search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tuberculosis"

    • அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட, மேல்நாடு, கீழ்நாடு ஊராட்சி சூலாங்குறிச்சி, கலக்காம்பாடி, தாழ்வள்ளம் கிராமங்களில், காசநோயாளிகளை கண்டறியும் சிறப்பு முகாம் நடைபெற்றது.
    • முகாமை காசநோய் பிரிவு சேலம் மாவட்ட துணை இயக்குனர் கணபதி தொடங்கி வைத்தார்.

    வாழப்பாடி

    சேலம் மாவட்டம், கல்வராயன்மலை சூலாங்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட, மேல்நாடு, கீழ்நாடு ஊராட்சி சூலாங்குறிச்சி, கலக்காம்பாடி, தாழ்வள்ளம் கிராமங்களில், காசநோயாளிகளை கண்டறியும் சிறப்பு முகாம் நடைபெற்றது.

    முகாமை காசநோய் பிரிவு சேலம் மாவட்ட துணை இயக்குனர் கணபதி தொடங்கி வைத்தார்.

    காசநோய் பிரிவு மருத்துவ குழுவினர், காசநோயின் அறிகுறிகள், பரவும் விதம், தடுப்பு முறைகள், சிகிச்சை முறைகள், காசநோயாளிகளுக்கான அரசின் நலத்திட்டங்கள் குறித்து விளக்கமளித்து மலைவாழ் பழங்குடியின மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    முகாமில், மருத்து அலுவலர்கள் ராஜா, காசநோய் சுகாதார மேற்பார்வையாளர் சின்னதுரை, சுகாதார செவிலியர்கள், ஆஷா பணியாளர்கள் ஆகியோர் கொண்ட குழுவினர், நடமாடும் எக்ஸ்-ரே பரிசோதனை எந்திரத்தில் 298 நபர்களுக்கு எக்ஸ்-ரே எடுத்தும் 50 நபர்களுக்கு சளி மாதிரிகள் எடுத்தும் பரிசோதனை செய்தனர்.

    பொதுமக்கள் வசிக்கும் பகுதிக்கே எக்ஸ்-ரே எந்திரத்தை கொண்டு வந்து, பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தது மிகவும் உபயோகமாக அமைந்ததாக பயனாளிகள் தெரிவித்தனர்.

    • காசநோய் கண்டறியும் இலவச மருத்துவ முகாம் நடந்தது.
    • காசநோய் கழகம் சார்பில் இலவசமாக நவீன முறையில் எக்ஸ்ரே எடுத்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் சக்க ராஜாக்கோட்டை மூதனூர் தாயாதியார் சாவடி வளாகத்தில் தேசிங்கு ராஜா பண்ணை நினைவாக சக்காராஜா கோட்டை சத்திரிய ராஜூக்கள் பொது மகாசபையும், விருதுநகர் மாவட்ட காசநோய் கழகமும் இணைந்து காசற்ற இலவச காசநோய் கண்டறியும் முகாமை நடத்தியது.

    முகாமில் சக்கராஜாக் கோட்டை சத்திரிய ராஜூக்கள் மகாசபை தலைவர் சின்ன வெங்கட ராஜா, ரவிராஜா, ஜெகநாத ராஜா, பலராம ராஜா, நகராட்சி ஆணையாளர். பார்த்தசாரதி மற்றும் சுகாதார அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    குழந்தைகள், பெண்கள் உட்பட நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு விருதுநகர் மாவட்ட காசநோய் கழகம் சார்பில் இலவசமாக நவீன முறையில் எக்ஸ்ரே எடுத்து சிகிச்சை அளிக்கப்பட்டது.இதில் காசநோய் கண்டறி யப்பட்ட நோயாளிகள் அரசு மருத்துவமனை மூலம் தொடர்பு கொள்ளப்படு வார்கள். அவர்களுக்கு உரிய மருத்துவ உதவி அவர்களது இல்லம் தேடி வந்து விடும் என தெரிவிக்கப்பட்டது.

    காச நோயற்ற தமிழகம் காண்போம் என்ற தலைப்பில் (காசற்ற) இலவச முகாம் சிறப்பாக நடத்தியதை சமூக ஆர்வலர்கள் வரவேற்று பாராட்டினார்கள்.

