search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tomorrow"

    • நாடார் மகாஜன சங்கம் சார்பில் கல்வி திருவிழா நாளை நடக்கிறது.
    • மண்டல செயலாளர் பி.சேகர்பாண்டியன் தலைமை தாங்குகிறார்.

    மதுரை

    மதுரை நாடார் மகாஜன சங்கம் (என்.எம்.எஸ்.) சார்பில் கல்வித்திருவிழா- 2023 நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. தெற்குவாசல் நாடார் வித்தியா சாலை மேல்நிலைப்பள்ளியில் மாலை 4 மணிக்கு தொடங்கும் இந்த விழாவில் மாணவ-மாணவிகளுக்கு பேச்சுப்போட்டிகள் மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி நடக்கிறது.

    நாடார் மகாஜன சங்க மதுரை மண்டல செயலாளர் பி.சேகர்பாண்டியன் தலைமை தாங்குகிறார். பொதுச் செயலாளர் ஜி.கரிக்கோல்ராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்கிறார். நாடார் மகாஜன சங்க மதுரை மாவட்டத்தலைவர் சரவணன் என்ற சரவ ணபவ, ராஜேஷ்கண்ணன், தெற்கு வாசல் நாடார் வித்தியாபிவிருத்தி சங்க தலைவர் கணபதி, செயலா ளர் மயில்ராஜன், நாடார் வித்தியாசாலை பள்ளிகள் செயலாளர் குணசேகரன், நாடார் மகாஜன சங்க பொருளாளர் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

    பேச்சுப்போட்டியில் வெற்றி பெறும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு மேயர் இந்திராணி, பூமிநாதன் எம்.எல்.ஏ., துணை மேயர் நாகராஜன், முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா, கூடுதல் அரசு வக்கீல் முரளி, மாநகராட்சி தெற்கு மண்டலத்தலைவர் முகேஷ் சர்மா, கவுன்சிலர் அருண்குமார் ஆகியோர் பரிசு வழங்குகிறார்கள்.

    நாடார் வித்தியாசாலை பள்ளிகள் தலைவர் ஆர்.பார்த்திபன் ஏழை மாணவர் களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குகிறார். மதுரை மாவட்ட செயலாளர் சக்திவேல்ராஜ் நன்றி கூறுகிறார்.

    • கலந்–தாய்–வில் இடங்–களை தேர்வு செய்–தி–ருக்–கும் முத–லாம் ஆண்டு மாணவ-மாண–வி–க–ளுக்–கான வகுப்–பு–கள் நாளை (வியா–ழக்–கி–ழமை) தொடங்க உள்–ளன.
    • அரசு கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்புகள் நாளை திறக்கப்பட உள்ளதையொட்டி கல்லூரி வளாகங்கள் சீரமைக்கப்பட்டு, வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.

    சேலம்:

    தமிழ்–நாட்–டில் உள்ள 164 அரசு கலை மற்–றும் அறி–வி–யல் கல்–லூ–ரி–களில் உள்ள பல்–வேறு பாடப்–பி–ரி–வு–களில் சேரு–வ–தற்–கான மாண–வர் சேர்க்கை கலந்–தாய்–வுக்கு விண்–ணப்–பிக்க அறி–வு–றுத்–தப்–பட்–டது. அதன்–படி, 164 கல்–லூ–ரி–களில் பல்–வேறு பாடப்–பி–ரி–வு–களில் இருக்–கும் 1 லட்–சத்து 7 ஆயி–ரத்து 299 இடங்–க–ளுக்கு 2 லட்–சத்து 46 ஆயி–ரத்து 295 பேர் விண்–ணப்–பங்–கள் பெறப்–பட்டு இருந்–தன.

    விண்–ணப்–பித்–த–வர்–க–ளுக்–கான தர–வ–ரிசை பட்–டி–யல் கடந்த மாதம் (மே) 25-ந் தேதி வெளி–யி–டப்–பட்–டது. அத–னைத் தொடர்ந்து முதல்–கட்ட கலந்–தாய்வு கடந்த 1-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை நடந்து முடிந்–தது.

    முதல்–கட்ட கலந்–தாய்வு நிறைவு பெற்ற நிலை–யில், ஒரு நாள் இடை–வெ–ளிக்கு பிறகு, கடந்த 12-ந் தேதி முதல் 20-ந் தேதி (நேற்று) வரை 2-ம் கட்ட கலந்–தாய்வு நடத்தி முடிக்–கப்–பட்டு இருக்–கிறது.

