search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thanjavur"

    • அப்போது குறிப்பிட்ட காலத்திற்குள் தரமான அளவில் பணிகளை முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.
    • இந்த நிலையில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழுவினர் இந்த கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு கல்லூரி வளாகத்தில் அரசு ஆதிதிராவிடர் நல 50 கல்லூரி மாணவிகள் விடுதி கட்டும் பணி நடைபெற்று வருகிறது. ரூ.126.09 லட்சம் மதிப்பீட்டில் இந்த கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.

    இந்த நிலையில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழுவினர் இந்த கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதற்கு மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முன்னிலை வகித்தார். சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் ராஜா தலைமையில் உறுப்பினர்கள் முத்துராமலிங்கம், கிருஷ்ணசாமி , தமிழரசி, தளபதி, நாகை மாலி, நிவேதா முருகன், பாலாஜி, ஜெயக்குமார் மற்றும் குழுவினர் மாணவிகள் விடுதியை பார்வையிட்டு ஆய்வு நடத்தினர்.

    இந்த கட்டுமான பணியை ஒப்பந்தம் எடுத்தவரிடம் பணிகள் எவ்வளவு காலத்தில் முடிக்கப்படும்? தரமான முறையில் நடந்து வருகிறதா என்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்களை கேட்டு அறிந்தனர்.

    அப்போது குறிப்பிட்ட காலத்திற்குள் தரமான அளவில் பணிகளை முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.

    இதைத் தொடர்ந்து அந்த குழுவினர் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருந்து கிடங்கு, நாஞ்சிக்கோட்டை துணை மின் நிலையம் ஆகியவற்றையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    • விவசாயிகள் தங்களது கால்நடைகளை நீர்நிலைகளின் வழியாக அழைத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும்.
    • நமது மாவட்டத்தில் வெள்ள அபாயம் ஏற்படாமல் தடுக்கும் பொருட்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொ ள்ளப்பட்டு வருகின்றன.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டத்தில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகமாக உள்ளது. இதனால் கொள்ளிடம் கரையில் முன்னேற்பாடு பணிகளை அரசு தல்லமை கொறடா கோவி. செழியன், மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    பின்னர்அரசுதலைமை கொறடாகோவி.செ ழியன் அளித்த பேட்டியில் கூறியிரு ப்பதாவது:-

    காவிரி நீர்டிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழையின காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகமாக உள்ளதால் அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது. அணையில் இருந்து உபரி நீர் காவிரி மற்றும் அதன் கிளை ஆறுகள் மற்றும் கொள்ளிடம் ஆற்றில் 1.40 லட்சம் கன அடிக்கு மேல் திறந்து விடப்பட்டுள்ளது.

    எனவே காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் நீர்வரத்து அதிகமாக இருக்கும் என்பதால் ஆற்றின் கரையோர தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

    அதன் அடிப்படையில் திருவையாறு தாலுகா, விளாங்குடி, செம்மங்குடி, பட்டுக்குடி, கூடத்தூர், குடிக்காடு, பாபநாசம் தாலுகா சருக்கை, புது குடிசை, தட்டுமால், கும்பகோணம் தாலுகா குடிதாங்கி, மகாராஜபுரம், அணைக்கரை வரை உள்ள கொள்ளிடம் கரையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

    காவிரி நீர் பாய்ந்து வரும் காவிரி, வெண்ணாறு, கொள்ளிடம் ஆறுகள் கால்வாய்கள் மற்றும் நீர்நிலைப் பகுதிகளில் பொது மக்கள் யாரும் குளிக்கவோ, நீச்சல் அடிக்கவோ, மீன்பிடிக்கவோ மற்றும் இதர பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம்.

