search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "T20 World Cup 2024"

    • இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையேயான போட்டி ஜூன் 9-ம் தேதி நியூயார்க் நகரில் நடைபெற இருக்கிறது.
    • இரு அணிகள் மோதும் மைதானம் உருவாகும் வீடியோவை ஐசிசி வெளியீட்டுள்ளது.

    புதுடெல்லி:

    டி20 உலகக் கோப்பை 2024 கிரிக்கெட் தொடர் ஜூன் 1-ம் தேதி துவங்க இருக்கிறது. இந்த தொடரின் போட்டிகள் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகளில் நடத்தப்படுகிறது. இந்த தொடரில் அதிகம் எதிர்பார்க்கப்படும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையேயான போட்டி ஜூன் 9-ம் தேதி நியூயார்க் நகரில் நடைபெற இருக்கிறது.

    இந்நிலையில் நியூயார்க்கில் இரு அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெறும் மைதானம் உருவாகும் வீடியோவை ஐசிசி வெளியீட்டுள்ளது. நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தின் கட்டுமான பணிகள் ஒரு மாதம் நிறைவடைந்ததையடுத்து இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

    இந்த மைதானம் 34,000 பார்வையாளர்களைக் கொண்டதாக உருவாக்கப்படுகிறது. 12,500 ரசிகர்கள் இருக்கும் வகையில் ஸ்டேடியத்தின் ஈஸ்ட் ஸ்டாண்ட், கடந்த ஒரு மாதமாக வடிவமைக்கப்பட்டு வருகிறது. கிரேன்களுடன் இந்த கட்டுமான பணி நடைபெறும் வீடியோவை பார்க்க சுவாரஸ்மாக உள்ளது. இந்த வீடியோ ரசிகர்களை அதிகமாக கவர்ந்துள்ளது.

    நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதான அட்டவணை:

    ஜூன் 3: இலங்கை vs தென்னாப்பிரிக்கா

    ஜூன் 5: இந்தியா vs அயர்லாந்து

    ஜூன் 7: நெதர்லாந்து vs தென் ஆப்பிரிக்கா

    ஜூன் 9: இந்தியா vs பாகிஸ்தான்

    ஜூன் 10: தென்னாப்பிரிக்கா vs பங்களாதேஷ்

    ஜூன் 11: பாகிஸ்தான் vs கனடா

    ஜூன் 12: அமெரிக்கா vs இந்தியா

    2024 உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி க்ரூப் ஏ-வில் இடம்பெற்றுள்ளது. இந்தியாவுடன் பாகிஸ்தான், அமெரிக்கா, கனடா மற்றும் அயர்லாந்து அணிகளும் இடம்பெற்றுள்ளன.

    க்ரூப் சுற்றில் இந்திய அணி ஜூன் 5-ம் தேதி அயர்லாந்து அணியையும், ஜூன் 9-ம் தேதி பாகிஸ்தான் அணியையும், ஜூன் 12-ம் தேதி அமெரிக்காவுடனும், ஜூன் 15-ம் தேதி கனடாவையும் எதிர்கொள்ள இருக்கிறது.

    டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி போட்டி ஜூன் 26-ம் மற்றும் 27-ம் தேதிகளில் நடைபெற இருக்கிறது. பார்படோஸ்-இல் ஜூன் 29-ம் தேதி இறுதிப்போட்டி நடைபெற இருக்கிறது. 

    • பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் லாகூர் கலாண்டர்ஸ் அணிக்காக விளையாடும் போது அவருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது.
    • காயம் சரியாக குறைந்தது 4 முதல் 6 வாரங்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    டி20 உலகக் கோப்பை 2024 கிரிக்கெட் தொடர் ஜூன் 1-ம் தேதி துவங்க இருக்கிறது. இந்த தொடரை அமெரிக்கா மற்றும் கனடா இணைந்து நடத்துகின்றன. 2024 உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி க்ரூப் ஏ-வில் இடம்பெற்றுள்ளது. இந்தியாவுடன் பாகிஸ்தான், அமெரிக்கா, கனடா மற்றும் அயர்லாந்து அணிகளும் இடம்பெற்றுள்ளன.

    இந்த தொடரில் அதிகம் எதிர்பார்க்கப்படும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையேயான போட்டி ஜூன் 9-ம் தேதி நியூயார்க் நகரில் நடைபெற இருக்கிறது.

    இந்நிலையில் டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் ஹரிஸ் ரஃப் விளையாடுவது சந்தேகம் என தகவல் வெளியாகி உள்ளது. பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் லாகூர் கலாண்டர்ஸ் அணிக்காக விளையாடும் போது அவருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது.

