search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "traffic jam"

    • சேலம் 11.3, தம்மம்பட்டி 10, ஏற்காடு 1.6, ஓமலூர் 1.4 மி.மீ. மழை பெய்துள்ளது.
    • தொடர் மழையால் அந்த பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த நிலக்கடலை பயிர்கள் செழித்து வளர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று மாலை வானத்தில் திடீரென கருமேகங்கள் திரண்டன. தொடர்ந்து 4 மணியளவில் தொடங்கிய மழை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கன மழையாக கொட்டியது.

    சேலம் அம்மாப்பேட்டை, அஸ்தம்பட்டி, கொண்டலாம்பட்டி, ஜங்சன் உள்பட அனைத்து பகுதிகளிலும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடி, மின்னலுடன் பெய்த கன மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக சேலம் கிச்சிப்பாளையம் நாராயணநகர், பச்சப்பட்டி அம்மாப்பேட்டை ஜெயாதியேட்டர், நெத்திமேடு, தாதகாப்பட்டி, 4 ரோடு, 5 ரோடு, பழைய மற்றும் புதிய பஸ் நிலையங்கள் உள்பட பல பகுதிகளிலும் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் ஊர்ந்த படியே சென்றனர்.

    மாலை 4 மணியளவில் பெய்த மழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று விட்டு வீடுகளுக்கு திரும்பிய மாணவ-மாணவிகள் நனைந்த படியே வீடுகளுக்கு திரும்பினர். சில மாணவர்களை பெற்றோர் குடை பிடித்த படி வீடுகளுக்கு அழைத்து சென்றனர்.

    மழையை தொடர்ந்து ஆங்காங்கே ஒதுங்கி நின்ற இரு சக்கர வாகன ஓட்டிகள் மழை நின்றதும் வாகனங்களில் புறப்பட்டனர். இதனால் சேலம் மாநகரில் 5 ரோடு உள்பட சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் நிலவியது. இதே போல சேலம் சீலநாயக்கன்பட்டியில் இருந்து ஆத்தூர் செல்லும் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது. 2 கி.மீட்டர் தூரத்திற்கும் அதிகமாக வாகனங்கள் அணி வகுத்து நின்றது. இதனால் வாகனங்கள் ஊர்ந்த படியே சென்றதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

    சேலம் புறநகர் பகுதிகளான எடப்பாடி, சித்தூர், வெள்ளரி வெள்ளி, பக்கநாடு, ஆடையூர் பகுதிகளில் கன மழை கொட்டியது. இந்த பகுதிகளில் பெய்யும் தொடர் மழையால் அந்த பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த நிலக்கடலை பயிர்கள் செழித்து வளர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    மாவட்டத்தில் அதிக பட்சமாக எடப்பாடியில் 13 மி.மீ. மழை பெய்துள்ளது. சேலம் 11.3, தம்மம்பட்டி 10, ஏற்காடு 1.6, ஓமலூர் 1.4 மி.மீ. மழை பெய்துள்ளது. இன்று காலையும் வாகனம் மேக மூட்டத்துடன் காட்சி அளித்தது.

    நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம், மங்களபுரம் சேந்தமங்கலம் ஆகிய பகுதிகளில் கன மழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது. மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது.

    மாவட்டத்தில் அதிக பட்சமாக ராசிபுரத்தில் 19 மி.மீ. மழை பெய்துள்ளது. மங்களபுரத்தில் 14.4 , சேந்தமங்கலம் 12, கொல்லிமலை 8 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 53.40 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

    • முகூர்த்த நாட்களில் பழனி அடிவாரம், கிரிவீதி பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பக்தர்கள் நடந்து செல்ல சிரமப்படுகின்றனர்.
    • பழனி அடிவாரம் வடக்கு கிரிவீதியில் ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

    பழனி:

    தமிழ்கடவுள் முருகனின் 3-ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு தினசரி ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். கோவில் திருவிழா மற்றும் விடுமுறை நாட்களில் பக்தர்கள் வருகை மேலும் அதிகரி க்கிறது. வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் முருகனை தரி சனம் செய்ய வருகின்றனர்.

