search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Varanasi"

    பாராளுமன்ற உறுப்பினராக தன்னை இரண்டாம் முறை தேர்ந்தெடுத்த வாரணாசி மக்களுக்கு இன்று நன்றி தெரிவித்து உரையாற்றிய பிரதமர் மோடி என்றென்றும் நான் உங்கள் சேவகனாக இருப்பேன் என்றார்.
    லக்னோ:

    பாராளுமன்ற தேர்தலில் 303 இடங்களை பிடித்த பாஜக மத்தியில்  தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கிறது. 30-ம் தேதி மாலை 7 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய மந்திரிசபை பதவியேற்கிறது.

    இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினராக தன்னை இரண்டாம் முறை தேர்ந்தெடுத்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக வாரணாசி தொகுதிக்கு வந்த பிரதமர் மோடி இங்கு நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.

    இந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

    வெற்றி-தோல்வி கணக்குகளை தவிர தேர்தல்களில் தலைவர்கள் மற்றும் வாக்காளர்களிடையே இருக்கும் வேதியல் தொடர்புகளையும் இனி அரசியல் ஆய்வாளர்கள் கவனிக்கும் நிலைமையை இந்த தேர்தல் ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் அரசுக்கும் ஆளுங்கட்சிக்கும் இடையில் உள்ள வேதியல் தொடர்புகள் பணிகளுக்கும் பணியாளர்களுக்கும் உள்ள ஒருங்கிணைப்பை உறுதிப்படுத்தும்.

    வாரணாசி தொகுதியில் இந்தமுறை நான் வேட்புமனு தாக்கல் செய்ததும் உங்களால் இன்னும் ஒரு மாதத்துக்கு இங்கு வர இயலாது. நீங்கள் நாடு முழுவதும் பிரசாரத்துக்கு செல்லுங்கள். உங்கள் தொகுதியை நாங்கள் கவனித்து கொள்கிறோம் என்று எனக்கு நீங்கள் உத்தரவிட்டீர்கள். அதேபோல் சென்ற முறையைவிட இந்த தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் என்னை வெற்றிபெற வைத்திருக்கிறீர்கள்.



    தேர்தல் பிரசாரம் எல்லாம் நிறைவடைந்த பின்னர்கூட இங்கு வரலாமா? என்று நான் சிந்தித்ததுண்டு, ஆனால், நீங்கள் எனக்கிட்ட உத்தரவை நினைவுகூர்ந்து நான் வரவில்லை. தனது தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெறும்போதும் வாக்கு எண்ணப்படும்போதும் என்னைப்போல் ஆசுவாசமாக இருந்த வேட்பாளர் யாருமே இருக்க முடியாது.

    இதற்கெல்லாம் காரணம் உங்களுடைய உழைப்பு. உங்களை நம்பி, உங்களது உழைப்பின்மேல் இருந்த நம்பிக்கையால்தான் நான் கேதர்நாத்துக்கு சென்று விட்டேன்.

    இந்த நாடு என்னை பிரதமராக தேர்ந்தெடுத்திருக்கலாம். ஆனால், என்றென்றும் நான் உங்கள் பாராளுமன்ற உறுப்பினராகவும் சேவகனாகவும் இருப்பேன். உங்கள் பணியே எனக்கு முதன்மையானது. என்னை எதிர்த்து இந்த வாரணாசி தொகுதியில் போட்டியிட்டவர்களுக்கும் நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.

    பாஜக, இந்திமொழி பேசும் மாநில மக்களுக்கான கட்சி என்று சில அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். கர்நாடகா மாநிலத்தில் அதிகமான இடங்களை பிடித்துள்ள எங்களை இன்னுமா இந்திமொழி பேசும் மாநில மக்களுக்கான கட்சி என்று கூறுகிறீர்கள்?

    கோவாவில் நான்காண்டுகளாக எங்கள் ஆட்சி நடக்கிறது. வடகிழக்கு மாநிலங்கள், அசாம், லடாக் எல்லா இடங்களிலும் எங்கள் ஆட்சி உண்டு. அதிகமாக வெற்றிபெற்றும் வந்திருக்கிறோம். இன்னுமா இந்திமொழி பேசும் மாநில மக்களுக்கான கட்சி என்று கூறுகிறீர்கள்?