    தன்ணீர் வரத்து அதிகமாக உள்ள அபாயகரமான இடங்களில் பொதுமக்கள் யாரும் தன்படம் (செல்பி) எடுப்பதை தவிர்க்க வேண்டும். கால்வாய்கள், ஆறுகள் மற்றும் நீர்நிலைகளில் நீர் அதிகம் நிறந்து விடப்பட வாய்ப்பு உள்ளதால் அந்த பகுதிகளில் குழந்தைகளை விளையாடச் செல்லாமல் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    கரையை விட்டு தண்ணீர் வெளியே வராமல் இருக்க மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள பணியினை பார்வையிட்டு பொதுமங்கள் வெள்ளம் வந்தால் தங்குவதற்கு ஏதுவாக முன்னெச்சரிக்கை பணியாக பாதுகாப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ள இடத்தையும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

    விவசாயிகள் தங்களது கால்நடைகளை நீர்நிலைகளின் வழியாக அழைத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும்.

    மேலும், நமது மாவட்டத்தில் வெள்ள அபாயம் ஏற்படாமல் தடுக்கும் பொருட்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொ ள்ளப்பட்டு வருகின்றன. காவல்துறை, வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை ஆகிய துறைகளை ஒன்றிணைத்து பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பேரிடர் காலங்களில் தங்குவதற்கு ஏதுவாக அடிப்படை வசதிகளுடன் கூடிய 6 தற்காலிக பாதுகாப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின் போது கும்பகோணம் கோட்டாட்சியர் லதா, நீர்ளைத்துறை உதவி செயற்பொறியாளர் அய்யம்பெருமாள், உதவி பொறியாளர் பூங்கொடி, பாபநாசம் ஒன்றிய குழு தலைவர் சுமதி கண்ணதாசன், தாசில்தார்கள் பழனியப்பன், (திருவையாறு), மதுசூதனன், (பாபநாசம்), தங்கபிரபாகரன் (கும்பகோணம்) மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • பெறப்பட்ட மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
    • மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையேற்று பேசியதாவது:-

    தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 387 மனுக்கள் பெறப்பட்டது.

    பெறப்பட்ட மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் அவர் வருவாய்த்துறையின் சார்பில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் கும்பகோணம் வட்டத்தைச் சேர்ந்த பர்வதம் என்ற பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணையினை வழங்கினார்.

    இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தவவளவன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • பட்டியல் வழக்கறிஞர் பன்னீர்செல்வம் சட்ட விழிப்புணர்வு அறிக்கை பற்றிய துண்டு பிரசுரத்தை பொதுமக்களுக்கு வழங்கினார்.
    • ஏற்பாடுகளை பாபநாசம் வட்ட சட்ட பணிகள் குழுவினர் செய்தனர்.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான மதுசூதனன் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியுமான சுதா உத்தரவு படியும் பாபநாசம் வட்ட சட்டப் பணிகள் குழுவின் தலைவரும், மாவட்ட உரிமையியல்

    நீதிபதி மற்றும் குற்றவியல் நடுவருமான அப்துல் கனி வழிகாட்டுதலின் படியும் ஒன்பத்து வேலி, நாகலூர், இடையிருப்பு ஆகிய கிராமங்களில் பொதுமக்கள் மற்றும் தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணிபுரியும் மக்களுக்கான சட்டவிழிப்புணர்வு முகாம் நடைபெற்றது

    முகாமில் பாபநாசம் வட்ட சட்ட பணிகள் குழுவின் தன்னார்வ சட்ட பணியாளர் தனசேகரன், வட்ட சட்ட பணிகள் குழுவின் செயல்பாடுகள் பற்றியும் சிவில் வழக்குகள், குடும்ப பிரச்சினைகள், வங்கிக்கடன் தொடர்பான பிரச்சனைகள், கொடுக்கல் வாங்கல் பிரச்சினைகள், தொழிலாளர்களுக்கான பிரச்சனைகள் ஆகியதற்கு வட்ட சட்ட பணிகள் குழுவின் மூலம் நீதிமன்றம் முறையல்லாமல் மாற்றும் முறையில் தீர்வு காண்பது பற்றி விளக்கமாக கூறினார்.

