search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோட்டார் பகுதியில் சாலையோரத்தில் தோண்டப்பட்ட பள்ளத்தால் கடும் போக்குவரத்து நெருக்கடி
    X

    கோட்டார் பகுதியில் சாலையோரத்தில் தோண்டப்பட்ட பள்ளத்தால் கடும் போக்குவரத்து நெருக்கடி

    • இருவழிச்சாலைகளாக மாற்ற முயற்சி மேற்கொண்டு அதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார்.
    • 10 அடிக்கு மேல் பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநகர பகுதியில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இதை குறைக்கும் வகையில் ஒரு சில சாலைகள் ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் மாநகராட்சி மேயராக மகேஷ் பொறுப்பேற்றதும் பல்வேறு சாலைகளை இருவழிச்சாலைகளாக மாற்ற முயற்சி மேற்கொண்டு அதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார்.

    முதல் கட்டமாக கோட்டார் நாராயண குரு மண்டபத்திலிருந்து சவேரியார் ஆலயம் வரும் சாலை இருவழி பாதையாக மாற்றப்பட்டு உள்ளது. காலை நேரங்களில் இருசக்கர வாகனங்கள், 4 சக்கர வாகனங்கள் அந்த வழியாக இயக்கப்பட்டு வருகின்றன.

    சாலை விசாலமாக காட்சி அளிப்பதால் போக்குவரத்து நெருக்கடி இன்றி வாகனங்கள் சென்று வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோட்டார் டெக்சி ஸ்டாண்ட் பகுதியில் உள்ள நிழற்கூடையின் முன்பகுதியில் குடிநீர் பைப்பில் சரி செய்வதற்காக குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் ஜே.சி.பி. எந்திரம் மூலமாக பள்ளம் தோண்டப்பட்டது.

    10 அடிக்கு மேல் பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இன்று பணிகள் நடைபெறவில்லை. அந்த சாலையோரத்தில் பள்ளம் தோண்டப்பட்டுள்ளதால் போலீசார் அந்த பகுதியில் தடுப்பு வேலிகளை வைத்துள்ளனர். இந்த நிலையில் அந்த பகுதியில் இன்று கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இரு புறங்களில் இருந்தும் வாகனங்கள் வர முடியாமல் சிரமப்பட்டனர்.

    இதையடுத்து இருபுறமும் போக்குவரத்து போலீசார் நிறுத்தப்பட்டு அதை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் அந்த பகுதியில் போக்குவரத்து நெருக்கடி அதிகமாகவே காணப்பட்டது.

    எனவே குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் உடனடியாக அந்த பணியை துரிதமாக முடித்து சாலையில் தோண்டப்பட்டுள்ள பள்ளத்தை மணல் நிரப்பி மூட வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், வாகன ஓட்டி களும் கோரிக்கை வைத்துள்ள னர்.

    இதில் மாநகராட்சி மேயர் மற்றும் அதிகாரிகள் தனி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

    Next Story
    ×