search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தண்ணீர்"

    • குண்டாறு அணை தனது முழு கொள்ளளவான 36 அடியை எட்டி நிரம்பி வழிகிறது.
    • மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள குற்றாலத்தில் தொடர் மழையால் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வரும் நிலையில் நேற்று சாரல் அடித்தது.

    புறநகர் மாவட்டம் முழுவதும் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. அம்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை சற்று பாதிப்படைந்தது. அங்கு 22 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. அதே நேரத்தில் அங்கு விவசாய பணிகள் மும்முரம் அடைந்துள்ளது.

    நாங்குநேரி, ராதாபுரம் ஆகிய இடங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. இன்றும் காலை முதலே ஒரு சில இடங்களில் லேசான சாரல் மழை பெய்கிறது. களக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. அங்கு 41.60 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. மாநகரில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டு வருகிறது.

    அணைகளை பொறுத்தவரை பாபநாசம், சேர்வலாறு அணை, மணிமுத்தாறு அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நம்பியாறு அணை பகுதியில் 24 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் 93.40 அடியையும், சேர்வலாறு அணை 107.87 அடியையும் எட்டியுள்ளது. அந்த அணைகளுக்கு வினாடிக்கு 1132 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணைகளில் இருந்து 104 கனஅடி நீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது. 118 அடி கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 64.20 அடியாக உள்ளது.

    தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை, தென்காசி, ஆய்குடி, சிவகிரி ஆகிய இடங்களில் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. அணைகளை பொறுத்த வரை மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளின் நீர்மட்டமும் வேகமாக அதிகரித்து வருகிறது. குண்டாறு அணை தனது முழு கொள்ளளவான 36 அடியை எட்டி நிரம்பி வழிகிறது.

    84 அடி கொள்ளளவு கொண்ட ராமநதி அணையில் நீர் இருப்பு 76 அடியாக உயர்ந்துள்ளது. இன்னும் 8 அடி நீர் உயர்ந்தால் அணை நிரம்பிவிடும். அந்த அணைக்கு வினாடிக்கு 133 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 85 அடி கொண்ட கடனா அணை நீர்மட்டம் 73.50 அடியாக உள்ளது. அங்கு 216 கனடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 72 அடி கொள்ளளவு கொண்ட கருப்பாநதி அணை நீர்மட்டம் 66.28 அடியாக உள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள குற்றாலத்தில் தொடர் மழையால் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி, சிற்றருவி என அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து இருப்பதாலும், இன்று விடுமுறை தினம் என்பதாலும் சுற்றுலா பயணிகள் அருவிகளுக்கு படையெடுத்துள்ளனர். மெயினருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருவதால் சுற்றுலா பயணிகள் ஓரமாக நின்று குளித்து மகிழ்ந்தனர்.

    • அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க கூடாது.
    • பட்டாசுகள் வெடிக்கும் போது மணல், தண்ணீரை வாளியில் வைத்துக்கொள்ள வேண்டும்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    பேராவூரணி கோக்கனட் சிட்டி இன்ஸ்பயர் லயன்ஸ் சங்கம், நகர வர்த்தகர் கழகம், பேராவூரணி லயன்ஸ் சங்கம், பேராவூரணி ரோட்டரி சங்கம், பேராவூரணி காவல்துறை, பேரூராட்சி துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு பேரணி புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கி கடை வீதி வழியாக வந்து அண்ணா சிலை அருகில் நிறைவடைந்தது.

    நிகழ்ச்சிக்கு பேராவூரணி கோக்கனட் சிட்டி இன்ஸ்பயர் லயன்ஸ் சங்கத் தலைவர் தெட்சணாமூர்த்தி தலைமை வகித்தார். நகர வர்த்தக கழக தலைவர் ஆர் பி ராஜேந்திரன், ரோட்டரி சங்கத் தலைவர் எஸ். சரவணன், பேராவூரணி லயன்ஸ் சங்கத் தலைவர் சிவநாதன், பேராவூரணி போலீஸ் இன்ஸ்பெக்டா காவேரி சங்கர், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அலுவலர் சீனிவாசன், பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் அன்பரசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அலுவலர் பேசியதாவது,

    அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க கூடாது. நீண்ட ஊதுபத்திகளை கொண்டு பட்டாசுகளை வெடிக்க வேண்டும். சிறுவர், சிறுமிகள் கண்டிப்பாக பெரியோர்கள் முன்னிலையில் தான் பட்டாசுகளை வெடிக்க வேண்டும். பட்டாசுகள் வெடிக்கும் போது மணல், தண்ணீரை வாளியில் வைத்துக் கொள்ள வேண்டும்.

