search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mla disqualification case"

    தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரவில்லை எனில் நீதிபதியை மேடைக்கு மேடை விமர்சிப்பது வெட்கக்கேடான ஒன்று என ஐகோர்ட் நீதிபதி கிருபாகரன் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்த வழக்கில் சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி மற்றும் நீதிபதி சுந்தர் ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பை அளித்தனர். இதனால், இந்த வழக்கு மூன்றாவது நீதிபதி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர் நாளை விசாரணையை தொடங்க உள்ளார்.

    நேற்று வழக்கு விசாரணை ஒன்றில்,18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பை விமர்சித்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?  என்று சென்னை ஐகோர்ட் நீதிபதி கிருபாகரன் தமிழக காவல்துறைக்கு கேள்வி எழுப்பியுள்ளார். 

    மேலும், “முதலமைச்சர், அமைச்சர்களை விமர்சனம் செய்பவர்கள் மீது அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கிறது. தலைமை நீதிபதியை விமர்சித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? இது தொடர்பாக 2 வாரத்தில் பதிலளிக்க வேண்டும்” எனவும் அவர் உத்தரவிட்டார். 

    இந்நிலையில், இன்றும் வழக்கு விசாரணை ஒன்றில் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பினார். 
    தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரவில்லை எனில் நீதிபதியை மேடைக்கு மேடை விமர்சிப்பது வெட்கக்கேடான ஒன்று என அவர் கூறினார்.

    மேலும், எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் காவல்துறையினரை தவறாக பயன்படுத்துகிறார்கள். காவலர்களை காவல் பணிக்கு மட்டுமே பயன்படுத்துங்கள். காவல் உயர் அதிகாரிகளின் வீட்டு வேலைக்கு ஆட்கள் தேவைப்பட்டால் தனியாக தேர்வு செய்து கொள்ள அவர் அறிவுறுத்தினார்.
    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை விமர்சித்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என சென்னை ஐகோர்ட் நீதிபதி கிருபாகரன் தமிழக காவல்துறைக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
    சென்னை:

    டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்த வழக்கில் சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி மற்றும் நீதிபதி சுந்தர் ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பை அளித்தனர். இதனால், இந்த வழக்கு மூன்றாவது நீதிபதி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர் நாளை விசாரணையை தொடங்க உள்ளார்.

    இந்நிலையில், வழக்கு விசாரணை ஒன்றில்,18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பை விமர்சித்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?  என்று சென்னை ஐகோர்ட் நீதிபதி கிருபாகரன் தமிழக காவல்துறைக்கு கேள்வி எழுப்பியுள்ளார். 

    மேலும், “முதலமைச்சர், அமைச்சர்களை விமர்சனம் செய்பவர்கள் மீது அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கிறது. தலைமை நீதிபதியை விமர்சித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? இது தொடர்பாக 2 வாரத்தில் பதிலளிக்க வேண்டும்” எனவும் அவர் உத்தரவிட்டார். 
    அதிமுக.வில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்ததை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை ஐகோர்ட் அறிவித்துள்ளது.
    சென்னை:

    அதிமுக.வில் இருந்து டிடிவி தினகரன் நீக்கப்பட்டதும், தினகரனின் ஆதரவாளர்களான 18 எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என ஆளுநரிடம் சென்று மனு அளித்தனர். 

    இதனை அடுத்து, ஆளுநரிடம் கடிதம் அளித்த 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து 18-9-2017 அன்று சட்டசபை சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.

    சபாநாயகரின் உத்தரவுக்கு எதிராக பாதிக்கப்பட்டவர்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு விசாரணை முடிந்ததும் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. 

    இந்நிலையில், நாளை காலை 10.30 மணியளவில் சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி இந்திரா பாணர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோரை கொண்ட அமர்வு இந்த வழக்கில் தீர்ப்பளிக்க உள்ளது.
    ×