search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விசில்"

    காவல்துறையை நவீன மயமாக்கும் திட்டத்தின் கீழ் 10 ஆயிரம் லத்திகள், 26 ஆயிரம் விசில்கள் வாங்கப்படுகின்றன. ஒரு லத்தி ரூ.165 விலையில் வாங்க நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. #TNPoliceDepartment
    சென்னை:

    தமிழக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடும்போது லத்திகள் பயன்படுத்துகிறார்கள். இதேபோல் விசிலும் பயன்படுத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் லத்திகள், விசில்கள் பழையதாகி விட்டன. இதையடுத்து போலீசாருக்கு புதிதாக லத்திகள், விசில்கள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    காவல்துறையை நவீன மயமாக்கும் திட்டத்தின் கீழ் 10 ஆயிரம் லத்திகள், 26 ஆயிரம் விசில்கள் வாங்கப்படுகின்றன.

    ஒரு லத்தி ரூ.165 விலையில் வாங்க நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ரூ.17 லட்சம் செலவில் 10 ஆயிரத்து 326 லத்திகள் வாங்கப்படுகிறது.



    இதேபோல் ரூ.13 லட்சம் செலவில் 26 ஆயிரத்து 196 விசில்கள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    புதிய லத்திகள், விசில்கள் அனைத்தும் சட்டம்- ஒழுங்கு மற்றும் குற்றப் பிரிவு போலீசாருக்கு வழங்கப்படுகிறது.

    இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    புதிதாக வாங்கப்படும் லத்தி மற்றும் விசில்கள் மாநிலம் முழுவதும் உள்ள போலீசாருக்கு ஜூலை மாதம் முதல் வழங்கப்படும்.

    பொதுவாக பணியின்போது விசில்கள் பயன்படுத்துவது இல்லை. செல்போன்கள் வந்த பிறகு விசில் பயன்பாடு குறைந்து விட்டது. செல்போன் மூலம் சக போலீசாரை விரைவில் தொடர்பு கொண்டு வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #TNPoliceDepartment
    ×