search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கண்டறியும்"

    • மந்தவெளி பகுதியில் கடந்த 3 நாட்களாக நடமாடும் நுண் கதிர் வீச்சு வாகனம் மூலமாக காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.
    • முகாமில் நுண் கதிர் எக்ஸ்ரே எடுக்கப்பட்டு பரிசோதனை கள் நடந்தன.

    சேலம்:

    தேசிய காச நோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் ஆத்தூர் நகராட்சி மந்தவெளி பகுதியில் கடந்த 3 நாட்களாக நடமாடும் நுண் கதிர் வீச்சு வாகனம் மூலமாக காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. முகாமில் நுண் கதிர் எக்ஸ்ரே எடுக்கப்பட்டு பரிசோதனை கள் நடந்தன. இந்த வாரம் இறுதி வரை இந்த முகாம் நடைபெறும்.

    இதையொட்டி 33-வது வார்டு கவுன்சிலர் ராமச்சந்தி ரன் தலைமையில் சேலம் மாவட்ட காசநோய் பிரிவின் துணை இயக்குனர் டாக்டர் கணபதி கள ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் பாண்டியராஜன் கலந்து கொண்டார்.

    முகாமிற்கு வந்தவர்களுக்கு காசநோய் பாதிப்பு கண்டறியப்பட்டதுடன் அதன் தன்மை குறித்தும் அதற்கான அவசியம் தேவையான சிகிச்சை குறித்தும் எடுத்து ரைக்கப்பட்டது. 2 வார சளி இருமல், மாலை நேர காய்ச்சல், பசியின்மை, எடை குறைதல், நெஞ்சுவலி, காச நோயின் அறிகுறிகள் ஆகும். நோய் கண்டறியப்பட்டு மேல் சிகிச்சை தேவைப்படுப வர்களுக்கு ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக பரிந்து ரைக்கப்பட்டனர்.

    மேலும் உயர் ரத்த அழுத்தம் நீரிழிவு நோய் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு மாத்திரைகள் வழங்கப்பட்டன.

    இதற்கான ஏற்பாடுகளை முதுநிலை காசநோய் சிகிச்சை மேற்பார்வையாளர் வீரமணிகண்டன் மற்றும் மருத்துவ பணியாளர்கள் செய்து இருந்தனர். இதில் பொதுமக்கள் ஆர்வமுடன் பங்குபெற்று பயனடைந்தார்கள்.

    • ஈரோடு மாவட்டத்தில் கடந்த, 2019–-20ல், 12-க்கும் மேற்பட்ட புதிய தொழுநோயாளிகள் கண்டுபிடிக்கப்ப ட்டுள்ளனர்.
    • ஈரோடு மாநகராட்சி , கோபி நகராட்சி பகுதியில் தீவிர தொழுநோய் கண்டுபிடிக்கும் முகாம் வரும், 16 முதல் செப்டம்பர் 3-ந் வரை நடக்க உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த, 2019–-20ல், 12-க்கும் மேற்பட்ட புதிய தொழுநோயாளிகள் கண்டுபிடிக்கப்ப ட்டுள்ளனர். அவ்வாறு கண்டறியப்பட்ட தாளவாடி, சிவகிரி, மொடக்குறிச்சி, சென்னிமலை, அம்மாபேட்டை, அந்தியூர், டி.என்.பாளையம், கோபி, பவானி, நம்பியூர் ஆகிய 10 யூனியன்,

    ஈரோடு மாநகராட்சி , கோபி நகராட்சி பகுதியில் தீவிர தொழுநோய் கண்டுபிடிக்கும் முகாம் வரும், 16 முதல் செப்டம்பர் 3-ந் வரை நடக்க உள்ளது.

    இப்பணியில், 1,322 முன் களப்பணியாளர்கள் ஈடுபடுகின்றனர். இவர்கள் வீடு,வீடாக சென்று ஆண்களை ஆண் களப்பணியாளரும், பெண்களை பெண் களப்பணியாளரும் பரிசோதனை செய்ய உள்ளனர்.

    ஆரம்ப அறிகுறியாக தோலில் சிவந்த அல்லது வெளிறிய உணர்ச்சியற்ற தேமல், கை மற்றும் கால்களில் மதமதப்பு, சூடு, குளிர்ந்த உணர்வு தெரியாமை, நீண்ட நாட்களாக ஆறாத புண், காது மடல் தடித்திருத்தல், புருவமுடி இல்லாமல் இருத்தல், உடலில் முடிச்சு, முடிச்சாக காணப்படுதல் உடனடியாக பரிசோதி க்கப்பட வேண்டும்.

    இதற்காக, அனைத்து அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவ கல்லுாரி மருத்துவனைகளியலும் பரிசோதனை மேற்கெ ாள்ளப்படுகிறது. நோயின் தன்மைக்கு ஏற்ப ஆறு முதல், ஒரு ஆண்டுக்குள் முழுமையான சிகிச்சை பெறலாம்.

    இதனை கண்ட றிவதால், ஊனத்தை தடுக்கலாம். புதிதாக கண்டுபிடிக்கப்படும் தொழுநோயாளிகளின் உடனிருப்போர், அருகில் வசிப்போர், உடன் பணி புரிவோருக்கும் தொழுநோய் தடுப்பு மருந்து வழங்கப்படும். மற்றவர்களுக்கு பரவுவது தடுக்கப்படும். இந்தத் தகவலை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    • காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம் 2 நாட்கள் நடைபெற்றது.
    • இம்முகா மில், 180 பேருக்கு எக்ஸ்ரே பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சிங்கிபுரத்தில் நடமாடும் எக்ஸ்ரே எந்திரத்தை பயன்படுத்தி காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம் 2 நாட்கள் நடைபெற்றது.

    கிராமத்திற்கே சென்று, காசநோய் கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் வகை யில், மாவட்டம் தோறும் தமிழக அரசு சுகாதாரத்துறை வாயிலாக நடமாடும் எக்ஸ்ரே எந்திரத்தை வழங்கியுள்ளது. இந்த எந்திரத்தை பயன்படுத்தி, தொடர் இருமல், சளி உள்ளிட்ட காசநோய் அறிகுறி உள்ளவர்களுக்கு அந்தந்த பகுதிக்கே சென்று பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    வாழப்பாடி அருகே பேளூர் சுகாதார வட்டா ரத்தில், சந்திரபிள்ளை வலசு கிராம மக்கள் மற்றும் சிங்கிபுரம் ராம்கோ சிமெண்ட் நிறுவன ஊழியர்களுக்கு இருதி னங்களாக, இத்திட்டத்தின் கீழ் காச நோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது.

    வட்டார மருத்துவ அலுவலர் பொன்னம்பலம் தலைமையில், தொண்டு நிறுவன மாநில பொறுப்பாளர் ரவிசங்கர், காசநோய் பிரிவு மாவட்ட மேற்பாற்வையாளர் சதாசிவம்,வட்டார காச நோய் மேற்பார்வையாளர் ராஜ்குமார், ஆய்வக நுட்புனர் கவிதா ஆகியோர் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர். சிங்கிபுரம் ராம்கோ சிமெண்ட் மேலாளர்கள் சுரேஷ்குமார், மணிவேல் மற்றும் பணியாளர்கள் முனியசாமி, வடிவேல், பேளூர் சுகாதார ஆய்வாளர் ஆனந்த் ஆகியோர் முகா மிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    இம்முகா மில், 180 பேருக்கு எக்ஸ்ரே பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

    ×