    முகூர்த்த நாட்களில் பழனி அடிவாரம், கிரிவீதி பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பக்தர்கள் நடந்து செல்ல சிரமப்படுகின்றனர். எனவே போக்குவரத்து நெரிசலை தவிர்க்க தீர்வு காணும் வகையில் கோட்டாட்சியர் சரவணன் தலைமையில் கோவில் உதவி ஆணையர் லட்சுமி, நகராட்சி ஆணையர் பாலமுருகன், டி.எஸ்.பி சரவணன் மற்றும் அதிகாரிகள் பழனி கிரிவீதி மற்றும் அடிவார பகுதிகளில் ஆய்வு செய்தனர்.

    அப்போது முதற்கட்டமாக பக்தர்கள் அதிகம் பயன்படு த்தும் பழனி அடிவாரம் வடக்கு கிரிவீதியில் ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. வடக்கு கிரிவீதியில் வாகனங்கள் நுழையும் இடங்களில் பேரிகார்டுகள் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு தனியார் நிறுவன காவலாளிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த வழியாக பைக் மற்றும் நடந்து செல்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படு கின்றனர்.

    மலையடிவார பகுதிக்கு வரும் வாகனங்கள் இடும்பன் கோவில் சாலை வழியாக செல்ல அதிகாரி கள் அறிவுறுத்தி உள்ளனர்.

    • பொதுவாக ரெயில் செல்லும் போது அதற்கு இடையூறு ஏற்படாத வகையில் சாலை போக்குவரத்தில் மாற்றங்களும், முன்னேற்பாடுகளும் செய்யப்படும்.
    • ஒரு பயனர், போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ரெயிலை நீங்கள் எப்போதாவது பார்த்துள்ளீர்களா என கேட்டுள்ளார்.

    லக்னோ:

    இந்தியாவில் முக்கிய நகரங்களில் வாகனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் போக்குவரத்து நெரிசலும் அதிகரித்த வண்ணம் உள்ளது.

    சாலை போக்குவரத்தில் தான் இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படுவதாக கருதும் நகரவாசிகள் தங்கள் பயணத்திற்கு ரெயில் போக்குவரத்தை தேர்ந்தெடுப்பது உண்டு.

    ஆனால் உத்தரபிரதேசத்தில் சாலை போக்குவரத்தில் ஏற்பட்ட நெரிசலால், ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்ட வினோத சம்பவம் நடைபெற்றுள்ளது.

    பொதுவாக ரெயில் செல்லும் போது அதற்கு இடையூறு ஏற்படாத வகையில் சாலை போக்குவரத்தில் மாற்றங்களும், முன்னேற்பாடுகளும் செய்யப்படும். அதன்படி ரெயில் செல்லும் போது அருகே உள்ள சாலைகளில் வாகனங்கள் ரெயில் செல்லும் வரை நிறுத்தப்படும்.

    ஆனால் வாரணாசியில் உள்ள ரெயில்வே கிராசிங்கில் போக்குவரத்து நெரிசல் காரணமாக எந்தோ எக்ஸ்பிரஸ் ரெயில் நடு வழியில் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் நெரிசலில் சிக்கி நிற்கும் ரெயில், ஹாரன் எழுப்பியபடி இருந்தது.

    போக்குவரத்து நெரிசல் காரணமாக ரெயில் நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து காவலர்கள் போக்குவரத்தை சரி செய்ய முடியாமல் திணறும் காட்சிகளும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவின. இதைப் பார்த்த பயனர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டனர்.

    அதில் ஒரு பயனர், போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ரெயிலை நீங்கள் எப்போதாவது பார்த்துள்ளீர்களா என கேட்டுள்ளார்.

    • குருநாதசாமி கோவில் விழாவில் அலைமோதிய கூட்டத்தால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது
    • அந்தியூர் அண்ணா மடுவு பகுதியில் இருந்து அந்தியூர் பஸ் நிலையம் வரை வாகனங்கள் நீண்ட வரிசையில் அணி வகுத்து சென்றன

    அந்தியூர்,

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த புது ப்பாளையத்தில் புகழ்பெற்ற குருநாதசாமி கோவில் திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. விழாவையொட்டி தினமும் ஏராளமான பக்த ர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். மேலும் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் பொது மக்கள் வந்து அங்கு அமைக்கப்பட்டு உள்ள பொழுது போக்கு அம்ச ங்களை கண்டு களித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் பொதுமக்களின் கூட்டம் அதிகளவில் இருந்தது. இதனால் அந்த பகுதியில் கூட்டம் கட்டுக்கடங்காமல் அலைமோதியது. கோவிலுக்கு வந்த பொது மக்கள் குதிரை சந்தையை பார்த்து சென்றனர். மேலும் குடும்பத்துடன் பொது மககள் வந்து அங்கு அமைத்துள்ள பொழுது போக்கு அம்மசங்களில் விளையாடி குதூகளித்தனர்.

