search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "T20 World Cup 2024"

    • நியூசிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது.
    • இந்த தொடர் வரும் 18-ம் தேதி தொடங்குகிறது.

    புதுடெல்லி:

    டி20 உலகக் கோப்பை 2024 கிரிக்கெட் தொடர் ஜூன் 1-ம் தேதி துவங்க இருக்கிறது. இந்த தொடரின் போட்டிகள் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகளில் நடத்தப்படுகிறது. இந்த தொடரில் 20 அணிகள் பங்கேற்கின்றன. இதற்காக அனைத்து அணியினரும் தங்களது 15 பேர் கொண்ட அணியை தேர்வு செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    இந்நிலையில் பாகிஸ்தான் அணியும் தங்களது அணி வீரர்களை எடுப்பதில் மும்முரமாக உள்ளனர். அந்த வகையில் 4 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் அணியில் முகமது அமீர் இடம் பிடித்துள்ளார்.

    நியூசிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 18-ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டது. இதில் முகமது அமீர், மற்றும் இமாத் வாசிம் இடம் பிடித்துள்ளார்.

    நியூசிலாந்துக்கு எதிரான பாகிஸ்தான் அணியில் இடம் பிடித்த வீரர்கள்:-

    பாபர் அசாம் (கேப்டன்) அப்ரார் அகமது, அசம் கான், ஃபகார் ஜமான், இப்திகார் அகமது, இமாத் வாசிம், முகமது அப்பாஸ் அப்ரிடி, முகமது ரிஸ்வான், முகமது அமீர், முகமது இர்பான் நியாசி, நசீம் ஷா, சைம் அயூப், ஷதாப் கான், ஷஹீன் அஃப்ரி, ஷஹீன் அஃப்ரி , உஸ்மான் கான், ஜமான் கான்.

    • ஸ்லோ விக்கெட்டில் சிறப்பாக செயல்படக் கூடிய பேட்டர்கள், பந்து வீச்சாளர்களை தேர்வு செய்ய பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
    • ரிங்கு சிங், இந்திய அணிக்காக இதுவரை ஸ்லோ விக்கெட்டில் ஆடியது கிடையாது.

    நடப்பு ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் மே 26-ம் தேதியுடன் நிறைவு பெற உள்ளது. இதனைத் தொடர்ந்து ஜூன் 1 முதல் டி20 உலகக் கோப்பை 2024 தொடர் தொடங்குகிறது. லீக் ஆட்டங்கள் அமெரிக்காவிலும், சூப்பர் 8 போட்டிகள், நாக்அவுட் போட்டிகள் மேற்கிந்தியத் தீவுகளிலும் நடக்க உள்ளது.

    இந்நிலையில், அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற உள்ள போட்டிகளுக்கான பிட்ச் எப்படி இருக்கும் என்பது குறித்து ஆராய, பிசிசிஐ தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர் நிர்வாகிகளை நியமித்து இருந்தார்.

    தற்போது, பிட்ச்கள் குறித்த அறிக்கையை, பிசிசிஐ நிர்வாகிகள் அஜித் அகார்கரிடம் சமர்பித்துள்ளனர். அதில், போட்டிகள் நடைபெறும் பிட்ச்களில், பெரும்பாலானவை, மிகவும் ஸ்லோ விக்கெட்டாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஸ்லோ விக்கெட்டில் ரிங்கு சிங் சொதப்பியதால், கடைசி 10-15 பந்துகளுக்காக ரிங்கு சிங்கை சேர்க்க வேண்டுமா என்ற எண்ணம் பிசிசிஐயிடம் இருப்பதாகவும், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா போன்ற பினிஷர்களே அணிக்கு போதும் என்ற முடிவுக்கு பிசிசிஐ வந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

    இதனால், ஸ்லோ விக்கெட்டில் சிறப்பாக செயல்படக் கூடிய பேட்டர்கள், பந்து வீச்சாளர்களை தேர்வு செய்ய பிசிசிஐ முடிவு செய்துள்ளது. ரிங்கு சிங், இந்திய அணிக்காக இதுவரை ஸ்லோ விக்கெட்டில் ஆடியது கிடையாது. டி20 உலகக் கோப்பை அணித் தேர்வை கருத்தில்கொண்டு, சிஎஸ்கே, கேகேஆர் இடையிலான போட்டிக்கு ஸ்லோ விக்கெட்டை தயார் செய்திருந்தனர்.