    பட்டியல் வழக்கறிஞர் பன்னீர்செல்வம் சட்ட விழிப்புணர்வு அறிக்கை பற்றிய துண்டு பிரசுரத்தை பொதுமக்களுக்கு வழங்கினார். ஏற்பாடுகளை பாபநாசம் வட்ட சட்ட பணிகள் குழுவினர் செய்தனர்.

    • விழாவில் தினமும் காலை 9 மணிக்கு புத்தக கண்காட்சி தொடங்கி இரவு 9 மணி வரை நடைபெறும். காலை 11 மணிக்கு பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு இடையிலான போட்டிகள் நடைபெறும்.
    • மாலை 4 மணியில் இருந்து 6 மணி வரை பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு புத்தகத் திருவிழா தொடங்குகிறது. வருகிற 25 ஆம் தேதி வரை புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது.

    நாளை தொடங்கும் புத்தகத் திருவிழா தொடக்க நிகழ்ச்சிக்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்குகிறார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி புத்தகத் திருவிழா அரங்கை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றுகிறார்.

    கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா வரவேற்புரை ஆற்றுகிறார். அரசு தலைமை கொறடா கோவி. செழியன் சிறப்புரை ஆற்றுகிறார்.

    எம்.பி.க்கள் எஸ்.எஸ். பழனி மாணிக்கம், ராமலிங்கம் ,சண்முகம், கல்யாணசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

    எம்.எல்.ஏ.க்கள் துரை சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், அன்பழகன், அண்ணாதுரை, அசோக்கு மார், ஜவாஹிருல்லா, மாநகராட்சி மேயர்கள் சண் ராமநாதன் (தஞ்சை), சரவணன் (கும்பகோணம்), மாவட்ட ஊராட்சி தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, மாநகராட்சி துணை மேயர்கள் அஞ்சுகம்பூபதி, தமிழழகன், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் முத்து ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர். கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த் நன்றி கூறுகிறார்.

    விழாவில் தினமும் காலை 9 மணிக்கு புத்தக கண்காட்சி தொடங்கி இரவு 9 மணி வரை நடைபெறும். காலை 11 மணிக்கு பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு இடையிலான போட்டிகள் நடைபெறும். மாலை 4 மணியில் இருந்து 6 மணி வரை பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    நாளை (15 ஆம் தேதி) மாலை 6:30 மணிக்கு நடைபெறும் முதல் நாள் நிகழ்ச்சிக்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்குகிறார். மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரங்கராஜன் வரவேற்கிறார். தாமரை பன்னாட்டு பள்ளி தலைவர் வெங்கடேசன், பபாசி தலைவர் வயிரவன் ஆகியோர் முன்னிலை வைக்கின்றனர்.வீடு வரை உறவு என்ற தலைப்பில் பிரபல டி.வி புகழ் கோபிநாத் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார். முடிவில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பிரேமலதா நன்றி கூறுகிறார். இதே போல் 16ம் தேதி மாலை 6:30 மணிக்கு 2-ம் நாள் நிகழ்ச்சி தொடங்குகிறது. அன்றைய தினம் சாலமன் பாப்பையா குழுவினரின் சிறப்பு பட்டிமன்றம் நடைபெற உள்ளது.17-ம் தேதி மாலையில் சுகி.சிவம், சண்முகவடிவேல் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பு உரையாற்றுகின்றனர்.

    18-ம் தேதி மாலை மதுக்கூர் ராமலிங்கம், அருள் பிரகாஷ் ஆகியோரின் கருத்து சிந்தனையரங்கம் நடைபெற உள்ளது. 19-ம் தேதி மாலையில் மணிகண்டன், செந்தூரன், 20-ந் தேதி மோகனசுந்தரம், சுந்தர ஆவுடையப்பன், 21-ந் தேதி பர்வீன் சுல்தானா, புலவர் ராமலிங்கம், 22-ந் தேதி பாரதி பாஸ்கர், ஜெயம் கொண்டான் , 23-ந் தேதி ஞானசம்பந்தம், தாமோதரன் ஆகியோரின் சிந்தனை அரங்கம் நடைபெறுகிறது.

