என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வழிப்பறி"
- கீழே விழுந்ததில் காயம் அடைந்த தாயையும், மகளையும் அந்த வழியாக சென்றவர்கள் மீட்டனர்.
- புஷ்பா சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார்.
கோவை,
கோவை சிங்காநல்லூர் உப்பிலிபாளையம் ஜோதி நகரை சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மனைவி புஷ்பா (வயது47). கூலி தொழிலாளி.
சம்பவத்தன்று இவர் தனது மகளுடன் மொபட்டில் அங்குள்ள பேக்கரி அருகே சென்று கொண்டிருந்தார். இவர்களை பின்தொடர்ந்து வந்த ஆட்டோ மொபட் மீது மோaதியது.
இதில் நிலைதடுமாறி புஷ்பாவும், அவரது மகளும் கீழே விழுந்தனர். அப்போது ஆட்டோவில் இருந்த 4 பேரில் ஒருவர் கீழே இறங்கி வந்து புஷ்பாவின் கைப்பையை பறித்து கொண்டு ஆட்டோவில் ஏறி தப்பினர்.
கீழே விழுந்ததில் காயம் அடைந்த தாயையும், மகளையும் அந்த வழியாக சென்றவர்கள் மீட்டனர். இதற்கிடையே பணம் அதிகம் இருக்கும் என கைப்பையை பறித்த கும்பல் அதில் ரூ.500 மட்டும் இருந்ததால் ஏமாற்றம் அடைந்து பணத்தை எடுத்து விட்டு சிறிது தூரத்தில் கைப்பையை தூக்கி எறிந்து விட்டு சென்றனர்.
இது குறித்து புஷ்பா சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி மொபட் மீது ஆட்டோவை மோத செய்து பணம் பறித்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
- பைக்கில் வந்த கும்பல் அட்டூழியம்
- போலீஸ் விசாரணை
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் டவுன் திரு.வி.க.நகரை சேர்ந்தவர் சண்முகம் (வயது 62), தொழிலதிபர். இவர் அதே பகுதியில் உள்ள புதுப்பேட்டை சாலையில் பெயிண்ட் கடை நடத்தி வருகிறார்.
நேற்று இரவு திருப்பத்தூர் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் லேசான மழை பெய்தது. இதன் காரணமாக மின்தடை செய்யப்பட்டது.
சண்முகம் பெயிண்ட் கடையை மூடி விட்டு வீட்டுக்கு செல்ல முடிவு செய்தார்.
அதன்படி நேற்று இரவு 9.30 மணி அளவில் கடையில் வசூல் ஆன ரூ.7 லட்சத்து 50 ஆயிரத்தை பணப்பையில் போட்டு, அதனை தனது பைக் முன்பகுதியில் மாட்டிக் கொண்டு பைக்கில் வீட்டுக்கு சென்றார்.
கடைக்கும், அவரது வீட்டுக்கும் சுமார் 300 மீட்டர் தொலைவு மட்டுமே உள்ளது.
வீட்டின் வாசலுக்கு சென்றதும் சண்முகம் பைக்கை நிறுத்தி இறங்க முயன்றார். அப்போது பின்னால் பைக்கில் வந்த 2 பேர் மோதுவது போல் சண்முகம் அருகில் வந்து நின்றனர்.
கொள்ளையர்கள் சண்முகத்தை கீழே தள்ளிவிட்டு, அவர் பைக் முன்பக்கத்தில் மாட்டி இருந்த பணத்தை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
இதனால் பதறிப்போன அவர் கூச்சலிட்டார். இருப்பினும் கொள்ளையர்களை பிடிக்க முடியவில்லை. இது குறித்து சண்முகம் திருப்பத்தூர் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
பைக் கொள்ளையர்களில் ஒருவர் ஹெல்மெட் அணிந்தபடியும், மற்றொருவர் முகத்தை மறைத்தபடி இருந்ததால் அவர்களை அடையாளம் காண முடியவில்லை என சண்முகம் தெரிவித்தார்.
மேலும் சண்முகம் வீட்டு வாசலில் பொருத்தப்பட்டு இருக்கும் கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.