    பாஜகவின் சித்தாந்தங்களை கடைப்பிடிக்கும் ஒரே காரணத்துக்காக மேற்கு வங்காளத்தில் அரசியல் விரோதத்தால் பாஜகவினர் கொல்லப்படுகின்றனர்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    இரண்டாவது முறையாக தன்னை பாராளுமன்ற வேட்பாளராக தேர்ந்தெடுத்த வாரணாசி தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க நாளை இங்கு வரும் பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
    லக்னோ:

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் குஜராத் மாநிலத்தின் வதோதரா மற்றும் உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் நரேந்திர மோடி இந்தமுறை வாரணாசி தொகுதியில் மட்டும் போட்டியிட்டார்.

    இந்த தேர்தலில் பிரதமர் மோடி 6 லட்சத்து 74 ஆயிரத்து 664 வாக்குகளை வாங்கி, 4 லட்சத்து 79 ஆயிரத்து 505 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இரண்டாவது இடத்தை பிடித்த சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் ஷாலினி யாதவ் ஒரு லட்சத்து 95 ஆயிரத்து 159 வாக்குகளை பெற்றார்.

    ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 548 வாக்குகளை பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டார்.



    இந்நிலையில், இரண்டாவது முறையாக தன்னை பாராளுமன்ற வேட்பாளராக தேர்ந்தெடுத்த வாரணாசி தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க நாளை இங்கு வரும் பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

    காசி விஸ்வநாதர் ஆலயத்தில் வழிபாடும் செய்யும் மோடி நாளை முழுவதும் இந்த தொகுதியில் பிரசார கூட்டங்கள் மற்றும் சில முக்கிய சாலைகள் வழியாக திறந்த வாகனத்தில் பேரணியாக சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பிரதமரின் வருகையையொட்டி வாரணாசி முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
    பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி தொகுதியில் 3.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலும் பாஜக தலைவர் அமித் ஷா காந்திநகர் தொகுதியில் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலும் முன்னிலை வகிக்கின்றனர்.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் படிப்படியாக வெளியாகிவரும் நிலையில் பாஜக கூட்டணி வேட்பாளர்கள் சுமார் 350 தொகுதிகளில் வெற்றிமுகம் காட்டி வருகின்றனர். பாஜக கூட்டணியில் போட்டியிட்ட முக்கிய பிரமுகர்கள் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளனர்.

    அவ்வகையில், பிற்பகல் 3 மணிவரை நிலவரப்படி உத்தரப்பிரதேசம் மாநிலம், வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடி 4 லட்சத்து 41 ஆயிரத்து 59     வாக்குகளை பெற்றிருந்தார். அவரை எதிர்த்து நின்ற காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் 87 ஆயிரத்து 338 வாக்குகளை பெற்றார். அங்கு சுமார் மூன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மோடி வெற்றிமுகம் காட்டி வருகிறார்.



    இதேபோல், குஜராத் மாநிலத்தின் காந்திநகர் தொகுதியில் போட்டியிட்ட பாஜக தலைவர் அமித் ஷா 8 லட்சத்து 21 ஆயிரத்து 705 வாக்குகளை பெற்றிருந்தார். அவரை எதிர்த்து நின்ற காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் சி.ஜே.சாவ்டா 3 லட்சத்து 20 ஆயிரத்து 136 வாக்குகளை பெற்று பின்தங்கியுள்ளார். 5 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் அமித் ஷா வெற்றிமுகம் காட்டி வருகிறார்.
    பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் வாரணாசி நகர வீதிகளில் பிரியங்கா காந்தி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து இன்று சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார்.
    லக்னோ:

    பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் வாரணாசி நகர வீதிகளில் பிரியங்கா காந்தி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து இன்று சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார்.

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் கோவில் நகரமான வாரணாசி பாராளுமன்ற தொகுதி எம்.பி.யாக இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி இந்த தேர்தலிலும் இதே தொகுதியில் போட்டியிடுகிறார்.

