search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "temple"

    • போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
    • வீரப்பூர் என்ற பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் இடைய பொட்டல் தெருவை சேர்ந்த ராமர் என்பவரது மனைவி சுமதி (வயது56). இவர் கடந்த ஜூலை 1-ந் தேதி சனி பிரதோஷத்தை முன்னிட்டு மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார்.

    அப்போது கூட்டத்தில் சுமதி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க செயின் திருடு போனது. இதுகுறித்த புகாரில் ஸ்ரீவில்லிபுத்தூர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

    இந்த செயின் பறிப்பு வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே வீரப்பூர் என்ற பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அங்கு சென்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான தனிப்படையினர் திருட்டு வழக்கில் தொடர்புடைய தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மந்திதோப்பு பகுதியை சேர்ந்த முருகன் (55), அவரது மனைவி அலமேலு (45) ஆகியோரை கைது செய்தனர்.


    மேலும் அவர்களுடன் இருந்த கோவில்பட்டியைச் சேர்ந்த பொன்மணி (32), மாரிமுத்து (26), செல்வி (34), நாகம்மாள் (57) ஆகியோரை கைது செய்தனர்.

    இவர்கள் கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்டு 18-ந் தேதி மடவார் வளாகம் கோவிலுக்குச் சென்ற மூதாட்டியிடம் 2 பவுன் நகை பறித்தது, கடந்த ஜூன் மாதம் வ.புதுப்பட்டி ரேணுகா தேவி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் மகாலட்சுமி என்பவரிடம் 6 பவுன் செயின் பறித்தது தெரியவந்தது. கைது செய்த 6 பேரிடமிருந்து 9 பவுன் நகை மற்றும் கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இவர்கள் கோவில் திருவிழாக்கள் நடைபெறும் ஊர்களுக்கு குழுவாக சென்று கூட்ட நெரிசலை பயன்படுத்தி நகை திருட்டில் ஈடுபட்டது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    • விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
    • அறங்காவலர் ராதாகிருஷ்ணன் சேலம் டவுன் போலீசில் புகார் கொடுத்தார்.

    சேலம்:

    சேலம் டவுன் 2-வது அக்ரஹாரத்தில் பிரசித்தி பெற்ற காசிவிஸ்வநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூரில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.

    தற்போது இந்த கோவில் பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    இந்த நிலையில் கோவில் சுவரில் ஒரு அரசியல் கட்சியின் போஸ்டர் மற்றும் சினிமா போஸ்டர் அத்துமீறி ஒட்டப்பட்டது. இது குறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் கண்டுக்கொள்ளவில்லை.

    இந்த நிலையில் திருத்தொண்டர்கள் சபை அறங்காவலர் ராதாகிருஷ்ணன் சேலம் டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் விசாரணை நடத்திய போலீசார் திறந்த வெளிகள் அழகு சீர்குலைப்பு தடுப்பு சட்டத்தின் கீழ் சம்பந்தபட்டவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கார்த்திகை தீபத்திருநாள் சாமி தரிசனம் செய்ய கோவில்களில் பக்தர்கள் குவிந்தனர்
    • பரணி தீபம் தரிசனம் செய்து மகிழ்ந்தனர்

    திருச்சி, 

    இந்துக்களின் முக்கிய விழாக்களில் ஒன்றான கார்த்திகை தீப திருவிழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மக்கள் வீடுகளின் வெளிப்புறங்களிலும், வீட்டு முற்றத்திலும் விளக்கேற்றிக் கொண்டாடுவார்கள். இதேபோல கோவில்களிலும் தீப திருவிழா கொண்டாடப்படும். திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் நம்பெருமாள், திருவானைக்காவல் ஜம்புகேசுவரர், மலைக்கோட்டை தாயுமானவர், உறையூர் வெக்காளியம்மன், பஞ்சவர்ணேஸ்ரர்,  சமயபுரம் மாரியம்மன், திருபட்டூர் பிரம்மா, வயலூர் முருகன், குணசீலம் பெருமாள் கோயில் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. கோயில்களில் ஏற்றப்பட்டிருக்கும் பரணி தீபத்தை பக்தர்கள் தரிசித்து மகிழ்ந்தனர்.