    செருப்பு அணிந்து கொண்டு தான் வெடி வெடிக்க வேண்டும். முக்கியமாக வெடிக்காத பட்டாசுகளை கையில் எடுக்கக் கூடாது. பட்டாசு வெடிக்கும் போது தீக்காயம் ஏற்பட்டால் முதல் உதவியாக தீப்புண் மீது குளிர்ந்த தண்ணீரை ஊற்ற வேண்டும். எக்காரணம் கொண்டும் தீக்காயம் மீது பேனா மை, பேஸ்ட் தடவக்கூடாது. உடனடியாக மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்றார். 

    • குண்டாறு அணை மூலமாக சுமார் 1,200 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
    • ஷட்டரில் ஏற்பட்டுள்ள பழுதை சரிசெய்ய விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாய பணிகளுக்கு முக்கிய நீராதாரமாக மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள 36 அடி கொள்ளளவு கொண்ட குண்டாறு அணை விளங்கி வருகிறது.

    மாவட்டத்தில் முதலில் நிரம்பும் மிகச்சிறிய அணையான குண்டாறு அணை மூலமாக சுமார் 1,200 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பெய்ய தொடங்கியதும் அணை நிரம்பிவிட்ட நிலையில் தற்போது பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் காட்டாற்று வெள்ளத்தால் அணையின் பிரதான மதகு பகுதியில் ஷட்டரில் மோதிய மரத்தடியால் ஷட்டர் சேதம் அடைந்தது. இதனால் அணையில் இருந்து 6 அடி அளவுக்கு தண்ணீர் வீணாக வெளியேறி தற்போது 30 அடியில் நீடிக்கிறது. அதற்குமேல் அணையில் தண்ணீரை தேக்கி வைக்க முடியாத நிலை இருந்து வருவதாக விவசாயிகள் புகார் கூறினர்.

    எனவே உடனடியாக அணை ஷட்டரில் ஏற்பட்டுள்ள பழுதை சரிசெய்ய விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். தற்போது ஷட்டரில் அடைபட்ட மரத்தடியை தீவிர முயற்சிக்கு பின்னர் அதிகாரிகள் அகற்றினர். பின்னர் பழுதையும் சரி செய்தனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • மழைக்காலத்தில் மட்டுமே நீர் வரத்து இருக்கும். மற்றபடி இக்குளங்களே அப்பகுதி நிலத்தடி நீர் மட்டத்துக்கு, ஆதாரமாக விளங்குகிறது.
    • நீர்மட்டம் வெகுவாக சரிந்து தென்னை உள்ளிட்ட நீண்ட கால பயிர்களை காப்பாற்ற விவசாயிகள் போராடி வருகின்றனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை ஊராட்சி ஒன்றிய கிராமங்களில் 118 குளம், குட்டைகளும், குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் 74 குளங்களும் உள்ளன. மழைக்காலத்தில் மட்டுமே நீர் வரத்து இருக்கும். மற்றபடி இக்குளங்களே அப்பகுதி நிலத்தடி நீர் மட்டத்துக்கு, ஆதாரமாக விளங்குகிறது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக போதிய மழைப்பொழிவு இல்லாததால் அனைத்து குளங்களும் வறண்டு காணப்படுகிறது. கால்நடைகளின் குடிநீர் தேவைக்கு கூட குளங்களில் தண்ணீர் இல்லை. நீர்மட்டம் வெகுவாக சரிந்து தென்னை உள்ளிட்ட நீண்ட கால பயிர்களை காப்பாற்ற விவசாயிகள் போராடி வருகின்றனர்.

