search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sub Inspector"

    • நாங்குநேரி அருகே உள்ள மூலைக்கரைப்பட்டி யில் கார்த்திக் என்பவர் சப்-இன்ஸ்பெக்டராக பணி புரிந்து வருகிறார்.
    • நேற்று அவரது வீட்டிற்கு ஒரு கடிதம் வந்தது. அதில் எங்ககிட்ட மோதாதே, செத்துருவ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

    களக்காடு:

    நாங்குநேரி அருகே உள்ள மூலைக்கரைப்பட்டி யில் கார்த்திக் என்பவர் சப்-இன்ஸ்பெக்டராக பணி புரிந்து வருகிறார். இவர் அங்கு வாடகை வீட்டில் வசித்து வருகிறார். நேற்று அவரது வீட்டிற்கு ஒரு கடிதம் வந்தது. அதில், அரிவாள் படம் வரைந்து, எங்ககிட்ட மோதாதே, செத்துருவ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. கடிதத்தில் அனுப்புனர் முகவரி இல்லை.

    போலீசாரை மிரட்ட வேண்டும் என்பதற்காக யாரோ மர்ம நபர் மொட்டை கடிதம் அனுப்பி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதுபற்றி சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் மூலைக்கரைப்பட்டி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் செல்வி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மிரட்டல் கடிதம் அனுப்பிய மர்ம நபரை தேடி வருகிறார்.

    • திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் சத்யபிரியா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
    • மசாஜ் சென்டரில் விபச்சாரம் நடப்பது உறுதி செய்யப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டார்.

    திருச்சி:

    திருச்சி மாநகரத்தில் செயல்படும் ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர்களில் பாலியல் தொழில் நடப்பதாக புகார்கள் வருகின்றன. அவ்வப்போது விபச்சார தடுப்பு பிரிவு போலீசாரும் மேற்கண்ட மையங்களில் அதிரடி சோதனை நடத்தி அப்பாவி பெண்களை மீட்டு வருகின்றனர். இந்நிலையில் பாலியல் தொழிலை தடுக்க தவறியதாக, திருச்சி மாநகர விபச்சார தடுப்பு பிரிவு சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் ராஜ்மோகன், பால சரஸ்வதி, ஏட்டு அசாலி ஆகிய மூவரையும் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து, திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் சத்யபிரியா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    கடந்த இரு தினங்களுக்கு முன்பு கலெக்டர் அலுவலக சாலையில் மசாஜ் சென்டரில் விபச்சாரம் நடப்பது உறுதி செய்யப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டார். மேலும் வெளி மாநில அழகி உட்பட 3 பேர் மீட்கப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக மேற்கண்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

    • ராசிபுரம் பச்சுடையாம்பாளையத்தை சேர்ந்த நிதி நிறுவன உரிமையாளர் ஜெயராஜன் என்பவர் மோசடி புகார் ஒன்று அளித்தார்.
    • அந்த புகாரில், ராசிபுரத்தை சேர்ந்த ஆல்ட்ரின் போஸ்கோ என்கிற ஜெயக்குமார் என்பவர் தனது இரு மகன்களுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.20 லட்சத்தை வாங்கிக்கொண்டு தலைமறைவாகிவிட்டார்.

    நாமக்கல்:

    நாமக்கல் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் பூபதி (வயது 42). இவர் கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை ராசிபுரம் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்தபோது, ராசிபுரம் பச்சுடையாம்பாளையத்தை சேர்ந்த நிதி நிறுவன உரிமையாளர் ஜெயராஜன் என்பவர் மோசடி புகார் ஒன்று அளித்தார்.

    லஞ்சம்

    அந்த புகாரில், ராசிபுரத்தை சேர்ந்த ஆல்ட்ரின் போஸ்கோ என்கிற ஜெயக்குமார் என்பவர் தனது இரு மகன்களுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.20 லட்சத்தை வாங்கிக்கொண்டு தலைமறைவாகிவிட்டார். மேலும் அவர் வெவ்வெறு காரணங்களுக்காக எனது நிதி நிறுவனத்தில் ரூ.13 லட்சம் கடன் பெற்று செலுத்தவில்லை என தெரிவித்திருந்தார்.