மின்தடை செய்யப்பட்ட நேரம் என்பதால் அவர்களை அடையாளம் காண முடியவில்லை. கும்பல் திட்டமிட்டு மின்தடை ஏற்படுத்தி பணம் பரித்தார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவரது வீடு இருக்கும் பகுதியில் பழைய போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், கடைகள் என பொதுமக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள பகுதியாக விளங்குகிறது. பரபரப்பாக காணப்படும் டவுன் பகுதியில் இந்த வழிப்பறி கொள்ளை சம்பவம் அரங்கேறி உள்ளதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- கடந்த சில நாட்களாக செயின் பறிப்பு மற்றும் செல்போன் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
- வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி பகுதிகளில் கடந்த சில நாட்களாக செயின் பறிப்பு மற்றும் செல்போன் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தடப்பெரும்பாக்கம் பகுதியில் ஒரு வீட்டில் பதுங்கி இருந்த 2 வாலிபர்களிடம் விசாரணை நடத்தினர்.
அவர்கள், சென்னை அண்ணா நகரை சேர்ந்த புருஷோத்தமன், மீஞ்சூர் சூர்யா நகர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த கணேசன் என்பதும் அவர்கள் தொடர்ந்து வழிப்பறியில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
- இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் தலைமையில் தனிப்படை அமைத்து மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் தொடர்ந்து வழிபறியில் ஈடுபட்ட நபர்களை தேடி வந்தனர்.
- 4 பட்டாகத்தி, 6 செல்போன்கள், 5 இருசக்கர வாகனங்கள் மற்றும் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மதுராந்தகம்:
செங்கல்பட்டு போலீஸ் சூப்பிரண்டு வி.வி. சாய் பிரணீத் உத்தரவிட்டதன் பேரில் மதுராந்தகம் உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு சிவசக்தி மேற்பார்வையில் மதுராந்தகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் தலைமையில் தனிப்படை அமைத்து மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் தொடர்ந்து வழிபறியில் ஈடுபட்ட நபர்களை தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அய்யனார் கோவில் ஜங்ஷன் அருகே இரவு நேரங்களில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சேதுபதி (வயது 23), மதுரை மாவட்டத்தை சேரிந்த அபிஷேக்(20), மதுராந்தகத்தை சேர்ந்த லோகேஸ்வரன் (23), சின்னா என்ற சரண் (22) ஆகியோரை மதுராந்தகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம், சப்-இன்ஸ்பெக்டர்கள் மோகன்ராஜ். இளங்கோவன், குப்புசாமி மற்றும் போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். பின்பு அவர்கள் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். இதைதொடர்ந்து அவர்களிடம் இருந்து 4 பட்டாகத்தி, 6 செல்போன்கள், 5 இருசக்கர வாகனங்கள் மற்றும் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
- கத்திமுனையில் அவர்களை மிரட்டி செல்போன் மற்றும் ஒரு மோட்டார்சைக்கிளை பறித்து தப்பி சென்று விட்டனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடிவருகிறார்கள்.
மதுராந்தகம்:
விழுப்புரம் மாவட்டம் அகரம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை(27). இவர் உறவினரான பவானி (22), முருகன் ஆகியோருடன் மோட்டார் சைக்கிளல் சென்னையிவல் இருந்து விழுப்புரம் நோக்கி சென்று கொண்டு இருந்தனர். இரண்டு மோட்டார் சைக்கிளில் அவர்கள் சென்றனர்.
அச்சரப்பாக்கம் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்த போது மோட்டார் சைக்கிளில் முகமூடி அணிந்து மர்ம நபர்கள் திடீரென ஏழுமலை,பவானி, முருகன் ஆகியோரை வழிமறித்தனர். மேலும் கத்திமுனையில் அவர்களை மிரட்டி செல்போன் மற்றும் ஒரு மோட்டார்சைக்கிளை பறித்து தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து அச்சரப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடிவருகிறார்கள்.
- முதியவர் உள்பட 2 பேரிடம் கத்திமுனையில் வழிப்பறி செய்த 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
- இதில் தொடர்புடைய கோழிகுமார், தனுஷ் ஆகியோரை தேடி வருகின்றனர்.
மதுரை
மதுரை மாநகரில் கடந்த சில மாதங்களாக வழிப்பறி, நகைப்பறிப்பு போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதில் பெரும்பாலும் 17 வயதுடைய இளைஞர்கள் தான் ஈடுபடுகின்றனர்.