    இந்த தொகுதியில் வரும் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் காங்கிரஸ் சார்பில் மோடியை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர் அஜய் ராயை ஆதரித்து  வாரணாசி நகர வீதிகளில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரியங்கா காந்தி இன்று சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார்.



    கடந்த தேர்தலில் இங்கு சுமார் 10.28 லட்சம் வாக்குகள் பதிவாகின. அதில் பிரதமர் மோடி 5 லட்சத்து 16 ஆயிரத்து 593 வாக்குகளை பெற்றிருந்தார். அவருக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தை பிடித்த ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு லட்சத்து 79 ஆயிரத்து 793 வாக்குகளை பெற்றார்.

    மூன்றாவது இடத்தில் வந்த காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் உள்பட அனைவரும் டெபாசிட் தொகையை இழந்தனர் என்பது நினைவிருக்கலாம்.
    வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து தேர்தல் களத்தில் களமிறங்கிய தாதா ஆதிக் அகமது தேர்தல் களத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

    வாரணாசி:

    பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் 19-ந்தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. இந்த தொகுதியில் மோடியை எதிர்த்து ஆதிக் அகமது என்ற பிரபல தாதாவும் களமிறங்கினார். தற்போது பிரயாக்ராஜ் நகரில் உள்ள நைனி சிறையில் இருக்கும் அவர் வாரணாசி தொகுதியில் வேட்புமனுவும் தாக்கல் செய்திருந்தார். சுயேச்சையாக நின்ற அவருக்கு தொலைக்காட்சி பெட்டி சின்னத்தை தேர்தல் கமிஷன் ஒதுக்கியது.

    இந்தநிலையில் தேர்தல் களத்தில் இருந்து விலகுவதாக ஆதிக் அகமது நேற்று திடீரென அறிவித்தார். இது தொடர்பாக சிறையில் இருந்து அவர் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில், தனக்கு பிரசாரம் செய்ய பரோல் வழங்காததால் போட்டியில் இருந்து விலகுவதாக கூறியிருந்தார்.

    முன்னதாக தேர்தல் பிரசாரத்துக்காக பரோல் வழங்க வேண்டும் என உள்ளூர் கோர்ட்டு மற்றும் அலகாபாத் ஐகோர்ட்டு போன்றவற்றில் ஆதிக் அகமது மனு செய்திருந்தார். ஆனால் அவரது மனுக்களை 2 கோர்ட்டுகளும் தள்ளுபடி செய்தன. இதனால் தனக்கு ஜனநாயக உரிமை மறுக்கப்பட்டு இருப்பதாக தனது கடிதத்தில் அவர் குற்றம் சாட்டி உள்ளார்.
    உத்தரபிரதேசம் (கிழக்கு) மாநில காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி, மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் நடத்தும் ரோடு-ஷோவிற்கு சுமார் 2 லட்சம் பேரை திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் வருகிற 19-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

    அந்த தொகுதியில் மோடியை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் அஜய்ராய் நிறுத்தப்பட்டுள்ளார். சமாஜ்வாடி-பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ஷாலினி யாதவ் போட்டியிடுகிறார்.

    கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் மோடி மிகப்பெரிய ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தடவை அதை விட 2 மடங்கு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற மோடி திட்டமிட்டுள்ளார். இதற்காக வாரணாசி தொகுதியில் பிரசாரம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    மோடி கடந்த மாத இறுதியில் வேட்புமனு தாக்கல் செய்ய சென்றபோது சுமார் 3 லட்சம் பேர் ரோடு ஷோவில் கலந்து கொண்டனர். மீண்டும் ஒரு தடவை அவர் வாரணாசி தொகுதிக்கு வந்து தீவிர பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார்.

    17-ந்தேதி வாரணாசி தொகுதியில் பிரசாரம் ஓய்கிறது. எனவே 17-ந்தேதி பிற்பகல் அவர் வாரணாசி தொகுதியில் பிரசாரம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது வாரணாசியில் காங்கிரஸ் வேட்பாளர் அஜய்ராய் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டார். இந்த தடவை அவரை 2-வது இடத்துக்கு கொண்டு வர பிரியங்கா விரும்புகிறார். இதற்காக அஜய்ராயை ஆதரித்து பிரசாரம் செய்ய பிரியங்கா முடிவு செய்துள்ளார்.

