search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "study"

    • கடற்கரையையொட்டி தாழ்வான பகுதிகளில் மக்கள் வசித்துவரும் கிராமங்களில் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.
    • அவர்களுக்கான அரசு நிவாரணத் தொகை ரூ.5000 மற்றும் 10 கிலோ அரிசி, சேலை ஆகிய வற்றை அர்ச்சனா பட்நாயக் வழங்கினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வட்டத்தில் கடற் கரையையொட்டி உள்ள தாழ்வான பகுதிகளில் மக்கள் வசித்து வரும் கிராமங்களுக்கு சென்று மாவட்ட கலெக்டர் பா.விஷ்ணு சந்தி ரன் முன்னிலையில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்துறை செயலரும், மாவட்ட கண்கா ணிப்பு அலுவலருமான அர்ச்சனா பட்நாயக் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    வடகிழக்கு பருவமழை துவங்கியதையொட்டி பேரி டர் காலத்தில் மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்கி பாதுகாத்திடும் வகையில் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம், இந்திரா நகர், குருவிக்காரன் தெரு வில் சுமார் 50-க்கும் மேற் பட்ட குடும்பங்கள் வசித்து வரும் பகுதியை பார்வை யிட்டு அந்த குடியிருப்பு பகுதியில் மழைநீர் தேங்காத வண்ணம் வடிகால் வாய்க் கால் சீரமைப்பதுடன் அவர் களுக்கு தேவையான குடிநீர் மற்றும் மருத்துவவசதி வழங் குவதை அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டு மென தெரிவித்தார்.

    பின்னர் கீழக்கரை வட் டம், சடையன்முனியன் வலசை ஊராட்சிக்கு சென்று இப்பகுதி கடற்கரை யையொட்டி மிக அருகாமை யில் உள்ளதாலும், மேலும் தாழ்வான பகுதியாக உள்ள தால் பேரிடர் காலங்களில் தண்ணீர் தேங்கும் பொழுது மக்களை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்று அவர்களுக்கு தேவையான வசதிகளை வழங்கிடும் வகையில் மேற் கொள்ளப்பட்டுள்ள பணி களை கேட்டறிந்தார்.

    பின்னர் அருகாமையில் உள்ள கல்பார் பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையத் திற்கு சென்று பார்வையிட்டு அங்கு 1000 பேர் தங்கும் அளவிற்கு உட்கட்டமைப்பு வசதிகள் தயார் நிலையில் உள்ளதை ஆய்வு செய்தார். இதேபோல் மாவட்டத்தில் கடற்கரையையொட்டி தாழ்வான இடங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு வசதிகளை செய்து கொடுக்கும் வகையில் தயார் நிலையில் வைத் திருக்க வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டார்.

    தொடர்ந்து பனைக்குளம் ஊராட்சியில் தொடர் மழை யால் வள்ளி என்பவரது வீடு முழுமையாக பாதிக்கப் பட்டதையொட்டி அவர்க ளுக்கான அரசு நிவாரணத் தொகை ரூ.5000 மற்றும் 10 கிலோ அரிசி, சேலை ஆகிய வற்றை அர்ச்சனா பட்நாயக் வழங்கினார்.

    இந்த ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, ராமநாத புரம் வருவாய் கோட்டாட் சியர் கோபு, கீழக்கரை வட்டாட்சியர் பழனிகுமார், திருப்புல்லாணி வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஸ் வரி மற்றும் அரசு அலுவ லர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மதுரை மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் அமைச்சர் சிவசங்கர் ‘திடீர்’ ஆய்வு செய்தார்.
    • முன்பதிவு செய்துள்ள பயணிகளி டையே பஸ் வசதிகள் குறித்து கருத்துகளையும் அமைச்சர் எஸ்.எஸ்.சிவ சங்கர் கேட்டறிந்தார்.

