search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TDP"

    பாகுபலி கதாநாயகன் பிரபாசுடன், ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கையை இணைத்து கிசு கிசு செய்திகள் இணைய தளங்களில் உலா வருவது குறித்து தெலுங்குதேசம் கட்சி மீது போலீசில் புகார் தெரிவித்துள்ளனர். #Prabhas #JaganmohanReddy #sharmilareddy

    ஐதராபாத்:

    ஆந்திராவில் முக்கிய எதிர்க்கட்சியாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் இருந்து வருகிறது. இதன் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கை ‌ஷர்மிளாவும் தீவிர அரசியலில் இருந்து வருகிறார். அவருக்கு தற்போது 45 வயது ஆகிறது. இவரது கணவர் பெயர் அனில்குமார். இவர்களுக்கு குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் ‌ஷர்மிளாவையும், பாகுபலி பட கதாநாயகன் பிரபாசையும் இணைத்து கிசு கிசு செய்திகள் இணைய தளங்களில் உலா வருகின்றன.

    இது ஜெகன்மோகன் ரெட்டி குடும்பத்திற்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆளும் கட்சியான தெலுங்தேசம் கட்சி தான் இந்த கிசு கிசுவை பரப்பி வருவதாக அவர்கள் கருதுகின்றனர்.


    இது சம்பந்தமாக ‌ஷர்மிளா தனது கணவர் அணில்குமாருடன் சென்று ஐதராபாத் போலீஸ் கமி‌ஷனர் அஞ்சனிகுமாரை சந்தித்தார்.

    அதில், தன்னைப்பற்றி தெலுங்குதேசம் கட்சியினர் வேண்டும் என்றே உள்நோக்கத்துடன் தவறான செய்திகளை பரப்பி வருகிறார்கள். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

    இந்த சந்திப்புக்கு பின் வெளியே வந்த ‌ஷர்மிளா நிருபர்களிடம் கூறியதாவது:-

    விரைவில் பாராளுமன்ற தேர்தல் வர உள்ள நிலையில் எங்கள் கட்சிக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் என்னைப்பற்றி தவறான தகவலை பரப்பி வருகிறார்கள். 2014 பாராளுமன்ற தேர்தலின் போதும் இதேபோல வதந்திகளை பரப்பினார்கள். இப்போதும் அதேபோன்ற வதந்தி பரப்பப்படுகிறது.

    இதன் பின்னணியில் தெலுங்குதேசம் கட்சி இருப்பதாக உறுதியாக கருதுகிறேன். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக போலீசில் புகார் கொடுத்துள்ளேன்.

    நான் எனது கணவர், குழந்தைகளுடன் ஒரு தாயாக, மனைவியாக குடும்ப பிணைப்புடன் வாழ்ந்து வருகிறேன். ஆனால் சகித்துக் கொள்ள முடியாத அளவிற்கு மோசமான வதந்தியை பரப்புகிறார்கள். நான் இதில் மவுனம் சாதித்தால் தவறான அர்த்தம் உருவாகி விடும். எனவே தான் புகார் கொடுத்தேன்.

    இவ்வாறு ‌ஷர்மிளா கூறினார். #Prabhas #JaganmohanReddy #sharmilareddy

    ஆந்திர முதல்மந்திரி சந்திர பாபு நாயுடு நாளை திமுக தலைவர் முக ஸ்டாலினை சந்திக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #MKStalin #ChandrababuNaidu #DMK #TDP
    ஐதராபாத்:

    பாஜகவின் கூட்டணியில் இருந்து விலகிய பின்னர் ஆந்திர மாநில முதல்மந்திரி சந்திரபாபு நாயுடு, பாஜகவையும், மோடியையும் சரமாரியாக தாக்கி வருகிறார். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிரான கூட்டணியை ஒன்று திரட்டும் முனைப்பில் தற்போது செயலாற்றி வருகிறார்.

    அதன் ஒருபகுதியாக சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார். அந்த பேச்சு வார்த்தையின் முடிவில், இருகட்சிகளின் கூட்டணி குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதேபோல், பாஜகவுக்கு எதிராக அனைத்து மாநில கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் எனவும் அவர் அப்போது கூறியிருந்தார்.



    அதன்படி, தமிழகத்தில் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள திமுக கட்சியின் தலைவர் முக ஸ்டாலினை நாளை சந்திரபாபு நாயுடு சந்திக்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது. தென் இந்தியாவில் பாஜவின் வெற்றிக்கு மிகப்பெரிய தடையாக இந்த சந்திப்பு இருக்கும் எனவும், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாக இது அமையும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. #MKStalin #ChandrababuNaidu #DMK #TDP
    மத்திய அரசுக்கு எதிராக பாராளுமன்றத்தில் கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிக்கும்படி தெலுங்கு தேசம் எம்.பி.க்களுக்கு கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
    புதுடெல்லி :

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் முதல் நாளான நேற்று, மத்திய அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்காக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.  தெலுங்குதேசம் சார்பிலும் நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.