    காயம் சரியாக குறைந்தது 4 முதல் 6 வாரங்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பிஎஸ்எல் சீசனின் எஞ்சிய ஆட்டத்தையும் ஜூன் 2-ம் தேதி தொடங்கும் உலகக் கோப்பையையும் அவர் இழக்க நேரிடும்.

    • இந்திய டி20 அணிக்கு ரோகித், கோலி மீண்டும் இடம் பிடித்துள்ளனர்.
    • டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்க நாடுகளில் நடைபெற உள்ளது.

    டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்க நாடுகளில் நடைபெற உள்ளது. இந்த டி20 உலககோப்பைக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளதால் ஒரு சில இளம் வீரர்களுக்கு வாய்ப்பு பரிபோக இருக்கிறது.

    இந்நிலையில் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு இந்திய அணியில் நிச்சயம் வாய்ப்பு கிடைக்காது என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறினார். 

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்தின் போது ருதுராஜ் கெய்க்வாட் காயமடைந்ததால் அவரால் அனைத்து போட்டிகளிலும் விளையாட முடியாமல் போனது. அதேபோல் அவரது ஆட்டம் சமீபத்திய செயல்பாடு அந்த அளவுக்கு சிறப்பானதாக இல்லை என்றே சொல்லலாம்.

    இதனால் அவரது முழு திறமையையும் பயன்படுத்த முடியாமல் போனது. டி20 உலக கோப்பையை பொறுத்தவரை சொல்ல வேண்டுமென்றால் நிச்சயம் கெய்க்வாட்டிற்கு வாய்ப்பே கிடையாது.

    என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

    • பெங்களூரு போன்ற கடினமான மைதானத்தில் நல்ல பந்து வீச்சை வீசும் அளவுக்கு அவர் கற்றுள்ளார்.
    • 2024 உலகக்கோப்பை அணி தேர்வுக்கு அவரின் பெயரையும் பரிசீலனையில் வைத்துள்ளோம்.

    பெங்களூரு:

    ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் 3 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று ஆப்கானிஸ்தானை ஒயிட்வாஷ் செய்தது. இந்த தொடரில் 3 போட்டிகளிலும் சேர்த்து 124 ரன்கள் மற்றும் 2 விக்கெட்டுகள் எடுத்து அசத்திய ஷிவம் துபே தொடர் நாயகன் விருது வென்றார்.

    இந்நிலையில் முன்பை விட தற்போது ஷிவம் துபே நன்கு முன்னேறியுள்ளதாக பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பாராட்டு தெரிவித்துள்ளார்.

    இது குறித்து டிராவிட் கூறியதாவது:

    இந்த தொடரில் துபே தன்னுடைய கையை உயர்த்தி, பாருங்கள் என்னிடம் திறமைகள் இருக்கின்றன. நீங்கள் எதிர்பார்ப்பதை செய்யக்கூடிய திறமை என்னிடம் இருக்கிறது என்பதை எங்களுக்கு காண்பித்துள்ளார். குறிப்பாக மிடில் ஓவர்களில் ஸ்பின்னர்களுக்கு எதிராக அதிரடியாக விளையாடும் திறமையை கொண்டிருப்பதை அவர் எங்களுக்கு காண்பித்தார்.

    அதேபோல பந்து வீச்சிலும் அவர் ஒரு சில நல்ல ஓவர்களை வீசினார். குறிப்பாக பெங்களூரு போன்ற கடினமான மைதானத்தில் நல்ல பந்து வீச்சை வீசும் அளவுக்கு அவர் கற்றுள்ளார். அதனால் 2024 உலகக்கோப்பை அணி தேர்வுக்கு அவரின் பெயரையும் பரிசீலனையில் வைத்துள்ளோம்.

    என்று அவர் கூறினார்.

    • டி20 உலகக் கோப்பையில் ரோகித், கோலியின் அனுபவத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
    • 20 ஓவர் உலகக்கோப்பைக்கு முன்பு ஐ.பி.எல் போட்டியில் தான் இந்திய வீரர்கள் விளையாடுகிறார்கள்.

    புதுடெல்லி:

    20 ஓவர் உலகக் கோப்பை போட்டி வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்காவில் ஜூன் மாதம் நடக்கிறது. இந்தப் போட்டிக்கு முன்பு இந்திய அணி விளையாடும் கடைசி 20 ஓவர் தொடர் இன்று ஆரம்பமாகும் ஆப்கானிஸ்தான் போட்டியாகும்.