    • சோழவந்தான் பிரளயநாதர்சுவாமி கோவிலில் கார்த்திகை மாத பிரதோஷ விழா நடந்தது.
    • மண்ணாடிமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்திலும் கார்த்திகை மாத பிரதோஷ விழா நடைபெற்றது.

    சோழவந்தான்

    சோழவந்தான் பிரளயநாதர்சுவாமி கோவிலில் கார்த்திகை மாத பிரதோஷ விழா நடந்தது. இவ்விழாவை முன்னிட்டு நந்தி பெருமானுக்கு பால், தயிர் உள்பட 12 திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து மூலவருக்கு அபிஷேகம் நடைபெற்று அம்பாலும் சுவாமியும் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். சிறப்பு பூஜை நடைபெற்று அன்னதானம் வழங்கப்பட்டது.

    இதேபோல் தென்கரை அகிலாண்ட ஈஸ்வரி சமேத மூலநாதர் சுவாமி கோவிலிலும், திருவேடகம் ஏடகநாதர் சுவாமி கோவிலிலும், திருவாலவாயநல்லூர் கிராமத்தில் உள்ள மீனாட்சிசுந்தரேஸ்வரர் ஆலயத்திலும், மண்ணாடிமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்திலும் கார்த்திகை மாத பிரதோஷ விழா நடைபெற்றது. இந்த பிரதோஷ விழாவில் பக்தர்கள் ஏராளமானவர் கலந்து கொண்டனர்.

    • விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி செயல்படுத்தி வருகிறார்.
    • விவசாயிகளின் பிரச்சினைக்கு முதல்-அமைச்சர் நிரந்தர தீர்வை ஏற்படுத்தித்தர வேண்டும்.

    தரங்கம்பாடி:

    பா.ஜனதா தேசிய மகளிர் அணி தலைவியும், எம்.எல்.ஏ.வுமான வானதியின் கணவர் சீனிவாசனுக்கு 60 வயது பூர்த்தி அடைந்ததை தொடர்ந்து தம்பதியினர் தரங்கம்பாடி அடுத்த திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு நேற்று குடும்பத்துடன் வந்தனர்.

    அங்கு இருவருக்கும் சஷ்டியப்த பூர்த்தி நடந்தது.

    தம்பதிகள் இருவரும் மாலை மாற்றிக் கொண்டனர்.

    பின்னர் அனைவரும் கோவிலில் உள்ள பிற சன்னதிகளில் சாமி தரிசனம் செய்தனார்.

    பின்னர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பு ஆக்குவதற்கு பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

    ஆனாலும், காவிரி நீர் கிடைக்காமலும், பருவமழை பொய்த்து போவதாலும் விவசாயிகள் கடும் துயரத்திற்கு ஆளாகி உள்ளனர்.

    விவசாயிகளின் நலனை பாதுகாக்க வேண்டும். நானும் டெல்டாகாரன் தான் என கூறும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை ஏற்படுத்தித்தர வேண்டும்.

    பயிர் காப்பீடு திட்டத்தில் பிரதமர் முன்னுரிமை கொடுத்தாலும் மாநில அரசு பயிர் காப்பீட்டில் தன் பங்கை கொடுக்காததால் விவசாயிகளுக்கு முழுமையான இழப்பீடு கிடைக்கவில்லை என்றார்.

    அப்போது பா.ஜனதா மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம், மாவட்ட தலைவர் அகோரம், மத்திய அரசு வக்கீல் ராஜேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • மதுரை ெரயில் நிலைய வளாகத்தில் உள்ள கோவிலை அகற்றக்கூடாது.
    • ெரயில்வே கோட்ட என்ஜினீயர் சூரியமூர்த்தியிடம் பா.ஜனதா, இந்து அமைப்புகள் மனு கொடுத்தது.

    மதுரை

    மதுரை ெரயில் நிலைய கிழக்கு நுழைவு வாயில் பகுதியில் பழமையான செல்வ விநாயகர் கோவில் உள்ளது. தற்போது ரெயில் நிலையத்தில் விரிவாக்க பணிகள் நடந்துவரும் நிலையில் விநாயகர் கோவில் அகற்றப்பட உள்ளதாக தகவல் வெளியானது.

