search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போக்குவரத்து நெருக்கடி"

    • பள்ளி மாணவர்களை பெற்றோர் அழைத்து சென்று பள்ளியில் விடுவதற்குள் கடும் சிரமத்திற்கு மத்தியில் சென்று வருகின்றனர்.
    • மாணவர்கள் பள்ளிக்கு இடையூறு இல்லாமல் செல்ல வழிவகை செய்ய வேண்டும் என்று பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    குன்றத்தூர்:

    காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் பஸ் நிலையம் அருகே அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் மாணவர்களுக்கு ஆங்கில வழி கல்வி நடத்தப்பட்டு வரும் நிலையில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் தினமும் அதிக அளவில் இங்கு வந்து செல்கின்றனர். இந்த பகுதியிலேயே நகராட்சி அலுவலகம் உள்ளது. தினமும் காலையில் கட்டிட வேலைக்கு செல்லும் பெண்களும், ஆண்களும் இந்த சாலையின் இரு பகுதியிலும் ஆக்கிரமித்து நிற்கின்றனர்.

    அதிக அளவில் இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் இந்த சாலையின் ஓரம் நிறுத்தி வைத்து இருப்பதால் தினந்தோறும் பள்ளிக்கு வரும் மாணவர்கள் பள்ளி வளாகத்திற்குள் செல்ல முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

    அது மட்டுமின்றி காலை, மாலை இருவேளைகளிலும் பள்ளி மாணவர்களை பெற்றோர் அழைத்து சென்று பள்ளியில் விடுவதற்குள் கடும் சிரமத்திற்கு மத்தியில் சென்று வருகின்றனர். அது மட்டுமின்றி தற்போது இந்த பள்ளி வளாகத்திலேயே கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டு வருவதால் இடம் நெருக்கடி ஏற்பட்டு ஒரு வழியில் மட்டுமே மாணவர்கள் செல்வதால் கடும் நெரிசல் ஏற்படுகிறது.

    இந்த பகுதியில் மாணவர்கள் பள்ளிக்கு இடையூறு இல்லாமல் செல்ல வழிவகை செய்ய வேண்டும் என்று பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • லாரி, கார், ஜீப் போன்ற தனியார் வாகனங்களை சாலையிலேயே நிறுத்திவிட்டு சென்று விடுகின்றனர்.
    • அரசு பஸ்கள் உள்ளிட்ட மற்ற வாகனங்கள் விலகி செல்ல முடியாமல் அவர்களும் சாலையிலே நிறுத்தி விடுகின்றனர்.

    பெரும்பாறை:

    திண்டுக்கல் மாவட்டம் பன்றிமலை, ஆடலூர், பெரியூர், பாச்சலூர், ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு கே.சி.பட்டி வழியாக அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. காலை, மாலை நேரங்களில் இந்த வழியாக அதிகமான பஸ்கள் சென்று வருகின்றன.

    இந்த நிலையில் லாரி, கார், ஜீப் போன்ற தனியார் வாகனங்களை சாலையிலேயே நிறுத்திவிட்டு சென்று விடுகின்றனர். இதனால் அரசு பஸ்கள் உள்ளிட்ட மற்ற வாகனங்கள் விலகி செல்ல முடியாமல் அவர்களும் சாலையிலே நிறுத்தி விடுகின்றனர்.

    இதனால் கே.சி.பட்டி பகுதியில் காலை, மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. எனவே அதிகாரிகள் சாலையில் வாகனங்களை நிறுத்தி செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • இருவழிச்சாலைகளாக மாற்ற முயற்சி மேற்கொண்டு அதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார்.
    • 10 அடிக்கு மேல் பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநகர பகுதியில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இதை குறைக்கும் வகையில் ஒரு சில சாலைகள் ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் மாநகராட்சி மேயராக மகேஷ் பொறுப்பேற்றதும் பல்வேறு சாலைகளை இருவழிச்சாலைகளாக மாற்ற முயற்சி மேற்கொண்டு அதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார்.

    முதல் கட்டமாக கோட்டார் நாராயண குரு மண்டபத்திலிருந்து சவேரியார் ஆலயம் வரும் சாலை இருவழி பாதையாக மாற்றப்பட்டு உள்ளது. காலை நேரங்களில் இருசக்கர வாகனங்கள், 4 சக்கர வாகனங்கள் அந்த வழியாக இயக்கப்பட்டு வருகின்றன.

