search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mohammad Irfan"

    • உங்களால் விராட் கோலி இன்றி அணியை உருவாக்க முடியாது.
    • டி20 உலகக் கோப்பையில் அவருடைய இடத்தை பற்றி கேள்வி எழுப்புவர்கள் தெருவோர கிரிக்கெட்டைச் சேர்ந்தவர்கள்.

    9-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 1-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்காவில் நடக்கிறது. இந்த போட்டிக்கு ரோகித் சர்மா கேப்டனாக செயல்படுவார் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) ஏற்கனவே கூறிவிட்டது. ஆனால் மற்றொரு சீனியர் வீரரான விராட் கோலியின் இடம்தான் கேள்விக்குறியாக உள்ளது.

    வெஸ்ட் இண்டீசில் உள்ள மெதுவான ஆடுகளங்கள் விராட் கோலியின் பேட்டிங் ஸ்டைலுக்கு ஏற்றதாக இருக்காது என்று தேர்வுக்குழு கருதுகிறது. எனவே அவரை கழற்றி விட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க தேர்வுக்குழு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்நிலையில் விராட் கோலி இல்லையென்றால் சொந்த மண்ணில் நடந்த 2023 உலகக் கோப்பையில் இந்தியா 3, 4 தோல்விகளை சந்தித்திருக்கும் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது இர்பான் தெரிவித்துள்ளார். 

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இதைப் பற்றி எனக்கு 2-வது யோசனை கிடையாது. உங்களால் விராட் கோலி இன்றி அணியை உருவாக்க முடியாது. ஏனெனில் அவர் பெரிய பேட்ஸ்மேன். கடந்த உலகக் கோப்பையில் இந்தியாவுக்காக 3 - 4 போட்டிகளை தனது வழியில் வென்றுக் கொடுத்தார். ஒருவேளை அந்தப் போட்டிகளில் விராட் கோலி இறங்கி நிற்காமல் போயிருந்தால் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற அணிகளுக்கு எதிராக லீக் சுற்றில் ஆரம்பத்திலேயே விக்கெட்களை இழந்த இந்தியா தோல்வியை சந்தித்திருக்கும்.

    எனவே அவருடைய இடத்தை பற்றி கேள்வி எழுப்புவது நியாயமற்றது. டி20 உலகக் கோப்பையில் அவருடைய இடத்தை பற்றி கேள்வி எழுப்புவர்கள் தெருவோர கிரிக்கெட்டைச் சேர்ந்தவர்கள்.

    இவ்வாறு முகமது இர்பான் கூறினார். 

    டி20 கிரிக்கெட் வரலாற்றிலேயே 4 ஓவரில் ஒரு ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சாதனைப் படைத்துள்ளார். #CPL2018
    வெஸ்ட் இண்டீஸில் கரிபியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் பார்படோஸ் டிரிடென்ட்ஸ் - செயின்ட் கிட்ஸ் அண்டு நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணிகள் மோதின.

    முதலில் பேட்டிங் செய்த பார்படோஸ் டிரிடென்ட்ஸ் 147 ரன்கள் சேர்த்தது. பின்னர் செயின்ட் கிட்ஸ் அண்டு நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணி பேட்டிங் செய்தது. அப்போது முதல் ஓவரை பாகிஸ்தான் அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் முகமது இர்பான் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்திலேயே கிறிஸ் கெய்லை வீழ்த்தினார்.

    அதன்பின் அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்தினார். தொடர்ந்து நான்கு ஓவர்களையும் வீசினார். அவர் பந்தை செயின்ட் கிட்ஸ் அணி பேட்ஸ்மேன்களால் தொடக்கூட முடியவில்லை. 23 பந்தில் ரன்ஏதும் விட்டுக்கொடுக்கவில்லை.



    இதனால் கடைசி பந்திலும் ரன் விட்டுக்கொடுக்காமல் சாதனைப் படைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி பந்தில் ஒரு ரன் விட்டுக்கொடுத்தார். இதன்மூலம் நான்கு ஓவரில் 3 மெய்டனுடன் ஒரேயொரு ரன் மட்டும் விட்டுக்கொடுத்து (4-3-1-2) 2 விக்கெட் வீழ்த்தினார்.

    இதன் மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் நான்கு ஓவர் ஸ்பெல்லில் ஒரேயொரு ரன் மட்டும் விட்டுக்கொடுத்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
    ×