    இந்த புகார் தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் பூபதி விசாரணை நடத்தினார். அப்போது வழக்கு தொடர்பாக நடவடிக்கை எடுக்க ெஜயராஜனிடம் இரு தவணைகளில் ரூ.5 லட்சம் லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது. மேலும், அவர் மோசடி புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.

    அதிரடி சோதனை

    இது தொடர்பாக நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு வந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி சப்-இன்ஸ்பெக்டர் பூபதி மீது நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து நேற்று நாமக்கல் திருநகரில் உள்ள பூபதியின் வீடு, நாமக்கல்- சேலம் சாலையில் உள்ள தங்கும் விடுதி மற்றும் திருச்செங்கோடு அருகே மல்லசமுத்திரத்தில் உள்ள பூபதியின் பெற்றோர் வீடு, சவுரிபாளையத்தில் உள்ள மாமனார் வீடு உள்ளிட்ட 4 இடங்களில் ஒரே நேரத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தனித்தனி குழுவாக சோதனையில் ஈடுபட்டனர்.

    ரூ.1.74 லட்சம் சிக்கியது

    நேற்று காலை 6.30 மணிக்கு தொடங்கிய சோதனை மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. 10 அரை மணி நேரம் நடந்த இந்த சோதனையில் சப்-இன்ஸ்பெக்டர் பூபதி வீட்டில் இருந்த கணக்கில் வராத ரூ.1.74 லட்சம் ரொக்கம் மற்றும் வழக்கு தொடர்புடைய ஆவணங்கள் சிக்கியது.

    இது பற்றி லஞ்ச ஒழிப்பு போலீசார், துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.லஞ்ச ஒழிப்பு போலீசாரின் இந்த திடீர் சோதனையால் நாமக்கல் சட்டம்- ஒழுங்கி பிரிவில் பணியாற்றும் போலீசார் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் போலீசார், இது ெதாடர்பாக அடுத்தக்கட்ட நடவடிக்கையை தொடங்கி உள்ளனர். அதன்படி கைப்பற்றப்பட்ட கணக்கில் வராத இந்த பணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, சப்-இன்ஸ்பெக்டர் பூபதியிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்ட ராக பணியாற்றி வந்த லதா தெர்மல் நகருக்கு மாற்றப்பட்டுள்ளார்.
    • சிப்காட் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் புதியம்புத்தூருக்கும், கடம்பூர் எஸ்.ஐ. சேட்டை நாதன் முறப்பநாடு போலீஸ் நிலையத்திற்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் 20 சப்-இன்ஸ்பெக்டர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதன்படி, அனைத்து மகளிர் போலீஸ் நிலை யத்தில் சப்-இன்ஸ்பெக்ட ராக பணியாற்றி வந்த லதா தெர்மல் நகருக்கு மாற்றப்பட்டுள்ளார்.

    இவருக்கு பதிலாக நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் அனுசியா தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலை யத்திற்கு மாற்றப்பட்டு உள்ளார்.

    தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ராஜபிரபு தெர்மல்நகருக்கும், கட்டுப்பாட்டு அறை எஸ்.ஐ. கணேசன் மாவட்ட குற்ற ஆவண காப்பக பிரிவுக்கும், சிப்காட் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் புதியம்புத்தூருக்கும், கடம்பூர் எஸ்.ஐ. சேட்டை நாதன் முறப்பநாடு போலீஸ் நிலையத்திற்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் உள்பட 20 சப்-இன்ஸ்பெக்டர் திடீர் இடமாற்றம் செய்யப் பட்டுள்ளனர்.

    • கோபமடைந்த சுதாகர், அந்த பெண்ணின் கணவரிடம் உன்னை கைது செய்து விடுவேன் என மிரட்டி உள்ளார்.
    • சுதாகரை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவிட்டார்.

    விளாத்திகுளம்:

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த சுதாகர் என்பவர், புகார் அளிப்பதற்காக போலீஸ் நிலையத்திற்கு வந்த திருமணமான பெண் ஒருவரின் செல்போன் எண்ணை அவரது புகார் மனுவில் இருந்து எடுத்து அந்த பெண்ணுக்கு போன் செய்து, ஆபாசமாக பேசி அடிக்கடி தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.

