search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Diagnostic"

    • அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட, மேல்நாடு, கீழ்நாடு ஊராட்சி சூலாங்குறிச்சி, கலக்காம்பாடி, தாழ்வள்ளம் கிராமங்களில், காசநோயாளிகளை கண்டறியும் சிறப்பு முகாம் நடைபெற்றது.
    • முகாமை காசநோய் பிரிவு சேலம் மாவட்ட துணை இயக்குனர் கணபதி தொடங்கி வைத்தார்.

    வாழப்பாடி

    சேலம் மாவட்டம், கல்வராயன்மலை சூலாங்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட, மேல்நாடு, கீழ்நாடு ஊராட்சி சூலாங்குறிச்சி, கலக்காம்பாடி, தாழ்வள்ளம் கிராமங்களில், காசநோயாளிகளை கண்டறியும் சிறப்பு முகாம் நடைபெற்றது.

    முகாமை காசநோய் பிரிவு சேலம் மாவட்ட துணை இயக்குனர் கணபதி தொடங்கி வைத்தார்.

    காசநோய் பிரிவு மருத்துவ குழுவினர், காசநோயின் அறிகுறிகள், பரவும் விதம், தடுப்பு முறைகள், சிகிச்சை முறைகள், காசநோயாளிகளுக்கான அரசின் நலத்திட்டங்கள் குறித்து விளக்கமளித்து மலைவாழ் பழங்குடியின மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    முகாமில், மருத்து அலுவலர்கள் ராஜா, காசநோய் சுகாதார மேற்பார்வையாளர் சின்னதுரை, சுகாதார செவிலியர்கள், ஆஷா பணியாளர்கள் ஆகியோர் கொண்ட குழுவினர், நடமாடும் எக்ஸ்-ரே பரிசோதனை எந்திரத்தில் 298 நபர்களுக்கு எக்ஸ்-ரே எடுத்தும் 50 நபர்களுக்கு சளி மாதிரிகள் எடுத்தும் பரிசோதனை செய்தனர்.

    பொதுமக்கள் வசிக்கும் பகுதிக்கே எக்ஸ்-ரே எந்திரத்தை கொண்டு வந்து, பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தது மிகவும் உபயோகமாக அமைந்ததாக பயனாளிகள் தெரிவித்தனர்.

    • மந்தவெளி பகுதியில் கடந்த 3 நாட்களாக நடமாடும் நுண் கதிர் வீச்சு வாகனம் மூலமாக காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.
    • முகாமில் நுண் கதிர் எக்ஸ்ரே எடுக்கப்பட்டு பரிசோதனை கள் நடந்தன.

    சேலம்:

    தேசிய காச நோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் ஆத்தூர் நகராட்சி மந்தவெளி பகுதியில் கடந்த 3 நாட்களாக நடமாடும் நுண் கதிர் வீச்சு வாகனம் மூலமாக காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. முகாமில் நுண் கதிர் எக்ஸ்ரே எடுக்கப்பட்டு பரிசோதனை கள் நடந்தன. இந்த வாரம் இறுதி வரை இந்த முகாம் நடைபெறும்.

    இதையொட்டி 33-வது வார்டு கவுன்சிலர் ராமச்சந்தி ரன் தலைமையில் சேலம் மாவட்ட காசநோய் பிரிவின் துணை இயக்குனர் டாக்டர் கணபதி கள ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் பாண்டியராஜன் கலந்து கொண்டார்.

    முகாமிற்கு வந்தவர்களுக்கு காசநோய் பாதிப்பு கண்டறியப்பட்டதுடன் அதன் தன்மை குறித்தும் அதற்கான அவசியம் தேவையான சிகிச்சை குறித்தும் எடுத்து ரைக்கப்பட்டது. 2 வார சளி இருமல், மாலை நேர காய்ச்சல், பசியின்மை, எடை குறைதல், நெஞ்சுவலி, காச நோயின் அறிகுறிகள் ஆகும். நோய் கண்டறியப்பட்டு மேல் சிகிச்சை தேவைப்படுப வர்களுக்கு ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக பரிந்து ரைக்கப்பட்டனர்.

    மேலும் உயர் ரத்த அழுத்தம் நீரிழிவு நோய் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு மாத்திரைகள் வழங்கப்பட்டன.

    இதற்கான ஏற்பாடுகளை முதுநிலை காசநோய் சிகிச்சை மேற்பார்வையாளர் வீரமணிகண்டன் மற்றும் மருத்துவ பணியாளர்கள் செய்து இருந்தனர். இதில் பொதுமக்கள் ஆர்வமுடன் பங்குபெற்று பயனடைந்தார்கள்.

    • காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம் 2 நாட்கள் நடைபெற்றது.
    • இம்முகா மில், 180 பேருக்கு எக்ஸ்ரே பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சிங்கிபுரத்தில் நடமாடும் எக்ஸ்ரே எந்திரத்தை பயன்படுத்தி காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம் 2 நாட்கள் நடைபெற்றது.

    கிராமத்திற்கே சென்று, காசநோய் கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் வகை யில், மாவட்டம் தோறும் தமிழக அரசு சுகாதாரத்துறை வாயிலாக நடமாடும் எக்ஸ்ரே எந்திரத்தை வழங்கியுள்ளது. இந்த எந்திரத்தை பயன்படுத்தி, தொடர் இருமல், சளி உள்ளிட்ட காசநோய் அறிகுறி உள்ளவர்களுக்கு அந்தந்த பகுதிக்கே சென்று பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    வாழப்பாடி அருகே பேளூர் சுகாதார வட்டா ரத்தில், சந்திரபிள்ளை வலசு கிராம மக்கள் மற்றும் சிங்கிபுரம் ராம்கோ சிமெண்ட் நிறுவன ஊழியர்களுக்கு இருதி னங்களாக, இத்திட்டத்தின் கீழ் காச நோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது.

    வட்டார மருத்துவ அலுவலர் பொன்னம்பலம் தலைமையில், தொண்டு நிறுவன மாநில பொறுப்பாளர் ரவிசங்கர், காசநோய் பிரிவு மாவட்ட மேற்பாற்வையாளர் சதாசிவம்,வட்டார காச நோய் மேற்பார்வையாளர் ராஜ்குமார், ஆய்வக நுட்புனர் கவிதா ஆகியோர் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர். சிங்கிபுரம் ராம்கோ சிமெண்ட் மேலாளர்கள் சுரேஷ்குமார், மணிவேல் மற்றும் பணியாளர்கள் முனியசாமி, வடிவேல், பேளூர் சுகாதார ஆய்வாளர் ஆனந்த் ஆகியோர் முகா மிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    இம்முகா மில், 180 பேருக்கு எக்ஸ்ரே பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

    ×