search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காசநோய்"

    • கல்லூரி தாளாளர் தோமஸ் ராஜ் மற்றும் கல்லூரி முதல்வர் கலாராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    • கல்லூரி மூத்த பேராசிரியர் செல்வின் இன்பராஜ் வரவேற்று பேசினார்.

    மார்த்தாண்டம்:

    மார்த்தாண்டம் வடக்கு தெருவில் அமைந்துள்ள ஞான தீபம் கல்லூரியில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை சார்பில் காசநோய் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஞான தீபம் கல்லூரி தாளாளர் தோமஸ் ராஜ் மற்றும் கல்லூரி முதல்வர் கலாராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி மூத்த பேராசிரியர் செல்வின் இன்பராஜ் வரவேற்று பேசினார்.

    முகாமில் இடைக்கோடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய மூத்த சிகிச்சை மேற்பார்வையாளர் பிரிட்டோ கலந்துகொண்டு காசநோய் விழிப்புணர்வு குறித்து மாணவர்களிடையே உரையாற்றினார். அதில் காசநோய் எவ்வாறு வருகிறது, அதன் அறிகுறிகள், எவ்வாறு காசநோய் வராமல் தடுக்கலாம், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் காசநோய்க்கு என்னென்ன மருந்துகள் உட்கொள்ளலாம் போன்றவற்றினை குறித்து மாணவர்களிடையே பேசினார். மாணவர்களின் சந்தேகங்களுக்கும் விளக்கம் அளித்தார். மேலும் வெட்டுமணி அரசு மருத்துவமனை சுகாதார பார்வையாளர்கள் சாந்தி மற்றும் அகிலா ஆகியோர் இந்த முகாமில் கலந்துகொண்டனர். விழா முடிவில் ஆசிரியை சிஞ்சு நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை ஞானதீபம் கல்லூரி ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

    • காசநோய் கண்டறியும் இலவச மருத்துவ முகாம் நடந்தது.
    • காசநோய் கழகம் சார்பில் இலவசமாக நவீன முறையில் எக்ஸ்ரே எடுத்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் சக்க ராஜாக்கோட்டை மூதனூர் தாயாதியார் சாவடி வளாகத்தில் தேசிங்கு ராஜா பண்ணை நினைவாக சக்காராஜா கோட்டை சத்திரிய ராஜூக்கள் பொது மகாசபையும், விருதுநகர் மாவட்ட காசநோய் கழகமும் இணைந்து காசற்ற இலவச காசநோய் கண்டறியும் முகாமை நடத்தியது.

    முகாமில் சக்கராஜாக் கோட்டை சத்திரிய ராஜூக்கள் மகாசபை தலைவர் சின்ன வெங்கட ராஜா, ரவிராஜா, ஜெகநாத ராஜா, பலராம ராஜா, நகராட்சி ஆணையாளர். பார்த்தசாரதி மற்றும் சுகாதார அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    குழந்தைகள், பெண்கள் உட்பட நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு விருதுநகர் மாவட்ட காசநோய் கழகம் சார்பில் இலவசமாக நவீன முறையில் எக்ஸ்ரே எடுத்து சிகிச்சை அளிக்கப்பட்டது.இதில் காசநோய் கண்டறி யப்பட்ட நோயாளிகள் அரசு மருத்துவமனை மூலம் தொடர்பு கொள்ளப்படு வார்கள். அவர்களுக்கு உரிய மருத்துவ உதவி அவர்களது இல்லம் தேடி வந்து விடும் என தெரிவிக்கப்பட்டது.

    காச நோயற்ற தமிழகம் காண்போம் என்ற தலைப்பில் (காசற்ற) இலவச முகாம் சிறப்பாக நடத்தியதை சமூக ஆர்வலர்கள் வரவேற்று பாராட்டினார்கள்.

    முகாம் ஏற்பாடுகளை விருதுநகர் மாவட்ட காசநோய் கழகம் மற்றும் தேசிங்கு ராஜா பண்ணை குடும்பத்தார் செய்திருந்தனர்.

    • மந்தவெளி பகுதியில் கடந்த 3 நாட்களாக நடமாடும் நுண் கதிர் வீச்சு வாகனம் மூலமாக காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.
    • முகாமில் நுண் கதிர் எக்ஸ்ரே எடுக்கப்பட்டு பரிசோதனை கள் நடந்தன.

