search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவண்ணாமலை மாவட்டத்தில் 3 அணைகளில் தண்ணீர் திறப்பு
    X

    கடல் போல் காட்சியளிக்கும் சாத்தனூர் அணை.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் 3 அணைகளில் தண்ணீர் திறப்பு

    • 5-வது நாளாக இன்றும் திறந்துவிடப்பட்டுள்ளது
    • கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத் தில் சாத்தனூர், செண்பகத் தோப்பு மற்றும் மிருகண்டா நதி அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. திருவண்ணாமலை மாவட் டம் தண்டராம்பட்டு அடுத்த சாத்தனூர் அணையின் நீர் மட்டம் 119 அடியாகும். தென் மேற்கு பருவ மழை காலத் தில் அணைக்கு நீர்வரத்து இருந்தது.

    தென் பெண்ணையாறு நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால், அணை யின் நீர்மட்டம் உயர்ந்தது. 116 அடியை கடந்தும், நீர்வரத்து கிராமங்களில் பெய்துவரும் தொடர்ந்து அதிகரித்ததால், மழையால் கலசப்பாக்கம் கடந்த செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் அணையில் இருந்து தென் பெண்ணையாற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இந்நிலையில், வட கிழக்கு பருவமழை பெய்ய தொடங் கியதால், கிருஷ்ணகிரி அணையின் நீர்மட்டம் உயர்ந்து, தென் பெண்ணை யாற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும், நீர்பிடிப்பு பகுதியில் பெய்யும் மழையால், சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது.

    அணையின் நீர்மட்டம் 117 அடியை எட்டியதால், அணை யில்இருந்து தென்பெண்ணை யாற்றில் கடந்த 7-ம் தேதி முதல் தொடர்ந்து 5-வது நாளாக இன்றும் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

    அணைக்கு வரும் விநாடிக்கு 950 கனஅடி தண்ணீரும், தென்பெண்ணை யாற்றில் முழுமையாக வெளியேற்றப்படுகிறது. அணையில் 6,875 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. அணை பகுதியில் 1.40 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.

    ஜவ்வாதுமலை அடிவார அருகே உள்ளமிருகண்டாநதி அணை மற்றும் சந்தவாசல் அருகே உள்ள செண்பகத் தோப்பு அணைக்கு நீர்வரத்து அதிகரித் துள்ளது.

    22.97 அடி உயரம் உள்ள மிருகண்டா நதி அணையின் நீர்மட்டம் 18.04 அடியாக உள்ளது. அணையில் 60.802 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. அணைக்கு

    வரும் விநாடிக்கு 82 கனஅடி தண்ணீரும் செய்யாற்றில் வெளி யேற்றப்படுகிறது. இதேபோல், 62.32 அடி உயரம் கொண்ட செண்பகத் தோப்பு அணையின் நீர் மட்டம் 51 அடியை எட்டியது. அணையில் 180.291 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது.

    அணைக்கு வரும் விநாடிக்கு 28 கனஅடி 28 தண்ணீரும் கமண்டலநதியில் வெளியேற்றப்படுகிறது. அணை பகுதியில் 4.20 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப் பட்டுள்ளதால் கரையோரத் தில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட் டுள்ளது.

    Next Story
    ×