என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
லிப்டு கேட்டு வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர்கள்
Byமாலை மலர்24 May 2022 11:57 AM GMT (Updated: 24 May 2022 11:57 AM GMT)
அவனியாபுரத்தில் டூவீலரில் லிப்டு கேட்டு வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
அவனியாபுரம்
பெருங்குடியை சேர்ந்தவர் சந்திரகிஷோர் (வயது18) சம்பவத்தன்று இரவு இவர் பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து பெருங்குடியில் உள்ள வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில்ய வந்து கொண்டிருந்தார்.
அப்போது அடையாளம் தெரியாத வாலிபர் பெருங்குடி செல்ல வேண்டும் என லிப்டு கேட்டுள்ளார்.
அவரை ஏற்று கொண்டு அவனியாபுரம் நோக்கி வந்துகொண்டிருந்தபோது அவனியாபுரம் பெரியார் சிலை முன்பு மற்றொரு வாலிபர் லிப்டு கேட்கவே அவரையும் அழைத்து விட்டு பெருங்குடி நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அவனியாபுரம் குருதேவ் நகர் பகுதியில் வாகனத்தை நிறுத்தச் சொல்லிய 2 வாலிபர்களும் சந்திரகிஷோரின் செல்போன், செயின்,வாட்ச்,பணம் உள்ளிட்டவைகளை வழிப்பறி செய்து விட்டு தப்பினர்.இதுகுறித்து சந்திர கிஷோர் அவனியாபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நூதனமுறையில் லிப்டு கேட்டு வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X