    இந்நிலையில் இந்தாண்டு வடகிழக்கு பருவமழையும் தாமதித்து வருவதால் நிலைமை மேலும் மோசமாகியுள்ளது. இப்பிரச்னையை சமாளிக்க திருமூர்த்தி அணையில் இருந்து கிராமப்புற குளங்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என தொடர்ந்து விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

    பி.ஏ.பி., நான்காம் மண்டல பாசனத்தில் ஒரு சுற்று மட்டுமே தண்ணீர் வழங்கப்பட்டது. பிரதான கால்வாய் உடைப்பு உள்ளிட்ட காரணங்களால் பாசன காலம் நீட்டிக்கப்பட்ட போது ஆயக்கட்டு பகுதியிலுள்ள குளங்களுக்கு தண்ணீர் வழங்கப்படும் என விவசாயிகள் எதிர்பார்த்தனர். ஆனால் பாசன நிலங்களுக்கோ கூடுதல் திறப்பில் தண்ணீர் வழங்கப்படவில்லை. குளங்களையும் பொதுப்பணித்துறையினர் கண்டுகொள்ளவில்லை.

    இது குறித்து விவசாயிகள் கூறுகையில், இந்தாண்டு வறட்சியால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. தற்காலிக தீர்வாக குளங்களுக்கு தண்ணீர் வழங்கலாம். குளங்களில் தண்ணீரை தேக்கினால், பல மாதங்களுக்கு, நிலத்தடி நீர் மட்டம் குறையாமல் இருக்கும். முதலாம் மண்டல பாசனத்துக்கு போதிய இடைவெளி இருப்பதால், ஆயக்கட்டு பகுதி மட்டுமல்லாது, பிற பகுதிகளிலுள்ள குளங்களுக்கும் பாசன நீரை திருப்பி விட்டால் பயனுள்ளதாக இருக்கும் என்றனர்.

    • .நள்ளிரவு நேரத்தில் திடீரென சரசு வீட்டில் இருந்த சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்துள்ளது.
    • மரக்காணம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.

    விழுப்புரம்:

    மரக்காணம் அருகே நடுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சரசு (45)நேற்று இரவு இவரது வீட்டில் வழக்கம்போல் சமையல் செய்து சாப்பிட்டுவிட்டு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர் .நள்ளிரவு நேரத்தில் திடீரென சரசு வீட்டில் இருந்த சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்துள்ளது. இதன் காரணமாக அவரது கூரை வீடும் தீ பற்றி எரிந்தது. சிலிண்டர் வெடிக்கும் போது இரவு நேரம் என்பதால் பக்கத்து வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர்களும் பயங்கர சத்தத்தை கேட்டு என்ன நடக்கிறது என தெரியாமல் அவரவர் வீட்டை விட்டு வெளியில் வெகு தூரம் ஓடி உள்ளனர். அப்போதுதான் சரசு வீட்டில் சிலிண்டர் வெடித்தது தெரியவந்துள்ளது .

    உடனே அப்பகுதி பொதுமக்கள் தீயை அணைக்க முயற்சி செய்து உள்ளனர். ஆனால் தீ வீடு முழுவதும் பரவி விட்டது. இதனால் அங்கிருந்தவர்கள் மரக்காணம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவத்திற்கு இடத்திற்கு வந்து தண்ணீர் பீய்ச்சி அணைத்தனர். இந்த தீ விபத்தில் சரசு வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து சேதமாகி விட்டது . இந்த தீ விபத்து குறித்து மரக்காணம் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பி.ஏ.பி., பாசனத்திட்டத்தின் கீழ் கோவை, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
    • தொடர்ந்து நீர் வழங்கப்பட்டு நேற்று முன்தினம் நிறைவு செய்யப்பட்டது.

    உடுமலை:

    பி.ஏ.பி., பாசனத்திட்டத்தின் கீழ் கோவை, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. பாசன நிலங்கள் நான்கு மண்டலமாக பிரித்து நீர் வழங்கப்படுகிறது.நடப்பாண்டு கோடை மற்றும் திட்ட தொகுப்பு அணைகளுக்கு அதிக பயன் அளிக்கும் தென் மேற்கு பருவ மழையும் ஏமாற்றியதால் பி.ஏ.பி., திட்ட தொகுப்பு அணைகளில் போதிய நீர்இருப்பு இல்லை.இதனால் பி.ஏ.பி., 4ம் மண்டல பாசனத்தில் கோவை, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 94 ஆயிரத்து 68 ஏக்கர் நிலங்களுக்கு முழுமையான சுற்றுக்கள் நீர் வழங்க முடியாத சிக்கல் ஏற்பட்டது.