இந்த நிலையில் வழிப்பறியில் ஈடுபட்டதாக 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அதன் விபரம் வருமாறு:-
மதுரை ஆண்டாள் கொட்டாரம் கபீர் நகரை சேர்ந்தவர் முத்து கருப்பன் (வயது60). இவர் சம்பவத்தன்று அண்ணா நகரில் உள்ள ஆரம்ப சுகாதாரம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது 5 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து கத்திமுனையில் மிரட்டி ரூ.3 ஆயிரத்து 250-ஐ பறித்து சென்றனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் சென்னை வடபழனியை சேர்ந்த தங்கபாண்டியன் மகன் பவித்ரன், திருநகர் 3-வது நிறுத்தம் நல்லான் மகன் ராஜேஷ் குமார் (37), திருப்பாச்சேத்தி ஆவாரங்காடு முருகன் என்ற குட்டை முருகன் (40), திண்டுக்கல் பேகம்பூர் சக்திவேல் மகன் சுபாஷ் (23) ஆகிய 4 பேர் முதியவரிடம் வழிப்பறி செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
வில்லாபுரம் வேலுபிள்ளை தெருவை சேர்ந்தவர் துரைபாண்டி. இவரது மகன் செல்வம்(30). இவர் சம்பவத்தன்று நாகுபிள்ளை தோப்பு ரோட்டில் நடந்து சென்றார்.
அப்போது 6 பேர் கொண்ட கும்பல் கத்தி முனையில் மிரட்டி பணத்தை பறித்து சென்றது. இதுகுறித்த புகாரின் பேரில் கீரைத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில் வழிப்பறியில் ஈடுபட்டதுமானாமதுரை ஆவாரங்காடு சிவசிங்கம் மகன் லட்சுமணன் (32),மானாமதுரை ஆவாரங்காடு சரவணகுமார் மகன் அகிலன் (22), சிவகங்கை திருப்புவனம் நந்தகோபால் மகன் கண்ணன் என்ற கேடி கண்ணன் (20), சிவகங்கை கலியநத்தூர் முருகன் மகன் நிதிஷ்குமார் என தெரியவந்தது.
இவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய கோழிகுமார், தனுஷ் ஆகியோரை தேடி வருகின்றனர்.
- காண்டிராக்டரிடம் கத்தி முனையில் வழிப்பறி செய்யப்பட்டது.
- அவரை கைது செய்த போலீசார் எதற்காக ஆயுதங்களை வைத்திருந்தார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை மதிச்சியம் பகவதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பானுகோபன்(வயது36). கட்டிட காண்டிரக்டரான இவர், சம்பவத்தன்று இரவு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த மர்ம நபர் கத்தியை காட்டி மிரட்டி ரூ.500-ஐ பறித்துச் சென்றான். இதுகுறித்த புகாரின் பேரில் மதிச்சியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில், வழிப்பறியில் ஈடுபட்டது ஆழ்வார்புரம் வைகை வடகரையை சேர்ந்த மாரிமுத்து மகன் விஜய்(27) என தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை தெற்குவாசல் போலீசார் சம்பவத்தன்று மகால் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது மகால் 4-வது தெருவில் காளவாசலை சேர்ந்த பாண்டி மகன் நாகேந்திரன்(19) என்பவர் வாளுடன் சுற்றித்திரிந்தார். அவரை கைது செய்த போலீசார் எதற்காக ஆயுதங்களை வைத்திருந்தார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கத்தி முனையில் வழிப்பறி செய்யப்பட்டது.
- போலீசார் 3 வாலிபர்களை கைது செய்தனர்.
மதுரை
செல்லூர் சத்தியமூர்த்தி நகர் 5-வது தெருவை சேர்ந்தவர் அபூபக்கர் (வயது45). இவர் செல்லூர் 50 அடி ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அவரை 3 வாலிபர்கள் வழி மறித்த னர். அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி அபூபக்கரிடம் இருந்து ரூ.1,500-ஐ பறித்துக்கொண்டு தப்பினர்.
இந்த சம்பவம் குறித்து செல்லூர் போலீசில் அபூபக்கர் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரிடம் வழிப்பறி செய்த நபர்கள் குறித்து விசாரணை நடத்தி தேடி வந்தனர்.
இந்த நிலையில் வழிப்பறி செய்த வாலிபர்கள் செல்லூர் நந்தவனம் ஈ.வே.ரா. பெரியார் தெருவை சேர்ந்த அய்யாவு மகன் கர்ணன், செல்லூர் மண வாளன் நகர் 2-வது தெருவை சேர்ந்த முருகன் மகன் மணிகண்டன், மூர்த்தி என்பது தெரியவந்தது. இதில் கர்ணணையும் மணிகண்டனையும் போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மூர்த்தியை தேடி வருகின்றனர்.