    சாலை விசாலமாக காட்சி அளிப்பதால் போக்குவரத்து நெருக்கடி இன்றி வாகனங்கள் சென்று வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோட்டார் டெக்சி ஸ்டாண்ட் பகுதியில் உள்ள நிழற்கூடையின் முன்பகுதியில் குடிநீர் பைப்பில் சரி செய்வதற்காக குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் ஜே.சி.பி. எந்திரம் மூலமாக பள்ளம் தோண்டப்பட்டது.

    10 அடிக்கு மேல் பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இன்று பணிகள் நடைபெறவில்லை. அந்த சாலையோரத்தில் பள்ளம் தோண்டப்பட்டுள்ளதால் போலீசார் அந்த பகுதியில் தடுப்பு வேலிகளை வைத்துள்ளனர். இந்த நிலையில் அந்த பகுதியில் இன்று கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இரு புறங்களில் இருந்தும் வாகனங்கள் வர முடியாமல் சிரமப்பட்டனர்.

    இதையடுத்து இருபுறமும் போக்குவரத்து போலீசார் நிறுத்தப்பட்டு அதை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் அந்த பகுதியில் போக்குவரத்து நெருக்கடி அதிகமாகவே காணப்பட்டது.

    எனவே குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் உடனடியாக அந்த பணியை துரிதமாக முடித்து சாலையில் தோண்டப்பட்டுள்ள பள்ளத்தை மணல் நிரப்பி மூட வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், வாகன ஓட்டி களும் கோரிக்கை வைத்துள்ள னர்.

    இதில் மாநகராட்சி மேயர் மற்றும் அதிகாரிகள் தனி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

    • தள்ளுவண்டியில் மூட்டைகளை இழுத்துச் செல்லும் கூலி தொழிலாளிகளையும் அதிகமாக காணமுடிகிறது.
    • ஆங்காங்கே நிறுத்தி இருக்கும் 4 சக்கர வாகன உரிமையாளர்கள் மீது போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    குனியமுத்தூர்,

    கோவை மாநகரின் மையப்பகுதி டவுன்ஹால் ஆகும். கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான பொதுமக்கள் இங்கு வந்து பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.ஒப்பணக்கார வீதி, பெரிய கடை வீதி, தாமஸ் வீதி, ராஜவீதி, ரங்கே கவுடா் வீதி, இடையர் வீதி உள்ளிட்ட பகுதிகள் அனைத்தும் டவுன்ஹால் பகுதி என்று அழைக்கப்படுகிறது.

    இத்தகைய சாலைகள் அனைத்திலும் எப்போதும் போக்குவரத்து நெரிசல் காணப்படும். மளிகை சாமான்கள், இஞ்சி, பூண்டு போன்ற அனைத்து பொருட்களும் விற்பனை செய்யக்கூடிய மொத்த விற்பனை நிலையங்கள் மற்றும் காய்கறி மார்க்கெட் இப்பகுதியில் உள்ளது. அத்தகைய கடைகளுக்கு ராஜவீதி வழியாகத்தான் சென்றாக வேண்டும்.

    மேலும் நகைக்கடைகளும் இப்பகுதியில் அதிகமாக உள்ளது. எனவே ராஜவீதியில் எந்த நேரமும் போக்குவரத்து நெரிசல் மிகுந்ததாக காணப்படும். சரக்கு ஆட்டோக்களும், இருசக்கர வாகனங்களும் ,நான்கு சக்கர வாகனங்களும் நீண்ட தூரம் அணிவகுத்து நிற்கும் காட்சியை இங்கு காண முடிகிறது.

    இதற்கிடையில் தள்ளுவண்டியில் மூட்டைகளை இழுத்துச் செல்லும் கூலி தொழிலாளிகளையும் அதிகமாக காணமுடிகிறது. நாள் முழுவதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த கோவையின் முக்கியமான பகுதி இப்பகுதி ஆகும். இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது, ராஜவீதியை பொறுத்த அளவு சற்று அகலமான சாலை தான். ஆனாலும் சாலைகளின் 2 புறங்களிலும் வாகனங்களை நிறுத்தி விட்டு சென்று விடுகின்றனர்.