    24-ந் தேதி மாலையில் திண்டுக்கல் ஐ. லியோனி குழுவினரின் சிறப்பு பட்டி மன்றம் நடைபெ றுகிறது. விழாவின் இறுதி நாளான 25ஆம் தேதி மாலை பேசும் புத்த கம் என்ற தலைப்பில் ஈரோடு மகேசின் சிந்தனைஅர ங்கம் நடைபெறு கிறது.

    • நாளை காலை 10 மணியளவில் தனியார்த்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.
    • இம்முகாமானது தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்த வேலை தேடும் இளைஞர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பாக வேலை தேடும் இளைஞர்களுக்காக வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் சிறு அளவிலான வேலைவாய்ப்பு முகாம்கள் அலுவலக வளாகத்திலேயே நடத்தப்பட்டு வருகின்றன.

    இதன்படி நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் தனியார்த்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் தஞ்சாவூர், கும்பகோணம் ஆகிய நகரங்களிலிருந்து முன்னனி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொள்கின்றனர்.

    இம்முகாமானது தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்த வேலை தேடும் இளைஞர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்முகாமில் 8ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படித்தோர், டிப்ளமோ, ஐ.டி.ஐ, பட்டதாரிகள் ஆகியோர் கலந்து கொள்ளலாம். மேலும் வேலையளிக்கும் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான ஆட்களை இம்முகாமில் கலந்து கொண்டு நேரடியாக தேர்வு செய்து கொள்ளலாம்.

    இம்முகாமில் கலந்து கொள்பவர்கள் தங்களின் சுய விவர அறிக்கை, கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை மற்றும் இதர சான்றிதழ்களின் நகல்களுடன் கலந்து கொண்டு பணி வாய்ப்பினை பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்து கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 04362-237037 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மருதுபாண்டியர் கல்லூரி, பாரத் கல்லூரி, மன்னர் சரபோஜி அரசு கல்லூரி, பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, பூண்டி புஷ்பம் கல்லூரி ஆகிய கல்லூரிகளை சார்ந்த சுமார் 100 நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
    • சிறப்பு விருந்தினர்களாக தஞ்சை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அதிகாரி அந்தோணிஅதிர்ஷ்டராஜ் மற்றும் தஞ்சாவூர் நகர போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டார்.

    தஞ்சாவூர்:

    உலக மிதிவண்டி தினத்தை முன்னிட்டு பாரதிதாசன் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்டம் சார்பாக தஞ்சாவூர் பெரிய கோவிலில் இருந்து ஐ.டி.ஐ மைதானம் வரை மிதிவண்டி பேரணி நடைபெற்றது.

    இதனை பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர்செல்வம் கொடியசைத்து துவங்கி வைத்தார். விழாவில் பாரதிதாசன் பல்கலைக் கழக நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபிரபா முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக தஞ்சை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அதிகாரி அந்தோணிஅதிர்ஷ்டராஜ் மற்றும் தஞ்சாவூர் நகர போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டார்.

    பேரணியில் தஞ்சாவூர் மருதுபாண்டியர் கல்லூரி, பாரத் கல்லூரி, மன்னர் சரபோஜி அரசு கல்லூரி, பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, பூண்டி புஷ்பம் கல்லூரி ஆகிய கல்லூரிகளை சார்ந்த சுமார் 100 நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    விழாவிற்கான ஏற்பாடு–களை தஞ்சாவூர் மாவட்ட நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு அலுவலரும் மருதுபாண்டியர் கல்லூரி பேராசிரியருமான சந்தோஷ்குமார், பாரதிதாசன் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள்கணேஷ், முருகானந்தம், ராமச்சந்திரன்ஆகியோர் செய்திருந்தனர்.