    அந்த அணி இந்தியாவுடன் மூன்று 20 ஓவரில் ஆடுகிறது. 2-வது ஆட்டம் 14-ந் தேதியும், 3-வது ஆட்டம் 17-ந்தேதியும் நடக்கிறது.

    சீனியர் வீரர்களான ரோகித்சர்மாவும், விராட் கோலியும் 20 ஓவர் உலகக் கோப்பையில் விளையாட விருப்பம் தெரிவித்து இருந்தனர். இதனால் இருவரும் ஆப்கானிஸ்தான் தொடரில் தேர்வு பெற்றனர். இருவரும் 14 மாதங்களுக்கு பிறகு 20 ஓவர் போட்டியில் விளையாட உள்ளனர்.

    இந்த நிலையில் 20 ஓவர் உலகக் கோப்பைக்கு ஐ.பி.எல். போட்டி முக்கியமானதாக இருக்கும் என்று முன்னாள் கேப்டனும், டெலிவிசன் வர்ணனையாளருமான கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    20 ஓவர் உலகக்கோப்பைக்கு முன்பு ஐ.பி.எல் போட்டியில் தான் இந்திய வீரர்கள் விளையாடுகிறார்கள். இதனால் இந்த போட்டியின் சிறப்பு நிலை உலகக்கோப்பைக்கு முக்கியமானதாக இருக்கும்.

    ரோகித்சர்மாவும், விராட் கோலியும் சாதாரண ஐ.பி.எல்.லில் ரன் குவித்தாலும், ஒவ்வொரு ஆட்டத்திலும் ரன் குவிப்பை எதிர்பார்க்க முடியாது. அவர்களது அனுபவத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அவர்களை அணியில் தேர்வு செய்யலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ரோகித் சிறப்பான கேப்டன் என கங்குலி கூறினார்.
    • உலகக் கோப்பைகள் இருதரப்புத் தொடரை விட வேறுபட்டவை.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெறுகிறது. இந்த போட்டிகள் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறுகிறது.

    இந்த தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய அணி இந்த மாதம் தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. டி20, ஒருநாள், டெஸ்ட் ஆகிய தொடர்களில் விளையாட உள்ளது. இந்த 3 வடிவங்களுக்கான கேப்டன்களை பிசிசிஐ நேற்று அறிவித்தது.

    டி20 போட்டிகளுக்கு சூர்யகுமார் யாதவ், ஒருநாள் போட்டிக்கு கேஎல் ராகுல், டெஸ்ட் போட்டிக்கு ரோகித் என நியமிக்கப்பட்டனர்.

    2022 டி 20 உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிக்குப் பிறகு ரோகித் மற்றும் கோலி இருவரும் டி20-யில் விளையாடவில்லை, மேலும் ஆறு மாதங்களில் டி 20 உலகக் கோப்பைக்கான இந்தியாவின் திட்டத்தில் இருவரும் இருக்க வேண்டுமா என்று பிசிசிஐ தெளிவாகத் தெரியவில்லை.

    டி20 உலகக் கோப்பை தொடருக்கு இந்திய அணியின் கேப்டன் யார் என்பது குறித்து பலர் கேள்வி எழுப்பி வரும் நிலையில் உலகக் கோப்பைக்கு ரோகித் கேப்டனாக செயல்பட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரரும் பிசிசிஐ-யின் முன்னாள் தலைவருமான கங்குலி பதில் அளித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    உலகக் கோப்பைகள் இருதரப்புத் தொடரை விட வேறுபட்டவை. ஏனெனில் அழுத்தங்கள் வேறுபட்டவை. அவை இந்த உலகக் கோப்பையில் விதிவிலக்காக இருந்தன. 

    நடந்து முடிந்த 50 ஓவர் உலகக் கோப்பையில் ரோகித் சர்மா சிறப்பாக செயல்பட்டதால் அவர் இந்திய அணிக்கு கேப்டனாக இருக்க வேண்டும். அவர் ஒரு சிறந்த கேப்டன். எனவே டி20 உலகக் கோப்பை வரை அவர் கேப்டனாக நீடிப்பார் என்று நான் எதிர்பார்க்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் ரோகித், விராட் கோலி இடம் பெறவில்லை.
    • இனி இவர்கள் டி20 போட்டிகளில் விளையாடமாட்டார்கள் என தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள், இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட இருக்கிறது. டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணிக்கு கேப்டனாக ரோகித் சர்மா அறிவிக்கப்பட்டு உள்ளார். ஒருநாள் போட்டிக்கான இந்திய அணிக்கு கே.எல். ராகுல் கேப்டனாகவும், டி20 தொடருக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    டி20 தொடருக்கான இந்திய அணியில் ரோகித், விராட் கோலி இடம் பெறவில்லை. இனி இவர்கள் டி20 போட்டிகளில் விளையாடமாட்டார்கள் என தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா செயல்பட உள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இளம் வீரர்கள் அதிகமாக உள்ளதால் விராட் கோலி இந்த தொடரில் விளையாடுவது சந்தேகம்தான் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. 

