search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    58 கிராம பாசன கால்வாயில் மீண்டும் தண்ணீர் திறந்து விட  விவசாயிகள் கூட்டத்தில் தீர்மானம்
    X

    கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள்.

    58 கிராம பாசன கால்வாயில் மீண்டும் தண்ணீர் திறந்து விட விவசாயிகள் கூட்டத்தில் தீர்மானம்

    • உசிலம்பட்டியில் உள்ள 58 கிராம பாசன கால்வாயில் மீண்டும் தண்ணீர் திறந்து விட வேண்டும்என விவசாயிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
    • 58 கிராமபாசன கால்வாயை நீர்பாசன திட்டமாக அறிவிக்கவும் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்படுகிறது.

    உசிலம்பட்டி

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 58 கிராம பாசன சங்க விவசாயிகள் கூட்டம் நடந்தது. தலைவர் ஜெயராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் சிவப்பிரகாசம் முன்னிலை வகித்தார்.

    பொருளாளர் செந்தில்குமார், துணைத் தலைவர்கள் மகாராசன், சன்னாசி, துணைச் செயலாளர்கள் பொன் ஆதிசேடன், இரும்புத்துரை தலைமை ஆலோசகர் சின்னான், மாவட்ட கவுன்சிலர் காசிமாயன், விருவீடு ஊராட்சி தலைவர் தருமர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    58 பாசன கால்வாயில் தண்ணீர் திறக்க உத்தரவிட்ட தமிழக அரசுக்கும், முதல்வ ருக்கும், பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம் .

    28.10.2022 அன்று வைகை அணையில் திறக்கப்பட்ட 58 கிராம பாசன கால்வாய் தண்ணீர் இடதுபுற கால்வாயில் ரெட்டியபட்டி, அய்யம்பட்டி, இன்னொரு பிரிவான பாறைப்பட்டி பிரிவில் போடுவார்பட்டி, புதுக்கோட்டை பிரிவில் சடச்சிபட்டி, கீரிப்பட்டி பிரிவில் பூதிப்புரம், கிருஷ்ணாபுரம், கட்டக்கரு ப்பன்பட்டி, போத்தம்பட்டி பிரிவில் வடுகபட்டி போன்ற கண்மாய்கள் பயனடையவில்லை.

    மேற்கண்ட கண்மாய்க ளுக்கு மீண்டும் வைகை அணையில் 67 அடி தண்ணீர் வரும்பொழுது தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    58 கிராம பாசன கால்வாயில் பயன்பெறும் கண்மாய்களில் தண்ணீர் திறப்பின் போது முழுமையாக தண்ணீர் பெற வாய்ப்புள்ள கண்மா ய்களுக்கு தனிமடை அமைக்க அரசுக்கும், பொதுப்பணித்துறைக்கும் கோரிக்கை விடுக்கப்படுகிறது.

    ஒவ்வொரு ஆண்டும் 58 கிராம பாசன கால்வாயில் அனைத்து கண்மாய்களும் பயன்பெற உறுதிப்படுத்தப்பட்ட, நிரந்தரமாக்கப்பட்ட நீரை பெற உரிய ஆணையை அரசு பிறப்பிக்கவும், 58 கிராமபாசன கால்வாயை நீர்பாசன திட்டமாக அறிவிக்கவும் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்படுகிறது.

    மேற்கண்டவை உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    Next Story
    ×