    சேலம்:

    தேசிய காச நோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் ஆத்தூர் நகராட்சி மந்தவெளி பகுதியில் கடந்த 3 நாட்களாக நடமாடும் நுண் கதிர் வீச்சு வாகனம் மூலமாக காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. முகாமில் நுண் கதிர் எக்ஸ்ரே எடுக்கப்பட்டு பரிசோதனை கள் நடந்தன. இந்த வாரம் இறுதி வரை இந்த முகாம் நடைபெறும்.

    இதையொட்டி 33-வது வார்டு கவுன்சிலர் ராமச்சந்தி ரன் தலைமையில் சேலம் மாவட்ட காசநோய் பிரிவின் துணை இயக்குனர் டாக்டர் கணபதி கள ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் பாண்டியராஜன் கலந்து கொண்டார்.

    முகாமிற்கு வந்தவர்களுக்கு காசநோய் பாதிப்பு கண்டறியப்பட்டதுடன் அதன் தன்மை குறித்தும் அதற்கான அவசியம் தேவையான சிகிச்சை குறித்தும் எடுத்து ரைக்கப்பட்டது. 2 வார சளி இருமல், மாலை நேர காய்ச்சல், பசியின்மை, எடை குறைதல், நெஞ்சுவலி, காச நோயின் அறிகுறிகள் ஆகும். நோய் கண்டறியப்பட்டு மேல் சிகிச்சை தேவைப்படுப வர்களுக்கு ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக பரிந்து ரைக்கப்பட்டனர்.

    மேலும் உயர் ரத்த அழுத்தம் நீரிழிவு நோய் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு மாத்திரைகள் வழங்கப்பட்டன.

    இதற்கான ஏற்பாடுகளை முதுநிலை காசநோய் சிகிச்சை மேற்பார்வையாளர் வீரமணிகண்டன் மற்றும் மருத்துவ பணியாளர்கள் செய்து இருந்தனர். இதில் பொதுமக்கள் ஆர்வமுடன் பங்குபெற்று பயனடைந்தார்கள்.

    • மயிலாடுதுறையில் காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
    • ஊர்வலத்தை கலெக்்டர் மகாபாரதி தொடங்கி வைத்தார்.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உலக காசநோய் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சுகாதாரத்துறையின் சார்பில் காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

    மாவட்ட கலெக்டர் மகாபாரதி ஊர்வலத்தை கொடியசைத்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறுகையில்,

    இந்தியாவில் காசநோய் காரணமாக 5 நிமிடத்திற்கு இருவர் இறந்துவிடுகின்றனர்.

    மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஆண்டு மட்டும் 913 நோயாளிகள் கண்டறியப்பட்டு சிகிச்சை அளித்து வருகின்றோம்.

    காசநோய் பரம்பரை வியாதியல்ல.

    காசநோய் எல்லா உறுப்புகளையும் பாதிக்கும், பெரும்பாலும் காசநோய் நுரையீரலைத் தாக்குகிறது. காசநோய் 80 சதவீதம் நுரையீரலையும், 20 சதவீதம் மற்ற உறுப்புகளையும் பாதிக்கிறது.

    காசநோய் அறிகுறி உள்ளவர்கள் உடனே பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என கூறினார்.

    பின்னர் உலக காசநோய் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    இதில் துணை இயக்குனர் (காசநோய்) டாக்டர் சங்கீதா, மாவட்ட கலெக்்டரின் நேர்முக உதவியாளர் (பொது) நரேந்திரன், மருத்துவ அலுவலர்கள் ஜெய்கணேஷ், கார்த்திக், ஆனந்த்பிரபு மற்றும் செவிலியர் கல்லூரி மாணவிகள் கலந்துகொண்டனர்.

