search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ration shop staff"

    • ரேசன் கடை ஊழியர்கள் பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று டோக்கனை விநியோகம் செய்தனர்.
    • பொதுமக்கள் குறிப்பிட்ட நாட்களில் ரேசன் கடைக்கு வர கலெக்டர் அறிவுறுத்தினார்.

    விருதுநகர்

    தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேசன் கார்டு தாரர்களுக்கும், இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிப்பவர்களுக்கு தலா 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை மற்றும் ரூ.1000 ரொக்கம், ஒரு முழுக்கரும்பு வழங்கப் படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதற் கான டோக்கன் இன்று மாநிலம் முழுவதும் விநியோகிக்கப்பட்டது.

    விருதுநகர் மாவட்டத்தில் 5 லட்சத்து 99 ஆயிரத்து 224 ரேசன் கார்டுதாரர்கள் மற்றும் 1018 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் என மொத்தம் 6 லட்சத்து 242 பயனாளர்கள் உள்ளனர். இவர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கு வதற்கான டோக்கன் இன்று முதல் வினியோகிக்கப் பட்டது.

    ரேசன் கடை ஊழியர்கள் பொதுமக்களின் வீடுக ளுக்கே சென்று டோக்கனை விநியோகம் செய்தனர். பொங்கல் பரிசு தொகுப்பு பெற நாள் ஒன்றுக்கு 250 ரேசன் கார்டுதாரர்கள் வீதம் டோக்கன் வழங்கப்படுகிறது. இன்று தொடங்கி வருகிற 8-ந் தேதி வரை இப்பணி நடக்கும். வருகிற 9-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை ரேசன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும்.

    அனைத்து அரிசிபெறும் குடும்ப அட்டை தாரர் களுக்கும் பொங்கல் பரிசு வழங்குவதற்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. எனவே தகுதியுள்ள ரேசன் கார்டுதாரர்கள் டோக்கனில் தெரிவிக்கப்பட்டுள்ள நாட்கள் மற்றும் நேரம் விபரத்தின்படி ரேசன் கடைகளுக்கு சென்று சமூக இடைவெளியை கடைபிடித்து பொங்கல் பரிசு தொகுப்பு பெற்றுக் கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி வலியுறுத்தி உள்ளார்.

    • சரியான எடையில் தரமான பொருட்கள் அனைத்தும் பொட்டலமாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நியாய விலைக்கடை பணியாளர்கள் 4 நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து இருந்தனர்.
    • ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக 406 கடைகள் திறக்கப்படவில்லை. 480 கடைகள் மட்டுமே திறக்கபட்டது.

    தஞ்சாவூர்:

    பொது வினியோக திட்டத்தி ற்காக தனித்து றையை உருவாக்க வேண்டும், 5 மாதமாக நிறுத்தி வைக்கப்பட்ட 17 சதவீத அகவிலை ப்படியையும் சேர்த்து அரசு பணியாளர்களுக்கு வழங்கக்கூடிய 31 சதவீத அகவிலைப்படியை, நியாய விலைக்கடை பணியாளர்களுக்கும் வழங்க வேண்டும், சரியான எடையில் தரமான பொருட்கள் அனைத்தும் பொட்டலமாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நியாய விலைக்கடை பணியாளர்கள் 4 நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து இருந்தனர்.

    அதன்படி தஞ்சை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக நேற்று ரேஷன்கடை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    அதன் தொடர்ச்சியாக இன்று 3-வது நாளாகவும் அவர்களது போராட்டம் தொடர்ந்தது.

    தஞ்சை தாலுகா அலுவலகம் முன்பு இன்று நியாயவிலை கடை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். இதற்கு வட்ட தலைவர் வைத்திலிங்கம் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் குழந்தைசாமி, தமிழ்சித்தன், திருமேனிபூங்குழலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் அறிவழகன், மாவட்ட செயலாளர் கரிகாலன், மாவட்ட பொருளாளர் ராமலிங்கம் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

    மாநில துணை தலைவர் ராமலிங்கம் பேசும்போது:-

    தஞ்சை மாவட்டத்தில் 1,184 ரேஷன்கடைகள் உள்ளன. இதில் இன்று 886 கடைகள் திறந்திருக்க வேண்டும். ஆனால் ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக 406 கடைகள் திறக்கப்படவில்லை. 480 கடைகள் மட்டுமே திறக்கபட்டது என்றார்.

    இதேப்போல் தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, திருவிடைமருதூர், பாபநாசம், பேராவூரணி, கும்பகோணம் உள்பட மற்ற 8 தாலுகா அலுவலகம் முன்பும் நியாயவிலை கடை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடை ஊழியர்கள், தங்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி நாளை வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
    சென்னை:

    தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடை ஊழியர்கள், தங்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி நாளை வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

    இது குறித்து தமிழ்நாடு கூட்டுறவு நியாயவிலைக்கடை (ரேஷன் கடை) அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ரேஷன் கடை ஊழியர்கள் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 6 மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து கவன ஈர்ப்பு போராட்டங்களை நடத்தி வருகிறோம்.

    கடந்த பிப்ரவரி 24-ந் தேதி கூடிய அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு கூட்டத்தின் தீர்மானத்தின் படி, மார்ச் 9-ந் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அந்த ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் ஒரு நாள் வேலைநிறுத்தம் செய்வது என்றும், அதற்கு முன்னதாக மாநிலம் முழுவதும் வேலைநிறுத்த தயாரிப்பு மண்டல மாநாடுகளை நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி ஏப்ரல் 15-ந் தேதி முதல் ஜூன் 24-ந் தேதி வரை 10 மண்டல மாநாடுகள் நடைபெற்றது. விருகம்பாக்கம் மாநாட்டில், ஆகஸ்டு 6-ந் தேதி(நாளை) திங்கட்கிழமை வேலைநிறுத்தம் செய்வது என முடிவு செய்யப்பட்டது.

    கூட்டுறவுத்துறை அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையில், ரேஷன் கடை ஊழியர்களின் பிரதான கோரிக்கைகளாக உள்ள சம வேலைக்கு சம ஊதியம், ஒரே துறை, எடை குறைவு இல்லாமல் பொருட்கள் வழங்குதல், சேதாரக் கழிவு அனுமதித்தல், பணி வரன்முறை, மானியத் தொகை விடுவித்தல் உள்பட பல்வேறு கோரிக்கைகளுக்கு எவ்வித தீர்வும் காணப்படவில்லை.

    இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு நியாய விலைக்கடை ஊழியர்கள் அனைவரும் 6-ந் தேதி(நாளை) வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். எனவே அன்று ரேஷன் கடைகள் திறக்கப்பட மாட்டாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #tamilnews
    ×