    நாளை மறுநாள் (புதன்கிழமை) பிரியங்கா வாரணாசி தொகுதிக்கு செல்ல உள்ளார். அங்கு அவர் பிரமாண்டமான ரோடு-ஷோ நடத்துகிறார். இந்த ரோடு-ஷோவில் சுமார் 2 லட்சம் பேரை திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

    இதற்கிடையே மாயாவதியும் அகிலேஷ் யாதவும் இணைந்து வாரணாசியில் பிரமாண்ட பேரணி நடத்தி பிரசாரம் செய்ய உள்ளனர். மறுநாள் மோடி பிரசாரம் செய்கிறார்.



    16-ந்தேதி மேற்கு வங்க மாநிலத்தில் மோடி பிரசாரம் செய்கிறார். அன்றிரவு அவர் வாரணாசி வந்து தங்கி இருந்து மறுநாள் பிரசாரம் செய்ய உள்ளார்.
    மோடியை எதிர்த்து வாரணாசியில் போட்டியிடாதது குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி விளக்கம் அளித்துள்ளார். #LokSabhaElections2019 #Priyanka #Varanasi
    அமேதி:

    உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி பாராளுமன்றத் தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து காங்கிரஸ் பொதுச் செயலாளர்களில் ஒருவரான பிரியங்கா காந்தி போட்டியிடலாம் என பரவலாக பேசப்பட்டது. கட்சி மேலிடம் கூறினால் போட்டியிட தயாராக இருப்பதாக பிரியங்காவும் கூறியிருந்தார். ஆனால், அவர் வேட்பாளராக அறிவிக்கப்படவில்லை. கடந்த முறை போட்டியிட்ட அஜய்  ராய், மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். வாரணாசியில் மோடி ஆதரவு அலை வீசுவதால், காங்கிரஸ் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது.



    இந்நிலையில், வாரணாசியில் போட்டியிடாததற்கான காரணம் குறித்து பிரியங்கா காந்தி கூறியதாவது:-

    நான் போட்டியில் இருந்து வெளியேறவில்லை. கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் உள்ள சக தலைவர்களின் ஆலோசனைகள் மற்றும் அறிவுறுத்தல்களை ஏற்று இந்த முடிவை எடுத்துள்ளேன். உத்தரப்பிரதேசத்தில் உள்ள 41 தொகுதிகளை கவனித்துக்கொள்ளும் பொறுப்பு எனக்கு இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

    எங்கள் கட்சியின் அனைத்து வேட்பாளர்களும், நான் அவர்களின் தொகுதிகளுக்குச் சென்று பிரசாரம் செய்ய வேண்டும் என விரும்புகின்றனர். நான் ஒரு தொகுதியில் மட்டும் அதிக கவனம் செலுத்தினால், அவர்கள் சற்று ஏமாற்றம் அடைவார்கள் என நினைத்தேன். அதனால்தான் தேர்தலில் போட்டியிடவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    உத்தர பிரதேசத்தின் கிழக்கு பகுதியில் உள்ள 41 மக்களவைத் தொகுதிகளுக்கும் பிரியங்கா காந்தி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மீதமுள்ள 39 தொகுதிகளுக்கும் மற்றொரு பொதுச்செயலாளரான ஜோதிராதித்ய சிந்தியா பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். #LokSabhaElections2019 #Priyanka #Varanasi
    பாதுகாப்பு படை வீரர்களுக்கு வழங்கப்படும் உணவை குறை கூறி வீடியோ வெளியிட்ட தேஜ் பகதூர் யாதவ் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து சமாஜ்வாதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். #Varanasipolls #TejBahadurYadav #Samajwadi
    லக்னோ:

    பாதுகாப்பு படை வீரர்களுக்கு வழங்கப்படும் உணவு குறித்து குறை கூறி சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டதால் தேஜ் பகதூர் யாதவ் என்ற பாதுகாப்பு படை வீரர் கடந்த 2017 ஆம் ஆண்டு பணியில் இருந்து நீக்கப்பட்டார்.

    இந்த நிலையில், முன்னாள் பாதுகாப்பு படை வீரரான தேஜ் பகதூர் யாதவ் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து சுயேட்சை வேட்பாளராக போட்டியிடப் போவதாக சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
     
     ஊழல் பிரச்சினையை நான் எழுப்பியதால், என்னை பணி நீக்கம் செய்தார்கள். எனது முதல் நோக்கம் பாதுகாப்பு படை துறையில் உள்ள ஊழலை ஒழிப்பதுதான். எனவே, வாரணாசி தொகுதியில், பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிட முடிவு செய்துள்ளேன் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.



    இந்த பாராளுமன்ற தேர்தலில் வாரணாசி தொகுதிக்கு ஏழாவது கட்டமாக மே 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பிரதமர் மோடி கடந்த 26-ம் தேதி இங்கு வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், இன்றுடன் வேட்புமனு தாக்கல்  முடிவடைகிறது.

    இந்நிலையில் தேஜ் பகதூர் யாதவை தங்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக சமாஜ்வாதி கட்சி கடைசி நேரத்தில் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.#Varanasipolls #TejBahadurYadav #Samajwadi
    வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் மோடி, இன்று வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளார். முன்னதாக தொண்டர்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி தேர்தலின்போது தொண்டர்கள் அதிக விழிப்புடன் இருக்கும்படி அறிவுரை கூறியுள்ளார். #PMModi #AddressingWorkers
    வாரணாசி:

    உத்தரபிரதேசம் மாநிலத்தில் கடந்த 11ம் தேதி தொடங்கிய பாராளுமன்ற தேர்தல் 3 கட்டங்களாக முடிவடைந்த நிலையில், மீதமுள்ள தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 29 மற்றும் மே 6,12,19 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

    இதையடுத்து உத்தரபிரதேசம் மாநிலத்தில் வாரணாசி தொகுதியில் போட்டியிடவுள்ள பிரதமர் மோடி இன்று காலை 11.30 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். முன்னதாக பாஜக தொண்டர்களிடையே உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

    தேர்தலின்போது வாக்குச்சாவடிக்குச் செல்லும் தொண்டர்கள் அதிக விழிப்புடன் இருக்க வேண்டும் . நாம் நேர்மையான  கூட்டணி அமைத்துள்ளோம்.  நாட்டுக்காக எவ்வித சூழலிலும்  ஓய்வின்றி உழைக்க வேண்டும். நாடு முழுவதும் நமக்கு ஆதரவான அலை உருவாகியுள்ளது. தேர்தலின் போது அத்துமீறுவது மிகப்பெரிய விளைவை ஏற்படுத்தும்.



    நாம் அவ்வழியில் செல்லக்கூடாது. பிரதமர் மோடி தான் மீண்டும் வரவேண்டும் என நாடே ஆசைப்படுகிறது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை கொண்டாடும் வகையில்  ஆட்சி நடைபெறுகிறது.  நான் நேற்று ரோட்ஷோ நடத்தியபோது உங்களின் உழைப்பை கண்டு மகிழ்ச்சி அடைந்தேன்.

    மக்களின் உள்ளங்களை வெல்லும் அளவிற்கு உங்கள் பணி இருக்க வேண்டும். பாஜக எப்போதும் தொண்டர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறது. கேரளா, வங்காளம் ஆகிய மாநிலங்களில் தேர்தலின்போது வன்முறை நடந்தபோதும் உங்களின் ஊக்கம் சற்றும் குறையவில்லை.

    இவ்வாறு அவர் பேசினார். #PMModi #AddressingWorkers 
    உத்தரபிரதேசம் மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரமாண்ட பேரணி நடத்திய பிரதமர் மோடி கங்கா ஆரத்தி செய்து வழிபட்டார். #LokSabhaElections2019 #Modi
    லக்னோ:

    பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிடுகிறார். நாளை அவர் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார்.

    இதையொட்டி, பாஜக சார்பில் வாரணாசியில் இன்று மாலை பிரம்மாண்ட பேரணி நடத்தப்பட்டது. இந்தப் பேரணியில் பா.ஜ.க. மூத்த தலைவர்கள், மத்திய மந்திரிகள் கலந்து கொண்டனர். மேலும் தமிழகத்தின் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தனது மகன் ரவீந்திரநாத்துடன் இதில் பங்கேற்றார்.



    தொண்டர்கள் சூழ பிரதமர் மோடி சாலையில் ஜீப்பில் நின்றபடி தசாஸ்வமேத நதி முகத்துவாரத்தை அடைந்தார். இதையடுத்து கங்கை நதியை வழிபட்ட பிரதமர் மோடி அங்கு கங்கா ஆரத்தி செய்து வழிபாடு நடத்தினார்.  
     
    முன்னதாக, வாரணாசியில் அமைந்துள்ள பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்திற்கு சென்ற மோடி, பல்கலைக்கழக நிறுவனர் மதன் மோகன் மாளவியா உருவ சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தியது குறிப்பிடத்தக்கது. #LokSabhaElections2019 #Modi
    உத்தரபிரதேசம் மாநிலத்தின் வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் மோடி பிரம்மாண்ட பேரணியை இன்று நடத்தினார். #LokSabhaElections2019 #Modi
    லக்னோ:

    பாராளுமன்றத் தேர்தலில் உத்தரபிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிடுகிறார். நாளை அவர் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளார்.

    வாரணாசியில் இன்று பிரம்மாண்ட பேரணி நடத்த உள்ளதால் அங்குள்ள அனைத்துப் பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

    இந்நிலையில், உ.பி.யின் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி இன்று மாலை பிரம்மாண்ட பேரணியை நடத்தினார்.
     


    வாரணாசியில் அமைந்துள்ள பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்திற்கு சென்ற மோடி, பல்கலைக்கழக நிறுவனரான மறைந்த மதன் மோகன் மாளவியா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

    இதையடுத்து, சாலை மார்க்கமாக மோடி பேரணி சென்றார். வாரணாசியில் உள்ள தசாஸ்வமேத் நதிமுகத்துவார பகுதி வரை பேரணி நடைபெறுகிறது. இந்தப் பேரணியில் பாஜக மூத்த தலைவர்கள், மத்திய மந்திரிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அவர் கங்கை நதியில் வழிபாடு நடத்தினார்.  #LokSabhaElections2019 #Modi
    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தரவிட்டால் பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசி பாராளுமன்ற தொகுதியில் மகிழ்ச்சியுடன் போட்டியிடுவேன் என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். #Varanasi #PriyankaGandhi #LSpolls2019 #PriyankaGandhicontest
    திருவனந்தபுரம்:

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அமேதி தொகுதி எம்.பி.யாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதவி வகித்து வருகிறார். இந்த பாராளுமன்ற தேர்தலிலும் அதே தொகுதியில் போட்டியிடும் அவர் கேரள மாநில காங்கிரஸ் பிரமுகர்களின் வற்புறுத்தலுக்கிணங்க அங்குள்ள வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார்.

    அவரை எதிர்த்து போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக பாரத் தர்ம ஜன சேனா தலைவர் துஷார் வெள்ளப்பள்ளி நிறுத்தப்பட்டுள்ளார்.



    இன்று மாலையுடன் அங்கு பிரசாரம் ஓய்ந்த நிலையில் ராகுல் காந்திக்கு ஆதரவு திரட்டுவதற்காக வயநாட்டில் இரண்டாவது நாளாக இன்று பிரசாரம் மேற்கொண்ட பிரியங்கா காந்தி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

    பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் நீங்கள் நிறுத்தப்படலாம் என்று தகவல் வெளியாகி வருவது பற்றி? என்ற கேள்விக்கு பதிலளித்த பிரியங்கா காந்தி, 'காங்கிரஸ் தலைவர் உத்தரவிட்டால் மகிழ்ச்சியுடன் போட்டியிடுவேன்’ என தெரிவித்தார்.  #Varanasi #PriyankaGandhi  #PriyankaGandhicontest #LSpolls2019
    ×