    இதனை சபாநாயகர் ஏற்றுக்கொண்டு அனுமதி அளித்துள்ளார். இந்த மசோதா மீதான விவாதம் வரும் 20-ம் தேதி  காலை 11 மணிக்கு நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அப்போது மத்திய அரசு நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

    இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு எதிராக கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என தெலுங்கு தேசம் கட்சியின் எம்.பி.க்களுக்கு அக்கட்சியின் மாநிலங்களவை கொறடா கே.நாராயன ராவ் உத்தரவிட்டுள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :-

    தெலுங்கு தேசம் கட்சியின் மாநிலங்களவை எம்.பி.க்கள் அனைவரும் இன்று மற்றும் நாளை நடைபெறும் பாராளுமன்ற கூட்டத் தொடரில் தவறாமல் பங்கேற்க வேண்டும். அப்போது, மத்திய அமைச்சரவைக்கு எதிராக கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எம்.பி.க்கள் ஆதரவு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 
    2019 சட்டசபை தேர்தலில் ஆந்திர மாநிலம் நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை வாணி விஸ்வநாத் தெலுங்கு தேசம் சார்பில் போட்டியிட இருப்பதாக கூறப்படுகிறது. #VaniViswanath
    நகரி:

    ஆந்திர மாநிலம் நகரி தொகுதியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் நடிகை ரோஜா. இவர் கடந்த 2014-ம் ஆண்டு நடந்த தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான காளிமுத்து கிருஷ்ணம்ம நாயுடுவை எதிர்த்து போட்டியிட்டு 858 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

    தமிழர்கள் இந்த தொகுதியில் அதிகம் வசித்தாலும் தமிழ் நடிகையான ரோஜா குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே வெற்றி பெற முடிந்தது. பெண்களின் வாக்கு அதிகமாக பதிவானதும் ரோஜா வெற்றிக்கு ஒரு காரணம்.

    இந்த நிலையில் 2019 சட்டசபை தேர்தலில் நடிகை ரோஜாவை எதிர்த்து ஒரு நடிகையை களமிறக்க தெலுங்கு தேசம் கட்சி முடிவு செய்தது. அதன்படி நடிகை வாணி விஸ்வநாத்தை வேட்பாளராக தெலுங்கு தேசம் கட்சி தேர்வு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

    சமீபத்தில் நகரிக்கு வந்த நடிகை வாணி விஸ்வநாத் ஆந்திர முதல்வர் சந்திரபாபுநாயுடு அழைப்பின் பேரில் விரைவில்தான் தெலுங்கு தேசம் கட்சியில் இணையப் போவதாக அறிவித்தார்.

    நகரி தொகுதியில் வாணி விஸ்வநாத்தையே களம் இறக்குவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த மூத்த நிர்வாகி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.


    ரோஜாவுக்கு நகரியில் உள்ள எதிர்ப்புகள், பெண்கள் ஆதரவு ஆகியவைகளை தெலுங்கு தேசம் கட்சி தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள தயாராகி வருகிறது. சட்டசபை தேர்தலில் நகரி தொகுதியில் 2 நடிகைகள் போட்டி போட இருப்பது முடிவாகிவிட்டது.

    நகரி தொகுதியில் உள்ள புத்தூரில் அரசு மருத்துவமனை கட்டிடம் திறப்பு விழா நடந்தது. இதில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.வும் நடிகையுமான ரோஜா தலைமை தாங்குவதாகவும், தெலுங்கு தேசம் கட்சி மந்திரி அமர்நாத் ரெட்டி கட்டிடத்தை திறந்து வைப்பதாகவும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

    விழாவில் பங்கேற்ற நடிகை ரோஜா பஞ்சாயத்து ராஜ் அலுவலகத்தில் இருந்து பாத யாத்திரையாக தொண்டர்களுடன் வந்தார். அப்போது தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்கள் குடிபோதையில் ரகளை செய்து ரோஜாவை தாக்க முயன்றனர். தொண்டர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் அவரை அரண் போல் பாதுகாத்து மேடைக்கு அழைத்து வந்தனர். பின்னர் நிகழ்ச்சிகள் பிரச்சினையின்றி நடந்தது. கட்டிட திறப்பு விழாவுக்கு ரோஜா தலைமை தாங்கினார். மந்திரி அமர்நாத் ரெட்டி கட்டிடத்தை திறந்து வைத்தார். மேடையில் நடிகை ரோஜாவும், மந்திரி அமர்நாத் ரெட்டியும் சிரித்து பேசிக் கொண்டிருந்தனர். #VaniViswanath #Roja
    ஆந்திர மாநிலத்தில் இரும்பு ஆலையை அமைத்துத் தரக்கோரி உண்ணாவிரதம் இருந்து வந்த தெலுங்கு தேசம் கட்சி எம்.பி ரமேஷ் உண்ணாவிரதத்தை சந்திரபாபு நாயுடு இன்று முடித்து வைத்தார். #AndhraPradesh #TDP #Ramesh
    ஐதராபாத்:

    ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலுங்கானாவை பிரித்தபோது ஆந்திராவுக்கு என சில வாக்குறுதிகளை மத்திய பா.ஜ.க அரசு அறிவித்து இருந்தது. ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து, ஒருங்கிணைக்கப்பட்ட இரும்பு ஆலை போன்ற பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருந்த நிலையில், எந்த வாக்குறுதியையும் மத்திய அரசு நிறைவேற்றவில்லை என குற்றம்சாட்டப்படுகிறது.

    இதையடுத்து, ஆந்திராவுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு மத்திய அரசுக்கு தெலுங்கு தேசம் கட்சி நெருக்கடி கொடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக, ஒருங்கிணைந்த இரும்பு ஆலையை அமைத்து தரக்கோரி, தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த எம்.பி ரமேஷ் கடப்பா மாவட்டத்தில் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார்.

    இதற்கிடையே, அவரது உண்ணாவிரதம் இன்று 11-வது நாளாக நீடித்தது. இதனால் ரமேஷின் உடல்நிலை மோசமடைந்து வருவதாக கூறப்பட்டது.

    இந்நிலையில், கடப்பா மாவட்டத்தில் உண்ணாவிரதம் இருந்து வரும் எம்.பி. ரமேஷை ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு இன்று பிறபகல் சந்தித்தார். அவரது வலியுறுத்தலின் பேரில் எம்.பி. ரமேஷ் உண்ணாவிரதத்தை கைவிட்டார். அவருக்கு பழரசம் கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார். இதைத்தொடர்ந்து அவருக்கு தேவையான முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.
    #AndhraPradesh #TDP #Ramesh
    ஆந்திர மாநிலத்தில் இரும்பு ஆலையை அமைத்துத் தரக்கோரி தெலுங்கு தேசம் கட்சி எம்.பி ரமேஷ் கால வரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். #AndhraPradesh #TDP #Ramesh
    ஐதராபாத்:

    ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலுங்கானாவை பிரித்தபோது ஆந்திராவுக்கு என சில வாக்குறுதிகளை மத்திய பா.ஜ.க அரசு அறிவித்து இருந்தது. ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து, ஒருங்கிணைக்கப்பட்ட இரும்பு ஆலை போன்ற பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருந்த நிலையில், எந்த வாக்குறுதியையும் மத்திய அரசு நிறைவேற்றவில்லை என குற்றம்சாட்டப்படுகிறது.

    இதையடுத்து, ஆந்திராவுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு மத்திய அரசுக்கு தெலுங்கு தேசம் கட்சி நெருக்கடி கொடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக, ஒருங்கிணைந்த இரும்பு ஆலையை அமைத்து தரக்கோரி, தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த எம்.பி ரமேஷ் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார்.



    அவரது உண்ணாவிரதம் இன்று 11-வது நாளாக நீடிக்கிறது. இதனால் ரமேஷின் உடல்நிலை மோசமடைந்து வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பேசிய எம்.பி ரமேஷ், ஆலை அமைப்பதற்கான மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுவிட்டதாகவும், மக்களுக்கு நாங்கள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக இறுதி வரை போராடுவேன் எனவும் தெரிவித்தார். #AndhraPradesh #TDP #Ramesh
    ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்தில் இரும்பு ஆலை அமைக்க தவறியதை கண்டித்து ஆறு நாட்களாக உண்ணாவிரதம் இருந்துவரும் தெலுங்கு தேசம் எம்.பி.யை இன்று சந்தித்த கனிமொழி ஆதரவு தெரிவித்தார்.
    ஐதராபாத் :

    ஆந்திரப்பிரதேச மாநிலம் இரண்டாக பிரிக்கப்படுவதற்கு முன்னர் கடப்பா மாவட்டத்தில் இரும்பு ஆலை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்திருந்தது. ஆனால், மாநிலம் பிரிக்கப்பட்டதற்கு பிறகு ஆந்திராவில் இரும்பு ஆலை அமைக்கும் பணிகளில் காலதாமதம் ஏற்பட்டது.

    இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் நிலையில், கடப்பா மாவட்டத்தில் இரும்பு ஆலை அமைப்பது பொருளாதார ரீதியாக சாத்தியமில்லை என மத்திய அரசு சமீபத்தில் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது. ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட் (SAIL) அளித்த அறிக்கையின் அடிப்படையில் மத்திய அரசு இதை கூறியது.

    இதற்கிடையே, இரும்பு ஆலை அமைக்கும் விவகாரத்தில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற தவறிய  மத்திய அரசு, உடனடியாக கடப்பாவில் ஆலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெலுங்குதேசம் கட்சி எம்.பி சி.எம்.ரமேஷ் என்பவர் கடப்பா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த 21-ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரத போரட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    இந்நிலையில், தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி உண்ணாவிரத போரட்டத்தில் ஈடுபட்டு வரும் சி.எம்.ரமேஷ் எம்.பி.யை இன்று நேரில் சந்தித்தார். சந்திப்பின்போது, இரும்பு ஆலை அமைப்பது தொடர்பான அவரது போராட்டத்திற்கு கனிமொழி ஆதரவு தெரிவித்துள்ளார்.

    தெலுங்கு தேசம் கட்சி, ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பாஜக கூட்டணியில் இருந்து கடந்த மார்ச் மாதம் வெளியேறியது. தற்போது, இந்த இரு கட்சிகள் இடையே கடப்பா இரும்பு ஆலை புதிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    பா.ஜ.க.வுடன் ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு ரகசிய கூட்டணி வைத்துள்ளதாக அம்மாநில எதிர்க்கட்சியான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது. #ChandrababuNaidu
    ஐதராபாத் :

    ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, பா.ஜ.க தலைவர்களுடன் ரகசிய கூட்டணி வைத்துள்ளார் என ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சத்தியநாரயணா இன்று விமர்சனம் செய்துள்ளார். ஐதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது :-

    தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி வெளியேறிய பிறகும் பா.ஜ.க தலைவர்களுடன் சந்திரபாபு நாயுடு, ரகசிய கூட்டணி வைத்துள்ளார். அதன் காரணமாகவே மத்திய அரசின் பல மக்கள் விரோத திட்டங்களை விமர்சனம் செய்யாமல் அவர் மௌனம் காத்துவருகிறார்.

    சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது மந்திரிகள் அனைவரும் எதிர்க்கட்சி தலைவர் ஜகன் மோகன் ரெட்டியை விமர்சிப்பதிலேயே கவனமாக உள்ளனர். ஆனால், நான்கு வருடம் மத்திய அரசில் அங்கம் வகித்துவிட்டு தற்போது கூட்டணியை விட்டு விலகிய அவர்கள், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காமல் மாநில நலனுக்கு எதிராக செயல்படும் பா.ஜ.க அரசின் மீது குற்றச்சாட்டுக்களை வைக்காமல் மௌனமாக உள்ளது ஏன் ? இதுகுறித்து சந்திரபாபு நாயுடு விளக்கம் அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். #ChandrababuNaidu
    ஆந்திர மாநிலத்தில் ஒருங்கிணைந்த இரும்பு தொழிற்சாலை அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி, அம்மாநில எம்.பி ரமேஷ் 3-வது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். #BJP #AndhraPradesh
    ஐதராபாத்:

    ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி அமைத்துள்ளது. மத்தியில் பா.ஜ.க ஆட்சி அமைத்ததில் தெலுங்கு தேசம் கட்சிக்கும் முக்கிய பங்கு உள்ளது. ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும், ஒருங்கிணைந்த இரும்பு தொழிற்சாலை போன்ற பல்வேறு வாக்குறுதிகளை மத்திய அரசு அப்போது அளித்திருந்தது.

    ஆனால் இந்த 4 ஆண்டு பா.ஜ.க ஆட்சியில் வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படாததால், தெலுங்கு தேசம் கட்சி பா.ஜ.க.வுடனான கூட்டணியை முறித்துக் கொண்டது. மேலும், பா.ஜ.க மீதான பல்வேறு விமர்சனங்களையும் வைத்து வருகிறது.

    இந்நிலையில், ஆந்திர மாநில பிரிவினை மசோதாவில் அளித்த வாக்குறுதியின்படி, கடப்பா மாவட்டத்தில் ஒருங்கிணைந்த இரும்பு தொழிற்சாலையை நிறுவ வேண்டும் என வலியுறுத்தி அம்மாநில தெலுங்குதேசம் எம்.பி ரமேஷ் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார்.

    ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள ஜில்லா பரிஷத் அலுவலகத்தில் நடைபெறும் இந்த காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் 3-வது நாளாக தொடர்ந்து வருகிறது. #BJP #AndhraPradesh
    ×