, ராயக்கோட்டை 27, தளி 25, பெனுகொண்டாபுரம் 16.20, கிருஷ்ணகிரி 14.40, பாரூர் 13.80, நெடுங்கல் 8, சூளகிரி 6 மில்லி மீட்டர் மழை பதிவானது.

    • ஈரோடு மாவட்ட காவிரி கரையோர பகுதி மக்களுக்கு அதிகாரிகள் வெள்ள அபாய எச்ரிக்கை விடுத்துள்னர்.
    • இதே போல் தண்ணீர் அதிகளவு செல்வதால் பவானி புது பஸ் நிலையம் பகுதி, மார்க்கெட் பகுதி, கூடுதுறை காவிரி ஆற்றிலும் தண்ணீர் அதிகரித்துள்ளது.

    அம்மாப்பேட்டை:

    கர்நாடக மாநிலத்தில் கடந்த மாதம் பலத்த மழை பெய்தது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து 120 அடியை எட்டியது.

    இதனால் அணையில் இருந்து 2 லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறந்து விட ப்பட்டது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதையொட்டி ஈரோடு மாவட்டத்துக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    இதைதொடர்ந்து மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் படிப்படியாக குறைந்தது. இதனால் காவிரி ஆற்றுக்கு தண்ணீர் வரத்து குறைந்தது.

    இந்த நிலையில் கர்நாடகா மற்றும் கேரளா மாநில ங்களில் மீண்டும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணை க்கு சுமார் 50 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் வரத்து வந்து கொண்டு இருக்கிறது.

    மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடிக்கு மேல் உள்ளதால் அணைக்கு வரும் தணணீர் அப்படியே திறந்து விடப்பட்டு வரு கிறது. இதனால் ஈரோடு மாவட்ட காவிரி கரையோர பகுதி மக்களுக்கு அதிகாரிகள் வெள்ள அபாய எச்ரிக்கை விடுத்துள்னர்.

    இதனால் ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை நெரிஞ்சிப்பேட்டை ஆகிய பகுதிகளில் காவிரி கரையோரத்தில் வசிக்கும் பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு பேரூராட்சி துறை மற்றும் வருவாய்த் துறையினர் தண்டோரா மூலம் எச்சரிக்கை செய்து வருகின்றனர்.

    மேட்டூர் அணையில் இருந்து வழக்கமாக திறந்து விடப்படும் உபரி நீர் செக்கானூர் கதவணை, நெரிஞ்சிப்பேட்டை கதவணை, கோனே–ரிப்பட்டி உள்ளிட்ட கதவணைகளில் அப்படியே வெளி யேற்றுவார்கள்.

    இந்த நிலையில் நேற்று இரவு நெரிஞ்சிப்பேட்டை தேர்வீதி,பெருமாள் கோவில் வீதி ஆகிய பகுதிகளில் திடீரென வீதிகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அச்சத்துடன் வெளியேறி காவிரி ஆற்றை பார்த்தனர்.

    அப்போது மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும் போது நெரிஞ்சிப்பேட்டை கதவணை திறப்பது வழக்கம். ஆனால் கதவணையில் தண்ணீர் திறக்கப்படாதது தெரியவந்தது.

    இது குறித்து உடனடியாக அந்த பகுதி பொதுமக்கள் கிராம நிர்வாக அதிகாரிக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் அந்தியூர் தாசில்தார் விஜயகுமாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக தாசில்தார் கதவணை மின்நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து பின் கதவுகள் திறக்கப்பட்டது. அதன் பின்னர் ஊருக்குள் புகந்த தண்ணீர் வடிய தொடங்கியது . இதனால் நெரிஞ்சிப்பேட்டை பகுதியில் பரபரப்பு நிலவியது.

    இது குறித்து கரையோர பகுதியில் வசிக்கும் பொது மக்கள் கூறும் போது, மேட்டூர் அணையில் இருந்து 2 லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் வந்தால் கூட தண்ணீர் அதே மட்டத்தில் தான் செல்லும். ஆனால் 50 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் வரும் பொழுது வீதிகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் அதிர்ச்சி ஏற்பட்டது.

    உடனடியாக நெரிஞ்சி ப்பேட்டை கதவணையில் இருந்து தண்ணீர் வெளி யேற்றப்படாதால் தான் தண்ணீர் ஊருக்குள் போகிறது என்று அறிந்த பின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் கூறினோம்.

    உடனடியாக அதிகாரிகள் கதவுகளை திறந்ததால் ஊருக்குள் போகும் தண்ணீர் வடிய தொடங்கியது. காவிரியில் வெள்ள பெருக்கு ஏற்படும் காலங்களில் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இதே போல் தண்ணீர் அதிகளவு செல்வதால் பவானி புது பஸ் நிலையம் பகுதி, மார்க்கெட் பகுதி, கூடுதுறை காவிரி ஆற்றிலும் தண்ணீர் அதிகரித்துள்ளது. இதையொட்டி காரையோர பகுதிகளில் அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.

    மேலும் ஆற்றில் அதிகளவு தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளதால் ஈரோடு அக்ரகாரம் பேரேஜ், கருங்கல் பாளையம், வெண்டி–பாளையம், கொடிமுடி உள்பட காவிரி கரையோர பகுதிகளில் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

    ×