    இதனால்தான் இப்பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படும் சூழ்நிலை உள்ளது. சாலையின் ஒரு புறம் மட்டுமே பார்க்கிங் என்ற முறை அமலுக்கு வந்தால் போக்கு வரத்து நெருக்கடியை தவிர்க்க முடியும்.

    மேலும் சாலைகளின் ஓரங்களில் ஆங்காங்கே நிறுத்தி இருக்கும் 4 சக்கர வாகன உரிமையாளர்கள் மீது போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு செயல்பட்டால் ராஜவீதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முடியும் .

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

    • பஸ் நிலையத்திற்கு தினமும் 500 க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன.
    • பஸ்களை ஓட்டுவதற்கு இடையூறாக உள்ளது.

    பல்லடம் :

    பல்லடம் பஸ் நிலையத்திற்கு தினமும் 500 க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. சனி, ஞாயிறு, திங்கள், மூன்று நாட்கள் அதிகளவிலான பஸ்கள், பஸ் நிலையத்திற்குள் வந்து செல்லும்.

    இந்த நிலையில் திங்கட்கிழமையில் பல்லடம் வாரச்சந்தை நடைபெறுகிறது. அதற்கு காய்கறிகள், மற்றும் சரக்கு கொண்டுவரும் வாகனங்கள் பஸ் நிலையத்திற்கு உள்ளே நிறுத்தப்படுகின்றன. இதனால் பஸ்களை நிறுத்துவதற்கு இடம் இல்லாமலும், பஸ்களை ஓட்டுவதற்கு, இடையூறாகவும் உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம், பஸ் நிலையத்திற்குள் திங்கட்கிழமைகளில் சரக்கு வாகனங்களை அனுமதிக்கக்கூடாது என அரசு பஸ் டிரைவர்கள் தெரிவித்தனர்.

    • வாகன போக்குவரத்துக்கு ஏற்றவாறு இணைப்பு மற்றும் பிரதான சாலைகள் அமைக்கப்பட்டு உள்ளது.
    • சாலைகளில் தொடர்ந்து போக்குவரத்து இருந்து கொண்டே உள்ளது.

    உடுமலை :

    உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வாகன போக்குவரத்துக்கு ஏற்றவாறு இணைப்பு மற்றும் பிரதான சாலைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலமாக பொதுமக்கள் பல்வேறு விதமான தேவைகளை நிறைவேற்றி வருகின்றனர். ஆனால் பிரதான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள்,பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருவதும் தொடர் கதையாக உள்ளது.

    இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:- பல்வேறு விதமான சேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக நகரம் மற்றும் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களும் நகரப்பகுதிக்கு வர வேண்டி உள்ளது. இதனால் சாலைகளில் தொடர்ந்து போக்குவரத்து இருந்து கொண்டே உள்ளது. ஆனால் பிரதான சாலைகளை ஆக்கிரமிக்கும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவது வாடிக்கையாக உள்ளது.வாகனங்களை தாறுமாறாக நிறுத்துவதும் போக்குவரத்து விதிகளை முறையாக கடைபிடிக்காததும் அதற்கு காரணமாகும். குறிப்பாக சத்திரம் வீதியில் பொருட்களை இறக்குவதற்காக வருகின்ற வாகனங்கள் சாலை முழுவதும் ஆக்கிரமிப்பு செய்து நிறுத்தப்படுகிறது. அதே போன்று வ.உ.சி வீதியில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட சாலை சீரமைக்காமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளது.இது போன்ற பல்வேறு காரணங்களால் உடுமலை பகுதி பிரதான சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது.மேலும் பொருட்களை இறக்குவதற்காக வருகின்ற கனரக வாகனங்கள் பகல் நேரங்களில் நகரப் பகுதிக்குள் வரக்கூடாது என்ற விதி இருந்தும் அதை முறையாக பின்பற்றுவதில்லை. ஒரு சிலர் செய்யும் தவறுகளால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அவதிப்படுவது வேதனை அளிக்கிறது. எனவே உடுமலை நகரப் பகுதிக்குள் பிரதான சாலைகளில் நிலவி வருகின்ற போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண்பதற்கு அதிகாரிகள் முன்வர வேண்டும்.மேலும் கனரக வாகனங்களை பகல் நேரத்தில் பிரதான சாலைகளில் நிறுத்தி பொருட்களை இறக்குவதற்கும் தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • கடுமையான போக்குவரத்து நெருக்கடி
    • நீண்ட வரிசையில் நின்ற பஸ்களை மாற்று பாதை வழியாக இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது

    நாகர்கோவில்

    ஆரல்வாய் மொழியில் இருந்து வடசேரிக்கு இன்று காலை அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. பஸ்ஸில் ஏராளமான பயணிகள் இருந்தனர். ஒழுகினசேரி பாலத்தை கடந்து பஸ் வந்தபோது திடீரென பஸ் பஞ்சராகி நடுவழியில் நின்றது.

    இதையடுத்து டிரைவர் பஸ்ஸை இயக்க முயன்றார்.ஆனால்பஸ்சை எடுக்க முடியவில்லை. பஸ் நடுவழியில் நின்றதால் அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. நெல்லை யிலிருந்து வந்த பஸ்கள் நீண்ட வரிசையில் நின்றன. இதேபோல் ஒழுகினசேரியில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளா னார்கள். இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெருக்கடி யில் சிக்கித் தவித்தனர். அரசு அலுவலகங்களுக்கு வந்தவர்களும் அந்த வழியாக செல்ல முடியாமல் தவித்தனர். பஸ் பழுதானது குறித்து போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது .அவர்கள் அங்கு விரைந்து வந்தனர் .

    மேலும் போக்குவரத்து போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்தனர். போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட வரிசையில் நின்ற பஸ்களை மாற்று பாதை வழியாக இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. நெல்லைக்கு சென்ற பஸ்கள் வடசேரி அண்ணா சிலையிலிருந்து புத்தேரி பாலம், நான்கு வழி சாலை வழியாக அப்டா மார்க்கெட் சென்றது.

    போக்குவரத்து போலீ சார் வடசேரி பகுதி யில் நின்று பஸ்களை திருப்பி விட்டனர். நெல்லை யிலிருந்து வந்த பஸ்கள் வழக்கமான பாதையில் இயக்கப்பட்டது. பழுதாகி நின்ற பஸ் மற்றும் அப்பா மார்க்கெட் பகுதியில் போக்குவரத்து போலீசார் நின்று போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டி ருந்தனர்.சுமார் மூன்று மணி நேரமாக கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து நடுவழியில் பழுதாகி நின்ற பஸ் சரி செய்யப்பட்டது. பின்னர் போக்குவரத்து சீரானது.

    • போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் முடிச்சூர்-ஜி.எஸ்.டி., வேளச்சேரி சாலைகளை இணைக்கும் வகையில் மேம்பாலம் கட்டப்பட்டு உள்ளது.
    • அரசு ஒப்புதல் அளித்தவுடன் பணிகள் தொடங்கப்படும்.

    சென்னை:

    சென்னையின் நுழைவாயிலாக தாம்பரம் இருந்து வருகிறது. கார், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் தென் மாவட்டங்களுக்கு செல்வோர் அங்கிருந்து வருவோர் தாம்பரம் வழியாக செல்கிறார்கள்.

    மேலும் தாம்பரம் ரெயில் நிலையத்துக்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கிறார்கள். அலுவலகம் செல்பவர்கள் தினமும் தாம்பரம் ரெயில் நிலையம் மற்றும் பஸ் நிலையம் ஆகியவற்றை பயன்படுத்துகிறார்கள்.

    வார இறுதி நாட்களில் பலர் வெளி மாவட்டங்களுக்கு செல்வதால் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் முடிச்சூர்-ஜி.எஸ்.டி., வேளச்சேரி சாலைகளை இணைக்கும் வகையில் மேம்பாலம் கட்டப்பட்டு உள்ளது.

    இந்த மேம்பாலம் ஜி.எஸ்.டி. சாலையில் சுரங்கப் பாதையை ஒட்டி இறங்குகிறது. கிழக்கு பகுதியில் ரெயில்வே பஸ் நிறுத்தத்தை ஒட்டி ஏறுகிறது. இந்த இரண்டு இடங்களிலும் மேம்பாலம் மற்றும் ஜி.எஸ்.டி. சாலை வழியாக வரும் வாகனங்கள் ஒரே நேரத்தில் இணைவதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.