    இதனால் அந்தியூர் அண்ணா மடுவு பகுதியில் இருந்து அந்தியூர் பஸ் நிலையம் வரை வாகனங்கள் நீண்ட வரிசையில் அணி வகுத்து சென்றன. தொட ர்ந்து வாகனங்கள் செல்ல முடியாமல் ஒன்றன்பின் ஒன்றாக ஊர்ந்து சென்றது. சிறிது தூரத்தை கடப்பதற்கு அரை மணி நேரத்திற்கு மேலாக ஆகின. இதனால் அந்தியூர் பகுதியில் கடும் போக்கு நெரிசல் ஏற்பட்டது. மேலும் பஸ் நிலையம் அருகே உள்ள ரவுண்டானா பகுதியில் இருந்து அத்தாணி சாலையில் பிரம்மதேசம் பிரிவு வரை வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்று சென்றது. இதனால் இரு சக்கர வாகனத்தில் செல்ப வர்கள் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

    மேலும் வனக்கோவில் புதுப்பாளையம் குருநாத சாமி கோவில் உள்ளிட்ட இடங்களில் பக்தர்கள் தரிசனம் செய்து பொழுது போக்கு நிகழ்ச்சி களை கண்டு களித்து சென்றனர். விழாவையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அந்த பகுதியில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தி போலீசார் கண்காணித்தனர். போலீசார் நகரின் பல்வேறு பகுதிகளில் நிறுத்தப்பட்டு இருந்தனர்.

    மேலும் போலீ சார் பொதுமக்களோடு கூட்டத்தினுள் சென்று திருட்டு சம்பவங்கள், அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க தொடர்ந்த கண்காணித்து வந்தனர். வழக்கம்போல் குருநாதசாமி திருவிழாவின் போது வெள்ளிக்கிழமை சனிக்கிழமைகளில் மட்டுமே கூட்டம் அதிக அளவில் காணப்படும். இந்த ஆண்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை இது வரையில் இல்லாத அளவிற்கு கூட்டம் கட்டு க்கடங்காமல் மக்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது.

    • ஏரி சாலையில் பஸ்கள் நுழைவதால் அன்றாடம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி சுற்றுலா பயணிகள் தவித்து வரும் நிலைமை ஏற்பட்டு வருகிறது.
    • இதனால் ஏரிச்சாலையை சுற்றி கனரக வாகனமான பஸ்களை இயக்க தடை விதிக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் மற்றும் பல்வேறு தரப்பினரின் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் பல்வேறு நாட்டவர், பல்வேறு மாநிலத்தவர்கள் விரும்பி ரசிக்க வரும் முக்கிய சுற்றுலா தலமாகும். இங்கு வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மோயர் சதுக்கம், பைன் மரக்காடுகள், தூண் பாறை,குணா குகை, பசுமை பள்ளத்தாக்கு ஆகிய பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தருவர்.

    மேலும் நகர் பகுதியில் மிகவும் அதிகமாக நேரத்தை செலவிடும் பகுதிகளில் கோக்கர்ஸ் வாக், பிரையண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா, ரோஜா பூங்கா ஆகியவைகள் ஆகும். இதில் குடும்பம் குடும்பமாக மிகவும் ரசித்து உற்சாகம் அடையும் வகையில் அதிகமான நேரத்தை செலவிடும் பகுதிகளில் ஏரிச்சாலை மிக முக்கிய இடங்களில் ஒன்று. ஏரிச்சாலையில் சைக்கிள் சவாரி, குதிரை சவாரி செய்வதோடு நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்து சுற்றுலாப்பயணிகள் உற்சாகமடைவது வழக்கம்.