    • காசநோய் இல்லாத மாவட்டமாக உருவாக்க துரித பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
    • கலெக்டர் மதுசூதன்ரெட்டி அறிவுறுத்தினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் உலக காசநோய் தினவிழா கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடந்தது. இதில் அவர் பேசியதாவது:-

    காசநோய் குறித்து பொதுமக்கள் போதிய விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். நோய்த்தொற்று உள்ளவர்கள் வெளியில் தெரிந்தால் அச்சம் என்ற அடிப்படையில், தங்களை பரிசோதனைக்கு உட்படுத்தப்படாமல் உள்ளனர். தற்போதுள்ள நவீன காலக்கட்டத்தில் அனைத்துவிதமான நோய்களுக்கும் தரமான சிகிச்சைகள் அளிக்கும் வகையில் தமிழக அரசால் சிறப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, அதற்கான போதிய மருந்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    சரிவர மருந்தை சாப்பிடாமல் இருப்பதால் தான் விளைவுகள் ஏற்படுகிறது. மேலும், மற்றவர்களுக்கு தொற்று நோயாக பரவாமலும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். மருத்துவ மனைகளை அணுகி முறை யாக பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சை எடுப்பதன் அடிப்படையில் தங்களைச் சார்ந்தோர்களுக்கும் பரவாமல் பாதுகாக்க முடியும். வருகிற 2025-க்குள் காசநோய் இல்லாத தமிழகமாக மாற்றுவதற்கு முதலமைச்சர் இலக்கு நிர்ணயித்து, பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

    அரசு அலுவலர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் இது குறித்து விழிப்புணர்வுடன் இருந்து தங்களை சார்ந்தவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    காசநோய் உள்ளவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளதால் அதிக ஊட்டச்சத்து உணவினை எடுத்துக் கொள்ள வேண்டும். அவர்களுக்கு அரசால் மாதாந்திர உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. இதுதவிர, தன்னார்வலர்களும் தங்களது பங்களிப்பை ஏற்படுத்தும் வகையில் அரசுடன் இணைந்து சிறப்பாக செயல்பட்டு வருவது பாராட்டுக்குரியதாகும்.

    சிவகங்கை மாவட்டத்தில் 52 காசநோய் கண்டறியும் நுண்ணோக்கி மையங்கள் உள்ளன. மேலும், 14 புதிய இருகண் நுண்ணோக்கிகள், மாவட்டத்தின் பல்வேறு அரசு மருத்துவமனைகளுக்கு பொதுமக்களின் உபயோகத்திற்கென தற்போது வழங்கப்பட்டுள்ளது.

    பொதுமக்களின் ஒத்துழைப்பின் அடிப்படையில் காசநோயை முற்றிலுமாக ஒழிக்கும் வகையில், அனைத்துத்துறையைச் சார்ந்த அரசு அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்றி, காசநோய் இல்லாத மாவட்டமாக சிவகங்கை மாவட்டத்தை உருவாக்குவதற்கான பணிகளை சிறப்பாகவும், துரிதமாகவும் மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • வாழப்பாடி பேரூராட்சி அண்ணா நகரில் காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது.
    • நம்பிக்கை மைய ஆலோசகர் சசிகலா ஆகியோர் கொண்ட குழுவினர், 50- க்கும் மேற்பட்டோருக்கு எக்ஸ்ரே பரிசோதனை செய்தனர்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி பேரூராட்சி அண்ணா நகரில் காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ள நடமாடும் எக்ஸ்ரே பரிசோதனை வாகனத்துடன் நடைபெற்ற இம்முகாமை பேளூர் வட்டார மருத்துவ அலுவலர் பொன்னம்பலம் தொடங்கி வைத்தார்.

    சேலம் நடமாடும் எக்ஸ்ரே ஆய்வக நுட்புநர் ரவிச்சந்திரன், காசநோய் சிகிச்சை மேற்பார்வையாளர்கள் ராஜ்குமார், கவிதா, நம்பிக்கை மைய ஆலோசகர் சசிகலா ஆகியோர் கொண்ட குழுவினர், 50- க்கும் மேற்பட்டோருக்கு எக்ஸ்ரே பரிசோதனை செய்தனர்.