    மேலும் வடக்கு பகுதியில் உள்ள மேம்பாலத்தின் முனையில் ஏராளமான ஆட்டோ, ஷேர் ஆட்டோக்கள் நிறுத்தப்படுகின்றன. ஆம்னி பஸ் மற்றும் மாநகர பஸ்களும் நிற்பதால் சாலையின் இரு புறமும் மக்கள் நிற்கிறார்கள்.

    சாலையின் கிழக்கு பகுதியில் நடை மேம்பாலம் அருகே உணவு பொட்டலங்கள், தண்ணீர், குளிர் பானங்கள், தின்பண்டங்கள் மற்றும் பிற பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் உள்ளன.

    இதனால் ராஜாஜி சாலை, காந்தி சாலை, சண்முகம் சாலை, அப்துல் ரசாக் சாலை, முத்துரங்கம் முதலி சாலை போன்ற முக்கிய சாலைகள் மட்டுமின்றி உட்புற சாலைகளிலும் நெரிசல் ஏற்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் தாம்பரம் பல்வேறு வகைகளில் வளர்ச்சி அடைந்தாலும் போக்குவரத்து நெரிசலும் தொடர்ந்தபடியே உள்ளது.

    மேம்பாலம் மற்றும் ஜி.எஸ்.டி. சாலையை பயன்படுத்தும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும், அப்பகுதி வேகமாக வளர்ச்சி அடைந்து வருவதாலும் போக்குவரத்து நெரிசலை குறைக்க திட்டம் வகுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

    இந்நிலையில் தாம்பரம் ரெயில் நிலையம் மற்றும் பஸ் நிலையம் அருகே போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் வடக்கு பகுதியில் மேம்பாலத்தை மேலும் ஒரு கிலோ மீட்டர் நீளத்துக்கு விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக தாம்பரம் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா, தாம்பரம் மாநகராட்சியிடம் ஒரு முன்மொழிவை சமர்ப்பித்துள்ளார்.

    இத்திட்டத்துக்கு அரசு ஒப்புதல் அளித்தவுடன் பணிகள் தொடங்கப்படும். ஜி.எஸ்.டி. சாலையின் இரு புறத்திலும் ஏறும், இறங்கும் மேம்பாலத்தை வள்ளுவர் குருகுலம் வரை நீட்டிக்க மாநகராட்சியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    இதன் மூலம் சண்முகம் சாலை, ராஜாஜி சாலை மற்றும் காந்தி சாலை செல்லும் வாகன ஓட்டிகள் நெரிசலில் இருந்து விடுபட லாம். பஸ்கள் மட்டும் ஜி.எஸ்.டி. சாலையை பயன்படுத்தும். பிற வாகனங்கள் தடையின்றி மேம்பாலம் வழியாக செல்லலாம்.

    தாம்பரம் மார்க்கெட்டை பல மாடி வணிக வளாகமாக மாற்றவும், அங்கு இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் கட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த வணிக வளாகத்தில் சிறுவர் பூங்கா, கடைகள், ஓட்டல்கள், அரசு அலுவலகங்கள் அமைக்கப்படும் என்றும் பல மாடி கட்டிடத்தின் 3-வது தளத்துடன் இணைக்கப்படும். அங்கு லிப்ட், எஸ்கலேட்டர்கள் கூடுதலாக பார்க்கிங் இடம் வழங்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • நாமக்கல்லில் பஸ் நிலையத்தை சுற்றியுள்ள முக்கிய சாலைகளில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும்.
    • சாலையின் மையப்பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் பார்க்கிங் போல காலை முதல் நள்ளிரவு வரையிலும் ஏராளமான இரு சக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    நாமக்கல்:

    சேலம், திருச்சி பாதையில் நாமக்கல் முக்கிய நகரமாக விளங்குகிறது. வளர்ந்து வரும் நாமக்கல் நகரத்தில் வாகன பெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    நாமக்கல் வழியாக செல்லும் வாகனங்கள்

    தமிழகத்தில் லாரி, முட்டைகள் மற்றும் கோழி உற்பத்தியில் நாமக்கல் மாவட்டம் முதல் இடத்தில் உள்ளது. இதனால் வெளி மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான வாகனங்கள் தினமும் நாமக்கல் மாவட்டத்திற்கு வந்து செல்கின்றன.

