search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சார்பு ஆய்வாளர் தேர்வுக்கு  இலவச பயிற்சி
    X

    கோப்புபடம்.

    சார்பு ஆய்வாளர் தேர்வுக்கு இலவச பயிற்சி

    • 1.6.2023 முதல்www.tnusrb.tn.gov.in என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம்.
    • இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாலை 2.30 மணி முதல் 4.30 மணி வரைநடைபெறும்.

    திருப்பூர் :

    தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தால் சார்பு ஆய்வாளர் தேர்வுக்கு621 பணிக்காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இத்தேர்வுடன் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் 129 காலிப்பணியிடங்களும் சேர்க்கப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு 1.6.2023 முதல்www.tnusrb.tn.gov.in என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பிக்க கடைசி தேதி 30.6.2023 ஆகும்.

    இத்தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்புமற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய தன்னார்வ பயிலும் வட்டத்தில் 30.5.2023அன்று தொடங்கப்படவுள்ளது. மேலும் திங்கள் முதல் வெள்ளி வரை இத்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாலை 2.30 மணி முதல் 4.30 மணி வரைநடைபெறும். இவ்வகுப்பில் தொடர்ந்து மாதிரி தேர்வுகளும் நடத்தப்பட உள்ளது.

    மேற்காணும் இத்தேர்விற்கு தயாராகும் இளைஞர்கள் இந்த இலவச பயிற்சியில் கலந்து கொள்ள தங்கள் பெயரை முன்பதிவு செய்ய திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்புஅலுவலகத்தில் நேரிலோ அல்லது 0421-2999152, 9499055944 என்ற எண்ணிலோதொடர்பு கொள்ளலாம். இப்பயிற்சியில் சேர்ந்து பயன்பெறுமாறு திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×