    மதுரை

    தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் முடிந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வசிப்போர் அவரவர் சொந்த ஊர்களுக்கும், பணிபுரியும் இடத்திற்கும் செல்வதற்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சிறப்பு ஏற்பாடுகளை செய் துள்ளது.

    அதேவேளையில் ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்பது தொடர்பாக தீவிரமாக கண்காணிக்கவும் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் தீபாவளியை கொண்டாட சொந்தஊர் சென்ற பயணிகள் எந்தவித சிரமமும் இன்றி அவர்கள் ஊர் திரும்ப வேண்டிய ஏற்பாடுகளை செய்து தருமாறு அறிவுறுத்திய தோடு, அதனை பல்வேறு இடங்களுக்கு சென்று ஆய்வு நடத்தி யும் வருகிறார்.

    அந்த வகையில் மதுரை பைபாஸ் கிளை சார்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. நேற்று பொது விடுமுறை என்பதால் ஏராளமானோர் மதுரை ஆரப்பாளையம், மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர். ஒருங்கிணைந்த பேருந்து நிலையங்களில் குவியத் தொடங்கினர்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், தீபாவளி பண் டிகை முடிந்து சென்னை மற்றும் பல்வேறு பகுதிக ளுக்கு பயணிகள் பயணிக்க ஏதுவாக இயக்கப்படும் சிறப்பு பஸ்கள் குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டார். டிக்கெட் கட்டணம் குறித்த தகவல்களையும் அதிகாரிக ளிடம் கேட்டார்.

    அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு போக்குவ ரத்துக் கழகம் மதுரை கோட்ட முன்பதிவு விசாரணை மையம் மற்றும் அரசு விரைவு போக்குவரத்துக் கழக முன்பதிவு விசாரணை மையங்களில் ஆய்வு செய் தார்.

    மேலும் அனைத்து வழித்தடத்திலும் சிறப்பு பஸ்கள் இயக்கங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். முன்பதிவு செய்துள்ள பயணிகளிடையே பஸ் வசதிகள் குறித்து கருத்துகளையும் அமைச்சர் எஸ்.எஸ்.சிவ சங்கர் கேட்டறிந்தார்.

    இந்த ஆய்வின்போது தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மதுரை கோட்ட மேலாண்மை இயக்குநர் ஆறுமுகம் மற்றும் போக்குவரத்து கழக அதிகா ரிகள் உடனிருந்தனர்.

    • 16 கால் மண்டபம், கோவில் ராஜகோபுரம் ஆகியவற்றை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பார்வையிட்டார்.
    • கோவிலின் வரைபடத்தை வைத்து மின்விளக்குகள் பொருத்துதல் தொடர்பாக ஆய்வு செய்தார்.

    மன்னார்குடி:

    மன்னார்குடி ராஜகோபா லசாமி கோவிலில் குடமு ழுக்கு திருப்பணி ஆயத்த பணிகளை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அப்போது நுழைவு வாயிலில் உள்ள 16 கால் மண்டபம், கோவில் ராஜகோபுரம், மற்றும் செங்க மலத்தாயார், ராஜ கோபாலசாமி சன்ன திகள் ஆகியவற்றை பார்வையி ட்டார்.

    தொடர்ந்து, கோவிலின் வரைபடத்தை வைத்து கோவிலில் மின்விளக்குகள் பொருத்துதல் தொடர்பாக ஆய்வு செய்தார்.