    • சரியான எடையில் தரமான பொருட்கள் அனைத்தும் பொட்டலமாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நியாய விலைக்கடை பணியாளர்கள் 4 நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து இருந்தனர்.
    • ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக 406 கடைகள் திறக்கப்படவில்லை. 480 கடைகள் மட்டுமே திறக்கபட்டது.

    தஞ்சாவூர்:

    பொது வினியோக திட்டத்தி ற்காக தனித்து றையை உருவாக்க வேண்டும், 5 மாதமாக நிறுத்தி வைக்கப்பட்ட 17 சதவீத அகவிலை ப்படியையும் சேர்த்து அரசு பணியாளர்களுக்கு வழங்கக்கூடிய 31 சதவீத அகவிலைப்படியை, நியாய விலைக்கடை பணியாளர்களுக்கும் வழங்க வேண்டும், சரியான எடையில் தரமான பொருட்கள் அனைத்தும் பொட்டலமாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நியாய விலைக்கடை பணியாளர்கள் 4 நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து இருந்தனர்.

    அதன்படி தஞ்சை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக நேற்று ரேஷன்கடை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    அதன் தொடர்ச்சியாக இன்று 3-வது நாளாகவும் அவர்களது போராட்டம் தொடர்ந்தது.

    தஞ்சை தாலுகா அலுவலகம் முன்பு இன்று நியாயவிலை கடை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். இதற்கு வட்ட தலைவர் வைத்திலிங்கம் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் குழந்தைசாமி, தமிழ்சித்தன், திருமேனிபூங்குழலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் அறிவழகன், மாவட்ட செயலாளர் கரிகாலன், மாவட்ட பொருளாளர் ராமலிங்கம் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

    மாநில துணை தலைவர் ராமலிங்கம் பேசும்போது:-

    தஞ்சை மாவட்டத்தில் 1,184 ரேஷன்கடைகள் உள்ளன. இதில் இன்று 886 கடைகள் திறந்திருக்க வேண்டும். ஆனால் ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக 406 கடைகள் திறக்கப்படவில்லை. 480 கடைகள் மட்டுமே திறக்கபட்டது என்றார்.

    இதேப்போல் தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, திருவிடைமருதூர், பாபநாசம், பேராவூரணி, கும்பகோணம் உள்பட மற்ற 8 தாலுகா அலுவலகம் முன்பும் நியாயவிலை கடை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    • இந்த காத்திருப்பு கூடமானது 6000 சதுர அடி பரப்பளவில் ஆண்கள், பெண்களுக்கு என தனிதனியாக 2 கட்டிடங்கள் கட்டப்பட உள்ளது.
    • தேசிய நகர்புற வாழ்வாதார இயக்கம் திட்டத்தின் கீழ் ேநாயாளிகளை அழைத்து வருபவர்கள், உறவினர்கள் தங்குவதற்காக ரூ.3 கோடி மதிப்பில் காத்திருப்பு கூடம் கட்ட முடிவு செய்யப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தேசிய நகர்புற வாழ்வாதார இயக்கம் திட்டத்தின் கீழ் ேநாயாளிகளை அைழத்து வருபவர்கள், உறவினர்கள் தங்குவதற்காக ரூ.3 கோடி மதிப்பில் காத்திருப்பு கூடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. அதன்படி இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இதனை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

    இந்த காத்திருப்பு கூடமானது 6000 சதுர அடி பரப்பளவில் ஆண்கள், பெண்களுக்கு என தனிதனியாக 2 கட்டிடங்கள் கட்டப்பட உள்ளது. இதில் குளியளறை, கழிவறை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் அமைய உள்ளன என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த கட்டுமான பணி மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளபட்டு பணி முடிந்ததும் மருத்துவ கல்லூரி மருத்துவமனை நிர்வாகத்திடம் ஒப்படை க்கப்பட உள்ளது.

    இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மருத்துவ கல்லூரி டீன் ரவிக்குமார், ஆர்.எம்.ஓ. செல்வம், மாமன்ற உறுப்பினர் சர்மிளாமேரி, மாநகராட்சி செயற்பொறியாளர் ஜெகதீசன், உதவி பொறியாளர் ரமேஷ் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • சமுத்திரம் ஏரியை சுற்றுலாத் தலமாக மாற்றும் வகையில் ரூ.9 கோடியில் பல்வேறு பணிகள் தொட ங்கி நடந்து வருகிறது. ஏரியை தூர்வாரி ஆழப்படுத்துவதோடு கரைகளும் பலப்படுத்தப்படுகின்றன.
    • படகுசவாரி, சிறுவர் பூங்கா, பொழுதுபோக்கு மீன்பிடி தளம்,பறவைகள் வந்து தங்கும் வகையில் 3 தீவுகள், குடிநீர், கழிவறை வசதி, வாகனங்கள் நிறுத்துமிடம் போன்றவையும் ஏற்படுத்தப்படுகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் அருகே சமுத்திரம்ஏரி அமைந்துள்ளது . பழமை யான இந்த ஏரி 287 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரி மூலம் சுமார் 1,186 ஏக்கர் பரப்பளவு சாகுபடியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஏரிக்கு கல்லணை கால்வாயில் இருந்து தண்ணீர் வரும்.

    இந்தநிலையில் இந்த ஏரியை சுற்றுலாதலமாக மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து கல்லணை கால்வாய் கோட்ட பொதுப்பணித்துறை சார்பில் இதுதொடர்பாக விரிவான அறிக்கை தயார் செய்யப்பட்டது. ரூ.9 கோடி மதிப்பீட்டில் இதற்காக திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளைமாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ரா ஜ் ஆலிவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:- சமுத்திரம் ஏரியைசு ற்றுலா த்தலமாகமாற்றும் வகையில் ரூ.9 கோடியில் பல்வேறு பணிகள் தொட ங்கி நடந்து வருகிறது. ஏரியை தூர்வாரி ஆழப்படுத்துவதோடு கரைகளும் பலப்படுத்த ப்படுகின்றன.

    படகுசவாரி, சிறுவர் பூங்கா, பொழுதுபோக்கு மீன்பிடி தளம்,பறவைகள் வந்து தங்கும் வகையில் 3 தீவுகள், குடிநீர், கழிவறை வசதி, வாகனங்கள் நிறுத்துமிடம் போன்றவையும் ஏற்படுத்த ப்படுகிறது. அக்டோபர் மாதத்துக்குள் பணிகளை முடிக்கும் வகையில் பணிகள் மேற்கொ ள்ளப்பட்டு வருகின்றன. தற்போது ஆழப்படுத்தி கரைகள் பலப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் தண்ணீர் வந்துவிடும் என்பதால் இந்த ஆண்டுக்குள் நிறைவு பெறாது. ஆழப்படுத்தி கரைகளை பலப்படுத்தும் பணிகள் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் நிறைவு பெறும். இவ்வாறு அவர்கூறினார்.

    இந்த ஆய்வின்போது நீர்வளத் துறை செயற்பொறி யாளர் பாண்டி, உதவி பொறியாளர்கள் அன்புச்செ ல்வன், சேத்தன், தாசில்தார் மணிகண்டன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • இயல்பாக 3.230லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி மேற்கொள்ளப்படும். இந்த ஆண்டு பருவமழைக்கு முன்பாக டெல்டா மாவட்டங்களில் ரூ.80 கோடி மதிப்பில் 4964 கிலோ மீட்டர் தூரத்திற்கு தூர்வாருவதற்கான 683 பணிகள் விரைவாக முடிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
    • நடப்பாண்டில் குறுவை நெல் சாகுபடி இலக்கான 3 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கரை விட கூடுதலான பரப்பளவில் சாகுபடி மேற்கொள்ளப்படும்

    தஞ்சாவூர்:

    தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் குறுவை சாகுபடி ஆயத்த பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

    இதற்கு வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் வரவேற்றார்.அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, அன்பி ல்மகேஷ்பொய்யாமொழி, சக்கரபாணி, மெய்யநாதன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

