search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TN Police"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 19 ஆர்டலிகள் திரும்ப பெறப்பட்டுள்ளனர் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
    • முதல்வரின் எச்சரிக்கை மட்டும் போதாது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி கருத்து

    சென்னை:

    தமிழகத்தில் பணியில் உள்ள மற்றும் ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரிகளின் வீடுகளில் ஆர்டர்லியாகப் பணியாற்றும் போலீசாரை உடனே திரும்ப பெற வேண்டும் என உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டிருந்தார். மேலும், ஆர்டலி தொடர்பாக ஏதாவது புகார் வந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நன்னடத்தை விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும், என தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தார்.

    அதன்படி இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆர்டலி முறையை ஒழிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுத்துவருவதாகவும், 19 ஆர்டலிகள் திரும்ப பெறப்பட்டுள்ளனர் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து, ஆர்டலி முறை ஒழிப்பு தொடர்பாக தமிழ்நாடு உள்துறை முதன்மை செயலாளர் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்த எடுத்த நடவடிக்கை என்ன? என கேள்வி எழுப்பிய நீதிபதி, இது தொடர்பாக ஆகஸ்ட் 18ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி டிஜிபிக்கு உத்தரவு பிறப்பித்தார்.

    ஆர்டலி விவகாரத்தில் முதல்வரின் எச்சரிக்கை மட்டும் போதாது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 75வது சுதந்திர தினம் கொண்டாடும் நிலையில் ஆங்கிலேயே ஆர்டலி முறையை பின்பற்றுவது வெட்கக்கேடானது. ஆர்டலி ஒழிப்பு முறையை பின்பற்றாவிட்டால் சம்பந்தப்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உள்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிட நேரிடும், என்றும் நீதிபதி எச்சரித்தார்.

    • தமிழகத்தில் அடுத்தடுத்து லாக்கப் மரணங்கள் நடக்கின்றன என மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டினார்.
    • அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் ஒவ்வொரு மாதமும் வெளியிடுவோம் என்றார் அண்ணாமலை.

    சென்னை:

    தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    தி.மு.க. அமைச்சர்கள் பா.ஜ.க. தொண்டர்களை பற்றி கூறும் பேச்சுகளை சிறந்த நகைச்சுவை படமாக மக்கள் பார்த்து ரசிப்பார்கள்.

    அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் ஒவ்வொரு மாதமும் வெளியிடுவோம். ஆவினில் ஊழல் குறித்து நான் சொன்னதும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் ஊழல் இல்லை என விளக்கம் கொடுத்தார். அப்படியிருக்கையில் எதற்காக சுகாதார செயலரை மாற்றியுள்ளார்?

    தி.மு.க. ஆட்சிக்கு வந்தபிறகு 7 லாக்கப் மரணங்களைத் தாண்டிவிட்டது. சாத்தான்குளம் விவகாரத்தில் காவல்துறை செய்திருப்பது மிகவும் தவறானது.

    அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் உள்ளிட்டோர் அதனை அரசியல் நிகழ்ச்சியாக மாற்றினர். ஆனால், இப்போது தி.மு.க. ஆட்சியில் அடுத்தடுத்து லாக்கப் மரணங்கள், கூட்டு பலாத்காரம், சாலையில் வெட்டுவது போன்ற செயல்கள் நடப்பது அரசின் செயலின்மையை காட்டுகிறது.

    தமிழக போலீஸ் ஒரு பல் பிடுங்கப்பட்ட பாம்பாக உள்ளது. இதில் தி.மு.க.வின் அரசியல் தலையீடுதான் முதலில் சரிசெய்யப்பட வேண்டியது என தெரிவித்துள்ளார்.

    • கோவை மாநகர காவல் ஆணையராக பாலகிருஷ்ணன், நெல்லை மாநகர காவல் ஆணையராக அவினாஷ் குமார் நியமனம்
    • சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக மகேஷ்வரி நியமிக்கப்பட்டுள்ளார்.

    சென்னை:

    தமிழ்நாடு முழுவதும் 44 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஐ.பி.எஸ். அதிகாரிகள் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் இருந்து மாற்றப்பட்டுள்ளனர்.