    காசநோயின் அறிகுறிகள், பரவும் விதம், தடுப்பு முறைகள், சிகிச்சை முறைகள், காசநோயாளிகளுக்கான அரசின் நலத்திட்டங்கள் குறித்து விளக்கமளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது வாழப்பாடி அன்னை அரிமா சங்க தலைவர் ஷபிராபானு மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    • தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் சார்பில் நோய் கண்டறியும் சிறப்பு முகாம் நடந்தது.
    • இந்த முகாமில் 63 நபர்களுக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டு சளி பரிசோதனையும் செய்யப்பட்டது.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் மந்தவெளி அம்பேத்கார் காலனியில் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் சார்பில் நோய் கண்டறியும் சிறப்பு முகாம் நடந்தது. தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கப்பட்ட நடமாடும் நுண் கதிர் எக்ஸ்ரே வாகனம் மூலம் நடைபெற்ற இந்த முகாமுக்கு ஆத்தூர் நகர மன்ற தலைவர் நிர்மலா பபிதா மற்றும் ஆணையாளர் வசந்தி ஆகியோர் தலைமை தாங்கினர்.

    ஆத்தூர் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் ஜெயலட்சுமி(காசநோய்), இணை இயக்குனர் டாக்டர் கணபதி ஆகியோர் முன்னிலை வைத்தனர். இந்த முகாமில் 63 நபர்களுக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டு சளி பரிசோதனையும் செய்யப்பட்டது. இந்த காசநோய் குறித்து இணை இயக்குனர் கணபதி பேசும்போது, 2 வாரம் சளி ,இருமல் பசியின்மை, மாலை நேர காய்ச்சல், உடல் எடை குறைதல், சளியுடன் ரத்தம் சேர்ந்து வருதல் உள்ளிட்டவை காச நோயின் அறிகுறிகள் ஆகும். காசநோய் முற்றி லும் குணமாக கூடிய நோயாகும். காசநோய் பரம்பரை நோய் அல்ல. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு எளிதில் நோய் தொற்று பரவும் வாய்ப்பு உள்ளது.

    எனவே இது போன்ற அறிகுறி உள்ள பொதுமக்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். முகாமில் வட்டார காச நோய் முது நிலை சிகிச்சை மேற்பார்வையாளர் வீரமணிகண்டன், சுகாதார பார்வையாளர் ஜெகதீஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம் 2 நாட்கள் நடைபெற்றது.
    • இம்முகா மில், 180 பேருக்கு எக்ஸ்ரே பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சிங்கிபுரத்தில் நடமாடும் எக்ஸ்ரே எந்திரத்தை பயன்படுத்தி காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம் 2 நாட்கள் நடைபெற்றது.

    கிராமத்திற்கே சென்று, காசநோய் கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் வகை யில், மாவட்டம் தோறும் தமிழக அரசு சுகாதாரத்துறை வாயிலாக நடமாடும் எக்ஸ்ரே எந்திரத்தை வழங்கியுள்ளது. இந்த எந்திரத்தை பயன்படுத்தி, தொடர் இருமல், சளி உள்ளிட்ட காசநோய் அறிகுறி உள்ளவர்களுக்கு அந்தந்த பகுதிக்கே சென்று பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    வாழப்பாடி அருகே பேளூர் சுகாதார வட்டா ரத்தில், சந்திரபிள்ளை வலசு கிராம மக்கள் மற்றும் சிங்கிபுரம் ராம்கோ சிமெண்ட் நிறுவன ஊழியர்களுக்கு இருதி னங்களாக, இத்திட்டத்தின் கீழ் காச நோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது.

    வட்டார மருத்துவ அலுவலர் பொன்னம்பலம் தலைமையில், தொண்டு நிறுவன மாநில பொறுப்பாளர் ரவிசங்கர், காசநோய் பிரிவு மாவட்ட மேற்பாற்வையாளர் சதாசிவம்,வட்டார காச நோய் மேற்பார்வையாளர் ராஜ்குமார், ஆய்வக நுட்புனர் கவிதா ஆகியோர் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர். சிங்கிபுரம் ராம்கோ சிமெண்ட் மேலாளர்கள் சுரேஷ்குமார், மணிவேல் மற்றும் பணியாளர்கள் முனியசாமி, வடிவேல், பேளூர் சுகாதார ஆய்வாளர் ஆனந்த் ஆகியோர் முகா மிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    இம்முகா மில், 180 பேருக்கு எக்ஸ்ரே பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

    • கள்ளக்குறிச்சியில் காசநோய் கண்டறியும் வாகனம் கலெக்டர் ஸ்ரீதர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.
    • தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்கு டியினர் பிரி வினருக்கு 60 சதவீத மானியத்திலும் வழங்கப்படுகிறது.