    ஏரிச்சாலையில் ஒரு சில நேரங்களில் இருசக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகள் அதிவேகமாக வாகனங்களை இயக்குவதால் சுற்றுலா பயணிகள் கடும் அச்சத்தில் பயணிக்க வேண்டிய சூழல் உள்ளது. மேலும் மிக நீளமான பயணிகள் பேருந்துகளை ஏரிச்சாலையில் இயக்குவதால் ஏரிச்சாலையின் பல குறுகிய வளைவுச்சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    இதன் காரணமாக பல நாட்கள் ஏரிச்சாலையில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் பயணிப்போர் மற்றும் சைக்கிள் சவாரி குதிரை சவாரி செய்து மகிழும் சுற்றுலா பயணிகள் நீண்ட நேரம் போக்குவரத்து இடையூறு ஏற்படுத்தி சாலையைக் கடக்க முடியாமல் நிற்கும் கனரக வாகனமான பஸ்களால் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். தினசரி இதுபோல் ஏரி சாலையில் பஸ்கள் நுழைவதால் அன்றாடம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி சுற்றுலா பயணிகள் தவித்து வரும் நிலைமை ஏற்பட்டு வருகிறது.

    இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் பெரும் அவதிக்குள்ளாவதாக குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் ஏரி சாலையை சுற்றி கடைகள் நடத்தி வரும் வியாபாரிகள் தங்கள் கடைகளின் கூரைகளை இடித்து விடுவார்களோ என்ற அச்சத்தில் உள்ளனர். ஒரு சில நேரங்களில் ஒரு சில கடைகள் சேதம் அடைந்த நிகழ்வும் அரங்கேறியுள்ளது.

    இதோடு மட்டுமல்லாமல் தண்ணீர் லாரிகளும் அதிவேகமாக செல்வதால் சுற்றுலா பயணிகள் அச்சமடையும் சூழலும் நிகழ்ந்து வருகிறது. இதனால் ஏரிச்சாலையை சுற்றி கனரக வாகனமான பஸ்களை இயக்க தடை விதிக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் மற்றும் பல்வேறு தரப்பினரின் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பல்லடம் நகரப் பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் அமைக்க வேண்டும்.
    • பல்லடம் பகுதிக்கு சீரான முறையில் குடிநீர் வழங்க வேண்டும்.

    பல்லடம்:

    பல்லடத்தில் இந்திய கம்யூனிஸ்ட் 23வது ஒன்றிய மாநாடு ஒன்றிய செயலாளர் சாகுல் அமீது தலைமையில் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளர் இசாக், துணைச் செயலாளர் ரவி, மற்றும் கட்சி நிர்வாகிகள் மூர்த்தி, ஜீவா, கணேசன், ரவிக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் இந்த மாநாட்டில், பல்லடம் நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண மேம்பாலம் கட்ட வேண்டும். பல்லடம் நகரப் பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் அமைக்க வேண்டும். பல்லடம் பகுதிக்கு சீரான முறையில் குடிநீர் வழங்க வேண்டும். அரசு மருத்துவமனைக்கு சி.டி. ஸ்கேன், மற்றும் ரத்த வங்கி, அமைக்க வேண்டும். நலிவடைந்து வரும் விசைத்தறி தொழிலை காப்பாற்ற மின்சாரக் கட்டணத்தை குறைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    • வாரச்சந்தை ரோட்டை ஆக்கிரமித்து கடை வைத்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
    • திடீர் இடமாற்றம் காரணமாக வழக்கத்திற்கு மாறாக பொதுமக்கள் குறைவான அளவிலேயே வந்தனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் புதிய பஸ் நிலையம் இடிக்கப்பட்டு ரூ.20 கோடி செலவில் நவீனமாக கட்டப்பட உள்ள தால் பஸ்நிலை யத்தில் இருந்த கடைகள், கட்டிடங்கள், சந்தை கட்டிடங்கள் இடிக்கப்ட்டு பணிகள் மும்முர மாக நடந்து வரு கின்றன.

    லெட்சுமி புரம் பகுதியில் காலரா கொட்டகை இடத் தில் வாரச்சந்தை நடத்த முடிவு எடுக்கபங ட்டது. அந்த இடத்திற்கு வியாபாரி கள் எதிர்ப்பு தெரிவித்ததால் கொரோ னா கால கட்டத்தில் மார்க்கெட் இயங்கிய பாரதி நகர் டி-பிளாக் பகுதியில் அம்மா பூங்கா அருகில் வாரச்சந்தை இயங்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து நேற்று காலை வழக்கம் போல வியாபாரிகள் வாரச்சந்தை பகுதிக்கு தங்களின் பொருட் களுடன் விற்பனைக் காக வந்தனர். மாவட்ட நிர்வாகம் ஒதுக்கப்பட்ட இடங்களை தவிர்த்து ஊராட்சி அலு வலகம், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக ரோட் டை ஆக்கிரமித்து இருபுறங்களி லும் ஏராள மானோர் கடை களை வைத்த னர். இதனால் அப்பகுதியில் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத் திற்கு இடையூறு இல்லாமல் வாரச்சந்தை நடத்த ஊரா ட்சி நிர்வாகம், போலீசார் நடவடிக்கை எடுக்க வேண் டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்.