    இந்த நிலையில் பா.ஜனதா மாநகர் மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன் தலைமையில் விசுவ இந்து பரிஷத் நிர்வாகிகள் பாண்டியன், வெங்கடேசன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கிழக்கு நுழைவு வாயில் பகுதியில் திரண்டு கோவிலை அகற்றக்கூடாது என வலியுறுத்தி முழக்கமிட்டனர். பின்னர் ெரயில்வே கோட்ட என்ஜினீ யர் சூரியமூர்த்தியிடம் அவர்கள் மனு அளித்தனர்.

    • திருமுருகநாத சுவாமி கோவிலில் ஒரு லட்சத்து எட்டு தீபம் ஏற்றும் திருவிழா வருகிற 26-ந் தேதி நடைபெறவுள்ளது.
    • திருப்பூா் சேக்கிழாா் புனித பேரவையினா் சாா்பில் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    திருப்பூர்:

    காா்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு, திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவிலில் ஒரு லட்சத்து எட்டு தீபம் ஏற்றும் திருவிழா வருகிற 26-ந் தேதி நடைபெறவுள்ளது.திருமுருகநாத சுவாமி அறக்கட்டளை-திருப்பூா் சேக்கிழாா் புனித பேரவையினா் சாா்பில் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது.பக்தா்கள் பங்களிப்புடன் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று சேவையாற்ற விருப்பமுள்ளவா்கள் 78454-81121 என்ற செல்போன் எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று கோவில் அறங்காவலா் குழுவினா், கோவில் நிா்வாகத்தினா் தெரிவித்துள்ளனா்.

    • வியாக்ரபாதீஸ்வரர் கோவில் வளாகத்தில் சூரசம்ஹாரம் நடைபெற்றது.
    • நெல்களத்தில் விவசாயம் செழிக்க வேண்டி விநாயகர் முகத்தில் வந்த சூரனை முருகப்பெருமான் வதம் செய்தார்.

    செய்துங்கநல்லூர்:

    செய்துங்கநல்லூரில் மிகவும் பழமையான ஆலயமான சிவகாமி அம்பாள் சமேத பதஞ்சலி வியாக்ரபாதீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.

    இந்த ஆலயம் கடந்த 12 வருடங்களுக்கு முன்பு வரை திருப்பணி இன்றி கிடந்தது. உள்ளூர் பிரமுகர்கள் மற்றும் வி.கோவில் பத்து, செய்துங்கநல்லூர் ஆன்மிக பேரவை சார்பில் இந்த கோவிலில் திருப்பணி நடந்தது. கொடி மரம் வைக்கப்பட்டது. பள்ளிஅறை கட்டப்பட்டது.

    63 நாயன்மார்கள் சிலைகள் மீண்டும் சீரமைக்கப்பட்டது. 100 வருடங்களுக்கு முன்பு நடத்தப்பட்ட அனைத்து திருவிழாக்களும் மீண்டும் நடத்தப்பட்டது. தற்போது திருப்பணி செய்து கும்பாபி சேகம் நடந்தது, பக்தர்கள் கூட்டம் அதிகரித்து ள்ளது. இந்த கோவிலை தென் தில்லை எனும் தென் சிதம்பரம் என்றும் அழைப்பர். இந்த கோவிலில் கார்த்திகை திருவிழா மற்றும் சஷ்டி திருவிழா நடந்து வருகிறது. நீண்ட நாள்களுக்கு பிறகு இந்த வருடம் சூரசம்காரம் நிகழ்ச்சி நடந்தது.

    இதற்காக கடந்த 6 நாள்கள் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிசேகம், அலங்காரம் நடந்து வந்தது. அதன் பின்னர் சூரசம்காரத்தை முன்னிட்டு அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டது. சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிசேகம், அலங்காரம் பூஜைகள் நடந்தது. அதன்பின்னர் மாலையில் முருகப்பெருமானுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது.