    கள்ளக்குறிச்சி:

    தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின்கீழ் 2025-ல் காசநோய் இல்லா தமிழகம் என்ற இலக்கை அடையும் வகையில் காசநோய் கண்டறியும் டிஜிட்டல் எக்ரே பொருத்திய நவீன மருத்துவ வாகனத்தினை சென்னை யில்தமிழகமுதல்-அமைச்சர்மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு வழங்கப் பட்ட காசநோய் கண்டறியும் நடமாடும் வாகனத்தினை மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் மக்கள் பயன்பாட்டிற்காக கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் கூறுகையில், இந்த காசநோய் கண்டறியும் வாகனம், மருத்துவ குழுவினருடன் கிராமங்கள் முழுவதும் சென்று காசநோய் கண்டறிதல், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட் டவர்கள், வயதான வர்கள், புகைப்பிடிப்பவர்கள், உயர் இரத்த அழுத்தம் உள்ள வர்கள், சிறுநீரகம் தொடர்பான நோய் உடைய வர்கள், புற்று நோயால் பாதிக்க ப்பட்ட வர்களுக்கு எக்ஸ்ரே பரி சோதனை மேற் கொள்ளப்படும். இதனை கள்ளக்குறிச்சி மாவட்ட த்தைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என கூறினார்.

    இந்நிகழ்வின்போது, இணை இயக்குநர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் பாலச்சந்தர், துணை இயக்குநர் (காசநோய்) சுதாகர், துணை இயக்குநர் பொது சுகாதாரம் ராஜா, நெஞ்சக நோய் நிபுணர் ராம்குமார், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளர் நேரு, துணை மருத்துவக் கண்காணிப்பாளர் பழமலை, உதவி மருத்துவ அலு வலர் பொய்யாமொழி, தேசிய சுகாதார குழுமத்தின் மாவட்ட ஒருங்கிணை ப்பாளர் செந்தில்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து பிரதம மந்திரி மத்திய மீன் வள மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் மீனவர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்காகவும், சில்லரை மீன் விற்பனையை ஊக்குவிக்கும் பொருட்டும் ரூ.69,243 மதிப்பீட்டிலான இருசக்கர வாகனத்தினையும், ரூ.4,478 மதிப்பீட்டிலான 70 லிட்டர் கொள்ளளவு உள்ளகுளிர்காப்பு பெட்டியினையும், பொதுப்பிரிவினருக்கு 40 சதவீத மானியத்திலும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்கு டியினர் பிரி வினருக்கு 60 சதவீத மானிய த்திலும் வழங்கப் படுகிறது.

    அதன்படி, இன்று சங்கராபுரம் மீனவர் கூட்டுறவு சங்க உறுப்பினர் களில் பொதுப்பிரிவு வகுப்பைச் சேர்ந்த 12 பயனாளிகளுக்கு தலா ரூ.73,721 மதிப்பிலான குளி ர்காப்பு பொருத்தப்பட்ட இருசக்கர வாகனத்தினை 40 சதவீத மானியத்துடன் ரூ.44,233 மதிப்பீட்டில் மாவட்ட கலெக்டர் வழங்கினார். அப்போது, உதவி இயக்கு நர் (மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை) நித்ய பிரியதர்ஷினி, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆய்வாளர் சந்திரமணி மற்றும் அரசு அலு வலர்கள் உடன் இருந்தனர்.