    ஆய்வின்போது, கோவில் நிர்வாக அலுவலர் மாதவன், இந்து சமய அறநிலையத்துறை மின்சார பிரிவு செயற்பொறியாளர் வெங்கட சுப்பிரமணியன், தொல்லியல் துறை சேகர், மாவட்ட வன அலுவலர் ஸ்ரீதர், மன்னார்குடி நகர்மன்ற தலைவர் மன்னை சோழராஜன், கோவில் அறங்காவலர் குழு தலைவர் இளவரசன், தி.மு.க. நகர செயலாளர் வீரா கணேசன், ஒன்றிய செயலாளர் முத்துவேல் சிவா, தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர்கள் பாக்கியசாமி, பைங்காநாடு இளையராஜா உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • திருப்பூர் ரெயில்வே எல்லைக்கு உட்பட்ட திருப்பூர் - வஞ்சிபாளையம் வழித்தட தண்டவாளத்தில் சோதனை பணிகள் தொடங்கியது.
    • ரெயில் தண்டவாளங்கள் நிலையை அறிய, ஆண்டுக்கு ஒருமுறை இதுபோன்ற சோதனை நடத்தப்படும் என்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் ெரயில்வே எல்லைக்கு உட்பட்ட திருப்பூர் - வஞ்சிபாளையம் வழித்தட தண்டவாளத்தில் சோதனை பணிகள் தொடங்கியது. இதில் தண்டவாளத்தின் உட்பகுதியில் ஏற்படும் நுண்ணிய, லேசான விரிசலையும் கண்டறியும் யு.எஸ்.எப்.டி., (அல்ட்ரா சானிக் பிளா ரீடெக்டர்) டிஜிட்டல் கேமரா மூலம் தண்டவாளங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. மேலும் திருப்பூர் ெரயில் நிலையத்தில் இருந்து தொடங்கி, சிக்கண்ணா கல்லூரி வரையிலும், இரண்டாம் கட்டமாக அணைப்பாளையம் முதல் வஞ்சிபாளையம் என இரு பிரிவுகளாக சோதனை நடத்தப்பட்டது. எந்த இடத்திலும் விரிசல் கண்டறியப்படவில்லை. இதுகுறித்து ெரயில்வே பொறியியல் கண்காணிப்பு பிரிவு அதிகாரிகள் கூறுகையில், கண்ணுக்கு தெரியாத, வெளியே புலப்படாத விரிசல் தண்டவாளத்தில் இருப்பதை யு.எஸ்.எப்.டி., கருவி மூலம் அறிந்து கொள்ள முடியும். ெரயில் தண்டவாளங்கள் நிலையை அறிய, ஆண்டுக்கு ஒருமுறை இதுபோன்ற சோதனை நடத்தப்படும் என்றனர்.

    • தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகத்துக்கு நிரந்தர இயக்குநா் நியமிக்க அரசுக்கு பரிந்துரைக்கப்படும்.
    • தமிழ் பண்பாடு, வரலாற்றை அறிவதற்காக தமிழக அரசு அதிகளவில் நிதி ஒதுக்கி வருகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூா் சரசுவதி மகால் நூலகம், மாவட்ட மைய நூலகம் உள்ளிட்டவற்றில் தமிழ்நாடு சட்டப்பேரவை நூலகக் குழுவின் தலைவா் சுதா்சனம் ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் நிருபர்க ளுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் நூலகங்கள் மீது முதல்-அமைச்சரும், விளையாட்டு, இளைஞா் நலன் துறை அமைச்சரும் அதிகக் கவனம் செலுத்து கின்றனா்.

    ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு நூலகம் உருவாக்கப்பட வேண்டும் என எங்களுடைய இளைஞரணி செயலா் கூறியதன்பேரில் அதற்கு முயற்சி மேற்கொள்ளப்ப டுகிறது.

    அதன்படி பல இடங்களில் நூலகங்கள் தொடங்கப்ப ட்டுள்ளன. மக்களிடையே வாசிப்புத்தன்மை, விழிப்புணா்வை ஏற்படுத்தவும், வரலாற்றை அறிவதற்காகவும் நூலகங்கள் தொடங்கப்படுகின்றன.

    மாணவா்கள், மக்களுக்குப் பயன்படும் வகையில் நூலகங்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது.

    தஞ்சாவூா் சரஸ்வதி மகால் நூலகத்தில் ஆட்கள் பற்றாக்குறை குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். கீழடி போன்ற 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ்ப் பண்பாடு, வரலாற்றை அறிவதற்காக தமிழக அரசு அதிகளவில் நிதி ஒதுக்கி வருகிறது.