    கோவில் வளாகத்தில் சூரசம்ஹாரம் நடைபெற்றது. அதை தொடர்ந்து அருகே உள்ள நெல்களத்தில் விவசாயம் செழிக்க வேண்டி விநாயகர் முகத்தில் வந்த சூரனை முருகப்பெருமான் வதம் செய்தார். அதன் பின்னர் விநாயகர் கோவில் முன்பு வந்து சூரபத்மனை வதம் செய்தார். பின்னர் கோவிலுக்கு சென்றார். அங்கு சிறப்பு அபிசேகம் நடந்தது. அதன் பின் அலங்கார பூஜை நடந்தது. பின்னத் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    பூஜை ஏற்பாடுகளை அர்ச்சகர்கள் முத்துராமன், பாலா தலைமையில் குழுவினர் செய்திருந்தனர். விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குரு மாரியப்பன் தலைமையில் ஆன்மிக பேரரவையினர் செய்திருந்தனர்.

    • வாழைமர பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது.
    • இதற்கான ஏற்பாடுகளை கோவில் விழா கமிட்டினர் சிறப்பாக செய்திருந்தனர்.

    சிவகாசி

    விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள துலுக்கன்குறிச்சியில் அருள்பாலித்து வரும் பிரசி த்தி பெற்ற வாழை மர பால சுப்ரமணிய சுவாமி கோவி லில் கடந்த 13-ந்தேதி கந்த சஷ்டி விழா நிகழ்ச்சியை முன்னிட்டு ஏராளமான பக் தர்கள் காப்பு கட்டி விரதம் தொடங்கினர்.

    இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை கோவி லில் சிறப்பு ஹோமம் நடை பெற்றது. நேற்று (சனிக் கிழமை) கந்தசஷ்டியை முன்னிட்டு காலை 8 மணிக்கு மேல் மங்கள இசை, விக்னேஸ்வர பூஜை, தீபாராதனை, மகாபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடை பெற்றது.

    அதனைத் தொடர்ந்து மாலை 5 மணிக்கு மேல் கஜமுக சூரன், சிங்காசூரன், தாரகாசூரன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி கோவில் வளாகத் தில் பிரம்மாண்டமாக நடை பெற்றது.

    மாலை 7 மணிக்கு சுவா மிக்கு பாலபிஷேகம் நடை பெற்றது. விழாவின் தொடர்ச்சியாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு வள்ளி தெய் வானை சமேத சிவசுப்பிர மணிய சுவாமிக்கு திருக்கல் யாணம் மற்றும் வாழைமர பாலசுப்பிரமணிக்கு புஷ் பாஞ்சலி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்ட னர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து உலக நன்மைக்காகவும், குழந்தை வரம் வேண்டியும், வைப்பாற்றில் தொடர்ந்து தண்ணீர் வரத்து வேண்டி யும், கடன் பிரச்சினை தீரவும், நோய் நொடியின்றி வாழ்வதற்கும் சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றன. இதற்கான ஏற்பாடுகளை கோவில் விழா கமிட்டினர் சிறப்பாக செய்திருந்தனர்.

    • உமாபதி மகள் திருமணம் கங்கைகொண்டான் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
    • இதனை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியை சேர்ந்தவர் உமாபதி (வயது 60). இவரது மகள் திருமணம் கங்கைகொண்டான் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அப்போது திருமணத்திற்காக 10 பவுன் நகை மற்றும் 12 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை திருமண மண்டபத்தில் வைத்து விட்டு நெய்வேலி வேலுடையான்பட்டு கோவிலுக்கு குடும்பத்துடன் சென்றனர்.

    பின்னர் சாமி கும்பிட்டு விட்டு மீண்டும் திருமண மண்டபத்திற்கு வந்து மணமகள் அறைக்கு சென்று பார்த்தபோது 10 பவுன் தங்க நகை மற்றும் 12 ஆயிரம் பணத்தை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த உமாபதி நகை மற்றும் பணத்தை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதனை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. இதன் மதிப்பு 5 லட்சம் ஆகும். இது குறித்து மந்தாரக்குப்பம் போலீஸ நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • முதல்-அமைச்சர் ரங்கசாமி உறுதி
    • விரிவாக்கத்துக்கு இடையூறாக இருப்பதாகக்கூறி தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், பொதுமக்கள் எதிர்ப்பை மீறி இடித்து அகற்றினர்.