    முகாம் ஏற்பாடுகளை விருதுநகர் மாவட்ட காசநோய் கழகம் மற்றும் தேசிங்கு ராஜா பண்ணை குடும்பத்தார் செய்திருந்தனர்.

    • நோயாளிகளுக்கு நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி உள்ள வாகனம் மூலம் காசநோய் பரிசோதனை செய்யப்பட்டது
    • காசநோய் அறிகுறி உள்ளவர்களை பரிசோதனைக்காக முகாமிற்கு அழைத்து வந்தனர்.

    சாயர்புரம்:

    சாயர்புரம் பேரூராட்சிக்கு உட்பட்ட புளியநகர் டி.என்.டி.டி.ஏ. தொடக்கப்பள்ளி வளாகத்தில் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் ஏரல் வட்டார காச நோய் பிரிவு மற்றும் செபத்தையாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவை இணைந்து நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் மூலம் காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம் நடந்தது.

    முகாமினை புளியநகர் ஊர்நலக் கமிட்டி தலைவரும், சாயர்புரம் கூட்டுறவு வங்கி தலைவருமான அறவாழி தொடங்கி வைத்தார். நல்லாசிரியர் ஞானராஜ், தி.மு.க. வார்டு செயலாளர் முத்துராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் நோயாளிகளுக்கு நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி உள்ள வாகனம் மூலம் காசநோய் பரிசோதனை செய்யப்பட்டது. முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர்கள் மலைவிக்னேஷ், கண்ணன், செல்வராஜ், சுரேஷ், சுகாதார செவிலியர் ஷீலா, சுகாதார ஆய்வாளர்கள் மாரிமுத்து, சரவணன், இடைநிலை சுகாதார செவிலியர், முத்துலட்சுமி, பூர்ண கலையரசி, காசநோய் சுகாதார பார்வையாளர் சுதா மணிமேகலை ஆகியோர் காசநோய் பரிசோதனைகள் மேற்கொண்டனர்.

    முன்னதாக சுகாதார தன்னார்வலர்கள் சங்கரி, வெள்ளையம்மாள், விஜயா, உமா, மகேஸ்வரி ஆகியோர் புளியநகரில் வீடு, வீடாக சென்று காசநோய் அறிகுறி உள்ளவர்களை பரிசோதனைக்காக முகாமிற்கு அழைத்து வந்தனர். முகாமில் இருட்டறை உதவியாளர் எட்டையா மற்றும் ஹரி பாலகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். செபத்தையாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் ஜனனி முகாமினை ஆய்வு செய்தார்.

    • மந்தவெளி பகுதியில் கடந்த 3 நாட்களாக நடமாடும் நுண் கதிர் வீச்சு வாகனம் மூலமாக காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.
    • முகாமில் நுண் கதிர் எக்ஸ்ரே எடுக்கப்பட்டு பரிசோதனை கள் நடந்தன.

    சேலம்:

    தேசிய காச நோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் ஆத்தூர் நகராட்சி மந்தவெளி பகுதியில் கடந்த 3 நாட்களாக நடமாடும் நுண் கதிர் வீச்சு வாகனம் மூலமாக காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. முகாமில் நுண் கதிர் எக்ஸ்ரே எடுக்கப்பட்டு பரிசோதனை கள் நடந்தன. இந்த வாரம் இறுதி வரை இந்த முகாம் நடைபெறும்.

    இதையொட்டி 33-வது வார்டு கவுன்சிலர் ராமச்சந்தி ரன் தலைமையில் சேலம் மாவட்ட காசநோய் பிரிவின் துணை இயக்குனர் டாக்டர் கணபதி கள ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் பாண்டியராஜன் கலந்து கொண்டார்.