    ஒரு கட்டத்தில் அவரது தொல்லை தாங்க முடியாமல் சப்-இன்ஸ்பெக்டர் சுதாகர் தனக்கு அடிக்கடி போன் செய்து ஆபாசமாக பேசுவது குறித்து அந்த பெண் தனது கணவரிடம் கூறியுள்ளார்.

    உடனே பெண்ணின் கணவர் இது குறித்து சுதாகரிடம் சென்று தட்டிக் கேட்டுள்ளார். இதனால் கோபமடைந்த சுதாகர், அந்த பெண்ணின் கணவரிடம் உன்னை கைது செய்து விடுவேன் என மிரட்டி உள்ளார்.

    இதனையடுத்து அந்த பெண்ணும், அவரது கணவரும் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணனிடம் நேரில் சென்று இதுகுறித்து புகார் அளித்தனர்.

    இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்களிடம் எஸ்.பி. பாலாஜி சரவணன் உறுதி அளித்தார். அதனைத்தொடர்ந்து, உடனடியாக விளாத்திகுளம் சப்-இன்ஸ்பெக்டர் சுதாகரை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவிட்டார்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்புதான் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் சப்-இன்ஸ்பெக்டர் சுதாகருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி உள்ளார். இந்நிலையில், தற்போது ஒழுங்கு நடவடிக்கை காரணமாக அவர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    • தூத்துக்குடி ரூரல் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கர் தென்பாகம் காவல் நிலயத்திற்கும் இட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
    • கடம்பூர் காவலர் சந்தோஷ் செல்வம் புதுக்கோட்டை தனிப்பிரிவிற்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் 3 சப்-இன்ஸ் பெக்டர்கள் உட்பட 13 தனிப்பிரிவு காவ லர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு ள்ளனர்.

    இடமாற்றம்

    இதன்படி, விளாத்திகுளம் தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தருவைகுளம் காவல் நிலை யத்திற்கும், திருச்செந்தூர் தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரகு திருச்செந்தூர் கோவில் காவல் நிலையத்திற்கும், தூத்துக்குடி ரூரல் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கர் தென்பாகம் காவல் நிலயத்திற்கும் இட மாற்றம் செய்யப் பட்டுள்ளனர்.

    தென்பாகம் தனிப்பிரிவு காவலர் மாரிக்குமார் தென்பாகம் காவல் நிலை யத்திற்கும், புதுக்கோட்டை தனிப்பிரிவு காவலர் சாமிக்கண்ணு தட்டப்பாறை காவல் நிலையத்திற்கும், எப்போதும்வென்றான் காவலர் செல்வகுமார் பசுவந்தனை தனிப்பிரி விற்கும், பசுவந்தனை காவலர் கணபதி எப்போதும்வென்றான் தனிப்பிரிவிற்கும், கடம்பூர் காவலர் சந்தோஷ் செல்வம் புதுக்கோட்டை தனிப்பிரிவிற்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    செய்துங்கநல்லூர்

    சாயர்புரம் காவலர் மைக்கேல்ராஜ் கடம்பூர் தனிப்பிரி விற்கும், விளாத்தி குளம் காவலர் ஜெயசந்திரன் புதூர் தனிப்பிரிவிற்கும், புதூர் காவலர் நாகார்ஜுனன் மாசார்பட்டி தனிப்பிரி விற்கும், செய்துங்கநல்லூர் காவலர் ராஜேஷ் சேரகுளம் தனிப் பிரிவிற்கும், சேர குளம் காவலர் சங்கரசுப்பு செய்துங்க நல்லூர் தனிப் பிரிவிற்கும் பணியிட மாற்றம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    • கடந்த சில நாட்களுக்கு முன் திருவள்ளூர் நகராட்சி நிர்வாகம் பாதாள சாக்கடை அடைப்பை சீர் செய்யும் பணி நடைபெற்றது.
    • சிவகுமார் உடனடியாக கற்களையும், மண்ணையும் கொண்டு வந்து கொட்டி சாலையை சீர் செய்தார்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் உழவர் சந்தை பகுதியில் நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.