    ஆண், பெண் வியா பாரிகளுக்கு தேவையான கழிப் பிட வசதி, பொது மக்கள் வந்து செல்ல பஸ் போக்கு வரத்து வசதி செய்து கொடுத்தால் மக்கள் அதிகமாக இப் பகுதிக்கு வருவார்கள். தற்போது திடீர் இடமாற்றம் காரணமாக வழக்கத்திற்கு மாறாக பொதுமக்கள் குறை வான அளவிலேயே வந்தனர்.

    • தேசிய நெடுஞ்சாலை எண் 81 ல் தினமும் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேலான வாகனங்கள் செல்கின்றது.
    • ப முகூர்த்த நாட்களில் கார், மோட்டார் சைக்கிள்களின் எண்ணிக்கை,வழக்கத்தை விட பல மடங்கு அதிகரித்தது.

    பல்லடம்:

    பல்லடம் நகரமானது கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. மேலும் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையுடன், திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலை,அவிநாசி, தாராபுரம் ஆகிய மாநில நெடுஞ்சாலைகள் இணைவதால் பல்லடத்தில் வாகன போக்குவரத்து பல மடங்கு அதிகரித்து வருகிறது. இந்த கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை எண் 81 ல் தினமும் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேலான வாகனங்கள் செல்கின்றது. திருமணம் போன்ற விசேஷ நாட்களில் இந்த எண்ணிக்கை 60 ஆயிரத்தைத் தாண்டும்.

    இந்த நிலையில் சுப முகூர்த்த நாட்களில் கார், மோட்டார் சைக்கிள்களின் எண்ணிக்கை,வழக்கத்தை விட பல மடங்கு அதிகரித்தது. இதனால் கோவை-திருச்சி மெயின் ரோட்டிலும், மங்கலம் ரோட்டில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அண்ணா நகர் முதல், பனப்பாளையம் தாராபுரம் ரோடு பிரிவு வரை, ஆயிரக்கணக்கான வாகனங்கள் வரிசையாக அணிவகுத்து செல்கின்றன.

    போக்குவரத்து போலீசார் நெரிசலை கட்டுப்படுத்த தடுப்புகள் வைத்தும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தியும் ரோடுகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பல்லடம் நகரமே திக்குமுக்காடிப் போகிறது. முகூர்த்த நாட்களில் போக்குவரத்து மாற்றங்களை செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • படூர் வரை 50 சதவீத பணிகள் மட்டுமே நடைபெற்றுள்ளன.
    • தினமும் வாகன ஓட்டிகள் கேளம்பாக்கம் நகருக்குள் வந்து கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் நிலை உள்ளது.

    திருப்போரூர்:

    பழைய மாமல்லபுரம் சாலை திருப்போரூர் மற்றும் கேளம்பாக்கம் பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், கிழக்கு கடற்கரை சாலைக்கு விரைவாக செல்லவும் தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் சார்பில் கடந்த 2017 -ம் ஆண்டு சுமார் ரூ. 250 கோடி மதிப்பீட்டில் புறவழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. ஆலத்தூர் ஊராட்சி வெங்கலேரி கிராமத்தில் இருந்து காலவாக்கம் தனியார் கல்லூரி வரை சுமார் ஐந்து கிலோமீட்டர் தூரம் மற்றும் தையூர் ஊராட்சி செங்கன் மால் பகுதியில் இருந்து படூர் வரை சுமார் 2½ கிலோ மீட்டர் தூரம் என மொத்தம் 7½ கிலோமீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது.