    முகாமிற்கு வந்தவர்களுக்கு காசநோய் பாதிப்பு கண்டறியப்பட்டதுடன் அதன் தன்மை குறித்தும் அதற்கான அவசியம் தேவையான சிகிச்சை குறித்தும் எடுத்து ரைக்கப்பட்டது. 2 வார சளி இருமல், மாலை நேர காய்ச்சல், பசியின்மை, எடை குறைதல், நெஞ்சுவலி, காச நோயின் அறிகுறிகள் ஆகும். நோய் கண்டறியப்பட்டு மேல் சிகிச்சை தேவைப்படுப வர்களுக்கு ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக பரிந்து ரைக்கப்பட்டனர்.

    மேலும் உயர் ரத்த அழுத்தம் நீரிழிவு நோய் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு மாத்திரைகள் வழங்கப்பட்டன.

    இதற்கான ஏற்பாடுகளை முதுநிலை காசநோய் சிகிச்சை மேற்பார்வையாளர் வீரமணிகண்டன் மற்றும் மருத்துவ பணியாளர்கள் செய்து இருந்தனர். இதில் பொதுமக்கள் ஆர்வமுடன் பங்குபெற்று பயனடைந்தார்கள்.

    • மயிலாடுதுறையில் காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
    • ஊர்வலத்தை கலெக்்டர் மகாபாரதி தொடங்கி வைத்தார்.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உலக காசநோய் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சுகாதாரத்துறையின் சார்பில் காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

    மாவட்ட கலெக்டர் மகாபாரதி ஊர்வலத்தை கொடியசைத்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறுகையில்,

    இந்தியாவில் காசநோய் காரணமாக 5 நிமிடத்திற்கு இருவர் இறந்துவிடுகின்றனர்.

    மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஆண்டு மட்டும் 913 நோயாளிகள் கண்டறியப்பட்டு சிகிச்சை அளித்து வருகின்றோம்.

    காசநோய் பரம்பரை வியாதியல்ல.

    காசநோய் எல்லா உறுப்புகளையும் பாதிக்கும், பெரும்பாலும் காசநோய் நுரையீரலைத் தாக்குகிறது. காசநோய் 80 சதவீதம் நுரையீரலையும், 20 சதவீதம் மற்ற உறுப்புகளையும் பாதிக்கிறது.

    காசநோய் அறிகுறி உள்ளவர்கள் உடனே பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என கூறினார்.

    பின்னர் உலக காசநோய் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    இதில் துணை இயக்குனர் (காசநோய்) டாக்டர் சங்கீதா, மாவட்ட கலெக்்டரின் நேர்முக உதவியாளர் (பொது) நரேந்திரன், மருத்துவ அலுவலர்கள் ஜெய்கணேஷ், கார்த்திக், ஆனந்த்பிரபு மற்றும் செவிலியர் கல்லூரி மாணவிகள் கலந்துகொண்டனர்.

    • காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம் புளியங்குளத்தில் நடந்தது.
    • முகாமில் 40 பேருக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டது.

    செய்துங்கநல்லூர்:

    தேசிய காசநோய் அகற்றும் திட்டம் தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு காசநோய் பிரிவு மற்றும் டி.வி.எஸ்.சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை இணைந்து நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் மூலம் காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம் கருங்குளம் அருகேயுள்ள புளியங்குளத்தில் நடந்தது. முகாமினை சமூக ஆர்வலர் சீதன்ராஜ் தொடங்கி வைத்தார். வல்லநாடு காசநோய் பிரிவு முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் அப்துல் ரஹீம் ஹீரா வரவேற்று பேசினார். முதுநிலை காசநோய் ஆய்வுக்கூட மேற்பார்வையாளர் இசக்கி மஹாராஜன் முன்னிலை வகித்தார். இம்முகாமில் 40 பேருக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. 13 பேருக்கு சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. டி.வி.எஸ். சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை கிராம வளர்ச்சி அலுவலர் செல்வராணி நன்றி கூறினார். இம்முகாமில் எக்ஸ்ரே நுட்பனர் கிறிஸ்டின் குமாரதாஸ், சுகாதார பார்வையாளர் முத்துலட்சுமி, நம்பிக்கை மைய ஆற்றுப்படுத்துனர் அய்யம்மாள், சந்தனமாரி, அரி பாலகிருஷ்ணன் டி.வி.எஸ். சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை கிராம வளர்ச்சி அலுவலர் பாலசுப்ரமணியன், சமுதாய வளர்ச்சி அலுவலர் பரமசிவம், சுகாதாரத்துறை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை வல்லநாடு காசநோய் பிரிவு மற்றும் டி.வி.எஸ். சேவைகள் அறக்கட்டளை ஆகியோர்கள் இணைந்து செய்திருந்தனர்.