    இங்கு கடந்த சில நாட்களுக்கு முன் திருவள்ளூர் நகராட்சி நிர்வாகம் பாதாள சாக்கடை அடைப்பை சீர் செய்யும் பணி நடைபெற்றது. இதனால் பல இடங்களில் சாலைகள் குண்டும், குழியுமாக மாறி உள்ளன.

    குறிப்பாக சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் திருவள்ளூர் உழவர் சந்தை அருகே பெரிய பள்ளத்தால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தனர்.

    நேற்று அப்பகுதியில் நடந்து சென்ற முதியவர் பள்ளத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்து எழுந்து சென்றார். இதனை கண்டதும் அங்கு பணியில் இருந்த போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டர் சிவகுமார் உடனடியாக கற்களையும், மண்ணையும் கொண்டு வந்து கொட்டி சாலையை சீர் செய்தார்.

    அவரே பள்ளத்தில் கற்களை கொட்டினார். இதனை கண்ட பொதுமக்கள் அவரை பாராட்டினர். இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

    திருவள்ளூர் போக்குவரத்து பிரிவில் பணியாற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமாரின் செயலை போலீஸ் உயர் அதிகாரிகளும் பாராட்டினார்.

    திருவள்ளூர் நகரில் பாதாள சாக்கடை பணிக்காக பல இடங்களில் தோண்டப்பட்டு ஆங்காங்கே குண்டும், குழியுமாக உள்ள பள்ளங்களை பெரிய அளவில் விபத்து ஏற்படும் முன்னர் உடனடியாக சீரமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • வேலைவாய்ப்புத்துறையின் காஞ்சிபுரம் மண்டலத் துணை இயக்குநர் அருணகிரி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் புகைப்படம் மற்றும் ஆதார் அட்டையுடன் தொடர்பு கொள்ளலாம்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகமும், தொழில் நெறி வழிகாட்டும் மையமும் இணைந்து சப்-இன்ஸ்பெக்டர்கள் பணிக்கு எழுத்து தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு காஞ்சிபுரம் மாவட்ட வேலைவய்ப்பு அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.

    இதனை வேலைவாய்ப்புத்துறையின் காஞ்சிபுரம் மண்டலத் துணை இயக்குநர் அருணகிரி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் கூறும்போது:-காவல்துறையில் சார்பு ஆய்வாளர் பணிக்கான போட்டித் தேர்வுக்குரிய இலவச பயிற்சி வகுப்பு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.

    மாதிரித் தேர்வு கையேடுகள் இலவசமாக வழங்கப்படுகிறது. பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் புகைப்படம் மற்றும் ஆதார் அட்டையுடன் தொடர்பு கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு 044 27237124 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என்றார்.

    • 1.6.2023 முதல்www.tnusrb.tn.gov.in என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம்.
    • இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாலை 2.30 மணி முதல் 4.30 மணி வரைநடைபெறும்.

    திருப்பூர் :

    தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தால் சார்பு ஆய்வாளர் தேர்வுக்கு621 பணிக்காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இத்தேர்வுடன் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் 129 காலிப்பணியிடங்களும் சேர்க்கப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு 1.6.2023 முதல்www.tnusrb.tn.gov.in என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பிக்க கடைசி தேதி 30.6.2023 ஆகும்.

    இத்தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்புமற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய தன்னார்வ பயிலும் வட்டத்தில் 30.5.2023அன்று தொடங்கப்படவுள்ளது. மேலும் திங்கள் முதல் வெள்ளி வரை இத்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாலை 2.30 மணி முதல் 4.30 மணி வரைநடைபெறும். இவ்வகுப்பில் தொடர்ந்து மாதிரி தேர்வுகளும் நடத்தப்பட உள்ளது.