    குறிப்பாக நாமக்கல்லில் இருந்து திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம் செல்லும் வாகனங்களும், அதே போல தஞ்சாவூர், திருச்சி பகுதிகளில் இருந்து வரும் வாகனங்களும் சேலத்தில் இருந்து மதுரை, கரூர் செல்லும் வாகனங்களும், இதேபோல மதுரையில் இருந்து சேலம் வரும் வாகனங்களும் அதிக அளவில் நாமக்கல் நகருக்குள் வந்து செல்கின்றன.

    நாமக்கல் பஸ் நிலையத்தில் இருந்து ஈரோடு, திருச்செங்கோடு, பரமத்தி, ராசிபுரம் உள்பட பல பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அரசு ஆஸ்பத்திரி, கோட்டாட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், போலீஸ் நிலையம், பி.எஸ்.என்.எல் அலுவலகம், அரசு அலுவலகங்கள், யூனியன் அலுவலகம், பள்ளி கல்லூரிகள் உட்பட ஏராளமான அலுவலகங்கள் உள்ளன.

    போக்குவரத்து நெரிசல்

    இதனால் நாமக்கல்லில் பஸ் நிலையத்தை சுற்றியுள்ள முக்கிய சாலைகளில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும். குறிப்பாக பஸ் நிலையத்தை சுற்றியுள்ள சாலைகளில் எப்போதும் அதிக அளவில் போக்குவரத்து இருக்கும். அதனால் போக்குவரத்து போலீசார் அந்த பகுதியில் போக்குவரத்தை ஒழுங்கு–படுத்தி வருகிறார்கள்.

    ஆனால் நாமக்கல்‌ பஸ் நிலையத்திற்கு வெளிப்புறம் உள்ள மணிக்கூண்டு அருகே சாலையை அடைத்து, 4 சக்கர வாகனங்கள் செல்ல முடியாத படி போலீசாரால் பேரிகார்டு மூலம் தடுப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

    இதனால் அந்த பாதையில் இருசக்கர வாகனங்கள் மட்டும் சென்று வருகின்றன. மேலும் அந்த இடத்தில் சாலையின் மையப்பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் பார்க்கிங் போல காலை முதல் நள்ளிரவு வரையிலும் ஏராளமான இரு சக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    இதனால் திருச்சி, துறையூர், மோகனூர் ரோடு உள்பட பல பகுதிகளில் இருந்து வரும் 4 சக்கர வாகனங்கள், மணிக்கூண்டு அருகே உள்ள பாதை அடைக்கப்பட்டு உள்ளதால் அதன் வழியாக செல்ல முடியாமல் பரமத்தி ரோடு வழியாக சுத்தி செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது. அடைத்து வைக்கப்–பட்டுள்ள அந்த பாதையை திறந்து விட்டால், அதன் வழியாக பூங்கா சாலைக்கு எளிதாக 4 சக்கர வாகனங்க–ளும் சென்று விடலாம்.

    ஆனால் அந்த சாலை அடைத்து வைக்கப்பட்–டுள்ளதால் நீண்ட தூரம் சுற்றி பூங்கா சாலைக்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெருக்கடியும் கடுமையாக நிலவுகிறது.

    அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் ஏராளமானோர் இருசக்கர வாகனங்களை அந்த சாலையின் நடுவிலேயே பல மணி நேரம் நிறுத்தி வைத்து விட்டு செல்கிறார்கள். இதற்கு போலீசார் பாதுகாப்பு கொடுப்பது போல் சாலை அடைத்து வைத்து உள்ளனர்.

    இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கொதிப்படைந்து உள்ள–னர். எனவே முக்கிய சாலையான அந்த சாலையை திறந்து விட்டு 4 சக்கர வாகனங்களும் செல்லுமாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது நாமக்கல் நகர மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பாக உள்ளது.