    அப்படி ரோகித் கேப்டனாக செயல்பட்டால், கில் அல்லது ஜெய்ஸ்வால் ஆகியோரில் ஒருவருடன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    • ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால், சுப்மன் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கி வருகின்றனர்.
    • தற்போது ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு வருகிறது.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் 2007-ம் ஆண்டு அறிமுகம் ஆனது. டோனி தலைமையிலான இந்திய அணி அறிமுக கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்றது.

    இதுவரை 8 டி20 உலகக் கோப்பை தொடர்கள் நடைபெற்றுள்ளன. இதில் இங்கிலாந்து (2010, 2022), வெஸ்ட் இண்டீஸ் (2012, 2016) தலா 2 முறையும், இந்தியா (2007), பாகிஸ்தான் (2009) இலங்கை (2014), ஆஸ்திரேலியா (2021) தலா ஒரு முறையும் உலகக் கோப்பையை வென்றுள்ளன.

    9-வது டி20 உலகக் கோப்பை போட்டி அடுத்த ஆண்டு ஜூன் 4-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்கிறது.

    ஐ.சி.சி. போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் பெற்று 10 ஆண்டுகள் ஆகிறது. கடைசியாக 2013-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை டோனி தலைமையிலான அணி கைப்பற்றியது. சமீபத்தில் நடந்த ஐ.சி.சி. உலகக் கோப்பையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இறுதிப் போட்டியில் தோற்றது. சொந்த மண்ணில் நடந்த போட்டியில் சாம்பியன் பட்டம் பெறாதது ஏமாற்றத்தை அளித்தது.

    தற்போது டி20 உலகக் கோப்பை போட்டியில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. சிறந்த வீரர்களை தேர்வு செய்ய வேண்டும் என்பதில் கிரிக்கெட் வாரியம் உறுதியாக இருக்கிறது.

    டி20 உலகக் கோப்பை போட்டிக்கு ரோகித் சர்மாவை கேப்டனாக நியமிக்க கிரிக்கெட் வாரியம் முடிவு செய்து அவரை அணுகியதாக தகவல் வெளியானது. கடந்த ஆண்டு உலகக் கோப்பை அரைஇறுதியில் ஏற்பட்ட தோல்விக்கு பிறகு அவர் டி20 போட்டியில் ஆடவில்லை. தென்ஆப்பிரிக்க தொடரிலும் அவர் ஓய்வு கேட்டுள்ளார்.

    20 ஓவர் உலகக்கோப்பை போட்டியில் தொடக்க வீரர்களாக யார் ஆடுவார்கள்? என்பதில் கடும் போட்டி நிலவுகிறது.

    ஜெய்ஸ்வால், இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், ரோகித் சர்மா, சுப்மன் கில் ஆகிய 5 பேர் தொடக்க வரிசைக்கான போட்டியில் உள்ளனர்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் 20 ஓவர் தொடரில் ஜெய்ஸ்வாலும், ருதுராஜ் கெய்க்வாட்டும் தொடக்க வீரர்களாக வருகிறார்கள். அவர்கள் ஆட்டம் அதிரடியாகவே இருக்கிறது.

    அதே நேரத்தில் ரோகித் சர்மா, சுப்மன் கில் தொடக்க வரிசையில் அபாரமாக ஆடக் கூடியவர்கள். இதற்கிடையே அவ்வப்போது இஷான் கிஷனும் தொடக்க வீரராக களம் இறங்கி விளையாடி வருகிறார். இதனால் தொடக்க வீரர்களை தேர்வு செய்வதில் தேர்வு குழுவுக்கு கடும் சவால் காத்திருக்கிறது.

    • 9-வது டி20 உலகக்கோப்பை தொடர் அடுத்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது.
    • ஜிம்பாப்வே அணி உலகக் கோப்பைக்கு தகுதி பெறாமல் வெளியேறியது.

    9-வது டி20 உலகக்கோப்பை தொடர் அடுத்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. இந்த உலகக்கோப்பை தொடரில் மொத்தம் 20 அணிகள் கலந்து கொள்ள உள்ளன.

    அதில் போட்டியை நடத்தும் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் நேரடியாகவும், 2022 டி20 உலகக்கோப்பையில் முதல் எட்டு இடங்களை பிடித்த ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நெதர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகளும், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகள் டி20 தரவரிசை அடிப்படையிலும் உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற்றுள்ளன.