    • விஸ்வநாதப்பேரியில் காசநோய் கண்டறிதல் விழிப்புணர்வு சிறப்பு முகாம் நடைபெற்றது.
    • முகாமில் கலந்து கொண்ட மக்களுக்கு இலவசமாக எக்ஸ்ரே எடுக்கப்பட்டது.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் வட்டார மருத்துவ அலுவலகம், தென்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக, சிவகிரி அருகே உள்ள விஸ்வநாதப்பேரி ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் மக்களை தேடி மருத்துவம், தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் சார்பாக மக்களுக்கு காசநோய் கண்டறிதல் விழிப்புணர்வு சிறப்பு முகாம் நடைபெற்றது.

    தென்காசி மாவட்ட துணை இயக்குனர் (காசநோய்) வெள்ளைச்சாமி, வாசு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சாந்திசரவணபாய் ஆகியோர் தலைமை தாங்கினர். விஸ்வநாதப்பேரி ஊராட்சி மன்ற தலைவர் ஜோதி மணிகண்டன், ஊராட்சி துணைத் தலைவர் காளீஸ்வரி, சிவகிரி பேரூர் செயலாளர் செண்பகவிநாயகம் ஆகியோர் காசநோய் கண்டறிதல் சிறப்பு முகாமை தொடங்கி வைத்தனர்.

    முகாமில் மக்களைத் தேடி மருத்துவம், தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் சார்பாக மக்களுக்கு காசநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து மக்களுக்கு இலவசமாக எக்ஸ்ரே மற்றும் சளி பரிசோதனை சுமார் 60 பேருக்கு எடுக்கப்பட்டது.

    இம்முகாமில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சரபோஜி, காசநோய் மேற்பார்வையாளர் கண்ணன், சுகாதார பார்வையாளர் கருப்பசாமி, சுகாதார ஆய்வாளர் விஷ்ணு குமார், பகுதி சுகாதார செவிலியர் அமுதா, கிராம சுகாதார செவிலியர் முத்துப்பாண்டியம்மாள், செவிலியர் உமாமகேஸ்வரி, விஸ்வை ஊராட்சி மன்ற செயலாளர் உமாமகேஸ்வரி மற்றும் வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    • பேரூராட்சி மன்ற தலைவர் கோமதி சங்கரி சுந்தரவடிவேலு, செண்பகவிநாயகம், செயல் அலுவலர் நவநீதகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தனர்.
    • தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் சார்பாக மக்களுக்கு காசநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் வட்டார மருத்துவ அலுவலகம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக சிவகிரி தேரடி முனியாண்டி கோவில் அருகே மக்களைத் தேடி மருத்துவம், தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் சார்பாக மக்களுக்கு காசநோய் கண்டறிதல் விழிப்புணர்வு சிறப்பு முகாம் நடைபெற்றது.

    வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சாந்திசரவணபாய் தலைமை தாங்கினார். சிவகிரி பேரூராட்சி மன்ற தலைவர் கோமதி சங்கரி சுந்தரவடிவேலு, சிவகிரி பேரூர் தி.மு.க. செயலாளர் செண்பகவிநாயகம், செயல் அலுவலர் நவநீதகிருஷ்ணன், துணைத் தலைவர் லட்சுமிராமன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு காசநோய் கண்டறிதல் சிறப்பு முகாமை தொடங்கி வைத்தனர்.


    முகாமில் மக்களைத் தேடி மருத்துவம், தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் சார்பாக மக்களுக்கு காசநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து மக்களுக்கு இலவசமாக எக்ஸ்ரே மற்றும் சளி பரிசோதனை சுமார் 50 பேருக்கு எடுக்கப்பட்டது.

