search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பூண்டி ஏரி தண்ணீர் திறப்பு அதிகரிப்பு
    X

    பூண்டி ஏரி தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

    • இன்று காலை 200 கனஅடியாக இருந்த நீர் வரத்து பின்னர் மதியம் 1000 கனஅடியாக உயர்ந்தது.
    • பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3231 மில்லியன் கனஅடி. இதில் 3073 மி.கனஅடி தண்ணீர் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று முதல் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான பூண்டி ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது.

    இன்று காலை 200 கனஅடியாக இருந்த நீர் வரத்து பின்னர் மதியம் 1000 கனஅடியாக உயர்ந்தது. இதனால் பூண்டி ஏரியில் இருந்து இன்று காலை கொசஸ்தலை ஆற்றில் தண்ணீர் திறப்பு 50 கனஅடியில் இருந்து 1000 கனஅடியாக உயர்த்தப்பட்டு உள்ளது.

    ஏரிக்கு தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளதால் உபரிநீர் திறப்பு மேலும் அதிகரிக்கப்படும் என்று தெரிகிறது. பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3231 மில்லியன் கனஅடி. இதில் 3073 மி.கனஅடி தண்ணீர் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×