    புதுச்சேரி:

    விழுப்புரம்- நாகை 4 வழிச்சாலை பணிக்கு தேவையான இடங்கள் அரசால் கையகப்படுத்தப் பட்டது.

    வில்லியனூர் அருகே அரியூரில் 50 ஆண்டு பழமையான அங்காளம்மன் கோவிலை, விரிவாக்கத்துக்கு இடையூறாக இருப்பதாகக்கூறி தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், பொதுமக்கள் எதிர்ப்பை மீறி இடித்து அகற்றினர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தலைமையில், சபாநாயகர் ஏம்பலம் செல்வம் முன்னிலையில் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து முறையிட்டனர். கிராம மக்கள் கோரிக்கையை கேட்டறிந்த முதல்-அமைச்சர் ரங்கசாமி, இடிக்கப்பட்ட அங்காளம்மன் கோவிலை அரியூரில் வேறு இடத்தில் புதிதாக கட்டித்தருவதாக உறுதியளித்தார்.

    இதையேற்று கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    • தேங்காயை இரு பாதியாக உடைத்து அதில் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும்.
    • இரண்டு திரி சேர்த்து முறுக்கி ஏற்றுவது நலம்.

    தேங்காய் விளக்குகள்

    தேங்காயை இரு பாதியாக உடைத்து அதில் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும்.

    இப்படி ஏற்றினால் எந்த காரியமும் சித்தியாகும் என்பது நம்பிக்கை.

    விளக்கு ஏற்றும் விதிமுறைகள்

    1. விளக்கில் எண்ணெய் விட்டு எத்தனை திரிகளைப் போட்டிருந்தாலும் அத்தனையும் ஏற்றிட வேண்டும்.

    குறைந்த பட்சம் இரண்டு திரிகளாவது ஏற்ற வேண்டும்.

    2. நெய் வேத்தியங்கள் நிவேதனம் செய்யும் வாழை இலையின் பக்கத்தில் விளக்கேற்றுவது மிகவும் சிறந்தது.

    3. ஊது பத்திகளை பூஜைக்கு வைத்த வாழைப்பழங்களின் மேல் குத்தி ஏற்றுதல் கூடாது.

    ஊது பத்திகளுக்கென்று உரிய ஸ்டாண்டை பயன்படுத்துதல் நல்லது.

    இல்லையேல் ஒரு சிறிய பாத்திரத்தில் அரிசியை நிரப்பி அதில் ஊது பத்திகளைக் குத்தலாம்.

    4. கற்பூரம் ஏற்றும் போது தட்டில் சிறிதளவு திருநீறை வைத்து அதன் மேல் கற்பூரத்தை ஏற்ற வேண்டும்.

    திருநீறு இல்லையேல் வாழை இலையிலோ வெற்றிலையையோ வைத்து ஏற்றலாம்.

    பூஜைக்குரிய வெற்றிலையை வைத்து கற்பூரம் ஏற்றுதல் தவறு.

    5. பூஜை தொடங்கும் முன் வீட்டில் சுமங்கலி குத்துவிளக்கை ஏற்றி விட்டு வணங்கிய பிறகு பூஜை செய்தால் நிச்சயம் பலன் உண்டு.

    6. சுபகாரியங்கள் வீட்டில் நடைபெற விளக்கு பூஜை செய்து வழிபட்டால் நற்பலன்களை கண்டிப்பாக பெறலாம்.

    7. விளக்கு பூஜை செய்யும் போது குத்து விளக்கிற்கு முன் சிறிது மஞ்சள் தூளால் சிறு விநாயகரின் சிலையை செய்து குங்குமமிட்டு அவரை அங்கு வீற்றிருக்க செய்ய வேண்டும்.

    8. தீபம் ஏற்ற தூய்மையான புதிய அகல்விளக்கை பயன்படுத்த வேண்டும்.