    பாசன நிலங்களிலுள்ள நிலைப்பயிர்கள் மற்றும் கால்நடைகளின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு, கடந்த செப்டம்பர் 20 முதல் அக்டோபர் 11ந் தேதி வரை, 21 நாட்களுக்குள் ஒரு சுற்றுக்கு மொத்தம், 2 ஆயிரம் மில்லியன் கனஅடி நீர் திறக்க அரசு உத்தரவிட்டது.அதன் அடிப்படையில் திருமூர்த்தி அணையிலிருந்து 4ம் மண்டல பாசனத்திற்கு பிரதான கால்வாயில் நீர் திறக்கப்பட்டது.

    இந்நிலையில் பிரதான கால்வாயில் ஏற்பட்ட திடீர் உடைப்பு காரணமாக பாசனத்திற்கு திறக்கப்பட்ட நீர் வீணாணதோடு கால்வாய் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. இதனால் பாசன நிலங்களுக்கு நிறுத்தப்பட்ட 6 நாட்கள் மீண்டும் நீர் வழங்கப்பட்டது. இந்நிலையில் விவசாயிகள் கோரிக்கையை ஏற்று மேலும், 6 நாட்கள் நீர் திறக்க அரசு உத்தரவிட்டது. தொடர்ந்து நீர் வழங்கப்பட்டு நேற்று முன்தினம் நிறைவு செய்யப்பட்டது.

    திருப்பூர் பிரிவு கால்வாய்க்கு மட்டும் நேற்று முன்தினம் நீர் வழங்கப்பட்டு நிறைவு செய்யப்படுகிறது. 135 நாட்கள் மண்டல பாசன காலமாகக்கொண்டு 5 சுற்றுக்கள் வரை நீர் வழங்கப்பட்ட நிலையில் நடப்பாண்டு பருவ மழைகள் ஏமாற்றியதால் பாசன காலம் உயிர்த்தண்ணீர் சுற்றுடன் நிறைவு பெற்றுள்ளது.வட கிழக்கு பருவ மழையும் தற்போது துவங்கியுள்ளதால், 4ம் மண்டல பாசன நிலங்களுக்கு நீர் இருப்பை பொருத்து, நவம்பர் மாதத்தில் கூடுதல் சுற்றுக்கள் நீர் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

    • மீன் மார்க்கெட்டை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்.
    • சாமந்தான் குளத்தில் முறையாக தண்ணீர் விட வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை கீழராஜவீதியில் உள்ள நிக்கல்சன் கூட்டுறவு வங்கி அருகே அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இதற்கு மாநகர மாவட்ட செயலாளர் ராஜேஸ்வரன் தலைமை தாங்கினார்.

    மாநில மாணவரணி செயலாளர் நல்லதுரை, செயற்குழு உறுப்பினர் விருதாச்சலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில், தஞ்சை மாநகராட்சி 15 மற்றும் 25 ஆகிய வார்டுகளில் வளர்ச்சி பணிகள் மற்றும் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். கீழ்அலங்கம் பகுதியில் உள்ள மீன்மார்க்கெட்டை வேறு இடத்திற்கு மாற்றி தர வேண்டும்.

    தெற்குவீதி, கீழவீதி, கீழ்அலங்கம், கொண்டிராஜபாளையம், ஏ.ஒய்.ஏ.நாடார் ரோடு, ராவுத்தர்பாளையம், டவுன் போலீஸ் நிலையம் ரோடு ஆகிய இடங்களில் மழைநீர் வடிகால் அமைத்து தர வேண்டும்.

    சாமந்தான் குளத்தில் முறையாக தண்ணீர் விட வேண்டும்.

    அனைத்து சந்துகளிலும் சிமெண்டு சாலை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

    இதில் மாநகராட்சி கவுன்சிலர் கண்ணுக்கினியாள், ஜெயலலிதா பேரவை செயலாளர் ராமதாஸ், இலக்கிய அணி செயலாளர் ரவிச்சந்திரன், பகுதி செயலாளர்கள் செந்தில், ஆர்.செந்தில் பொதுக்குழு உறுப்பினர் அய்யாவு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பாபநாசம் அணையில் 84.80 அடி நீர் இருப்பு உள்ளது.
    • அதிகபட்சமாக சிவகிரியில் 3 மில்லிமீட்டர் மழை பெய்தது.

    நெல்லை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மழை பெய்து வருகிறது.

