வாழைமர பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி

வாழைமர பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் விழா கமிட்டினர் சிறப்பாக செய்திருந்தனர்.
துலுக்கன்குறிச்சியில் உள்ள வாழைமர பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழாவையொட்டி, சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றபோது எடுத்தபடம்.
துலுக்கன்குறிச்சியில் உள்ள வாழைமர பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழாவையொட்டி, சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றபோது எடுத்தபடம்.
Published on

சிவகாசி

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள துலுக்கன்குறிச்சியில் அருள்பாலித்து வரும் பிரசி த்தி பெற்ற வாழை மர பால சுப்ரமணிய சுவாமி கோவி லில் கடந்த 13-ந்தேதி கந்த சஷ்டி விழா நிகழ்ச்சியை முன்னிட்டு ஏராளமான பக் தர்கள் காப்பு கட்டி விரதம் தொடங்கினர்.

இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை கோவி லில் சிறப்பு ஹோமம் நடை பெற்றது. நேற்று (சனிக் கிழமை) கந்தசஷ்டியை முன்னிட்டு காலை 8 மணிக்கு மேல் மங்கள இசை, விக்னேஸ்வர பூஜை, தீபாராதனை, மகாபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடை பெற்றது.

அதனைத் தொடர்ந்து மாலை 5 மணிக்கு மேல் கஜமுக சூரன், சிங்காசூரன், தாரகாசூரன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி கோவில் வளாகத் தில் பிரம்மாண்டமாக நடை பெற்றது.

மாலை 7 மணிக்கு சுவா மிக்கு பாலபிஷேகம் நடை பெற்றது. விழாவின் தொடர்ச்சியாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு வள்ளி தெய் வானை சமேத சிவசுப்பிர மணிய சுவாமிக்கு திருக்கல் யாணம் மற்றும் வாழைமர பாலசுப்பிரமணிக்கு புஷ் பாஞ்சலி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்ட னர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து உலக நன்மைக்காகவும், குழந்தை வரம் வேண்டியும், வைப்பாற்றில் தொடர்ந்து தண்ணீர் வரத்து வேண்டி யும், கடன் பிரச்சினை தீரவும், நோய் நொடியின்றி வாழ்வதற்கும் சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றன. இதற்கான ஏற்பாடுகளை கோவில் விழா கமிட்டினர் சிறப்பாக செய்திருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com