    முத–லாம் ஆண்டு வகுப்–பு–கள்

    அந்த வகை–யில் 164 அரசு கலை மற்–றும் அறி–வி–யல் கல்–லூ–ரி–களில் சேரு–வ–தற்கு நடத்–தப்–பட்ட இந்த 2 கட்ட கலந்–தாய்வு முடி–வில், 31 ஆயி–ரத்து 621 மாண–வர்–கள், 44 ஆயி–ரத்து 190 மாண–வி–கள் என மொத்–தம் 75 ஆயி–ரத்து 811 பேர் இடங்–களை தேர்வு செய்து இருக்–கின்–ற–னர். இவர்–களில் அரசு பள்ளி மாண–வி–கள் 21 ஆயி–ரம் பேர் வரு–கின்–ற–னர். அவர்–க–ளுக்கு அர–சின் புது–மைப் பெண் திட்–டத்–தின் கீழ் ஒவ்–வொரு மாத–மும் ரூ.1,000 நிதி–யு–தவி கிடைக்–கும்.

    மொத்–தம் உள்ள 1 லட்–சத்து 7 ஆயி–ரத்து 299 இடங்–களில், 75 ஆயி–ரத்து 811 இடங்–கள் நிரம்–பி–யுள்ள நிலை–யில், மீத–முள்ள இடங்–கள் நிரம்–பும் வரை கலந்–தாய்வு நடத்–தப்–படும் என கல்–லூரி கல்வி இயக்–க–கம் அறி–வித்–துள்–ளது.

    இந்த நிலை–யில் கலந்–தாய்–வில் இடங்–களை தேர்வு செய்–தி–ருக்–கும் முத–லாம் ஆண்டு மாணவ-மாண–வி–க–ளுக்–கான வகுப்–பு–கள் நாளை (வியா–ழக்–கி–ழமை) தொடங்க உள்–ளன.

    சேலம் கருப்பூரில் உள்ள அரசு பெரியார் பல்கலைக் கழகத்தின் மேற்பார்வையில் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 22 அரசு கல்லூரிகள், 4 அரசு உதவி பெறும் கல்லூரிகள், 91 சுயநிதி கல்லூரிகள் என மொத்தம் 117 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்படுகின்றன. இதில் அரசு கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்புகள் நாளை திறக்கப்பட உள்ளதையொட்டி கல்லூரி வளாகங்கள் சீரமைக்கப்பட்டு, வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கான முன்னேற்பாடுகளை கல்லூரி முதல்வர்கள் செய்து வருகிறார்கள்.

    • ராமநாதபுரம், ரெகுநாதபுரம், பெரியபட்டிணம் பகுதியில் நாளை மின்தடை ஏற்படும்.
    • ஆர். எஸ்.மடை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மின்சார உதவி செயற்பொறியாளர் (நகர்) பாலமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    ஆர். எஸ்.மடை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடை பெறுவதால் சக்கரக்கோட்டை, சின்னக்கடை, புலிக்கா ரத்தெரு, பழைய மற்றும் புதிய பேருந்து நிலையம், கேணிக்கரை சுற்றியுள்ள பகுதிகள், தாயுமான சாமி கோவில் தெரு, வண்டிக்காரத்தெரு, தங்கப்பா நகர், அண்ணா நகர், அரசு மருத்துவமனை, அரண் மனை, வடக்கு தெரு, நீலகண்டி ஊரணி சுற்றியுள்ள பகுதிகள், முதுநாள் ரோடு, சூரன்கோட்டை, இடையார்வலசை, சிவன்கோவில் மறறும் அதனை சுற்றியுள்ள பகுதிகள், சாலை தெரு, சர்ச், மார்க்கெட், யானைக்கள் விதி, கே. கே. நகர், பெரியகருப்பன் நகர், கோட்டை மேடு சிங்காரதோப்பு, பெரியார் நகர், லாந்தை, அச்சுந்தன் வயல், நொச்சிஊரணி, பயோனீயர் சுற்று பகுதிகள், கோட்டை மேடு, எட்டிவயல் மற்றும் ரெகுநாதபுரம் தெற்கு காட்டூர் தெற்குவாணிவீதி படைவெட்டிவலசை, பூசாரி வலசை, ராமன்வ லசை, கும்பரம், இருட்டூ ரணி, வெள்ளரி ஓடை, சேதுநகர், காரான், முத்துப்பேட்டை, பெரிய பட்டிணம், தினைக்குளம், வள்ளி மாடன்வலசை, வண்ணாண்குண்டு, பத்ராதரவை, நயினா மரைக்கான், சேது நகர், பிச்சாவலசை, வள்ளி மாடன்வலசை உத்தரவை, தாதனேந்தல் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 5 மணி வரை மின்தடை ஏற்படும்.

    இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    • அதனை தொடர்ந்து 15 ஆம் தேதி காலை திருவிழா திருப்பலி நிறைவேற்றப்படும் .
    • அதேபோல பூண்டி மாதா பேராலயமும் அதிநவீன விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கிறது.

    பூதலூர்:

    திருக்காட்டுப்பள்ளி அருகே அமைந்துள்ள பூலோகம் போற்றும் பூண்டி மாதா பேராலயத்திபூண்டி மாதா பேராலயத்தின் ஆண்டு திருவிழா கடந்த 6ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    திருவிழா தொடக்கமான கொடியேற்று நிகழ்ச்சியில் அந்தமான் போர்ட் பிளேயர் மறை மாவட்ட பிஷப் விசுவாசம் செல்வராஜ் கலந்துகொண்டு கொடியேற்றி திருப்பலி நிறைவேற்றி பூண்டி மாதா பேராலயத்தில் ஆண்டு திருவிழாவை தொடங்கி வைத்தார்.

    நவநாட்கள் எனப்படும் திருவிழா நாட்களில் தினமும் மாலை சிறு சப்பர பவனியும் பல்வேறு அருட்தந்தையர்களால் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது.

    திருவிழாவில் ஏழாவது நாளான இன்று மாலை மரியா-பாவிகளின் அடைக்கலம் என்ற பொருளில் கோயம்புத்தூர் மதுரை மாவட்ட முதன்மை ஜான் ஜோசப் ஸ்டெனிஸ் திருப்பலி நிறைவேற்றுகிறார்.

    விழாவின் 8வது நாளான நாளை மாலை மரியா -மன்னிப்பின் சிகரம் என்ற பொருளில் செங்கல்பட்டு மறை மாவட்ட முதன்மை குரு ஜான்போஸ்கோ திருப்பலி நிறைவேற்றுகிறார்.

    பூலோகம் போற்றும் பூண்டி மாதாவின் திருவிழா நாளான நாளை மறுநாள் 14 ஆம் தேதி காலை பூண்டி மாதா பேராலயத்தில் அருட்தந்தையர்களாக பணியாற்றி மறைந்த லூர்து சேவியர் மற்றும் ராயப்பர் அடிகளார் நினைவு திருப்பலி நிறைவேற்ற ப்படுகிறது.

    மாலை 6 மணிக்கு கும்பகோணம் மறை மாவட்ட பிஷப் அந்தோணிசாமி மரியா -அருளின் ஊற்று என்ற தலைப்பில் திருப்பலி நிறைவேற்றுகிறார்.

    இதில் பூண்டி மாதா பேராலய அதிபர் சாம்சன்,துணை அதிபர் ரூபன் அந்தோணி ராஜ், தியான மைய இயக்குனர் ஆல்பர்ட் சேவியர், உதவி பங்கு தந்தையர் தாமஸ், அன்புராஜ் ,ஆன்மீக தந்தை அருளானந்தம் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

    இரவு 9.30மணி அளவில் மல்லிகை மலர்களாலும், அதிநவீன மின் விளக்கு அலங்காரத்தில் பூண்டி மாதாவின் தேர்பவனியை கும்பகோணம் பிஷப் அந்தோணிசாமி அடிகளார் தொடங்கி வைக்கிறார்.

    அப்போது சிறப்பு வாணவே டிக்கை நடைபெறும் .

    அதனை தொடர்ந்து 15 ஆம் தேதி காலை திருவிழா திருப்பலி நிறைவேற்றப்படும் .அன்று மாலை கொடி இறக்கத்துடன் பூண்டி மாதா பேராலயத்தின் ஆண்டு திருவிழா நிறைவு பெறும் .

    பூண்டி மாதா பேராலய ஆண்டு திருவிழாவை முன்னிட்டு பேராலய வளாகம் முழுவதும் வண்ண விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

    அதேபோல பூண்டி மாதா பேராலயமும் அதிநவீன விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கிறது.

    அலங்கார தேர்ப்பவனி காண்பதற்காக நாடெங்கிலும் இருந்த பக்தர்கள் பூண்டி மாதா பேராலயத்திற்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் விரிவான ஏற்பாடுகளை பூண்டி மாதா பேராலய நிர்வாகம் செய்து வருகிறது.

    • நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்.
    • மேற்கண்ட தகவலை மதுரை அரசரடி மின்பகிர்மான செயற்பொறியாளர் பழனி தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை அரசரடி துணைமின் நிலையம் பொன்னகரம் பீடரில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக நாளை (9-ந் தேதி) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை ஏ.ஏ. மெயின்ரோடு, மேலபொன்னகரம் 2 முதல் 8-வது தெரு வரை, ஆர்.வி.நகர் 1 முதல் 4 தெருக்கள், ஞானஒளிவுபுரம், விசுவாசபுரி 1-5 தெருக்கள், ஆரப்பாளையம் பஸ் நிலையம், ஆரப்பாளையம் அதை சுற்றியுள்ள பகுதிகள், இ.எஸ்.ஐ.மருத்துவமனை, கைலாசபுரம், அசோக் நகர், அருள்தாஸ்புரம், களத்து பொட்டல், பெரியசாமிகோனார் தெரு, தத்தனேரி மெயின் ரோடு முதல் தத்தனேரி மயானம் வரை, பாரதிநகர், கணேசபுரம், பாக்கியநாதபுரம் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    மேற்கண்ட தகவலை மதுரை அரசரடி மின்பகிர்மான செயற்பொறியாளர் பழனி தெரிவித்துள்ளார்.

    • மதுரையில் நாளை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
    • இந்த தகவலை மதுரை தெற்கு கோட்ட மின்பகிர்மான செயற்பொறியாளர் மோகன் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை பசுமலை துணை மின்நிலையம் மீனாட்சி மில் உயரழுத்த மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

    இதன் காரணமாக நாளை (16-ந் தேதி) காலை 10 மணி முதல் 2 மணி வரை மாடக்குளம் மெயின்ரோடு, கந்தன்சேர்வை நகர், தேவி நகர், கிருஷ்ணா நகர், சபரி நகர், நமச்சிவாய நகர், ஐஸ்வர்யா நகர், சொரூப், பெரியார் நகர், மல்லிகை கார்டன், அய்யனார் கோவில், சத்திய மூர்த்தி நகர், அருள் நகர் அவர் லேடி பள்ளி, காயத்திரி தெரு, பிரித்தம் தெரு, உதயா டவர், துரைச்சாமி நகர் பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    மேற்கண்ட தகவலை மதுரை மேற்கு கோட்ட மின்பகிர்மான செயற்பொறியாளர் பழனி தெரிவித்துள்ளார்.

    திருப்பாலை துணைமின் நிலையம் நாராயணாபுரம் பீடரில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக நாளை (16-ந் தேதி) காலை 10 மணி முதல் 2 மணி வரை கண்ணனேந்தல், மகாலட்சுமி நகர், சந்தானம் நகர், பரசுராம்பட்டி, ஆத்திகுளம், பேங்க்காலனி, நாராயணபுரம், நாகனாகுளம், அங்கயற்கண்ணி காலனி.

    ஐலாண்டு நகர்,எம்.எம்.எஸ்.எஸ். காலனி, பாரத் நகர், கிருஷ்ணா நகர், கோபாலபுரம், திலக் நகர், அய்யர்பங்களா, ஸ்ரீநகர், சக்தி நகர், சென்ட்ரல் எக்ஸைஸ் காலனி, அய்யாவு தேவர் நகர், எழில் நகர், திருப்பாலை மெயின் ரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று மதுரை வடக்கு கோட்ட மின்பகிர்மான செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    மதுரை எல்லீஸ் நகர், துணைமின் நிலையம் டி.பி.ரோடு பீடரிலும், அண்ணா பஸ் நிலைய துணைமின் நிலையம், முனிச்சாலை பீடரிலும் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

    இதன் காரணமாக நாளை (16-ந் தேதி) காலை 10 மணி முதல் 2 மணி வரை ரெயில்வே காலனி, சர்வோதயா அனைத்து தெருக்கள், அன்சாரி நகர் அனைத்து தெருக்கள், வைத்தியநாத புரம், டி.பி. ரோடு, சித்தாலாட்சி நகர், ஹேப்பி ஹோம் 1 மற்றும் 2-வது தெருக்கள், எஸ்.டி.சி. ரோடு.