    அந்த வகையில் தஞ்சாவூா் சரஸ்வதி மகால் நூலகத்து க்கும் முக்கியத்துவம் அளிக்க தமிழக முதல்-அமைச்சருக்கு பரிந்துரைக்கப்படும்.

    இந்த நூலத்துக்கு நிரந்தர இயக்குநா் நியமிப்பது குறித்தும் அரசுக்குப் பரிந்துரைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னா், மாவட்ட ஆட்சியரகத்தில் சுதா்சனம் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

    இக்குழுவில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் கணபதி, சம்பத்குமாா், சரவணகுமாா், ஸ்டாலின்குமாா், குழு அலுவலா் துணைச் செயலா் ராஜேந்திரன் உள்ளிட்டோா் இடம் பெற்றனா்.

    ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலா் தியாகராஜன், அரசு தலைமை கொறடா கோவி. செழியன், ராமலிங்கம் எம்.பி, டி.கே.ஜி. நீலமேகம் எம்.எல்.ஏ, மேயா் சண். ராமநாதன், துணை மேயா் அஞ்சுகம் பூபதி, மாநகராட்சி ஆணையா் மகேஸ்வரி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் உஷா புண்ணியமூா்த்தி , வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா, மாவட்ட நூலக அலுவலர் முத்து உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

    • விருதுநகரில் ரூ.69 லட்சம் மதிப்பீட்டில் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
    • அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு செய்தார்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகேயுள்ள மறையூர் - கட்டனூர் சாலையில் இருஞ்சிறை விலக்கு பகுதியில் அமைந்துள்ள மறையூர் கழுங்கு பகுதியில் பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்த னர்.

    இதனை யடுத்து பொது மக்கள் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக நெடுஞ்சாலைத்துறை மூலமாக உயர் மட்ட பாலம் அமைக்க திருச்சுழி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், நிதி மற்றும் மனித வள மேலாண்மைத்துறை அமைச்சருமான தங்கம் தென்னரசு நடவடிக்கை மேற்கொண்டார்.

    இந்த நிலையில் மறையூர் - கட்டனூர் சாலையில் சுமார் ரூ.69 லட்சம் திட்ட மதிப்பீட்டில் உயர் மட்ட பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த உயர்மட்ட பாலம் அமைக்கும் பணியினை தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் இந்த பால பணிகளை விரைந்து முடித்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென நெடுஞ் சாலைத்துறை அதிகாரி களுக்கு உத்தர விட்டார்.

    இந்த ஆய்வின் போது நரிக்குடி வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் கண்ணன், காரியாபட்டி பேரூராட்சி சேர்மன் செந்தில்,ஒன்றிய கவுன்சிலர் ரமேஷ் உள்பட பலர் உடனிருந்தனர்.

    • உணவு, இனிப்பு பொருட்கள் சுகாதாரமாக இருக்க வேண்டும்.
    • ஒவ்வொரு இனிப்பு பொருட்களிலும் தயாரிப்பு மற்றும் காலாவதி தேதிகளை கட்டாயம் குறிப்பிட வேண்டும்.

    பட்டுக்கோட்டை:

    தஞ்சை மாவட்டம் பட்டு க்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில்உள்ள உணவகங்கள் மற்றும் இனிப்பகங்கள் உள்ளி ட்ட கடைகளுக்கு தஞ்சை மாவட்ட உணவுபாதுகாப்பு துறை அதிகாரி சித்ரா தலைமையிலான அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்தனர்.

    இதில் தீபாவளிபண்டிகைக்கு தயாராகி வரும் இனிப்புகள் தரமானதாக உள்ளதா எனவும் அத்தோடு அதில் தயாரிப்பு மற்றும் காலாவதி யாகும் தேதிகள் கட்டாயம் குறிப்பிடப்பட்டு ள்ளதா எனவும் ஆய்வு செய்தனர்.