    இதற்காக விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. கடந்த 2020-ம் ஆண்டு இச்சாலை பணிகள் முடிக்கப்பட வேண்டும். இடையில் கொரோனா காலகட்டம், ஆட்சி மாற்றம் ஆகியவற்றால் இந்தப் புறவழிச் சாலை பணிகள் மந்தகதியில் நடைபெற்று வந்தன. வெங்கலேரி முதல் காலவாக்கம் தனியார் கல்லூரி வரை 90 சதவீத பணிகள் நிறை வடைந்துள்ளன. இப்பணிகள் நிறைவு பெறும் முன்னே இச்சாலையில் வாகனங்கள் சென்று வருகின்றன. திருப்போரூர் நகரத்துக்குள் வராமல் இந்த புறவழிச் சாலையை வாகன ஓட்டிகள் பயன்படுத்துவதால் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் பயண நேரம் குறைவதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் தையூர் செங்கண்மால் பகுதியில் இருந்து படூர் வரை இரண்டரை கிலோ மீட்டர் தூரத்தில் அமைய உள்ள சாலையில் ஒரு மேம்பாலம் அமைகிறது.

    இதில் படூர் வரை 50 சதவீத பணிகள் மட்டுமே நடைபெற்றுள்ளன. மீதமுள்ள பாதி பணிகள் நடைபெறவில்லை. இதனால் தினமும் வாகன ஓட்டிகள் கேளம்பாக்கம் நகருக்குள் வந்து கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் நிலை உள்ளது. இந்த பணிகள் நிறைவடைந்தால் இப்பகுதியில் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்புவாசிகள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் பணிக்கு குறித்த நேரத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைவர்.

    மந்தகதியில் நடைபெறும் திருப்போரூர், கேளம்பாக்கம் புறவழிச்சாலை பணிகளை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்காக விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • பஸ் நிலையத்திற்கு தினமும் 500 க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன.
    • பஸ்களை ஓட்டுவதற்கு இடையூறாக உள்ளது.

    பல்லடம் :

    பல்லடம் பஸ் நிலையத்திற்கு தினமும் 500 க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. சனி, ஞாயிறு, திங்கள், மூன்று நாட்கள் அதிகளவிலான பஸ்கள், பஸ் நிலையத்திற்குள் வந்து செல்லும்.

    இந்த நிலையில் திங்கட்கிழமையில் பல்லடம் வாரச்சந்தை நடைபெறுகிறது. அதற்கு காய்கறிகள், மற்றும் சரக்கு கொண்டுவரும் வாகனங்கள் பஸ் நிலையத்திற்கு உள்ளே நிறுத்தப்படுகின்றன. இதனால் பஸ்களை நிறுத்துவதற்கு இடம் இல்லாமலும், பஸ்களை ஓட்டுவதற்கு, இடையூறாகவும் உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம், பஸ் நிலையத்திற்குள் திங்கட்கிழமைகளில் சரக்கு வாகனங்களை அனுமதிக்கக்கூடாது என அரசு பஸ் டிரைவர்கள் தெரிவித்தனர்.

    • கிண்டி பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க கிண்டி தபால் நிலையம் அருகில் ஒரு பஸ் நிலையம் அமைக்க பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.
    • பூங்கா ரெயில் நிலைய சுரங்கப்பாதை நீட்டிப்பு செய்யப்பட உள்ளது.

    சென்னை:

    சென்னையில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணைய அதிகாரிகள் சென்னை நகரம் முழுவதும் சோதனை செய்து ஒரு சில இடங்களில் புதிய பஸ் நிலையங்களை நிறுவவும், நடை பாதைகள் அமைக்கவும், பஸ் நிறுத்தத்தை மாற்றவும் பரிந்துரை செய்துள்ளனர்.

    சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை முன்புறம் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தம் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே இந்த பஸ் நிறுத்தத்தை வேறு இடத்துக்கு மாற்ற அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர்.

    அண்ணாசாலையில் உள்ள நடைபாதையை சிட்கோ பஸ்நிறுத்தம் வரை நீட்டிப்பதன் மூலம் ரெயில்வே நடைபாலத்தை ஒருங்கிணைக்க பரிந்துரை செய்துள்ளனர். இதே போல் நுங்கம்பாக்கத்தில் உள்ள காதர் நவாஸ்கான் சாலை நடைபாதையாக மாற்றப்பட உள்ளது.

    கிண்டி பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க கிண்டி தபால் நிலையம் அருகில் ஒரு பஸ் நிலையம் அமைக்க பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. மேலும் சின்ன மலை மெட்ரோ ரெயில் நிலையம் அருகில் ஒரு பஸ் நிலையம் அமைக்கவும் ஆலோசனை வழங்கப்பட்டு உள்ளது. மேலும் அங்கு நடைபாதை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. பூங்கா ரெயில் நிலைய சுரங்கப்பாதை நீட்டிப்பு செய்யப்பட உள்ளது.