    இஸ்மாயில்புரம் 1-வது தெரு முதல் 19 தெரு வரை, கரிம்சா பள்ளிவாசல் 1-வது தெரு முதல் 5-வது தெரு வரை, முமின் பேட்டை, அருணாச்சலபுரம் 1-வது தெரு முதல் 5 வரை, ஓலை பட்டினம் 1 மற்றும் 2-வது தெருக்கள், பூந்தோட்டம் தெரு, அசன்தீன் சாய்பு சந்து, ருக்மணி பாளையம் சந்து, லட்சுமிபுரம் 8-வது மற்றும் 9-வது தெருக்கள்.

    முனிச்சாலை ரோடு, கீழ வெளி வீதியின் ஒரு பகுதி, தென்கரை ரோட்டின் ஒரு பகுதி, ஓபுளா படித்துறை, காயிதே மில்லத்தெரு, நெல்பேட்டை, சுங்கம் பள்ளிவாசல் தெருக்கள், ஜெகஜீவன்ராம் தெரு, ஆர்.ஆர்.மண்டபம், சேவாலயம், செனாய் நகர் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    மேற்கண்ட தகவலை மதுரை தெற்கு கோட்ட மின்பகிர்மான செயற்பொறியாளர் மோகன் தெரிவித்துள்ளார்.

    • அம்மாபேட்டை பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
    • அம்மாபேட்டை பகுதியில் நாளை மின் விநியோகம் இருக்காது என கோபி மின்பகிர்மான வட்ட பவானி கோட்ட செயற்பொறியாளர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

    அம்மாப்பேட்டை:

    கோபி மின்பகிர்மான வட்டம் பவானி கோட்டம் கோனேரிப்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது.

    இதையொட்டி நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அம்மாப்பேட்டை, நெரிஞ்சிப்பேட்டை, சிங்கம்பேட்டை,சித்தார்,சின்னப்பள்ள ம்,ஆனந்தம்பாளையம் குட்டமுனியப்பன்கோயில்,கேசரிமகலம்,காடப்பநல்லூர், கல்பாவி,பூதப்பாடி,எஸ்.பி.கவுண்டனூர்,குறிச்சி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என கோபி மின்பகிர்மான வட்ட பவானி கோட்ட செயற்பொறியாளர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

    புதுவிளாங்குடியில் நாளை மின் தடை ஏற்படுகிறது.
    மதுரை

    மதுரை மேற்கு  கோட்ட மின்வாரிய  செயற்பொறியாளர் பழனி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஆனையூர் துணை மின் நிலையம் சாந்திநகர் உயர் அழுத்த மின் பாதையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள இருப்பதால் நாளை(4-ந்தேதி) காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும். பாலமேடு மெயின் ரோடு,சொக்கலிங்க நகர் 1-வது தெரு முதல் 7-வது தெரு வரை, பெரியார் நகர், அசோக் நகர்,புது விளாங்குடி, கூடல் நகர், சொக்கநாதபுரம்,ராஜ் நகர்,பாத்திமா கல்லூரி எதிர்புறம், பழைய விளாங்குடி, சக்தி நகர்,துளசி வீதி,திண்டுக்கல் மெயின் ரோடு,விஸ்தாரா குடியிருப்பு,பரவை சந்தை, பாண்டியன் தியேட்டர்,வருமான வரி காலனி,டெய்சி காலனி,வைகை தெரு, கணபதி நகர் ஆகிய இடங்களில் மின்விநியோகம் இருக்காது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    கீழப்பாவூரில் நாளை தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது என தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் அறிக்கையில் கூறியுள்ளார்.
    வீ. கே. புதூர்:

    தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன்  வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் சண்முகையா தலைமையில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணி அளவில் கீழப்பாவூரில் சுரண்டை மெயின் ரோட்டில் அமைந்துள்ள எஸ்.கே.டி. திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.

     இதில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி முன்னாள் முதல்வர் கலைஞர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம் குறித்து ஆலோசிக்கப்பட  உள்ளது. கூட்டத்தில் தி.மு.க.   நிர்வாகிகள், முன்னாள் இந்நாள் எம்.பி, எம்.எல்.ஏக்கள், சார்பு அணி நிர்வாகிகள்,மாவட்ட பிரதிநிதிகள், தொண்டர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    சேலத்தில், நாளை 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு சமூக அறிவியல் பாடம் தேர்வு நடைபெறும்.
    சேலம்:

    தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு கடந்த 6-ந்தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்கியது.  சேலம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள  182    மையங்களிலும், நாமக்கல் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 80-க்கும் மேற்பட்ட  மையங்களிலும் தேர்வு நடைபெற்று வருகின்றன.

