search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சார்பு ஆய்வாளர் தேர்வுக்கான இலவச பயிற்சியில் பங்கேற்க அழைப்பு
    X

    கோப்புபடம்.

    சார்பு ஆய்வாளர் தேர்வுக்கான இலவச பயிற்சியில் பங்கேற்க அழைப்பு

    • சார்பு ஆய்வாளர் தேர்வுக்கு 621 பணிக்காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
    • விண்ணப்பிக்க கடைசி தேதி 30.6.2023 ஆகும்.

    திருப்பூர் :

    சீருடைப்பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தும் சார்பு ஆய்வாளர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இது குறித்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தால் சார்பு ஆய்வாளர் தேர்வுக்கு 621 பணிக்காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு www.tnusrb.tn.gov.in என்ற இணையதள முகவரி மூலம்1.6.2023 முதல்விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி 30.6.2023 ஆகும்.

    இத்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் கூடுதல் தன்னார்வ பயிலும் வட்டம் அமைந்துள்ள உடுமலைப்பேட்டை, எக்ஸ்டன்சன் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் 4.5.2023 அன்று முதல் திங்கள் - வெள்ளி வரை தினமும் 2மணி முதல் 3.30 மணி வரை தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

    மேற்காணும் இத்தேர்விற்கு தயாராகும் இளைஞர்கள் இந்த இலவச பயிற்சியில் கலந்து கொள்ள தங்கள் பெயரை திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரிலோ அல்லது 0421-2999152, 9499055944 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். மேலும், இப்பயிற்சி வகுப்பில் மாதிரித் தேர்வுகளும் தொடர்ந்து நடத்தப்பட உள்ளன. இப்பயிற்சியில் சேர்ந்து பயன்பெறுமாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×