search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிவகிரியில்  காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு சிறப்பு முகாம்
    X
    முகாமில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.

    சிவகிரியில் காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு சிறப்பு முகாம்

    • பேரூராட்சி மன்ற தலைவர் கோமதி சங்கரி சுந்தரவடிவேலு, செண்பகவிநாயகம், செயல் அலுவலர் நவநீதகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தனர்.
    • தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் சார்பாக மக்களுக்கு காசநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் வட்டார மருத்துவ அலுவலகம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக சிவகிரி தேரடி முனியாண்டி கோவில் அருகே மக்களைத் தேடி மருத்துவம், தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் சார்பாக மக்களுக்கு காசநோய் கண்டறிதல் விழிப்புணர்வு சிறப்பு முகாம் நடைபெற்றது.

    வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சாந்திசரவணபாய் தலைமை தாங்கினார். சிவகிரி பேரூராட்சி மன்ற தலைவர் கோமதி சங்கரி சுந்தரவடிவேலு, சிவகிரி பேரூர் தி.மு.க. செயலாளர் செண்பகவிநாயகம், செயல் அலுவலர் நவநீதகிருஷ்ணன், துணைத் தலைவர் லட்சுமிராமன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு காசநோய் கண்டறிதல் சிறப்பு முகாமை தொடங்கி வைத்தனர்.


    முகாமில் மக்களைத் தேடி மருத்துவம், தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் சார்பாக மக்களுக்கு காசநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து மக்களுக்கு இலவசமாக எக்ஸ்ரே மற்றும் சளி பரிசோதனை சுமார் 50 பேருக்கு எடுக்கப்பட்டது.

    இதில் டாக்டர் சதீஷ்குமார், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சரபோஜி, காசநோய் மேற்பார்வையாளர் கண்ணன், சுகாதார பார்வையாளர் கருப்பசாமி, சுகாதார ஆய்வாளர்கள் ராஜாராம், விஷ்ணு குமார், பகுதி சுகாதார செவிலியர் பஞ்சம்மாள்தேவி, கிராம சுகாதார செவிலியர் கண்ணகி, தங்கேஸ்வரி, செவிலியர் உமாமகேஸ்வரி மற்றும் பேரூராட்சி மன்ற கவுன்சிலர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். முகாமிற்கான ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர் ராஜாராம் செய்திருந்தார்.

    Next Story
    ×