    டெல்டா மாவட்டங்களில் இயல்பாக 3.230லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி மேற்கொள்ளப்படும். இந்த ஆண்டு பருவமழைக்கு முன்பாக டெல்டா மாவட்டங்களில் ரூ.80 கோடி மதிப்பில் 4964 கிலோ மீட்டர் தூரத்திற்கு தூர்வாருவதற்கான 683 பணிகள் விரைவாக முடிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

    சுதந்திரத்திற்கு பிறகு முதன் முறையாக இந்த ஆண்டு முன்கூட்டியே அதாவது மே 24-ந் தேதியே மேட்டூர் அணை திறக்கப்பட்டது. இதனால் கடந்த ஆண்டை விட குறுவையில் 5.2 லட்சம் ஏக்கரும், சம்பாவில் 13.5 லட்சம் ஏக்கரும் சாகுபடி பரப்பு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சம்பா சாகுபடிக்கான முன்னேற்பாடுகளும் முன்கூட்டியே தொடங்கப்படுவதால் வடகிழக்கு பருவமழை காலத்தில் சம்பா பயிர்கள் வெள்ள நீரில் மூழ்காமல் காக்கப்படும். மேலும் நிலத்தடி நீர் மட்டமும் உயர்வதால் மாற்று பயிர் வகைகளும் அதிக அளவில் சாகுபடி செய்வதற்கான வாய்ப்பும் ஏற்படும்.

    வேளாண் பெருமக்களின் நலன் கருதி இந்த ஆண்டும் ரூ.61 கோடி மதிப்பிலான குறுவை தொகுப்பு திட்டம் செயல்படுத்தப்படும். இதன் மூலம் 3 லட்சம் உழவர்கள் பயன்பெறுவர். வேளாண் உற்பத்தியை பெருக்கும் நோக்கத்தில் 1 லட்சத்து 90 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிற்கு யூரியா, பொட்டாஷ் ஆகிய உரங்கள் அடங்கிய தொகுப்பு ரூ.47 கோடி ஒதுக்கீடு மானிய விலையில் வழங்கப்படும்.

    வேளாண் விரிவாக்க மையங்கள் மூலம் 2400 மெட்ரிக் டன் நெல் விதைகள் 50 விழுக்காடு மானியத்தில் ரூ.4 கோடியே 20 லட்சம் வழங்கப்படும். வேளாண் பொறியியல் துறை மூலம் உள்ளிட்ட 237 வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் 50 விழுக்காடு மானியத்தில் ரூ. 6 கோடியே 6 லட்சம் மதிப்பீட்டில் வழங்கப்படும். இதன் மூலமாக கடந்த ஆண்டு சாதனை அளவை விட இந்த ஆண்டும் அதிக பரப்பளவில் சாதனை எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு குறுவைப் பருவத்தில் 3.50 லட்சம் ஏக்கர் பரப்பில் நெல் சாகுபடி மேற்கொள்ள திட்டமிடப்பட்டு குறுவை சாகுபடிக்குத் தேவையான குறுகிய கால நெல் இரக விதைகள், இரசாயன உரங்கள் உயிர் உரங்கள் மற்றும் நுண்ணூட்ட உரங்கள் போன்ற இடுபொருட்களை போதிய அளவில் இருப்பில் வைத்து நெல் நடவு எந்திரங்களை கொண்டு விரைவாக நடவு பணிகளை மேற்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    ஒட்டுமொத்த டெல்டா பகுதிகளில் குறுவை நெல் சாகுபடிக்கு 7060 மெட்ரிக் டன் நெல் விதைகள் தேவைப்படுகிறது. இதுவரை 3547 மெட்ரிக் டன் நெல் விதைகள் விநியோகிக்கப்பட்டு உள்ளது. பாசன நீரினை சிக்கனமாக பயன்படுத்தும் நோக்கத்தில் கடைமடை பகுதிகளில் நேரடி நெல் விதைப்பு பணி மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது. நடப்பாண்டில் குறுவை நெல் சாகுபடி இலக்கான 3 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கரை விட கூடுதலான பரப்பளவில் சாகுபடி மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை எடுத்து கூறினர். அதன் விவரம் வருமாறு:-

