search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சாவூர் புத்தக திருவிழாவின் நிகழ்ச்சிகள் விபரம்
    X

    தஞ்சாவூர் புத்தக திருவிழாவின் நிகழ்ச்சிகள் விபரம்

    • விழாவில் தினமும் காலை 9 மணிக்கு புத்தக கண்காட்சி தொடங்கி இரவு 9 மணி வரை நடைபெறும். காலை 11 மணிக்கு பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு இடையிலான போட்டிகள் நடைபெறும்.
    • மாலை 4 மணியில் இருந்து 6 மணி வரை பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு புத்தகத் திருவிழா தொடங்குகிறது. வருகிற 25 ஆம் தேதி வரை புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது.

    நாளை தொடங்கும் புத்தகத் திருவிழா தொடக்க நிகழ்ச்சிக்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்குகிறார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி புத்தகத் திருவிழா அரங்கை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றுகிறார்.

    கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா வரவேற்புரை ஆற்றுகிறார். அரசு தலைமை கொறடா கோவி. செழியன் சிறப்புரை ஆற்றுகிறார்.

    எம்.பி.க்கள் எஸ்.எஸ். பழனி மாணிக்கம், ராமலிங்கம் ,சண்முகம், கல்யாணசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

    எம்.எல்.ஏ.க்கள் துரை சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், அன்பழகன், அண்ணாதுரை, அசோக்கு மார், ஜவாஹிருல்லா, மாநகராட்சி மேயர்கள் சண் ராமநாதன் (தஞ்சை), சரவணன் (கும்பகோணம்), மாவட்ட ஊராட்சி தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, மாநகராட்சி துணை மேயர்கள் அஞ்சுகம்பூபதி, தமிழழகன், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் முத்து ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர். கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த் நன்றி கூறுகிறார்.

    விழாவில் தினமும் காலை 9 மணிக்கு புத்தக கண்காட்சி தொடங்கி இரவு 9 மணி வரை நடைபெறும். காலை 11 மணிக்கு பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு இடையிலான போட்டிகள் நடைபெறும். மாலை 4 மணியில் இருந்து 6 மணி வரை பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    நாளை (15 ஆம் தேதி) மாலை 6:30 மணிக்கு நடைபெறும் முதல் நாள் நிகழ்ச்சிக்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்குகிறார். மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரங்கராஜன் வரவேற்கிறார். தாமரை பன்னாட்டு பள்ளி தலைவர் வெங்கடேசன், பபாசி தலைவர் வயிரவன் ஆகியோர் முன்னிலை வைக்கின்றனர்.வீடு வரை உறவு என்ற தலைப்பில் பிரபல டி.வி புகழ் கோபிநாத் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார். முடிவில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பிரேமலதா நன்றி கூறுகிறார். இதே போல் 16ம் தேதி மாலை 6:30 மணிக்கு 2-ம் நாள் நிகழ்ச்சி தொடங்குகிறது. அன்றைய தினம் சாலமன் பாப்பையா குழுவினரின் சிறப்பு பட்டிமன்றம் நடைபெற உள்ளது.17-ம் தேதி மாலையில் சுகி.சிவம், சண்முகவடிவேல் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பு உரையாற்றுகின்றனர்.

    18-ம் தேதி மாலை மதுக்கூர் ராமலிங்கம், அருள் பிரகாஷ் ஆகியோரின் கருத்து சிந்தனையரங்கம் நடைபெற உள்ளது. 19-ம் தேதி மாலையில் மணிகண்டன், செந்தூரன், 20-ந் தேதி மோகனசுந்தரம், சுந்தர ஆவுடையப்பன், 21-ந் தேதி பர்வீன் சுல்தானா, புலவர் ராமலிங்கம், 22-ந் தேதி பாரதி பாஸ்கர், ஜெயம் கொண்டான் , 23-ந் தேதி ஞானசம்பந்தம், தாமோதரன் ஆகியோரின் சிந்தனை அரங்கம் நடைபெறுகிறது.

    24-ந் தேதி மாலையில் திண்டுக்கல் ஐ. லியோனி குழுவினரின் சிறப்பு பட்டி மன்றம் நடைபெ றுகிறது. விழாவின் இறுதி நாளான 25ஆம் தேதி மாலை பேசும் புத்த கம் என்ற தலைப்பில் ஈரோடு மகேசின் சிந்தனைஅர ங்கம் நடைபெறு கிறது.

    Next Story
    ×