    ஆனால், அந்த ஸ்லோ விக்கெட்டில் ரிங்கு சிங் சிறப்பாக செயல்படவில்லை. மொத்தம் 14 பந்துகளை எதிர்கொண்ட அவர், அதில் ஒரு பவுண்டரியை கூட அடிக்காமல் 9 ரன்களை மட்டும் எடுத்து, தேஷ்பண்டே பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். டி20 உலகக் கோப்பைக்கான அணியை அறிவிக்க இன்னமும் இரண்டு வாரங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், ரிங்கு சிங் சொதப்பியதால், அவரை அணியில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • டி20 உலகக் கோப்பை தொடரின் இந்திய அணியில் இருந்து விராட் கோலி நீக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகியது.
    • மேற்கிந்திய தீவுகளில் உள்ள மைதானம், விராட் கோலிக்கு சாதகமாக அமையாது என தெரிவிக்கப்பட்டது.

    டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்த ஆண்டு ஜூன் 1 முதல் 29-ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடர் மேற்கிந்தியத் தீவுகள், அமெரிக்காவில் நடைபெறுகிறது. இந்த தொடரில் 20 அணிகள் பங்கேற்கின்றன. இந்த போட்டியைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

    இந்த தொடரில் இந்திய அணியில் இருந்து விராட் கோலி நீக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    மேற்கிந்திய தீவுகளில் உள்ள மைதானம், விராட் கோலிக்கு சாதகமாக அமையாது என்ற காரணத்தாலும், டி-20 போட்டிகளில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையிலும் அவர் இந்திய அணியில் இருந்து நீக்கப்படலாம் எனற தகவல் பரவி வந்தன. இதனால், விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் 2024 இல் அவர் ரன் குவிப்பு பட்டியலில் முன்னணியில் உள்ள அவரது ஃபார்மைப் பார்த்த பிறகு, 35 வயதான கோலி 15 பேர் கொண்ட அணியில் சேர்க்கப்படுவார் என்பது கிட்டத்தட்ட உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

    Cricbuzz-ன் அறிக்கையின்படி, விராட் கோலி நடக்கவிருக்கும் டி20 உலகக் கோப்பை தொடரில் களமிறங்க வைக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • எனது பந்து வீச்சு திறனை மீண்டும் மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறேன்.
    • இதனால் ஐபிஎல் மற்றும் உலகக் கோப்பை தொடர்களை தியாகம் செய்கிறேன்.

    2024 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் கரீபியனில் நடைபெற இருக்கிறது. இந்த தொடர் ஜூன் 1-ந் தேதி தொடங்குகிறது.

    இந்நிலையில் டி20 உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் பங்கேற்கப்போவதில்லை என தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:

    நான் கடினமாக உழைத்து வருகிறேன். மேலும் எனது பந்து வீச்சு திறனை மீண்டும் மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறேன். இதனால் ஐபிஎல் மற்றும் உலகக் கோப்பை தொடர்களை தியாகம் செய்கிறேன்.

    சமீபத்திய இந்திய டெஸ்ட் சுற்றுப்பயணம், எனது முழங்கால் அறுவை சிகிச்சைக்குப் பிறகு பந்துவீச்சில் நான் எவ்வளவு பின்தங்கியிருந்தேன் என்பதை எடுத்துக்காட்டியது.

    கவுண்டி சாம்பியன்ஷிப்பில் டர்ஹாமிற்காக விளையாடுவதற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன். ஜோஸ் [பட்லர்], மோட்டி [மேத்யூ மோட்] மற்றும் அனைத்து அணியினருக்கும் எங்கள் பட்டத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்கு எனது வாழ்த்துகள்.

    என தெரிவித்துள்ளார்.

    • 9-வது டி20 உலகக் கோப்பை போட்டி வருகிற ஜூன் 4-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது.
    • இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையேயான போட்டி ஜூன் 9-ம் தேதி நியூயார்க் நகரில் நடைபெற இருக்கிறது.