    விதை, உரம் உள்ளிட்ட வேளாண் இடுபொருட்களை தனியார் வியாபாரிகளிடம் விற்பனை செய்யாமல் அரசு டெப்போக்களில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆடுதுறை 37, ஏஎஸ்டி 16 ஆகிய நெல் ரகங்கள் அதிக மகசூலை தரக்கூடியது இந்த ரக விதைகள் அதிகளவில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.

    விவசாயிகளுக்கு உரிய காலத்தில் பயிர் கடன் வழங்கி சாகுபடி பணியை தொடங்க கூட்டுறவுத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகள் கடன் பெற ஏதுவாக வருவாய் துறையினரால் வழங்கப்படும் அடங்கல் சான்றிதழ்களை உரிய காலத்தில் வழங்கி விவசாயிகளுக்கு வருவாய் துறையினர் உதவி புரிந்திட வேண்டும். தேங்காய்க்கு உரிய விலை கிடைக்காததால் தென்னை விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே தேங்காயை மூலப் பொருளாகக் கொண்டு பட்டுக்கோட்டை பகுதியில் தொழிற்சாலையைத் தொடங்க வேண்டும்.

    பயிர் காப்பீடு திட்டத்தில் மாநில அரசு தனது பங்களிப்பை அதிகம் செலுத்துகிறது. எனது பிற மாநிலங்களைப் போல் பயிர் காப்பீடு திட்டத்தை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும். 35 சதவீதம் இடுபொருட்களின் விலையேற்றம் அதிகரித்துள்ளதால் அதற்கு ஏற்றவகையில் உற்பத்திப் பொருளுக்கான ஆதார விலையை உயர்த்தி வழங்க வேண்டும்.

    இனி வரும் காலங்களில் தூர்வாரும் பணியை மார்ச் மாதங்களிலேயே தொடங்கிட வேண்டும். குறுவை தொகுப்பு திட்டத்தை அனைத்து விவசாயிகளுக்கும் கிடைக்கும் வகையில் பகிர்ந்து வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

    இதில் தமிழக அரசின் தலைமை கொறடா கோவி. செழியன், எம்.பி.க்கள் எஸ். எஸ். பழனிமாணிக்கம், ராமலிங்கம், எஸ். கல்யாணசுந்தரம், தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி விஜயன், எம்.எல்.ஏ.க்கள் துரைசந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம், ஜவாஹிருல்லா, அசோக்குமார்,பூண்டி கலைவாணன், பன்னீர்செ ல்வம், அண்ணாதுரை, மேயர்கள் சண்.ராமநாதன், சரவணன், மாவட்ட ஊராட்சி தலைவர் உஷாபுண்ணியமூர்த்தி மற்றும் பல்வேறு துறை சார்ந்த அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். முடிவில் வேளாண் இணை இயக்குனர் ஜஸ்டின் நன்றி கூறினார்.

    • தஞ்சையில் உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    • கல்லூரி மாணவிகள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேரணியாக புறப்பட்டனர்.

    தஞ்சாவூர்:

    உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தஞ்சை ரெயிலடியில் இன்று விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் கவின்மிகு தஞ்சை இயக்கம் சார்பில் நடைபெற்ற இந்த பேரணியை கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இதில் கல்லூரி மாணவிகள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேரணியாக புறப்பட்டனர். பிளாஸ்டிக்கை தவிர்ப்போம், மண் வளம் காப்போம் என்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு பல்வேறு முக்கிய இடங்கள் வழியாக சென்று அரண்மனையில் முடிவடைந்தது.

    இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார், டாக்டர் சிங்காரவேலு, மாநகர் நல அலுவலர் நமச்சிவாயம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×