    புதிதாக உருவாக்கப்பட்ட தாம்பரம் காவல் ஆணையர் பதவியில் இருந்த ரவி கடந்த 31ம் தேதி பணி ஓய்வு பெறறார். அந்த பதவி காலியாக உள்ளது. ஆவடி ஆணையர் அந்த பதவியை கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்த நிலையில், தற்போது, தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் இயக்குனராக இருந்த அமல்ராஜ் தாம்பரம் காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தாம்பரம் இரண்டாவது காவல் ஆணையராக பதவியேற்கிறார்.

    இதேபோல் அண்மையில் பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி, காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட சென்னை தெற்கு மண்டல கூடுதல் ஆணையராக இருந்த கண்ணன் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார். ஆயுதப்படையின் ஐஜியாக அவர் செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் தேன்மொழி வடக்கு மண்டல ஐஜியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக மகேஷ்வரி நியமிக்கப்பட்டுள்ளார்.

    கோவை மாநகர காவல் ஆணையராக பாலகிருஷ்ணன், நெல்லை மாநகர காவல் ஆணையராக அவினாஷ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    சென்னை அண்ணாநகர், கீழ்ப்பாக்கம், வண்ணாரப்பேட்டை காவல் மாவட்டங்களிலும் துணை ஆணையர்கள் மாற்றப்பட்டுள்ளனர். புததாக உருவாக்கப்பட்ட சைபர் கிரைம் செல் போன்ற பதவிகளுக்கும் கண்காணிப்பாளர்கள் நிமியக்கப்பட்டுள்ளனர்.

    காவலர்கள் தங்கள் உடல் நலனைப் பேணிக் காத்திட ஏதுவாகவும், தங்களது குடும்பத்தாருடன் போதிய நேரம் செலவிடுவதற்காகவும் வாரத்தில் ஒரு நாள் ஓய்வு வழங்கப்படுகிறது.
    சென்னை:

    தமிழகத்தில் காவலர்கள் விடுமுறை இல்லாமல் 24 மணி நேரமும் தொடர்ந்து பணியில் இருப்பதால் அவர்களுக்கு கடும் மன அழுத்தம் ஏற்படுகிறது. பலர் மன அழுத்தத்தில் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இதனால் வாரத்தில் ஒரு நாள் விடுமுறை வழங்க வேண்டும் என்று காவலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    அவர்களின் நீண்டநாள் கோரிக்கையை அரசு நிறைவேற்றியிருக்கிறது. வாரத்தில் ஒரு நாள் விடுமுறை வழங்கப்படும் என அரசு அறிவித்தது. இதற்கான அரசாணை இன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    மு.க.ஸ்டாலின்

    இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-

    தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் 13-9-2021 அன்று நடைபெற்ற காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், காவலர்கள் தங்கள் உடல் நலனைப் பேணிக் காத்திட ஏதுவாகவும், தங்கள் குடும்பத்தாருடன் போதிய நேரம் செலவிடுவதற்காகவும், இரண்டாம் நிலை காவலர்கள் முதல் தலைமைக் காவலர்கள் வரையிலான காவலர் அனைவருக்கும் வாரத்தில் ஒரு நாள் ஓய்வு வழங்கப்படும் என அறிவித்தார்.

    இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக, காவலர்கள் தங்கள் உடல் நலனைப் பேணிக் காத்திட ஏதுவாகவும், தங்களது குடும்பத்தாருடன் போதிய நேரம் செலவிடுவதற்காகவும், இரண்டாம் நிலை காவலர் முதல் தலைமைக் காவலர் வரையிலான காவலர்  அனைவருக்கும் வாரத்தில் ஒருநாள் ஓய்வு வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று உத்தரவிட்டுள்ளார். அதற்கான அரசாணை இன்றைய தினம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    காவலர்களின் நலனை கருத்தில் கொண்டு, முதலமைச்சர் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு, காவல் பணியில் இடையறாது ஈடுபட்டு சவாலான பணிகளை எதிர்கொள்ளும் காவலர்களுக்கு அருமருந்தாக விளங்குவதோடு, புத்துணர்ச்சியோடும் உற்சாகத்தோடு தங்கள் பணியினை அவர்கள் மேற்கொள்ள வழிவகுக்கும். 

    இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    காவல்துறையை நவீன மயமாக்கும் திட்டத்தின் கீழ் 10 ஆயிரம் லத்திகள், 26 ஆயிரம் விசில்கள் வாங்கப்படுகின்றன. ஒரு லத்தி ரூ.165 விலையில் வாங்க நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. #TNPoliceDepartment
    சென்னை:

    தமிழக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடும்போது லத்திகள் பயன்படுத்துகிறார்கள். இதேபோல் விசிலும் பயன்படுத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் லத்திகள், விசில்கள் பழையதாகி விட்டன. இதையடுத்து போலீசாருக்கு புதிதாக லத்திகள், விசில்கள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    காவல்துறையை நவீன மயமாக்கும் திட்டத்தின் கீழ் 10 ஆயிரம் லத்திகள், 26 ஆயிரம் விசில்கள் வாங்கப்படுகின்றன.

    ஒரு லத்தி ரூ.165 விலையில் வாங்க நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ரூ.17 லட்சம் செலவில் 10 ஆயிரத்து 326 லத்திகள் வாங்கப்படுகிறது.



    இதேபோல் ரூ.13 லட்சம் செலவில் 26 ஆயிரத்து 196 விசில்கள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    புதிய லத்திகள், விசில்கள் அனைத்தும் சட்டம்- ஒழுங்கு மற்றும் குற்றப் பிரிவு போலீசாருக்கு வழங்கப்படுகிறது.

    இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    புதிதாக வாங்கப்படும் லத்தி மற்றும் விசில்கள் மாநிலம் முழுவதும் உள்ள போலீசாருக்கு ஜூலை மாதம் முதல் வழங்கப்படும்.

    பொதுவாக பணியின்போது விசில்கள் பயன்படுத்துவது இல்லை. செல்போன்கள் வந்த பிறகு விசில் பயன்பாடு குறைந்து விட்டது. செல்போன் மூலம் சக போலீசாரை விரைவில் தொடர்பு கொண்டு வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #TNPoliceDepartment
    காவேரிப்பட்டணம் அடுத்த பையூரில் கிராம விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
    காவேரிப்பட்டணம்:

    காவேரிப்பட்டணம் அடுத்த பையூரில் கிராம விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. காவேரிப்பட்டணம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சுப்பரமணியன் காவல் துறையில் புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள "காவலன் ஆப்ஸ்" செயலி குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த விழிப்புணர்வு கூட்டம் நடத்தினார்.

    விழிப்புணர்வு கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

    தமிழக காவல்துறையில் "காவலன் ஆப்ஸ்"எனும் செயலி தற்போது புதியதாக உருவாக்கப்பட்டுள்ளது. ஆபத்து வரும் போது அதை தொட்டால் 20 நிமிடத்தில் சென்னை காவல் துறைக்கு தகவல் செல்லும்.  பின்பு எந்த பகுதியில் இருந்து சமிக்கை வந்துள்ளது என்பதை ஜி.பி.ஆர்.எஸ். மூலம் கண்டறிந்து, அந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் அளிப்பார்கள்.  உடனே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பாதுகாப்பு அளிப்பார்கள். காலத்துக்கு ஏற்ப பெண்கள் இதை பயன்படுத்தி தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இச்செயலி செயல்பட செல்போனில் முக்கிய இன்டர்நெட் கனெக்க்ஷன் தேவை. மேலும் கிராமங்களில் ஏதேனும் புதிய நபர்கள் வந்தாலோ, சந்தேகப்படும் நபர்கள் சுற்றித்திரிந்தாலோ இதுகுறித்து பொதுமக்களே  விசாரித்து, அவர்கள் கூறும் பதில் மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தினால் உடனடியாக அருகிலுள்ளகாவல் நிலையத்திற்கு தகவல் அளித்து உதவ வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அப்போது பையூரில் பேருந்துகள் சரியாக நின்று செல்வதில்லை.  இதுகுறித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பையூர் பொதுமக்கள் காவல்துறையினரிடம் முறையிட்டனர். இக்கூட்டத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜயசங்கர், காயத்ரி, ஜெயபால் மற்றும் ஊர் பொதுமக்கள், இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கலந்து கொண்ட பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா நீதிமன்றம் மற்றும் போலீசார் பற்றி அவதூறாக பேசிய நிலையில், நடிகர் சித்தார்த் எச்.ராஜாவை தாக்கி கருத்து பதிவிட்டுள்ளார். #HRaja #Siddharth
    புதுக்கோட்டை மாவட்டம் மெய்யபுரத்தில் நேற்று நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கலந்து கொண்ட பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, சென்னை உயர் நீதிமன்றம் குறித்து அவர் கீழ்தரமாக பேசிய வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகின்றது.