    மேற்காணும் இத்தேர்விற்கு தயாராகும் இளைஞர்கள் இந்த இலவச பயிற்சியில் கலந்து கொள்ள தங்கள் பெயரை முன்பதிவு செய்ய திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்புஅலுவலகத்தில் நேரிலோ அல்லது 0421-2999152, 9499055944 என்ற எண்ணிலோதொடர்பு கொள்ளலாம். இப்பயிற்சியில் சேர்ந்து பயன்பெறுமாறு திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

    • சட்ட விரோத செயல்களுக்கு சிம்ம சொப்பணமாக திகழ்ந்த சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு இடமாற்றம் செய்யப்பட்டனர்.
    • பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்தனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா நரிக்குடி சரக காவல் நிலையத்திற்கு உட்பட்ட அ.முக்குளம் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றிய வீரணன், மாவட்ட எஸ்.பி., தனிப்பிரிவு காவலர் சிலம்பரசன் ஆகியோர் ஆயுதப்படை பிரிவிற்கு இடமாற்றம் செய்யப் பட்டனர்.

    இதனையறிந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் போலீசாரின் இத்தகைய பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அ.முக்குளம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் பல வருடங்க ளாக கஞ்சா விற்பனை, திருட்டு, மதுபாட்டில்கள் விற்பனை போன்ற சட்ட விரோத செயல்கள் அதிகரித்து வந்தது.

    சில மாதங்களுக்கு முன்பு அ.முக்குளம் காவல் நிலையத்திற்கு மாறுதலாகி வந்த சப்-இன்ஸ்பெக்டர் வீரணன், மாவட்ட எஸ்.பி., தனிப்பிரிவு காவலர் சிலம்பரசன் ஆகியோர் சக போலீசாருடன் இணைந்து கஞ்சா விற்பனை, சட்ட விரோத மதுபான விற்பனை, கொலை, கொள்ளை, மணல் திருட்டு போன்ற குற்ற சம்பவங்க ளுக்கு எதிராக நாள்தோறும் காலை, மாலை நேரங்களில் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.

    அதன் காரணமாக அந்த பகுதியில் குற்றச்செயல்கள் பெருமளவு குறைந்திருந்தன. மேலும் அ.முக்குளம் பகுதிகளில் இளைஞர்கள், மாணவர்களின் எதிர்காலத்தையே சீரழிக்கும் கஞ்சா விற்பனை படுஜோராக நடந்த நிலையில் பணிக்கு வந்த சில வாரங்களிலேயே வாகன தணிக்கையின் போது நரிக்குடி சரகத்தில் ஒரே நேரத்தில் 30 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்ததுடன் அதில் சம்பந்தப்பட்ட 8 குற்றவாளி களை அதிரடியாக கைது செய்தனர்.

    அது மட்டுமின்றி நரிக்குடி மற்றும் அ.முக்குளம் பகுதிகளில் தொடர் திருட்டு சம்பவங்கள், ஆடு திருட்டு என பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்தவர்க ளையும் கைது செய்வதற்கு உதவியாக இருந்தனர்.

    இவ்வாறு பணியில் சேர்ந்தது முதல் குற்ற சம்பவங்களை தடுத்து நிறுத்துவதோடு அந்த பகுதியில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கிராமங்க ளுக்கு நேரில் சென்று மாணவர்களின் எதிர்கா லத்தை சீரழிக்கும் கஞ்சாவை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரமும் செய்தனர்.

    இந்த நிலையில் அந்த பகுதியில் குற்றச்செயல்கள் குறைந்து வந்ததுடன் காவல் நிலையம் செல்லும் பொது மக்களின் நியாயமான கோரிக்கைகளை கேட்ட றிந்து அது தொடர்பாக புகார் கொடுக்கப்படும் நபர்கள் மீது பாரபட்சமின்றி முறையான விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் இவர்களை போன்ற நேர்மை யாகவும், பொது மக்களுக்கு பாதுகாவ லனாகவும் இருக்கும் போலீசாரை திடீரென்று இடமாற்றம் செய்யப் பட்டதால் அ.முக்குளம் பகுதியில் மீண்டும் கஞ்சா விற்பனை, கொள்ளை, திருட்டு போன்ற சட்ட விரோத செயல்கள் அதிகரித்துள்ளன. அதன் காரணமாக மீண்டும் சீர்கேடான பகுதியாக அ.முக்குளம் உருவாகும் என்பதில் சந்தேகமில்லை என்று பொதுமக்கள் ஆதங்கம் தெரிவித்தனர்.