    • வேலைவாய்ப்பு தொடர்பாக தினந்தோறும் பல்வேறு மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் வருகின்றனர்.
    • தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 10 நாட்களே இருக்கும் நிலையில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    தொழில் நகரமான திருப்பூருக்கு தினந்தோறும் வேலைவாய்ப்பு தொடர்பாக வடமாநிலங்கள் மற்றும் அண்டை மாநிலங்கள், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் வருகின்றனர். இதனால் பஸ் நிலையங்கள், ரெயில்வே நிலையத்தில் எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். மேலும் பனியன் நிறுவனங்களுக்கு பலர் பணிக்கு வந்து செல்வதால் காலை, மாலை மற்றும் வார விடுமுறை நாட்களில் பஸ் நிலைய பகுதியில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவது திருப்பூர் நகரில் சில வருடங்களாக வழக்கமாக உள்ளது.

    இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 10 நாட்களே இருக்கும் நிலையில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பழைய பஸ் நிலையம் தொடங்கி ரெயில்வே நிலையம் வரை வாகனங்கள் வரை நீண்ட வரிசையில் ஆமை வேகத்தில் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கடந்த இரண்டு ஆண்டுக்கு மேலாக பழைய பஸ் நிலையம் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இதனால் பஸ்கள் பஸ் நிலையத்தின் வெளியே பயணிகளை ஏற்றி இறக்கி செல்கின்றன. இதுவே போக்குவரத்து நெருக்கடிக்கு காரணமாகும்.

    இது குறித்து பயணிகள் கூறுகையில், தற்போது பஸ் நிலையத்தில் இறுதி கட்ட பணிகள் (ஆர்ச் அமைப்பு) நடந்து வருவதால் முன்பு போல பஸ் நிலைய வளாகத்தில் பஸ்சை நிறுத்தி பயணிகளை ஏற்ற முடியவில்லை. பல்லடம் சாலையில் இருபுறங்களிலும் கோவை மார்க்கமாக செல்லும் பஸ்கள் நிறுத்தி வைக்கப்படுகின்றன. பல்லடம், அவினாசி, அனுப்பர்பாளையம், புதிய பஸ் நிலையம் வழியாக செல்லும் அனைத்து அரசு பஸ்கள், தனியார் மினி பஸ்கள் சாலையிலேயே நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்க வேண்டியிருப்பதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. பயணிகள் நிற்பதற்கு இடம் இன்றி அவதிப்படுகின்றனர். ரோட்டில் நடந்து செல்பவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். நடைபாதைகளில் திடீர் கடைகள் முளைத்து உள்ளதால் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் நிற்க இடமின்றி அவஸ்தைப்படுகின்றனர்.

    தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ளன. சாதாரண நாட்களிலேயே இரு சக்கர வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு நெருக்கடி இருக்கும் நிலையில், பண்டிகை நாட்களில் எப்படி இருக்கும். இந்த பகுதிகளில் முக்கிய ஜவுளிக்கடைகள், நகைகடைகள் மற்றும் மளிகைகடைகள் அதிகளவில் உள்ளன. தினந்தோறும் மக்கள் வந்து செல்கின்றனர். கூட்ட நெரிசலை பயன்படுத்தி குற்ற சம்பவங்களும் நடக்க வாய்ப்புள்ளது. பஸ் நிலைய பணிகள் இறுதிக்கட்டத்தில் இருந்தாலும் முழுமையாக பணிகள் முடிய இன்னும் சில மாதங்கள் ஆகலாம். ஆகவே பழைய பஸ் நிலையம் பகுதிகளில் போக்குவரத்து நெருக்கடியை சரி செய்வதற்கு போக்குவரத்து போலீசாரும், மாநகராட்சி நிர்வாகமும் உடனடியாக மாற்று நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றனர்.  

    • போக்குவரத்து நெருக்கடியால் சந்தித்துக்கொண்ட இளம்ஜோடி காதலித்து திருமணம் வரை சென்ற ருசிகரமும் பெங்களூருவில் நடந்துள்ளது.
    • 5 ஆண்டுகளை கடந்த நிலையில் காதல் வளர்ந்து திருமணத்தில் முடிந்தது. ஆனால் மேம்பாலம் கட்டும் பணி இன்னும் முடியவில்லை.