    இதுகுறித்து பதில் அளித்த எச்.ராஜா, தான் நீதிமன்றம் குறித்து தவறாக பேசவில்லை என்றும், பொய்யான தகவல் பரப்பப்பட்டு வருவதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.

    இந்த விவகாரம் குறித்து எச்.ராஜாவை தாக்கி சமூக வலைதளத்தில் கருத்து பதிவு செய்துள்ள நடிகர் சித்தார்த் கூறியிருப்பதாவது,

    ` போராட்டக்காரர்களை சுட்டுக் கொன்ற தமிழக போலீசார், நீதிமன்றம், போலீஸ் மற்றும் சிறுபான்மையினர் பற்றி அவதூறாக பேசிய எச்.ராஜாவின் பேச்சைக் கேட்டு வாயை மூடி நிற்கின்றனர். இந்த இந்துத்துவா பயங்கரவாதி எச்.ராஜா சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க பார்க்கிறார். இது வெட்கக்கேடானது ' என்று குறிப்பிட்டுள்ளார்.

    இதற்கிடையே உயர்நீதிமன்றம் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக, எச். ராஜா உள்பட 8 பேர் மீது திருமயம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். எச்.ராஜா உள்பட 8 பேரை கைது செய்வதற்காக இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. #HRaja #Siddharth

    மோட்டார் பைக்கில் செல்லும் இருவரும் ஹெல்மெட் அணிய வேண்டும், தவறினால் அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. #TNPolice #Helmet
    சென்னை:

    மோட்டார் வாகன சட்டப்படி நான்கு சக்கர  வாகனங்களில் செல்லும் அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டும், இரு சக்கர வாகனங்களில் செல்லும் இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று விதி உள்ளது. இந்த விதியை தமிழக அரசு அமல்படுத்தவில்லை. இந்த விதியை அமல்படுத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

    இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்த போது, ‘இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுசம்பந்தமாக பத்திரிகை, தொலைக்காட்சிகள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இதுதொடர்பான மோட்டார் வாகன சட்ட விதிகள் முறையாக அமல்படுத்தப்படும்’ என்று தமிழக அரசு சார்பில் உறுதி அளிக்கப்பட்டது.

    இதனை அடுத்து, தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி ஹெல்மெட் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்தனர். இந்நிலையில், ஹெல்மெட் அணியாமல் பைக்கில் செல்பவர்கள் மீது மோட்டார் வாகன சட்டம் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
    தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில் 20 ஆயிரம் போலீசார் நாளை ரத்த தானம் செய்கின்றனர்.
    சென்னை:

    தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில் 20 ஆயிரம் போலீசார் நாளை ரத்த தானம் செய்கின்றனர்.

    ஒவ்வொரு போலீசாரிடம் இருந்தும் 1 யூனிட் வீதம் மொத்தம் 20 ஆயிரம் யூனிட் ரத்தம் எடுக்கப்படுகிறது. சேகரிக்கப்படும் ரத்தம் அனைத்தும் பாதுகாப்பாக அரசு ரத்த வங்கிகளில் சேமிக்கப்படுகிறது.

    இதுபற்றி தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க இயக்குனர் செந்தில்ராஜ் மற்றும் ரத்த பரிமாற்ற குழுமம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் நாளை சுமார் 20,000 போலீசார் மற்றும் அதிகாரிகள் தங்களுடைய விருப்பத்தை தெரிவித்து தாமாகவே முன்வந்து ரத்த தானம் கொடுக்க உள்ளனர்.

    நமது மாநிலத்தில் ஆண்டிற்கு 8,00,000 யூனிட்ஸ் ரத்தம் தேவையுள்ளது, இதில் சுமார் 50 சதவீதம் ரத்தம் ( 4 லட்சம் யூனிட்ஸ்) 89 அரசு ரத்த வங்கிகளில் சேகரிக்கப்படுகிறது மீதமுள்ள 50 சதவீதம் ரத்தம் (4 லட்சம் யூனிட்ஸ்) தனியார் ரத்த வங்கிகளில் சேகரிக்கப்படுகிறது.