    மீதமுள்ள 8 அணிகள் தகுதி சுற்று அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. அதனடிப்படையில் ஆப்பிரிக்கா பிராந்திய தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

    தகுதி சுற்று அடிப்படையில் இதுவரை 7 அணிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அவை அயர்லாந்து, ஸ்காட்லாந்து, பப்புவா நியூ கினியா, கனடா, நேபாளம், ஓமன், நமீபியா ஆகிய நாடுகள் ஆகும். மீதமுள்ள 1 இடத்திற்கு ஜிம்பாப்வே, உகாண்டா, கென்யா அணிகளுக்கு இடையே போட்டி நிலவியது.


    இந்நிலையில் உகாண்டா அணி டி20 உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளது. ஜிம்பாப்வே அணி உலகக் கோப்பைக்கு தகுதி பெறாமல் வெளியேறியது. இதன் மூலம் உகாண்டா அணி முதல் முறையாக ஐசிசி தொடர்களில் தகுதி பெற்றுள்ளது. 

    • இந்திய டி20 அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா செயல்பட்டு வந்தார்.
    • காயம் காரணமாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இருந்து பாண்ட்யா விலகியுள்ளார்.

    இந்திய டி20 அணியின் கேப்டனாக ரோகித் சர்மா விலகிய நிலையில் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா செயல்பட்டு வந்தார். இவர் காயம் காரணமாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இருந்து விலகியுள்ளார். இதனால் இந்திய டி20 அணியின் கேப்டனாக யாரை நியமிப்பது என பிசிசிஐ தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.


    இதனிடையே, ஒருநாள் உலகக்கோப்பை போட்டியில் சிறப்பாக செயல்பட்டதால், அடுத்த டி20 உலகக்கோப்பை தொடர் வரை ரோகித் சர்மாவே கேப்டனாக செயல்பட வேண்டும் என பிசிசிஐ விரும்புவதாக கூறப்படுகிறது.

    ஆனால், 2022 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையில் அரையிறுதியுடன் இந்திய அணி வெளியேறிய பின்னர், சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடப் போவதில்லை என ரோகித் சர்மா அறிவித்திருந்தார்.

    அவரை மீண்டும் அணிக்கு கொண்டுவர பிசிசிஐ சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒருவேளை ரோகித் ஒப்புக்கொள்ளவில்லை என்றால், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரிலும் சூர்யகுமார் கேப்டனாக தொடர்வார் என்றும் கூறப்படுகிறது.

    • டி20 உலகக்கோப்பை வருவதற்கு குறைந்த காலங்கள் மட்டுமே இருக்கிறது.
    • டி20 உலகக்கோப்பைக்கு முன்பாக ஐபிஎல் தொடரும் நடைபெற உள்ளது.

    2024 டி20 உலகக்கோப்பையிலும் ரோகித் சர்மாதான் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட வேண்டும் என்று முன்னாள் வீரர் ஜாகீர்கான் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு;-

    டி20 உலகக்கோப்பை வருவதற்கு குறைந்த காலங்கள் மட்டுமே இருக்கிறது. அதற்கு நீங்கள் சற்று அனுபவத்துடன் செல்ல வேண்டும். அத்தொடரில் இந்திய அணியை வழி நடத்தும் பொறுப்பை ஒரு அனுபவமிக்கவரிடம் கொடுக்க வேண்டும். அந்த வகையில் அவர்கள் ரோகித் சர்மாவை தேர்ந்தெடுத்தால் நான் ஆச்சரியப்பட மாட்டேன். நீண்டகாலமாக விளையாடி வரும் அவருக்கு சூழ்நிலைகளை சமாளிப்பது, அழுத்தத்தை கையாள்வது போன்ற அம்சங்களில் அனுபவம் இருக்கிறது.

    டி20 உலகக்கோப்பைக்கு முன்பாக ஐபிஎல் தொடரும் நடைபெற உள்ளது. எனவே ஒன்று நீங்கள் ரோகித் சர்மாவுடன் செல்ல வேண்டும். அல்லது ஹர்திக் பாண்ட்யா காயத்திலிருந்து எந்தளவுக்கு குணமடைந்து வருகிறார் என்பதை பார்த்து முடிவெடுக்க வேண்டும். ஆனாலும் உலகக்கோப்பைக்கு முன்பாக பாண்ட்யா அதிகப்படியான போட்டிகளில் விளையாடியிருக்க மாட்டார். எனவே அந்த முடிவும் பின்னடைவாகவே இருக்கும்.

    என்று கூறினார்.

    ×