    நெல்லை

    நெல்லை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக அணை பகுதிகளிலும், மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக மாவட்டத்தில் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்நிலையில் நேற்று நாங்குநேரி, சேரன்மகாதேவி ஆகிய இடங்களில் லேசான சாரல் மழை பெய்தது. அதிகபட்சமாக நாங்குநேரி யில் 1 மில்லிமீட்டர் மழை பெய்தது.

    அணை பகுதிகளில் நேற்று மழை பெய்யவில்லை. பாபநாசம் மற்றும் சேர்வ லாறு அணை பகுதிக ளுக்கு வினாடிக்கு 301 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 504 கனஅடி நீர் வெளி யேற்றப்படுகிறது.

    பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையில் 84.80 அடி நீர் இருப்பு உள்ளது. 156 அடி கொள்ளளவு கொண்ட சேர்வலாறு அணையில் 96.62 அடி நீர் உள்ளது. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 55.65 அடியாகவும், கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 48.25 அடியாகவும் உள்ளது. 52.50 அடியாக உள்ள அந்த அணை நிரம்ப இன்னும் 4 அடி நீரே தேவை. இன்னும் ஓரிரு நாட்கள் மழை பெய்தால் அந்த அணை நிரம்பிவிடும்.

    தென்காசி

    தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை யொட்டி அமைந்துள்ள குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. தொடர் விடு முறை என்பதால் குற்றாலம் மெயினருவி, ஐந்தருவி, பழையகுற்றாலம் அருவி களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதி வரு கிறது. வெளி மாவட்டங் களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்தினருடன் வந்துள்ளதால் அருவிக்கரை கள் நிரம்பி காணப்படுகிறது.

    மாவட்டத்தில் செங்கோட்டை, சிவகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. வானமும் மேக மூட்டத்துடன் காணப்படு வதால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. அதிகபட்சமாக சிவகிரியில் 3 மில்லிமீட்டர் மழை பெய்தது. அணை பகுதி களை பொறுத்தவரை கருப்பாநதி மற்றும் அடவி நயினார் அணை பகுதிகளில் பலத்த மழை கொட்டியது. குறிப்பாக கருப்பாநதி அணையின் நீர்பிடிப்பு பகுதியில் நேற்று முழுவதும் விட்டு விட்டு மழை கொட்டியது.

    அந்த அணையில் 63.5 மில்லிமீட்டர் மழை கொட்டி யது. அடவிநயினாரில் 28 மில்லிமீட்டர் மழை பதிவாகி யது. 72.10 அடி கொள்ளளவு கொண்ட கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 50 அடியை எட்டியுள்ளது. இதேபோல் 132 அடி கொள்ளளவு கொண்ட அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 117 அடியை எட்டியுள்ளது. அந்த அணை நிரம்ப இன்னும் 15 அடி நீரே தேவை என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • தக்கலை பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.
    • தக்கலை சுற்று வட்டார பகுதியில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    தக்கலை:

    தக்கலை பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் தக்கலை சுற்று வட்டார பகுதியில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை முதல் தக்கலை பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் ஏராளமான வீடுகளில் தண்ணீர் புகுந்தது.

    மேலும் போக்கு வரத்து துண்டிக்கப்பட்டது. மேலும் முட்டைக்காடு குமாரபுரம் பகுதியில் ஒரு முதியவர் தண்ணீரில் சிக்கி உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அப்போது அருகில் உள்ள வர்கள் தக்கலை தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனே தீயணைப்பு துறை அதிகாரி ஜவான்ஸ் தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து முதியவரை மீட்கும் பணி யில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் முதியவர் தீய ணைப்பு வீரர்களால் மீட்கப்பட்டார்.

    • சிலர் பால் போன்று இருந்ததால் ஆர்வ மிகுதியால் தண்ணீரை கையில் எடுத்து தலையில் தெளித்தும் கொண்டனர்.
    • இதுதொடர்பாக உடனடியாக மாநகராட்சி ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் ரெயில் நிலையம் செல்லும் சாலையின் ஓரத்தில் நேற்று திடீரென்று ஊற்று ஏற்பட்டு அதில் தண்ணீர் வெள்ளை நிறமாக வந்தது.

    நேற்று ஆயுத பூஜை விடுமுறை தினம் என்பதால் அந்த பகுதி சாலை வெறிச்சோடி கிடந்தது. வாகனங்களில் சென்று வந்தோரை விட நடந்து சென்றவர்கள் தான் அதிகம் காணப்பட்டனர். சாலையோரம் வெள்ளை நிறத்தில் பால் போன்று தண்ணீர் வெளியேறியதை அந்தப் பகுதியில் நடந்து சென்ற பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்தனர்.