    பெங்களூரு:

    தகவல் தொழில்நுட்ப துறையில் முக்கிய இடத்தை பிடிப்பது பெங்களூரு. இங்கு ஏராளமான ஐ.டி. நிறுவனங்கள் உள்ளன. தினமும் அதிகாலை வேளையில் இங்குள்ள நிறுவனங்களுக்கு பணிக்கு வாகனங்களில் செல்வோர் அதிகம். இதுதவிர பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவியர், பிற பணிகளுக்கு செல்வோர் காலை வேளையில் அவசர கதியில் புறப்படுவார்கள். இதனால் பெங்களூரு நகரின் சாலைகள் எப்போதும் பரபரப்புடனே காணப்படும். அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி என்பது தவிர்க்க முடியாததாகி விடுகிறது.

    இவ்வாறு போக்குவரத்து நெருக்கடியால் சந்தித்துக்கொண்ட இளம்ஜோடி காதலித்து திருமணம் வரை சென்ற ருசிகரமும் பெங்களூருவில் நடந்துள்ளது. போக்குவரத்து நெருக்கடியால் உருவான இந்த ருசிகர காதல் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

    ரெடிட் என்னும் ஐ.டி. பணியாளர் இதை பகிர்ந்துள்ளார். பெங்களூரு சோனி வேர்ல்ட் சிக்னல் அருகே தனது காதலியை சந்தித்துள்ளார். முதலில் நண்பர்களாக பழகிய அவர்கள் எஜிபுரா மேம்பால கட்டுமான பணியின்போது போக்குவரத்து நெருக்கடியால் நடந்தே பணிக்கு சென்றனர். அப்போது ஒருவரை ஒருவர் காதலிக்க தொடங்கினர். இருவரும் போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க மாற்று வழியில் பயணத்தை தொடர்ந்தனர். 5 ஆண்டுகளை கடந்த நிலையில் காதல் வளர்ந்து திருமணத்தில் முடிந்தது. ஆனால் மேம்பாலம் கட்டும் பணி இன்னும் முடியவில்லை என்பதை ரெடிட் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

    ட்விட்டரில் இவரது பதிவை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் லைக் மற்றும் ரியாக்ட் செய்துள்ளனர். சமூக ஊடக பயனர்கள் இந்த அழகான காதல் கதையைப் பாராட்டியும், பெங்களூருவில் நெரிசலான போக்குவரத்தில் தங்கள் சொந்த மோசமான அனுபவங்களையும் பகிர்ந்துள்ளார்கள்.

    ஏற்கனவே பெங்களூரு போக்குவரத்து நெருக்கடியை மையமாக வைத்து "சில்க் போர்டு, எ டிராஃபிக் லவ் ஸ்டோரி" என்று அழைக்கப்படும் ஒரு காதல் குறும்படம் வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு பஸ்கள் நெருக்கடியில் நின்றதால் மாணவ, மாணவிகள் பொதுமக்கள் பரிதவிப்பிற்கு ஆளானார்கள்
    • பஸ்ஸை விட்டு இறங்கி நடந்தே அலுவலகங்களுக்கும், பள்ளிக்கும் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் ஒழுகினசேரி பகுதியில் இன்று காலை தனியார் பஸ் ஒன்று நடுவழியில் பழுதாகி நின்றது.

    இதனால் ஒழுகினசேரி பகுதியில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.நெல்லையிலிருந்து நாகர்கோவில் நோக்கி வந்த பஸ்கள் அனைத்தும் நீண்ட வரிசையில் நின்றன. சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு பஸ்கள் நெருக்கடியில் நின்றதால் மாணவ, மாணவிகள் பொதுமக்கள் பரிதவிப்பிற்கு ஆளானார்கள்.

    அதிகாலை நேரம் என்பதால் மாணவர்கள் பள்ளி செல்ல முடியாமல் தவித்தனர். அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களும் தவிப்பிற்கு ஆளானார்கள். பஸ்ஸில் வந்த பெரும்பாலான பயணிகள் பஸ்ஸை விட்டு இறங்கி நடந்தே அலுவலகங்களுக்கும், பள்ளிக்கும் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இருசக்கர வாகன ஓட்டிகளும் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி தவிப்பிற்கு ஆளானார்கள்.

    போக்குவரத்து போலீசார் சம்பவத்திற்கு வந்து போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.பழுதான பஸ் அங்கிருந்து மாற்றப்பட்டது. இதன் பிறகு போக்குவரத்தும் சீரானது.

    ×