    அரசு பள்ளிகள், அரசு உதவிப்பெறும் பள்ளிகள், தனியார் சுயநிதிப்பள்ளிகளை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவ- மாணவிகள் உற்சாகமாக தேர்வுகள் எழுதி வருகின்றனர். 

    சமூக அறிவியல் தேர்வு இதனைதொடர்ந்து  நாளை (30-ந்தேதி) சமூக அறிவியல் பாடத்திற்கான தேர்வு நடைபெறுகிறது.  மாணவ- மாணவிகள் சமூக அறிவியல் பாடத்தை  படிக்கும் விதமாக  கடந்த 27-ந்தேதி முதல்  இன்று வரை  விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

    நாளை நடைபெற உள்ள சமூக அறிவியல் பாடத்துடன் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு நிறைவடைகின்றன.
    நாளை மறுநாள் பிளஸ்-2 தொழில் பாடம் தேர்வு (28-ந்தேதி) நடக்கிறது.
    சேலம்:

    தமிழகம் முழுவதும்  கடந்த (5-ந்தேதி) வியாழக்கிழமை  பிளஸ்-2 பொதுத்–தேர்வு  தொடங்கியது.  இந்த தேர்வு சேலம்  மாவட்டத்தில் 154 மையங்களிலும், நாமக்கல் மாவட்டத்தில் 82 மையங்களிலும்  நடைபெற்று வருகின்றன. 

    கடந்த 23-ந்தேதி (திங்கட்கிழமை)  உயிரியல், தாவரவியல், வரலாறு,  வணிக கணிதம் மற்றும் புள்ளி விபரங்கள், அடிப்படை எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங், அடிப்படை எலக்ட்ராணிக்ஸ் என்ஜினீயரிங்,  அடிப்படை சிவில் என்ஜினீயரிங், அடிப்படை ஆட்டோ மொபைல் என்ஜினீயரிங், அடிப்படை மெக்கானிக்கல் என்ஜினீயரிங்,  டெக்ஸ்டைல்  டெக்னாலஜி, அலுவலக நிர்வாகம் மற்றும் செயலக பதவி உள்ளிட்ட 11 பாடங்களுக்கு தேர்வு நடைபெற்றன.

    இதனால்   12-ம் வகுப்பு ெதாழில் பாட பிரிவை தவிர மற்ற அனைத்து பிரிவுகளுக்கும் அன்றைய தேதியில்  தேர்வு முடிவடைந்து விட்டது .  இதனால் 12-ம்  வகுப்பு  மாணவ- மாணவிகள் 23-ந்தேதி அன்று மகிழ்ச்சியுடன் ஒருவருக்ெகாருவர் வாழ்த்து  ெதரிவித்தபடி வீட்டுக்கு புறப்பட்டு சென்றனர்.

    இதனை தொடர்ந்து நாளை மறுநாள் (28-ந்தேதி) பிளஸ்-2  தொழில் பாட பிரிவுக்கு தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வுடன் பிளஸ்-2 பொதுத் தேர்வு நிறைவடைகிறது.
    சேலம், நாமக்கல்லில் சி.பி.எஸ்.இ.10-ம் வகுப்பு பொது தேர்வு நாளையுடன் முடிவடைகிறது.
    சேலம்:

    இந்திய அரசு கல்வித்துறையின் கீழ் செயல்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சி.பி.எஸ்.இ) அனுமதி பெற்று சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் ஏராளமான தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் இயங்கி வருகின்றன.  

    இதில் ஏராளமான மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் சி.பி.எஸ்.இ.    10-ம் வகுப்பு  மாணவ- மாணவிகளுக்கு  பகுதி-2 பொதுத்தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் 26-ந்தேதி தொடங்கியது. தொடர்ந்து, இன்று   (திங்கட்கிழமை) கம்ப்யூட்டர் அப்ளிகேசன் பாடத்திற்கான  தேர்வு நடைபெற்றது. 

    இந்த தேர்வு காலை 10.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெற்றது. இதனை தொடர்ந்து 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு  நாளை (24-ந்தேதி) தகவல்  தொழில்நுட்பம் பாடத் தேர்வுடன் முடிவடைகிறது.

    இந்த தேர்வு காலை 10.30 மணிக்கு தொடங்கி  11.30 மணி அளவில் நிறைவடைகிறது.
    ×