    இதற்கிடையே சில அமைப்புகள் சென்னையில் உள்ள 10 பஸ் நிறுத்தங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை இருப்பதாக கண்டறிந்து உள்ளன. சென்னை கொருக்குப்பேட்டை, அம்பேத்கர் கல்லூரி, அசோக் பில்லர், சின்னாண்டி மடம், ஐ.ஓ.சி. நகர், முத்தமிழ் நகர், வியாசர் பாடி மார்க்கெட், சிட்கோ, வாசுகி நகர், சைதாப்பேட்டை ஆகிய பஸ் நிலையங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறியுள்ளன.

    சில பஸ் நிறுத்தங்கள் மதுக்கடை அருகில் அமைந்துள்ளன. சில பஸ் நிறுத்தங்களில் ஆண்கள் மது அருந்துகிறார்கள். விளக்குகள் இல்லாத சில பஸ் நிறுத்தங்களில் சமூக விரோத செயல்கள் நடக்கின்றன என்றும் தெரிவித்துள்ளன.

    • தொடர்ந்து அடுத்தடுத்து ரெயில்கள் வந்ததால் நீண்ட நேரம் கேட் மூடி இருந்தது.
    • ரெயில்வே கேட்டின் இருபக்கம் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

    பொன்னேரி:

    மீஞ்சூர் ரெயில் நிலையம் அருகே மேம்பால பணி கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக மீஞ்சூரில் இருந்து காட்டூர், தந்தை மஞ்சி, உள்ளிட்ட சுமார் 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ரெயில் நிலையம் அருகே உள்ள ரெயில்வே கேட்டை பயன்படுத்தி வருகிறார்கள்.

    ரெயில்கள் வரும்போது கேட் மூடப்படும் நேரத்தில் வாகன ஓட்டிகள் கடும் நெரிசலில் சிக்கி தவித்து வருகிறார்கள்.

    இந்நிலையில் நேற்று இரவு 8 மணிஅளவில் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்ததை தொடர்ந்து ரெயில்வே கேட் மூடப்பட்டது. மேலும் தொடர்ந்து அடுத்தடுத்து ரெயில்கள் வந்ததால் நீண்ட நேரம் கேட் மூடி இருந்தது. இதனால் ரெயில்வே கேட்டின் இருபக்கம் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் அணிவகுத்து நின்றன. சிறிது நேரத்தில் ரெயில்வே கேட் திறந்தாலும் இருபக்கமும் இருந்த வாகனங்கள் கடந்து செல்வதில் சிரமம் ஏற்பட்டது. போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் தவித்தனர்.

    இதற்கிடையே வாகனங்கள் அனைத்தும் ரெயில்வே கேட்டை கடந்து செல்வதற்கு முன்பே சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி செல்லும் மின்சார ரெயில் வந்தது. ஆனால் கடும் வாகன நெரிசல் காரணமாக ரெயில்வே கேட்டை மூட முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் ரெயிலுக்கு சிக்னல் வழங்கப்படவில்லை.

    இதைத்தொடர்ந்து கும்மிடிப்பூண்டி நோக்கி சென்ற மின்சார ரெயில் நந்தியம் பாக்கத்திலும், கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னைநோக்கி சென்ற மின்சார ரெயில் மீஞ்சூர் ரெயில் நிலையத்திலும் நடுவழியில் நிறுத்தப்பட்டன.

    சுமார் ½மணிநேரத்துக்கும் மேலாக மின்சார ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் ரெயில்சேவை பாதிக்கப்பட்டது.

    பின்னர் ரெயில்வே போலீசார் விரைந்து வந்து இருபக்கமும் நின்ற வாகனங்களை தடுத்து நிறுத்தி ஒவ்வொன்றாக கடந்து செல்ல செய்தனர். இதன் பின்னரே ரெயில்வே கேட்டை ஊழியர்களால் மூட முடிந்தது. இதைத்தொ டர்ந்து இரவு 8.45 மணியளவில் ரெயில் சேவை சீரானது.

    இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறும்போது, ரெயில்வே மேம்பால பணி மந்தமாக நடந்து வருகிறது. இதனை விரைந்து முடித்தால்தான் இந்த போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கிடைக்கும். வரும் நாட்களில் பள்ளிகள் திறந்ததும் மேலும் போக்குவரத்து ஸ்தம்பிக்கும் என்றனர்.

    ×