    2024 டி20 உலகக் கோப்பை தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. இதுவரை 8 டி20 உலகக் கோப்பை தொடர்கள் நடைபெற்றுள்ளன. இதில் இங்கிலாந்து (2010, 2022), வெஸ்ட் இண்டீஸ் (2012, 2016) தலா 2 முறையும், இந்தியா (2007), பாகிஸ்தான் (2009) இலங்கை (2014), ஆஸ்திரேலியா (2021) தலா ஒரு முறையும் உலகக் கோப்பையை வென்றுள்ளன.

    9-வது டி20 உலகக் கோப்பை போட்டி வருகிற ஜூன் 4-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது.

    இந்நிலையில் நடப்பு டி20 உலகக் கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணியின் கேப்டனாக மீண்டும் பாபர் அசாம் தொடர்வார் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஆண்டு நடந்து முடிந்த ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாத நிலையில் பாபர் அசாம் 3 வடிவிலான கேப்டன் பதவியில் இருந்து விலகி இருந்தார்.

    அவருக்கு பதிலாக டி20, ஒருநாள் போட்டிக்கான கேப்டனாக சஹீன் அப்ரிடி நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவரை நீக்கி மீண்டும் பாபர் அசாம் தொடர உள்ளார்.

    இந்த தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையேயான போட்டி ஜூன் 9-ம் தேதி நியூயார்க் நகரில் நடைபெற இருக்கிறது.

    • உங்களால் விராட் கோலி இன்றி அணியை உருவாக்க முடியாது.
    • டி20 உலகக் கோப்பையில் அவருடைய இடத்தை பற்றி கேள்வி எழுப்புவர்கள் தெருவோர கிரிக்கெட்டைச் சேர்ந்தவர்கள்.

    9-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 1-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்காவில் நடக்கிறது. இந்த போட்டிக்கு ரோகித் சர்மா கேப்டனாக செயல்படுவார் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) ஏற்கனவே கூறிவிட்டது. ஆனால் மற்றொரு சீனியர் வீரரான விராட் கோலியின் இடம்தான் கேள்விக்குறியாக உள்ளது.

    வெஸ்ட் இண்டீசில் உள்ள மெதுவான ஆடுகளங்கள் விராட் கோலியின் பேட்டிங் ஸ்டைலுக்கு ஏற்றதாக இருக்காது என்று தேர்வுக்குழு கருதுகிறது. எனவே அவரை கழற்றி விட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க தேர்வுக்குழு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்நிலையில் விராட் கோலி இல்லையென்றால் சொந்த மண்ணில் நடந்த 2023 உலகக் கோப்பையில் இந்தியா 3, 4 தோல்விகளை சந்தித்திருக்கும் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது இர்பான் தெரிவித்துள்ளார். 

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இதைப் பற்றி எனக்கு 2-வது யோசனை கிடையாது. உங்களால் விராட் கோலி இன்றி அணியை உருவாக்க முடியாது. ஏனெனில் அவர் பெரிய பேட்ஸ்மேன். கடந்த உலகக் கோப்பையில் இந்தியாவுக்காக 3 - 4 போட்டிகளை தனது வழியில் வென்றுக் கொடுத்தார். ஒருவேளை அந்தப் போட்டிகளில் விராட் கோலி இறங்கி நிற்காமல் போயிருந்தால் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற அணிகளுக்கு எதிராக லீக் சுற்றில் ஆரம்பத்திலேயே விக்கெட்களை இழந்த இந்தியா தோல்வியை சந்தித்திருக்கும்.

    எனவே அவருடைய இடத்தை பற்றி கேள்வி எழுப்புவது நியாயமற்றது. டி20 உலகக் கோப்பையில் அவருடைய இடத்தை பற்றி கேள்வி எழுப்புவர்கள் தெருவோர கிரிக்கெட்டைச் சேர்ந்தவர்கள்.

    இவ்வாறு முகமது இர்பான் கூறினார். 

    • டி-20 உலகக் கோப்பை போட்டி மேற்கிந்தியத் தீவுகள், அமெரிக்காவில் நடைபெறுகிறது.
    • மேற்கிந்திய தீவுகளில் உள்ள மைதானம், விராட் கோலிக்கு சாதகமாக அமையாது என்ற தகவல் வெளியாகி உள்ளது.

    டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்த ஆண்டு ஜூன் 1 முதல் 29 ந் தேதி வரை நடைபெறுகிறது. 29 நாட்கள் நடைபெறும் டி20 உலகக் கோப்பை போட்டிக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான (ஐசிசி) சமீபத்தில் வெளியிட்டது. டி-20 உலகக் கோப்பை போட்டி மேற்கிந்தியத் தீவுகள், அமெரிக்காவில் நடைபெறுகிறது. இதில் 20 அணிகள் பங்கேற்கின்றன.

    இந்த உலக கோப்பை டி20 தொடரில் இந்திய அணியில் இருந்து விராட் கோலி நீக்கப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது. மேற்கிந்திய தீவுகளில் உள்ள மைதானம், விராட் கோலிக்கு சாதகமாக அமையாது என்ற காரணத்தாலும், டி-20 போட்டிகளில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையிலும் அவர் இந்திய அணியில் இருந்து நீக்கப்படலாம் எனற தகவல் பரவி வருகிறது.

    இந்நிலையில் உலகின் எந்த வீரரையும் விட கோலி பெரிய அளவில் ஈர்க்கக்கூடியவர் என இங்கிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் ப்ராட் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் விராட் கோலி இடம் பெற மாட்டார் என்ற தகவல், உண்மையாக இருக்கக் கூடாது. உலகின் எந்த வீரரையும் விட கோலி பெரிய அளவில் ஈர்க்கக்கூடியவர். அவர் அணியில் கண்டிப்பாக இடம்பிடிப்பார்.

    இவ்வாறு ப்ராட் கூறினார்.

    • இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையேயான போட்டி ஜூன் 9-ம் தேதி நியூயார்க் நகரில் நடைபெற இருக்கிறது.
    • இரு அணிகள் மோதும் மைதானம் உருவாகும் வீடியோவை ஐசிசி வெளியீட்டுள்ளது.

    புதுடெல்லி:

    டி20 உலகக் கோப்பை 2024 கிரிக்கெட் தொடர் ஜூன் 1-ம் தேதி துவங்க இருக்கிறது. இந்த தொடரின் போட்டிகள் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகளில் நடத்தப்படுகிறது. இந்த தொடரில் அதிகம் எதிர்பார்க்கப்படும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையேயான போட்டி ஜூன் 9-ம் தேதி நியூயார்க் நகரில் நடைபெற இருக்கிறது.

    இந்நிலையில் நியூயார்க்கில் இரு அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெறும் மைதானம் உருவாகும் வீடியோவை ஐசிசி வெளியீட்டுள்ளது. நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தின் கட்டுமான பணிகள் ஒரு மாதம் நிறைவடைந்ததையடுத்து இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

    இந்த மைதானம் 34,000 பார்வையாளர்களைக் கொண்டதாக உருவாக்கப்படுகிறது. 12,500 ரசிகர்கள் இருக்கும் வகையில் ஸ்டேடியத்தின் ஈஸ்ட் ஸ்டாண்ட், கடந்த ஒரு மாதமாக வடிவமைக்கப்பட்டு வருகிறது. கிரேன்களுடன் இந்த கட்டுமான பணி நடைபெறும் வீடியோவை பார்க்க சுவாரஸ்மாக உள்ளது. இந்த வீடியோ ரசிகர்களை அதிகமாக கவர்ந்துள்ளது.

    நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதான அட்டவணை:

    ஜூன் 3: இலங்கை vs தென்னாப்பிரிக்கா

    ஜூன் 5: இந்தியா vs அயர்லாந்து

    ஜூன் 7: நெதர்லாந்து vs தென் ஆப்பிரிக்கா

    ஜூன் 9: இந்தியா vs பாகிஸ்தான்

    ஜூன் 10: தென்னாப்பிரிக்கா vs பங்களாதேஷ்

    ஜூன் 11: பாகிஸ்தான் vs கனடா

    ஜூன் 12: அமெரிக்கா vs இந்தியா

    2024 உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி க்ரூப் ஏ-வில் இடம்பெற்றுள்ளது. இந்தியாவுடன் பாகிஸ்தான், அமெரிக்கா, கனடா மற்றும் அயர்லாந்து அணிகளும் இடம்பெற்றுள்ளன.