    எனவே மாவட்ட காவல்துறை நிர்வாகம் அ.முக்குளம் காவல் நிலையத்தில் நேர்மையாக செயல்பட்ட காவல்துறை அதிகாரி மற்றும் ஏட்டுவின் பணியிட மாற்றத்தை பரிசீலனை செய்து மீண்டும் அ.முக்குளம் காவல் நிலையத்திலேயே பணி அமர்த்த வேண்டும்.

    இதன் மூலம் அ.முக்குளம் காவல் நிலைய எல்லைப்ப குதிகளில் உள்ள கிராமங்களை மீண்டும் அமைதி பூங்காவாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்தனர்.

    • சார்பு ஆய்வாளர் தேர்வுக்கு 621 பணிக்காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
    • விண்ணப்பிக்க கடைசி தேதி 30.6.2023 ஆகும்.

    திருப்பூர் :

    சீருடைப்பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தும் சார்பு ஆய்வாளர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இது குறித்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தால் சார்பு ஆய்வாளர் தேர்வுக்கு 621 பணிக்காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு www.tnusrb.tn.gov.in என்ற இணையதள முகவரி மூலம்1.6.2023 முதல்விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி 30.6.2023 ஆகும்.

    இத்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் கூடுதல் தன்னார்வ பயிலும் வட்டம் அமைந்துள்ள உடுமலைப்பேட்டை, எக்ஸ்டன்சன் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் 4.5.2023 அன்று முதல் திங்கள் - வெள்ளி வரை தினமும் 2மணி முதல் 3.30 மணி வரை தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

    மேற்காணும் இத்தேர்விற்கு தயாராகும் இளைஞர்கள் இந்த இலவச பயிற்சியில் கலந்து கொள்ள தங்கள் பெயரை திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரிலோ அல்லது 0421-2999152, 9499055944 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். மேலும், இப்பயிற்சி வகுப்பில் மாதிரித் தேர்வுகளும் தொடர்ந்து நடத்தப்பட உள்ளன. இப்பயிற்சியில் சேர்ந்து பயன்பெறுமாறு கலெக்டர் தெரிவித்துள்ளார். 

    • சப்-இன்ஸ்பெக்டர் ஏற்படுத்திய விழிப்புணர்வு மூலம் 11 குழந்தைகள் பள்ளியில் சேர்ந்து உள்ளதை பலர் பாராட்டி வருகின்றனர்.
    • குற்றங்களைத் தடுப்பது மட்டுமே காவல் துறையின் பணி அல்ல.

    சென்னை:

    மதுரையை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 40). இவர், தற்போது திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள பென்னாலூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் பயிற்சி சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார்.

    ஊத்துக்கோட்டை அருகே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் சப்-இன்ஸ்பெக்டர் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    கல்வி மீது ஆர்வம் கொண்ட இவர், தான் பணிபுரியும் இடங்களில் எல்லாம் பள்ளிக்கு செல்லாத குழந்தைகளை அணுகி கல்வியின் அவசியம் பற்றி வலியுறுத்தி வருகிறார்.

    சப்-இன்ஸ்பெக்டர் ஏற்படுத்திய விழிப்புணர்வு மூலம் 11 குழந்தைகள் பள்ளியில் சேர்ந்து உள்ளதை பலர் பாராட்டி வருகின்றனர்.

    இந்நிலையில் கல்வியின் முக்கியத்துவம் குறித்து பேசிய எஸ்.ஐ.யின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

    குற்றங்களைத் தடுப்பது மட்டுமே காவல் துறையின் பணி அல்ல, நல்ல சமூகத்தை வடிவமைப்பதிலும் அவர்களது பங்கு உண்டு.

    குழந்தைகளின் கல்வி உரிமைக்காக பேசிய பென்னாலூர்பேட்டை பயிற்சி எஸ்.ஐ. பரமசிவத்தை வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ×