search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாசன கால்வாய்"

    • பாசனத்திற்கு பயன்படும் வகையில் நொய்யல் ஆற்றில் 1992-ம் ஆண்டு ரூ.13.51 கோடி ரூபாய் செலவில் சின்ன முத்தூர் பகுதியில் தடுப்பணை கட்டப்பட்டது.
    • மழை காலத்தில் நொய்யல் ஆற்றில் வரும் வெள்ளநீரை, பாசனத்திற்கு திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    முத்தூர்:

    நொய்யல் ஆற்றில் இருந்து செல்லும் தண்ணீர் காவிரியுடன் கலந்து தண்ணீர் சென்றது. பாசனத்திற்கு பயன்படும் வகையில் நொய்யல் ஆற்றில் 1992-ம் ஆண்டு ரூ.13.51 கோடி ரூபாய் செலவில் சின்ன முத்தூர் பகுதியில் தடுப்பணை கட்டப்பட்டது. இதிலிருந்து கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலூகாவில் உள்ள 300 ஏக்கர் பரப்பளவுள்ள அணைப்பாளையம் தடுப்பணைக்கு, ஊட்டுக்கால்வாய் வழியாக திறக்கப்படும். இதன் மூலம் கே.பரமத்தி, அரவக்குறிச்சி, கரூர் தாலூக்காவில் உள்ள 20 ஆயிரம் ஏக்கர் பாசனம் பெறும் வகையில் கால்வாய்கள் உள்ளது.

    திருப்பூர் சாயக்கழிவு தண்ணீர் அதிக அளவு கலந்து நொய்யல் ஆற்றில் சென்றதால் தடுப்பணைக்கு தண்ணீர் திறந்து விடுவது 2004-க்கு பிறகு நிறுத்தப்பட்டது. மழை காலத்தில் நொய்யல் ஆற்றில் வரும் வெள்ளநீரை, பாசனத்திற்கு திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். 15 வருடங்கள் கழித்து 2019-ல் முத்தூர் தடுப்பணையில் இருந்து நொய்யல் வெள்ளநீர் அப்போது திறக்கப்பட்டது. இந்த ஆண்டு நொய்யல் நீர் பிடிப்பு பகுதியில் கன மழை பெய்ததால் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. தற்போது செல்லும் வெள்ளநீரில் டிடிஎஸ் 660 க்கும் குறைவாக உள்ளது.

    இதையடுத்து குப்பகவுண்டன்வலசு அருகே உள்ள அணைப்பாளையம் தடுப்பணைக்கு தண்ணீர் நேற்று முதல் ஊட்டு கால்வாய் வழியாக வினாடிக்கு 160 கன அடி வீதம் சின்னமுத்தூர் நொய்யல் தடுப்பணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. தற்போது நொய்யல் ஆற்றில் மழை நீர் வந்து கொண்டிருப்பதால் 5-ம் ஆண்டாக அணைப்பளையம் தடுப்பணைக்கு தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. ஊட்டு கால்வாய்க்கு திறந்தது போக நொய்யல் ஆற்றில் 250 கன அடி வரை காவிரிக்கு சென்றது. தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் அப்பகுதி விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • நெடுஞ்சாலை பணிக்காக மூடப்பட்ட பாசன கால்வாயால் விவசாயிகள் அவதி அடைந்தனர்.
    • வளர்ச்சி திட்டம் என்ற பெயரில் வந்த சோதனை.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வட்டம் எஸ். மாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கிராம மக்கள் இங்குள்ள வாகை கண்மாயில் பருவ மழை காலங்க ளில் வரும் தண்ணீரை பயன்படுத்தி பல ஆண்டுகளாக விவசாயம் மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில் விவசாயி களின் விளைநிலங்கள் குறுக்கே கடந்த 3 ஆண்டுகளாக மதுரை-காரைக்குடி தேசிய நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் காலங்காலமாக ஏக்கர் கணக்கில் உள்ள விளை நிலங்களுக்கு பாசனத்திற்காக பயன்படுத்தி வந்த கால்வாயை அதிகாரிகள் சாலை பணிக்காக மூடி விட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் சாலையின் ஒரு புறம் சுமார் 20 ஏக்கர் பரப்பில் விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கியும், மறுபுறம் தண்ணீர் பாய்ச்ச முடியாமல் பல ஏக்கர் நிலம் தரிசு நிலம் போல் காட்சி அளிக்கும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளது. இது குறித்து இப்பகுதி விவசாயிகள் கூறுகை யில், சாலை பணி தொடங்கும் போது அதிகாரிகளிடத்தில் காலங்காலமாக விவசாயத்திற்கு நாங்கள் பயன்படுத்தி வந்த தூம்பு வாய்க்காலிலேயே புதி தாக கல்வெட்டு பாலத்தை ஏற்படுத்தி தாருங்கள் என்று கோரிக்கை விடுத்தோம்.

    ஆனால் அதிகாரிகள் எங்கள் பேச்சுக்கு செவி சாய்க்காமல் கண்மாயின் இருபுறமும் மேடாக உள்ள பகுதியில் பாலத்தை கட்டும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கண் மாயிலில் உள்ள தண்ணீரை பாசனத்திற்கு மடை வழியாக திறக்கும்போது வயலின் ஒரு பகுதியில் கண்மாய் போல் தண்ணீர் தேங்கிய கார ணத்தினால் மறுப்பகுதிக்கு செல்ல முடியாத ஒரு சூழ்நிலை கடந்த 3 ஆண்டுகளுக்கு மேல் நிலவி வருகிறது.

    இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடத்தில் தெரிவித்தும் இன்றளவும் எந்த ஒரு நடவடிக்கையும் மேற் கொள்ளப்படவில்லை என்று கூறி வருகின்றனர். அதிகாரி களின் அலட்சியம் மற்றும் மெத்தனப்போக்கால் ஒரு கிராமமே விவசாயத்தை இழந்து தண்ணீர் இருந்தும் கண்ணீர் சிந்தும் சூழ்நிலையிக்கு தள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • சோழவந்தானில் பாசன கால்வாயை போர்க்கால அடிப்படையில் தூர்வார வேண்டும்.
    • விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் சோழவந்தான் விவசாய பூமியாகும். இங்கு முல்லை பெரியாறு பாசன நீர் மூலம் 3 போகம் நெல் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தின் களஞ்சியமாக விளங்கும் சோழவந்தானில் பொதுப்பணித்துறை அதி காரிகளின் மெத்தனத்தால் விவசாயம் பாதிக்கப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

    சோழவந்தானில் உள்ள வடகரை கண்மாயில் இருந்து வைகை ஆறு வரை 40அடி கால்வாய் முற்றிலும் தூர்ந்துபோய் உள்ளது. இதனால் அந்த பகுதியில் உள்ள 200 ஏக்கருக்கு மேற் பட்ட விவசாய நிலங்கள் தண்ணீர் வசதி பெறமுடியாமல் உள்ளன. மேற்கண்ட கால்வாயை தூர்வார வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

    ஆனால் எந்த நட வடிக்கையும் எடுக்கப்படாததால் 200 ஏக்கர் விவசாய நிலங்கள் தரிசு நிலங்களாக மாறும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் விவசாய நிலங்களை வாங்க வலை விரித்து வருகின்றன.

    இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்த ஆண்டு மழையின்போது ஏற்பட்ட பாதிப்பை பார்வையிட வந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் 40 அடி கால்வாயை தூர்வாரி தருவதாக உறுதி அளித்தனர். ஆனால் ஒரு ஆண்டு ஆகியும் இதுவரை நடவடிக்கை இல்லை.

    இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.

    எனவே இதுதொடர்பாக அமைச்சர் மற்றும் கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

    • நத்தக்காடையூரில் நாளை மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.
    • அரசாணை 276-ஐ ரத்து செய்ய வேண்டும்.

    காங்கயம் :

    ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்ட கீழ்பவானி பாசன விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ள ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையில் இருந்து கடைமடை பகுதியான கரூர் மாவட்டம் அஞ்சூர் பகுதி வரை செல்லும் கீழ்பவானி பாசன கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்தின் அரசாணை 276-ஐ ரத்து செய்ய கோரியும், மண் அணை மற்றும் மண் கால்வாயாக பராமரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் பழைய கட்டுமானங்களை இடிக்க கூடாது என்றும், காவிரி தீர்ப்பின்படி நீர் நிர்வாகம் உரிய முறையில் நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி கான்கிரீட் எதிர்ப்பு இயக்கத்தின் கீழ்பவானி பெயரல்ல - எங்கள் உயிர் என்ற தலைப்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நத்தக்காடையூர், ஈஸ்வரன் கோவில் மைதானத்தில் நாளை (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.

    இந்த பொதுக்கூட்டத்தில் நத்தக்காடையூர், பழையகோட்டை, மருதுறை, பரஞ்சேர்வழி ஊராட்சி பகுதிகளை சேர்ந்த கீழ்பவானி பாசன விவசாயிகள், நகர, சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொள்கின்றனர்.

    • உசிலம்பட்டியில் உள்ள 58 கிராம பாசன கால்வாயில் மீண்டும் தண்ணீர் திறந்து விட வேண்டும்என விவசாயிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
    • 58 கிராமபாசன கால்வாயை நீர்பாசன திட்டமாக அறிவிக்கவும் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்படுகிறது.

    உசிலம்பட்டி

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 58 கிராம பாசன சங்க விவசாயிகள் கூட்டம் நடந்தது. தலைவர் ஜெயராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் சிவப்பிரகாசம் முன்னிலை வகித்தார்.

    பொருளாளர் செந்தில்குமார், துணைத் தலைவர்கள் மகாராசன், சன்னாசி, துணைச் செயலாளர்கள் பொன் ஆதிசேடன், இரும்புத்துரை தலைமை ஆலோசகர் சின்னான், மாவட்ட கவுன்சிலர் காசிமாயன், விருவீடு ஊராட்சி தலைவர் தருமர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    58 பாசன கால்வாயில் தண்ணீர் திறக்க உத்தரவிட்ட தமிழக அரசுக்கும், முதல்வ ருக்கும், பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம் .

    28.10.2022 அன்று வைகை அணையில் திறக்கப்பட்ட 58 கிராம பாசன கால்வாய் தண்ணீர் இடதுபுற கால்வாயில் ரெட்டியபட்டி, அய்யம்பட்டி, இன்னொரு பிரிவான பாறைப்பட்டி பிரிவில் போடுவார்பட்டி, புதுக்கோட்டை பிரிவில் சடச்சிபட்டி, கீரிப்பட்டி பிரிவில் பூதிப்புரம், கிருஷ்ணாபுரம், கட்டக்கரு ப்பன்பட்டி, போத்தம்பட்டி பிரிவில் வடுகபட்டி போன்ற கண்மாய்கள் பயனடையவில்லை.

    மேற்கண்ட கண்மாய்க ளுக்கு மீண்டும் வைகை அணையில் 67 அடி தண்ணீர் வரும்பொழுது தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    58 கிராம பாசன கால்வாயில் பயன்பெறும் கண்மாய்களில் தண்ணீர் திறப்பின் போது முழுமையாக தண்ணீர் பெற வாய்ப்புள்ள கண்மா ய்களுக்கு தனிமடை அமைக்க அரசுக்கும், பொதுப்பணித்துறைக்கும் கோரிக்கை விடுக்கப்படுகிறது.

    ஒவ்வொரு ஆண்டும் 58 கிராம பாசன கால்வாயில் அனைத்து கண்மாய்களும் பயன்பெற உறுதிப்படுத்தப்பட்ட, நிரந்தரமாக்கப்பட்ட நீரை பெற உரிய ஆணையை அரசு பிறப்பிக்கவும், 58 கிராமபாசன கால்வாயை நீர்பாசன திட்டமாக அறிவிக்கவும் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்படுகிறது.

    மேற்கண்டவை உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • பேரூராட்சி சபை, நகர சபை, மாநகர சபை கூட்டம் நடத்துவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டது.
    • மின் மயானத்தை இடமாற்றம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கருத்துக்களை பொதுமக்கள் தெரிவித்தனர்.

    பல்லடம் :

    தமிழகத்தில் தற்போது கிராம சபை கூட்டம் நடைபெறுவது போன்று பேரூராட்சி சபை, நகர சபை, மாநகர சபை கூட்டம் நடத்துவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டது. இதன்படி பல்லடம் நகராட்சியில் வார்டு எண் - 6 க்கான நகரசபை கூட்டம் ராயர்பாளையம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நகர்மன்ற உறுப்பினர் ஈஸ்வரமூர்த்தி,தலைமை வகித்தார்.நகராட்சி வருவாய் ஆய்வாளர் பிரகாஷ்,சுகாதார ஆய்வாளர் சங்கர்,பணி மேற்பார்வையாளர் ராசு,கணக்காளர் சசிகுமார், மற்றும் வார்டு பொதுமக்கள், உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    இந்த கூட்டத்தில்,கரையான்புதூர் சக்தி நகரில், கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும், தெரு விளக்குகள் அமைக்க வேண்டும், கிருஷ்ணா நகர் பகுதியில் போர்வெல், அமைத்து சப்பை தண்ணீர் சப்ளை செய்ய வேண்டும், கரையான் புதூரில் புதிய ரேஷன் கடை அமைத்து தர வேண்டும், ராயர்பாளையம் மயானத்திற்கு போர் வசதி செய்து தர வேண்டும், பாசன வாய்க்காலில் கோழிக் கழிவுகள் போடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர்நிலை அருகே அமைய உள்ள மின் மயானத்தை இடமாற்றம் செய்ய வேண்டும். உள்ளிட்டவை குறித்து பொதுமக்கள் கருத்துக்களை தெரிவித்தனர். இதே போல வார்டு எண் 7-க்கான நகரசபை கூட்டம் ராயர்பாளையம் மாரியம்மன் கோவில் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நகர் மன்ற உறுப்பினர் கனகுமணி துரைக்கண்ணன் தலைமை வகித்தார்.நகராட்சி அதிகாரிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் அபிராமி நகரில் தெரு விளக்கு வசதி, கழிவுநீர் கால்வாய் வசதி செய்து தர வேண்டும் ராயர்பாளையம் பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய் பராமரிக்க வேண்டும், தெருவிளக்குகள் பழுதடைந்ததை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், பச்சாபாளையத்தில் நீர்நிலை அருகே மின் மயானத்தை அமைக்காமல், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத இடத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கருத்துக்களை பொதுமக்கள் தெரிவித்தனர்.