    க்ரூப் சுற்றில் இந்திய அணி ஜூன் 5-ம் தேதி அயர்லாந்து அணியையும், ஜூன் 9-ம் தேதி பாகிஸ்தான் அணியையும், ஜூன் 12-ம் தேதி அமெரிக்காவுடனும், ஜூன் 15-ம் தேதி கனடாவையும் எதிர்கொள்ள இருக்கிறது.

    டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி போட்டி ஜூன் 26-ம் மற்றும் 27-ம் தேதிகளில் நடைபெற இருக்கிறது. பார்படோஸ்-இல் ஜூன் 29-ம் தேதி இறுதிப்போட்டி நடைபெற இருக்கிறது. 

    • பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் லாகூர் கலாண்டர்ஸ் அணிக்காக விளையாடும் போது அவருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது.
    • காயம் சரியாக குறைந்தது 4 முதல் 6 வாரங்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    டி20 உலகக் கோப்பை 2024 கிரிக்கெட் தொடர் ஜூன் 1-ம் தேதி துவங்க இருக்கிறது. இந்த தொடரை அமெரிக்கா மற்றும் கனடா இணைந்து நடத்துகின்றன. 2024 உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி க்ரூப் ஏ-வில் இடம்பெற்றுள்ளது. இந்தியாவுடன் பாகிஸ்தான், அமெரிக்கா, கனடா மற்றும் அயர்லாந்து அணிகளும் இடம்பெற்றுள்ளன.

    இந்த தொடரில் அதிகம் எதிர்பார்க்கப்படும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையேயான போட்டி ஜூன் 9-ம் தேதி நியூயார்க் நகரில் நடைபெற இருக்கிறது.

    இந்நிலையில் டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் ஹரிஸ் ரஃப் விளையாடுவது சந்தேகம் என தகவல் வெளியாகி உள்ளது. பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் லாகூர் கலாண்டர்ஸ் அணிக்காக விளையாடும் போது அவருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது.

    காயம் சரியாக குறைந்தது 4 முதல் 6 வாரங்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பிஎஸ்எல் சீசனின் எஞ்சிய ஆட்டத்தையும் ஜூன் 2-ம் தேதி தொடங்கும் உலகக் கோப்பையையும் அவர் இழக்க நேரிடும்.

    • இந்திய டி20 அணிக்கு ரோகித், கோலி மீண்டும் இடம் பிடித்துள்ளனர்.
    • டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்க நாடுகளில் நடைபெற உள்ளது.

    டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்க நாடுகளில் நடைபெற உள்ளது. இந்த டி20 உலககோப்பைக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளதால் ஒரு சில இளம் வீரர்களுக்கு வாய்ப்பு பரிபோக இருக்கிறது.

    இந்நிலையில் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு இந்திய அணியில் நிச்சயம் வாய்ப்பு கிடைக்காது என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறினார். 

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்தின் போது ருதுராஜ் கெய்க்வாட் காயமடைந்ததால் அவரால் அனைத்து போட்டிகளிலும் விளையாட முடியாமல் போனது. அதேபோல் அவரது ஆட்டம் சமீபத்திய செயல்பாடு அந்த அளவுக்கு சிறப்பானதாக இல்லை என்றே சொல்லலாம்.

    இதனால் அவரது முழு திறமையையும் பயன்படுத்த முடியாமல் போனது. டி20 உலக கோப்பையை பொறுத்தவரை சொல்ல வேண்டுமென்றால் நிச்சயம் கெய்க்வாட்டிற்கு வாய்ப்பே கிடையாது.

    என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

    • பெங்களூரு போன்ற கடினமான மைதானத்தில் நல்ல பந்து வீச்சை வீசும் அளவுக்கு அவர் கற்றுள்ளார்.
    • 2024 உலகக்கோப்பை அணி தேர்வுக்கு அவரின் பெயரையும் பரிசீலனையில் வைத்துள்ளோம்.