    இதில் டாக்டர் சதீஷ்குமார், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சரபோஜி, காசநோய் மேற்பார்வையாளர் கண்ணன், சுகாதார பார்வையாளர் கருப்பசாமி, சுகாதார ஆய்வாளர்கள் ராஜாராம், விஷ்ணு குமார், பகுதி சுகாதார செவிலியர் பஞ்சம்மாள்தேவி, கிராம சுகாதார செவிலியர் கண்ணகி, தங்கேஸ்வரி, செவிலியர் உமாமகேஸ்வரி மற்றும் பேரூராட்சி மன்ற கவுன்சிலர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். முகாமிற்கான ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர் ராஜாராம் செய்திருந்தார்.

    • வாழப்பாடி பேரூராட்சி அண்ணா நகரில் காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது.
    • நம்பிக்கை மைய ஆலோசகர் சசிகலா ஆகியோர் கொண்ட குழுவினர், 50- க்கும் மேற்பட்டோருக்கு எக்ஸ்ரே பரிசோதனை செய்தனர்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி பேரூராட்சி அண்ணா நகரில் காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ள நடமாடும் எக்ஸ்ரே பரிசோதனை வாகனத்துடன் நடைபெற்ற இம்முகாமை பேளூர் வட்டார மருத்துவ அலுவலர் பொன்னம்பலம் தொடங்கி வைத்தார்.

    சேலம் நடமாடும் எக்ஸ்ரே ஆய்வக நுட்புநர் ரவிச்சந்திரன், காசநோய் சிகிச்சை மேற்பார்வையாளர்கள் ராஜ்குமார், கவிதா, நம்பிக்கை மைய ஆலோசகர் சசிகலா ஆகியோர் கொண்ட குழுவினர், 50- க்கும் மேற்பட்டோருக்கு எக்ஸ்ரே பரிசோதனை செய்தனர்.

    காசநோயின் அறிகுறிகள், பரவும் விதம், தடுப்பு முறைகள், சிகிச்சை முறைகள், காசநோயாளிகளுக்கான அரசின் நலத்திட்டங்கள் குறித்து விளக்கமளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது வாழப்பாடி அன்னை அரிமா சங்க தலைவர் ஷபிராபானு மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    • தூத்துக்குடி மாவட்ட தேசிய காசநோயகற்றும் திட்டம், வல்லநாடு காசநோய் பிரிவு சார்பாக நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் மூலம் காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம்
    • கீழவல்லநாடு டிமேஜ் பில்டர்ஸ் லிமிடெட் தொழிற்சாலையில் வைத்து நடைபெற்றது.

    செய்துங்கநல்லூர்:

    தூத்துக்குடி மாவட்ட தேசிய காசநோயகற்றும் திட்டம், வல்லநாடு காசநோய் பிரிவு சார்பாக நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் மூலம் காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம். கீழவல்லநாடு டிமேஜ் பில்டர்ஸ் லிமிடெட் தொழிற்சாலையில் வைத்து நடைபெற்றது. முகாமினை நிறுவனத்தின் மேலாளர் மகேஷ்குமார் தொடங்கி வைத்தார். டிமேஜ் நிறுவனத்தின் மனித வளப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன் வரவேற்று பேசினார்.

    முகாமில் 70 பேருக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. 9 நபர்களுக்கு சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. முதுநிலை காசநோய் ஆய்வுக்கூட மேற்பார்வையாளர் இசக்கி மஹாராஜன் நன்றி கூறினார். இம்முகாமில் மாவட்ட காசநோய் மைய அரசு மற்றும் தனியார் துறை ஒருங்கிணைப்பாளர் மோகன் எக்ஸ்ரே நுட்பனர் கிறிஸ்டின் குமாரதாஸ், நம்பிக்கை மைய ஆற்றுப்படுத்துனர் அய்யம்மாள், ஆய்வகநுட்பனர் உஷாராணி, சுகாதார பார்வையாளர் முத்துலட்சுமி, அரி பாலகிருஷ்ணன், சுகாதாரத்துறை பணியாளர்கள் மற்றும் தொழிற்சாலை ஊழியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை வல்லநாடு காசநோய் பிரிவு முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் அப்துல் ரஹீம் ஹீரா செய்திருந்தார்.

    • தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் சார்பில் நோய் கண்டறியும் சிறப்பு முகாம் நடந்தது.
    • இந்த முகாமில் 63 நபர்களுக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டு சளி பரிசோதனையும் செய்யப்பட்டது.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் மந்தவெளி அம்பேத்கார் காலனியில் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் சார்பில் நோய் கண்டறியும் சிறப்பு முகாம் நடந்தது. தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கப்பட்ட நடமாடும் நுண் கதிர் எக்ஸ்ரே வாகனம் மூலம் நடைபெற்ற இந்த முகாமுக்கு ஆத்தூர் நகர மன்ற தலைவர் நிர்மலா பபிதா மற்றும் ஆணையாளர் வசந்தி ஆகியோர் தலைமை தாங்கினர்.

    ஆத்தூர் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் ஜெயலட்சுமி(காசநோய்), இணை இயக்குனர் டாக்டர் கணபதி ஆகியோர் முன்னிலை வைத்தனர். இந்த முகாமில் 63 நபர்களுக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டு சளி பரிசோதனையும் செய்யப்பட்டது. இந்த காசநோய் குறித்து இணை இயக்குனர் கணபதி பேசும்போது, 2 வாரம் சளி ,இருமல் பசியின்மை, மாலை நேர காய்ச்சல், உடல் எடை குறைதல், சளியுடன் ரத்தம் சேர்ந்து வருதல் உள்ளிட்டவை காச நோயின் அறிகுறிகள் ஆகும். காசநோய் முற்றி லும் குணமாக கூடிய நோயாகும். காசநோய் பரம்பரை நோய் அல்ல. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு எளிதில் நோய் தொற்று பரவும் வாய்ப்பு உள்ளது.

    எனவே இது போன்ற அறிகுறி உள்ள பொதுமக்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். முகாமில் வட்டார காச நோய் முது நிலை சிகிச்சை மேற்பார்வையாளர் வீரமணிகண்டன், சுகாதார பார்வையாளர் ஜெகதீஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம் 2 நாட்கள் நடைபெற்றது.
    • இம்முகா மில், 180 பேருக்கு எக்ஸ்ரே பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சிங்கிபுரத்தில் நடமாடும் எக்ஸ்ரே எந்திரத்தை பயன்படுத்தி காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம் 2 நாட்கள் நடைபெற்றது.

    கிராமத்திற்கே சென்று, காசநோய் கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் வகை யில், மாவட்டம் தோறும் தமிழக அரசு சுகாதாரத்துறை வாயிலாக நடமாடும் எக்ஸ்ரே எந்திரத்தை வழங்கியுள்ளது. இந்த எந்திரத்தை பயன்படுத்தி, தொடர் இருமல், சளி உள்ளிட்ட காசநோய் அறிகுறி உள்ளவர்களுக்கு அந்தந்த பகுதிக்கே சென்று பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    வாழப்பாடி அருகே பேளூர் சுகாதார வட்டா ரத்தில், சந்திரபிள்ளை வலசு கிராம மக்கள் மற்றும் சிங்கிபுரம் ராம்கோ சிமெண்ட் நிறுவன ஊழியர்களுக்கு இருதி னங்களாக, இத்திட்டத்தின் கீழ் காச நோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது.

    வட்டார மருத்துவ அலுவலர் பொன்னம்பலம் தலைமையில், தொண்டு நிறுவன மாநில பொறுப்பாளர் ரவிசங்கர், காசநோய் பிரிவு மாவட்ட மேற்பாற்வையாளர் சதாசிவம்,வட்டார காச நோய் மேற்பார்வையாளர் ராஜ்குமார், ஆய்வக நுட்புனர் கவிதா ஆகியோர் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர். சிங்கிபுரம் ராம்கோ சிமெண்ட் மேலாளர்கள் சுரேஷ்குமார், மணிவேல் மற்றும் பணியாளர்கள் முனியசாமி, வடிவேல், பேளூர் சுகாதார ஆய்வாளர் ஆனந்த் ஆகியோர் முகா மிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    இம்முகா மில், 180 பேருக்கு எக்ஸ்ரே பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

    ×