    ஒவ்வொரு மாதமும் 33,000 முதல் 35,000 யூனிட்ஸ் வரை தேவைப்படுகிற ரத்தம், 89 அரசு ரத்த வங்கிகள் மற்றும் தனியார் ரத்த வங்கிகள் மூலம் நம் மாநிலம் முழுவதும் வழங்கப்படுகிறது.

    மே மாதத்தில் பொதுவாக கல்லூரி விடுமுறையாக இருப்பதாலும், கொடையாளிகள் ரத்தம் கொடுப்பது குறைவாக இருப்பதாலும் ஜூன் மாதத்தில் ரத்தம் அதிகமாக தேவைப்படும்.

    எனவே, ஜூன் மாதத்தில் காவல் துறையால் வழங்கப்படவுள்ள 20,000 யூனிட்ஸ் ரத்தம் மிகவும் உதவிகரமாக இருக்கும்.

    மேலும், சராசரியாக ஒருமாத பயன்பாட்டிற்கு தேவைப்படுகிற 33,000 முதல் 35,000 யூனிட்ஸ் வரை ரத்தத்திற்கு, 29.06.2018 அன்று காவல்துறையால் திட்டமிடப்பட்ட ரத்த தான முகாமில் வழங்கப்படவுள்ள 20,000 யூனிட்ஸ் ரத்தம் ஒருபோதும் வீணாகப் போவதில்லை. இந்த ரத்தம் ஏழை எளியவர்களுக்கு அரசாங்க மருத்துவமனைகளில் உபயோகப்படுத்தப்பட உள்ளது

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரவில்லை எனில் நீதிபதியை மேடைக்கு மேடை விமர்சிப்பது வெட்கக்கேடான ஒன்று என ஐகோர்ட் நீதிபதி கிருபாகரன் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்த வழக்கில் சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி மற்றும் நீதிபதி சுந்தர் ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பை அளித்தனர். இதனால், இந்த வழக்கு மூன்றாவது நீதிபதி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர் நாளை விசாரணையை தொடங்க உள்ளார்.

    நேற்று வழக்கு விசாரணை ஒன்றில்,18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பை விமர்சித்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?  என்று சென்னை ஐகோர்ட் நீதிபதி கிருபாகரன் தமிழக காவல்துறைக்கு கேள்வி எழுப்பியுள்ளார். 

    மேலும், “முதலமைச்சர், அமைச்சர்களை விமர்சனம் செய்பவர்கள் மீது அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கிறது. தலைமை நீதிபதியை விமர்சித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? இது தொடர்பாக 2 வாரத்தில் பதிலளிக்க வேண்டும்” எனவும் அவர் உத்தரவிட்டார். 

    இந்நிலையில், இன்றும் வழக்கு விசாரணை ஒன்றில் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பினார். 
    தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரவில்லை எனில் நீதிபதியை மேடைக்கு மேடை விமர்சிப்பது வெட்கக்கேடான ஒன்று என அவர் கூறினார்.

    மேலும், எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் காவல்துறையினரை தவறாக பயன்படுத்துகிறார்கள். காவலர்களை காவல் பணிக்கு மட்டுமே பயன்படுத்துங்கள். காவல் உயர் அதிகாரிகளின் வீட்டு வேலைக்கு ஆட்கள் தேவைப்பட்டால் தனியாக தேர்வு செய்து கொள்ள அவர் அறிவுறுத்தினார்.
    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை விமர்சித்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என சென்னை ஐகோர்ட் நீதிபதி கிருபாகரன் தமிழக காவல்துறைக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
    சென்னை:

    டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்த வழக்கில் சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி மற்றும் நீதிபதி சுந்தர் ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பை அளித்தனர். இதனால், இந்த வழக்கு மூன்றாவது நீதிபதி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர் நாளை விசாரணையை தொடங்க உள்ளார்.

    இந்நிலையில், வழக்கு விசாரணை ஒன்றில்,18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பை விமர்சித்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?  என்று சென்னை ஐகோர்ட் நீதிபதி கிருபாகரன் தமிழக காவல்துறைக்கு கேள்வி எழுப்பியுள்ளார். 

    மேலும், “முதலமைச்சர், அமைச்சர்களை விமர்சனம் செய்பவர்கள் மீது அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கிறது. தலைமை நீதிபதியை விமர்சித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? இது தொடர்பாக 2 வாரத்தில் பதிலளிக்க வேண்டும்” எனவும் அவர் உத்தரவிட்டார். 
    ×