செல்போன்கள் திருட்டு
சிவகங்கை மாவட்டம் அம்பலத்தாடி போஸ்ட் மான்குடியை சேர்ந்தவர் சேதுராமன் மகன் சூரிய பாண்டி(20). இவர் தல்லா குளம் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் தேர்வு எழுத சென்றார். அப்போது அவரது பையில் அவருடைய செல்போன் மற்றும் நண்பர்களின் 8 செல்போன் களை வைத்துவிட்டு தேர்வு மையத்திற்குள் சென்றார்.
பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது பையில் வைத்திருந்த 9 செல்போன் கள் திருடப்பட்டிருந்தன. இதுகுறித்து அவர் தல்லா குளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு காமிரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில் அதே கல்லூரியைச் சேர்ந்த 3 மாணவர்கள் சேதுராமன் பையில் இருந்து செல் போன்களை திருடி சென்றது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 9 செல்போன்களை பறிமுதல் செய்த போலீசார், 3 பேரையும் கைது செய்தனர்.
- அவிநாசி குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
- தலா 9 ஆண்டுகள் சிறைத் தண்டனை, தலா ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.
திருப்பூர் :
திருப்பூா் பூலுவபட்டி திருநகரைச் சோ்ந்த அரவிந்த் (வயது 24), பாலாஜி (21), மும்மூா்த்தி நகரைச் சோ்ந்த யுவராஜ் (24), உதகையை சோ்ந்த தினேஷ் (22) ஆகியோா் அவிநாசி, பெருமாநல்லூா் உள்ளிட்ட பகுதிகளில் திருட்டு, வழிப்பறி வழக்குகளில் ஈடுபட்டது தொடா்பாக அவிநாசி போலீசாரால் கைது செய்யப்பட்டனா்.
இந்த வழக்கு அவிநாசி குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. இதில் நீதிபதி ஷபீனா, வழக்கில் தொடா்புடைய யுவராஜுக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ. 4 ஆயிரம் அபராதமும்,பாலாஜி, தினேஷ், அரவிந்த் ஆகியோருக்கு தலா 9 ஆண்டுகள் சிறைத் தண்டனை, தலா ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.
- கத்தியை காட்டி வழிப்பறி செய்த வாலிபரை கைது செய்தனர்.
- எதற்காக கத்தியுடன் சுற்றித்திரிந்தார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை செல்லூர்அருள்தாஸ்புரத்தை சேர்ந்தவர் செல்லப்பாண்டி (வயது 55).இவர் செல்லூர் 50 அடி ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது வாலிபர் ஒருவர் அவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி செல்லபாண்டியிடம் இருந்து ரூ. 1300- ஐ பறித்து சென்றார்.
இந்த சம்பவம் குறித்து செல்லப்பாண்டி செல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட செல்லூர் குலமங்கலம் மெயின் ரோடு அன்னை சத்யா நகரை சேர்ந்த ஜெயம் மகன் கழுவ நாதன் என்ற ரஞ்சித் குமாரை (27) கைது செய்தனர்.
சுப்பிரமணியபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் ரகுநாத் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது முத்துப்பட்டி பகுதியில் கத்தியுடன் பதுங்கியிருந்த சதீஷ்குமார்(32) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் எதற்காக கத்தியுடன் சுற்றித்திரிந்தார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 4 பேர் கைது
- செல்போன், பணம், இருச்சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல்
வந்தவாசி:
வந்தவாசி அடுத்த வடவணக்கம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் தேவன்(வயது 30). இவர் அந்த கிராமத்தில் உள்ள பூக்கடையில் வேலை செய்து வருகிறார்.
இவர் கடந்த 4-ந் தேதி நள்ளிரவு சேத்துப்பட்டில் திருமண வீட்டாரிடம் பூமாலைகளை கொடுத்து விட்டு இருச்சக்கர வாகனத்தில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார்.
வந்தவாசி-சேத்பட் சாலை, சின்ன கோழிப்பு லியூர் கூட்டுச் சாலை அருகே வரும்போது 2 பைக்குகளில் வந்த 4 பேர் தேவனை வழிமடக்கினர். பின்னர் கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்து ஒரு செல்போன், பணம் மற்றும் இருச்சக்கர வாகனத்தை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து தேவன் அளித்த புகாரின்பேரில் தேசூர் போலீசார் வழக்குப் பதிந்து கண்காணிப்பு கேமராக்கள் மூலம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதில், சேத்துப்பட்டு அருந்ததியர் பாளையத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ்(23), சுனில்(23), சஞ்சய்(21) மற்றும் 17 வயது சிறுவன் உள்ளிட்ட 4 பேர் சேர்ந்து தேவனிடம் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து 4 பேரையும் நேற்று போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து செல்போன், பணம், இருச்சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்