    பெங்களூரு:

    ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் 3 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று ஆப்கானிஸ்தானை ஒயிட்வாஷ் செய்தது. இந்த தொடரில் 3 போட்டிகளிலும் சேர்த்து 124 ரன்கள் மற்றும் 2 விக்கெட்டுகள் எடுத்து அசத்திய ஷிவம் துபே தொடர் நாயகன் விருது வென்றார்.

    இந்நிலையில் முன்பை விட தற்போது ஷிவம் துபே நன்கு முன்னேறியுள்ளதாக பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பாராட்டு தெரிவித்துள்ளார்.

    இது குறித்து டிராவிட் கூறியதாவது:

    இந்த தொடரில் துபே தன்னுடைய கையை உயர்த்தி, பாருங்கள் என்னிடம் திறமைகள் இருக்கின்றன. நீங்கள் எதிர்பார்ப்பதை செய்யக்கூடிய திறமை என்னிடம் இருக்கிறது என்பதை எங்களுக்கு காண்பித்துள்ளார். குறிப்பாக மிடில் ஓவர்களில் ஸ்பின்னர்களுக்கு எதிராக அதிரடியாக விளையாடும் திறமையை கொண்டிருப்பதை அவர் எங்களுக்கு காண்பித்தார்.

    அதேபோல பந்து வீச்சிலும் அவர் ஒரு சில நல்ல ஓவர்களை வீசினார். குறிப்பாக பெங்களூரு போன்ற கடினமான மைதானத்தில் நல்ல பந்து வீச்சை வீசும் அளவுக்கு அவர் கற்றுள்ளார். அதனால் 2024 உலகக்கோப்பை அணி தேர்வுக்கு அவரின் பெயரையும் பரிசீலனையில் வைத்துள்ளோம்.

    என்று அவர் கூறினார்.

    • டி20 உலகக் கோப்பையில் ரோகித், கோலியின் அனுபவத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
    • 20 ஓவர் உலகக்கோப்பைக்கு முன்பு ஐ.பி.எல் போட்டியில் தான் இந்திய வீரர்கள் விளையாடுகிறார்கள்.

    புதுடெல்லி:

    20 ஓவர் உலகக் கோப்பை போட்டி வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்காவில் ஜூன் மாதம் நடக்கிறது. இந்தப் போட்டிக்கு முன்பு இந்திய அணி விளையாடும் கடைசி 20 ஓவர் தொடர் இன்று ஆரம்பமாகும் ஆப்கானிஸ்தான் போட்டியாகும்.

    அந்த அணி இந்தியாவுடன் மூன்று 20 ஓவரில் ஆடுகிறது. 2-வது ஆட்டம் 14-ந் தேதியும், 3-வது ஆட்டம் 17-ந்தேதியும் நடக்கிறது.

    சீனியர் வீரர்களான ரோகித்சர்மாவும், விராட் கோலியும் 20 ஓவர் உலகக் கோப்பையில் விளையாட விருப்பம் தெரிவித்து இருந்தனர். இதனால் இருவரும் ஆப்கானிஸ்தான் தொடரில் தேர்வு பெற்றனர். இருவரும் 14 மாதங்களுக்கு பிறகு 20 ஓவர் போட்டியில் விளையாட உள்ளனர்.

    இந்த நிலையில் 20 ஓவர் உலகக் கோப்பைக்கு ஐ.பி.எல். போட்டி முக்கியமானதாக இருக்கும் என்று முன்னாள் கேப்டனும், டெலிவிசன் வர்ணனையாளருமான கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    20 ஓவர் உலகக்கோப்பைக்கு முன்பு ஐ.பி.எல் போட்டியில் தான் இந்திய வீரர்கள் விளையாடுகிறார்கள். இதனால் இந்த போட்டியின் சிறப்பு நிலை உலகக்கோப்பைக்கு முக்கியமானதாக இருக்கும்.

    ரோகித்சர்மாவும், விராட் கோலியும் சாதாரண ஐ.பி.எல்.லில் ரன் குவித்தாலும், ஒவ்வொரு ஆட்டத்திலும் ரன் குவிப்பை எதிர்பார்க்க முடியாது. அவர்களது அனுபவத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அவர்களை அணியில் தேர்வு செய்யலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×