    • மாவட்ட பஞ்சாயத்து கூட்டத்தில் தீர்மானம்
    • நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்தது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட பஞ்சாயத்து கூட்டம் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மெர்லியன்றுதாஸ் தலைமை தாங்கினார். மாவட்ட பஞ்சாயத்து செயலாளர் முருகானந்தம், சுகாதார பணிகள் துணை இயக்குனர் மீனாட்சி உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் துணைத் தலைவர் சிவக்குமார் கவுன்சிலர்கள் பேராசிரியர் நீல பெருமாள், ஜான்சிலின் விஜிலா, அம்புளி, செலின்மேரி, பரமேஸ்வரன், லூயிஸ், ராஜேஷ் பாபு, ஜோபி, ஷர்மிளா ஏஞ்சல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் கவுன்சிலர் கள் கூறுகையில், குமரி மாவட்டத்தில் கால்நடைகளுக்கான மருந்து தட்டுப்பாடு உள்ளது, நாய் தொல்லை அதிகமாக உள்ளது. அதை கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சி.டி. ஸ்கேன் மற்றும் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் வசதி செய்ய வேண்டும், குளச்சல் அரசு ஆஸ்பத்திரியில் ஆம்புலன்ஸ் வசதி இல்லை, ஏற்கனவே பிரேத பரிசோதனை கூடம் இருந்த நிலையில் தற்போது அது செயல்படவில்லை. டாக்டர்கள் இருப்பதில்லை. நோயாளிகள் சிகிச்சை அளிக்க சென்றால் உடனே ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரிக்கு செல்லுங்கள் என்று அனுப்பும் நிலை உள்ளது என்றனர்.

    அதிகாரிகள் கூறுகையில், கால்நடைகளுக்கான மருந்து தட்டுப்பாடு ஏற்கனவே இருந்து வந்த நிலையில் தற்போது அந்த தட்டுப்பாடு சரியாகிவிட்டது. நாய்களை கட்டுப்படுத்த பஞ்சாயத்து மற்றும் பேரூராட்சி அலுவலகங்களில் இருந்து பிடித்து கொண்டு வந்தால் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    குமரி மாவட்டத்தில் முதல்-அமைச்சரின் இன்னுயிர் காப்போம் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது குமரி மாவட்டத்தில் மருந்து தட்டுப்பாடு இல்லை. குழித்துறை அரசு ஆஸ்பத்திரி மேம்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப் பட்டு வருகிறது. குளச்சல் அரசு ஆஸ்பத்திரியில் ஆம்புலன்ஸ் வசதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். பிரேத பரிசோதனை செய்வதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றனர்.

    கூட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பயனாளிகள் ஊதியம் காலதாமதம் இன்றி வழங்க வேண்டும், தமிழகத்தில் மக்களை பாதிப்படையை செய்யும் மின் கட்டணம் மற்றும் சொத்து வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும், குமரி மாவட்டத்தில் விவ சாயத்திற்கு பயன் படுத்தப்படும் பாசன கால்வாய்களில் கழிவுநீர் கலப்பதை உடனடியாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், நாகர்கோவில், குழித்துறை, கன்னியாகுமரி, இரணியல், ரெயில் நிலையங்களில் பிரீ பெய்டு ஆட்டோ வசதி செய்து கொடுக்க வேண்டும்.

    தமிழகத்தில் விற்பனை செய்யும் அனைத்து மின்சாதன பொருட்களிலும் தமிழ் மொழி இடம் பெற வேண்டும். தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் அனைத்து கடைகள் வணிக நிறுவனங்களில் வாடிக்கையாளர்களுக்கு தமிழ் மொழியில் ரசீது வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    ×