    ஏற்றிய பழைய அகல் விளக்கில் தீபம் கோவில்களில் மறுபடியும் ஏற்றக் கூடாது.

    9. அகல் விளக்கில் நெய் அல்லது நல்லெண்ணெ ஊற்றி அதன் பின்பு 5 நூல் கொண்ட நூல் திரி போட்டு

    திரியின் நுனியில் சிறிது கற்பூரம் வைத்து அதன் பின்பு விளக்கு ஏற்ற வேண்டும்.

    10. விநாயக பெருமானுக்கு-1, 7 தீபம், முருகருக்கு-6 தீபம், பெருமாளுக்கு-6 தீபம், நாக அம்மனுக்கு-4 தீபம்,

    சிவனுக்கு-3 அல்லது 9 தீபம், அம்மனுக்கு-2 தீபம், மகாலட்சுமிக்கு-8 தீபம் என ஏற்றி வழிபட வேண்டும்.

    11. தீபங்களை வாகனங்களுக்கு முன்பாகவும் ஏற்றலாம்.

    சிவன் கோவிலில் நந்திக்கு முன்பாகவும், அம்மன்-சிங்கம்-நந்தி முன்பாக, பிள்ளையார்- பெருச்சாளி முன்பாக,

    பெருமாள்- கருடன் முன்பாக, முருகர்- மயில் முன்பாக ஏற்ற வேண்டும்.

    12. தீராத நோய்கள் தீர ஞாயிறு மாலை ராகு காலத்திலும், குடும்ப பிரச்சினைகள் தீர செவ்வாய் ராகு காலத்திலும்,

    குடும்பம் மட்டும் தனிப்பட்ட வேண்டுதலுக்கு வெள்ளிக்கிழமை ராகு காலத்திலும்,

    துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை விளக்கு-2  என அம்மனை தீபம் நோக்கியவாறு ஏற்றி மனமுருகி வழிபட வேண்டும்.

    13. விளக்கு தீபம் ஏற்றும்போது முதலில் விளக்கில் நெய் அல்லது எண்ணெய் ஆகியவற்றை ஊற்றி பிறகே பஞ்சு திரியிட்டு தீபம் ஏற்ற வேண்டும்.

    அப்படி முறையாக ஏற்றிய தீபம் வீட்டில் உள்ள இருளை அகற்றுவதோடு,

    வீட்டில் உள்ளோர் அனைவரின் மன இருளையும் அகற்றி, தெளிவான சிந்தனையைத் தூண்டி,

    சிறந்த முறையில் செயாலாற்ற வைத்து, நிலையான அமைதியைத் தரும்.

    14. காலையில் உஷத் காலத்திலும், மாலையில் சூரிய அஸ்தமனத்துக்கு முன்பும் வீட்டில் தீபம் ஏற்ற வேண்டும்.

    15. இரண்டு திரி சேர்த்து முறுக்கி ஏற்றுவது நலம்.

    16. ஒரு திரி ஏற்றும் போது கிழக்கு திசை நோக்கி ஏற்றவும்.

    நாம் ஏற்றும் திரியை பொறுத்து அதற்கு உண்டான பலன்களை அடையலாம்.

    17. புதிய மஞ்சள் துணி திரி போட்டு விளக்கு ஏற்றினால் செய்வினை தீயசக்திகள் தொந்தரவுகள் அண்டாது.

    18. தீபத்தை பூவின் காம்பினால் அணைக்கவும். வாயினால் ஊதக் கூடாது.

    19. தீப சரஸ்வதி என்று மூன்று முறையும், தீப லட்சுமி என்று மூன்று முறையும் குல தெய்வத்தை நினைத்து மூன்று முறையும் என தீபத்தை பன்னிரண்டு முறை வணங்க வேண்டும்.

    20. தீபம் வெறும் விளக்கு அல்ல, நம் வாழ்வின் கலங்கரை விளக்கு.

    மங்களம் தங்கவும் இன்பம் பெருகவும் தீபம் ஏற்றுவோம்.

    தீபமேற்றி என்றும் இறைவெளிச்சத்தில் இன்பம் காண்போம்.

    ×