search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிவகிரி அருகே  காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு சிறப்பு முகாம்
    X

    விழிப்புணர்வு முகாம் நடைபெற்றபோது எடுத்தபடம்.


    சிவகிரி அருகே காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு சிறப்பு முகாம்

    • விஸ்வநாதப்பேரியில் காசநோய் கண்டறிதல் விழிப்புணர்வு சிறப்பு முகாம் நடைபெற்றது.
    • முகாமில் கலந்து கொண்ட மக்களுக்கு இலவசமாக எக்ஸ்ரே எடுக்கப்பட்டது.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் வட்டார மருத்துவ அலுவலகம், தென்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக, சிவகிரி அருகே உள்ள விஸ்வநாதப்பேரி ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் மக்களை தேடி மருத்துவம், தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் சார்பாக மக்களுக்கு காசநோய் கண்டறிதல் விழிப்புணர்வு சிறப்பு முகாம் நடைபெற்றது.

    தென்காசி மாவட்ட துணை இயக்குனர் (காசநோய்) வெள்ளைச்சாமி, வாசு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சாந்திசரவணபாய் ஆகியோர் தலைமை தாங்கினர். விஸ்வநாதப்பேரி ஊராட்சி மன்ற தலைவர் ஜோதி மணிகண்டன், ஊராட்சி துணைத் தலைவர் காளீஸ்வரி, சிவகிரி பேரூர் செயலாளர் செண்பகவிநாயகம் ஆகியோர் காசநோய் கண்டறிதல் சிறப்பு முகாமை தொடங்கி வைத்தனர்.

    முகாமில் மக்களைத் தேடி மருத்துவம், தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் சார்பாக மக்களுக்கு காசநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து மக்களுக்கு இலவசமாக எக்ஸ்ரே மற்றும் சளி பரிசோதனை சுமார் 60 பேருக்கு எடுக்கப்பட்டது.

    இம்முகாமில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சரபோஜி, காசநோய் மேற்பார்வையாளர் கண்ணன், சுகாதார பார்வையாளர் கருப்பசாமி, சுகாதார ஆய்வாளர் விஷ்ணு குமார், பகுதி சுகாதார செவிலியர் அமுதா, கிராம சுகாதார செவிலியர் முத்துப்பாண்டியம்மாள், செவிலியர் உமாமகேஸ்வரி, விஸ்வை ஊராட்சி மன்ற செயலாளர் உமாமகேஸ்வரி மற்றும் வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×