    ஒரு சிலர் அருகில் சென்று ஆவிபறக்க வந்த தண்ணீரை கையில் அள்ளி பருகினர். அந்த தண்ணீரில் உப்புத்தன்மை இல்லாமலும், பால்போன்று வெள்ளை நிறத்தில் இருந்ததாகவும் கூறினர். அதில் சிலர் பால் போன்று இருந்ததால் ஆர்வ மிகுதியால் தண்ணீரை கையில் எடுத்து தலையில் தெளித்தும் கொண்டனர்.

    மேலும் இதுதொடர்பாக உடனடியாக மாநகராட்சி ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் விரைந்து வந்து அந்த தண்ணீரை பாட்டிலில் எடுத்து ஆய்வு செய்வதற்காக கொண்டு சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • 3000 கன அடி தண்ணீர் 15 நாட்களுக்கு திறக்க வேண்டும்.

    தரங்கம்பாடி:

    காவிரியில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை கர்நாடக அரசு திறந்து விடவில்லை. கிருஷ்ணராஜ சாகர் அணையில் 100 அடிக்கு மேல் தண்ணீர் உள்ள நிலையில், கபினி அணையில் 70 அடிக்கு மேல் தண்ணீர் உள்ளது.

    பற்றாக்குறை காலங்களில் திறந்து விட வேண்டிய தண்ணீரை திறந்து விடாத நிலையில் உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியும் காவிரி நதிநீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் உத்தரவிட்ட 3000 கன அடி தண்ணீர் 15 நாட்களுக்கு திறக்க வேண்டும் என்ற உத்தரவையும் கர்நாடக அரசு மதிக்கவில்லை.

    காவிரியில் உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் பல்வேறு விவசாய சங்கங்கள் மற்றும் அரசியல் அமைப்புகள் சார்பில் மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் தலைமை தாங்கினார்.

    இதில் ஏராளமானோர் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

    • மழை காரணமாக நீர்வரத்து ஏற்பட்டு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
    • மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 54.25 அடியாக உள்ளது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவி வருகிறது. அணை பகுதிகளிலும் மழை காரணமாக நீர்வரத்து ஏற்பட்டு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

    நெல்லை

    நெல்லையில் நேற்று மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழையால் பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணைக்கு நீர்வரத்து ஏற்பட்டது. அங்கு 8 மில்லிமீட்டர் மழை பெய்தது.

    சேர்வலாறு அணை பகுதியில் 13 மில்லிமீட்டர் மழை பெய்தது. இந்த அணைகளுக்கு வினாடிக்கு 697 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 83.43 அடியாக உள்ளது. அணை பகுதிகளில் மழையால் பாபநாசம் அணையில் இருந்து வினாடிக்கு 1300 கனஅடி தண்ணீர் திறக்கப்படுவதால் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

    118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 54.25 அடியாக உள்ளது. இந்த அணைக்கு வினாடிக்கு 98 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இங்கு 1.8 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 44.75 அடியாகவும், நம்பியாறு அணை 12.49 அடியாகவும் நீடிக்கிறது.

    மாவட்டத்தில் களக்காடு, சேரன்மகாதேவி, கன்னடியன், நாங்குநேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக சேரன்மகாதேவியில் 1.6 மில்லிமீட்டர் மழை பெய்தது. மாஞ்சோலை, ஊத்து, நாலுமுக்கு எஸ்டேட்டுகளிலும் பரவலாக மழை பெய்தது.

    தென்காசி

    தென்காசி மாவட்டத்தில் தென்காசி, செங்கோட்டை, சிவகரி, சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. சங்கரன்கோவிலில் அதிகபட்சமாக 24 மில்லிமீட்டர் மழை பெய்தது. வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மாலையில் சுமார் 1 மணி நேரம் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் தாழ்வான பள்ளங்களில் மழை நீர் தேங்கியது. சிவகிரியில் 6 மில்லிமீட்டரும், தென்காசி யில் 4 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    அணைகளை பொறுத்த வரை கடனா நதி, கருப்பாநதி, குண்டாறு, அடவிநயினார் அணை பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

    ×