    • 23 மாவட்டங்களுக்கு ரூ.10.85 கோடி மதிப்பில் எக்ஸ்ரே கருவி பொருத்திய 23 நடமாடும் வாகனங்களை கொடிஅசைத்து தொடங்கி வைத்தார்.
    • வாகனத்தின் உட்பகுதி குளிர்சாதன வசதியுடன் கூடிய எக்ஸ்ரே அறை மற்றும் எடுக்கப்படும் எக்ஸ்ரேக்களை உடனுக்குடன் சரிபார்க்கும் வகையில் கணினி பொருத்தப்பட்ட அறை என இரண்டு அறைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம் சார்பில் காசநோய் தொற்று கண்டறியும் நுண்கதிர் நடமாடும் வாகனம் தொடக்க விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்தார். அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் கடந்த 1-ம் தேதி சென்னை நொச்சிக்குப்பத்தில் காசநோய் இல்லாத தமிழ்நாடு 2025 என்ற இலக்கை அடைய அரசு எடுத்து வரும் பல்வேறுநடவடிக்கைகளின் ஒருபகுதியாக 23 மாவட்டங்களுக்கு ரூ.10.85 கோடி மதிப்பில் எக்ஸ்ரே கருவி பொருத்திய 23 நடமாடும் வாகனங்களை கொடிஅசைத்து தொடங்கி வைத்தார்.

    இந்த நடமாடும் நுண்கதிர் வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள நவீன டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி மூலம் மின்வசதி இல்லாத இடங்களில்கூட ஜெனரேட்டர் உதலியுடன் இயங்க வசதி செய்யப்பட்டுள்ளது. வாகனத்தின் உட்பகுதி குளிர்சாதன வசதியுடன் கூடிய எக்ஸ்ரே அறை மற்றும் எடுக்கப்படும் எக்ஸ்ரேக்களை உடனுக்குடன் சரிபார்க்கும் வகையில் கணினி பொருத்தப்பட்ட அறை என இரண்டு அறைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

    மக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் நோய்த் தடுப்புமுறைகளை தெரிவிப்பதற்கு வண்ணத் தொலைக்காட்சி திரையும், முகாம்களின் போது பொதுமக்கள் வசதிக்காக நிழற்குடையும் வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ளன. ஒரு மணிநேரத்தில் 10 எக்ஸ்ரே எடுக்கும் திறன் கொண்ட இவ்வாகனங்களின் மூலம் நடப்பாண்டில் சுமார் 5 லட்சம் நபர்களுக்கு மறைந்திருக்கும் காசநோயை கண்டறிய திட்டமிடப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு காசநோய் அறிகுறி உள்ள 21.354 பேருக்கு பரிசோதனை செய்ததில் 2860 பேருக்கு காசநோய் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு அவர்கள் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டனர். அனைந்து காசநோயாளிகளுக்கும் சிகிச்சை காலத்தில் ஊட்டச்சத்திற்காக மாதந்தோறும் ரூ. 500 வழங்கப்பட்டு வருகிறது. இந்த நடமாடும் நுண்கதிர் வாகனத்தை பயன்படுத்தி தஞ்சை மாவட்டத்தில் மறைந்திருக்கும் காசநோய் தொற்று உள்ளவர்களை கண்டறிய அதிதீவிரகாசநோய் பரிசோதனை முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் துரைசந்திரசேகரன் எம்.எல்.ஏ, காசநோய் துணை இயக்குனர் மாதவி, உலக சுகாதார அமைப்பு ஆலோசகர் பிரபு, எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மருத்துவ அலுவலர் பசுபதீஸ்வரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • கடந்த 5 ஆண்டுகளில் 20 சதவீதம் குறைந்துள்ளது
    • அமைச்சர் மனோதங்கராஜ் பேச்சு

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்ட காசநோய் மையம் சார்பில் காசநோய் தொற்று கண்டறிவது குறித்த எக்ஸ்-ரே கருவி பொருத்திய நடமாடும் வாகனத்தை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி மற்றும் காசநோய் ஒழிப்பு பணியில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்கள் மற்றும் மருந்தாளுனர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமையில் நாஞ்சில் கூட்டரங்கில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோதங்கராஜ் கலந்து கொண்டு எக்ஸ்-ரே கருவி பொருத்திய நடமாடும் வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் மருத்துவர்கள் மற்றும் மருந்தாளுனர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழக அரசு 23 மாவட்டங்களுக்கு ரூ.10.65 கோடி மதிப்பீட்டில் எக்ஸ்-ரே கருவி பொருத்திய நடமாடும் வாகனங்களை வழங்கியுள்ளது. நமது மாவ ட்டத்திற்கும் ஒரு வாகனம் வழங்கப்பட்டுள்ளது.

    இந்நடமாடும் நுண்க திர் வாகனத்தில் பொருத்த ப்பட்டுள்ள நவீன டிஜிட்டல் எக்ஸ்-ரே கருவி, மின் வசதி இல்லாத இடங்களில் கூட ஜெனரேட்டர் உதவியுடன் இயங்க வசதி செய்யப்பட்டுள்ளது.

    வாகனத்தின் உட்பகுதி குளிர்சாதன வசதியுடன் கூடிய எக்ஸ்-ரே அறை மற்றும் எடுக்கப்படும் எக்ஸ்-ரே-க்களை உடனு க்குடன் சரிபார்க்கும் வகையில் கணினி பொருத்தப்பட்ட அறை என இரண்டு அறைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

    மேலும், மக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் நோய்த்தடுப்பு முறைகளை தெரிவிப்பதற்கு வண்ணத் தொலைக்காட்சி திரையும், முகாம்களின் போது பொதுமக்கள் வசதிக்காக நிழற்குடையும் வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்தில 10 எக்ஸ்-ரே எடுக்கும் திறன் கொண்டவை.

    குமரி மாவட்ட நிர்வா கத்தால் நோய் ஒழிப்பு பணிகள் துரிதமாக நடைபெற்றதால் கடந்த 10 ஆண்டுகளில் காச நோயாளிகளின் எண்ணி க்கை 50 சதவீதத்திற்கு மேல் குறைந்துள்ளது.

    கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் காசநோய் தொற்று வகிதம் 20 சதவீகிதத்திற்கு மேல் குறைந்துள்ளது. அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்களின் கூட்டு முயற்சியால் இது சாத்திய மானது.

    இதனைப் பாராட்டும் விதமாக அரசு மற்றும் தனியார் மருத்து வர்கள், தனியார் மருந்தகங்கள் மற்றும் மருந்தக வணிகர்களின் செயல்பாடுகளைக் கவுரவிக்கும் விதமாக 35 நபர்களுக்கு பாரா ட்டுச் சான்றிதழ்கள் வழங்க ப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் நாகர் கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், பத்மநாபபுரம் சார் ஆட்சியர் அலர்மேல்மங்கை, துணை இயக்குனர் (காசநோய்) துரை, துணை இயக்குனர் (பொது சுகாதாரம்) மீனாட்சி, மருத்துவர்கள் பிரதீப், சிவா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நடமாடும் எக்ஸ்ரே வாகன மூலம் காச நோயாளிகளின் இருப்பிடத்திற்கே சென்று மருத்துவ பரிசோதனை அதிகாரி தகவல் தெரிவித்தனர்.
    • காசநோய் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.

    சேலம்:

    சேலம் அருகே அயோத்தியாபட்டணத்தில் ஊராட்சித் தலைவர் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்கான காசநோய் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.

    காரிப்பட்டி வட்டார மருத்துவ அலுவலர் கவிதா தலைமை தாங்கினார். காசநோய் பிரிவு மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் பாண்டியராஜா கலந்து கொண்டு காச நோயின் அறிகுறிகள், அவை பரவும் விதம், தடுக்கும் முறைகள் சிகிச்சைகள் குறித்து பேசினார்.

    மேலும் அவர் பேசுகையில், சேலம் மாவட்டத்தில் புதிதாக முதல் அமைச்சரால் வழங்கப்பட உள்ள நடமாடும் அதிநவீன எக்ஸ்ரே கருவியுடன் கூடிய வாகனங்களின் மூலம் நோயாளிகளின் இருப்பிடத்திற்கு சென்று எக்ஸ்ரே எடுப்பதுடன் பரிசோதனை முடிவினை துரிதமாக அறிந்து சிகிச்சை அளிக்கப்பட உள்ளது என்றார்.

    பின்னர் பஞ்சாயத்து தலைவர்களுக்கு தங்கள் பகுதியில் காசநோய் விழிப்புணர்வு சுவர் ஓவியங்கள் வரைய அறிவுறுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் காசநோய் ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. முடிவில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சுசீந்திரன் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர்கள் பிரபாகரன், குமரேசன் மற்றும் அலுவலர்கள் சதாசிவம், கிருஷ்ண முருகேஷ், சென்னகிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.

    ×