    இதனை தொடர்ந்து தனியார் திருமண மண்ட பத்தில் ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் இனிப்பாக உரிமையாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

    இதில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உணவு மற்றும் இனிப்பாக உரிமை யாளர்களிடத்தில் உணவு பாதுகாப்பு தொடர்பான அறிவுரைகள் மற்றும் சில விதிமுறைகள் வழங்கினர்.

    பின்னர் தஞ்சை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சித்ரா செய்தி யாளர்களிடத்தில் கூறுகை யில், ஒவ்வொரு இனிப்பு பொருட்களிலும் தயாரிப்பு தேதி மற்றும் அதன் காலாவதி தேதியை கட்டாயம்குறிப்பிட வேண்டும்.

    இந்த நடை முறையை கட்டாயம் அனைத்து ஹோட்டல் மற்றும் இனிப்பக உரிமையாளர்கள் பின்பற்ற வேண்டும் என அவர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

    இதன் மூலம் பொது மக்களுக்கு தரமான, பாதுகாப்பான உணவு மற்றும் இனிப்புகளை வழங்க முடியும் என்றார்.

    இந்த நிகழ்ச்சியில் ஹோட்டல்கள் உரிமையாளர் சங்கத் தலைவர் வெங்கடேசன் செயலாளர் அன்பு உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • இந்திய அளவில் தென்னை சாகுபடியில் தமிழகம் பிரதானமாக உள்ளது.
    • ஆய்வு முடிவுகள் அடிப்படையில் உருவாக்கப்படும் தென்னை ரகம் விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்படும்.

    உடுமலை:

    மத்திய தென்னை வளர்ச்சி வாரியத்தின், ஆராய்ச்சித் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய தென்னை மரங்கள் குறித்து ஆய்வு நடந்து வருகிறது.

    தென்னை மரங்கள் இந்தியாவில் 17 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில், சுமார் 20.16 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இந்திய அளவில் தென்னை சாகுபடியில் தமிழகம் பிரதானமாக உள்ளது.

    தென்னை சாகுபடியில் நீர்ப்பற்றாக்குறை, சீதோஷ்ண நிலை மாற்றங்கள் மற்றும் வறட்சியால் பாதிப்பு, நோய் தாக்குதல் உள்ளிட்ட காரணங்களினால் பாதிப்பு ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் திருப்பூர் மாவட்டம் உடுமலை திருமூர்த்திநகரில் அமைந்துள்ள மத்திய தென்னை வளர்ச்சி வாரியத்தில் தென்னை மகத்துவ மையம் மற்றும் நாற்றுப்பண்ணை, மத்திய அரசின் இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமத்தை சேர்ந்த காசர்கோடு மத்திய தோட்ட பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றின் சார்பில் வறட்சியை தாங்கி வளரக்கூடிய தென்னை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்த ஆய்வில் புதிய ரகத்தை உருவாக்கும் வகையில், வறட்சியை தாங்கும் தென்னை மரங்களை அடையாளம் காணுதல், தேங்காயின் தரம் மற்றும் அளவை மேம்படுத்துதல் மற்றும் வறட்சியை தாங்கும் வகையில் சாகுபடி நடைமுறையை மேம்படுத்துதல் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது.

    இது குறித்து மத்திய தென்னை வளர்ச்சி வாரிய மேலாளர் ரகோத்துமன் கூறியதாவது:-

    தென்னை வளர்ச்சி வாரிய மேலாளர் முதன்மை இணை ஆய்வாளராகவும், காசர்கோடு மத்திய தோட்ட பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனத்தை சேர்ந்த முதன்மை ஆய்வாளர் சம்சுதீன் மற்றும் சுப்ரமணியம், நிரல் உள்ளிட்டோரை கொண்ட குழு ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இரண்டு ஆண்டு கால ஆராய்ச்சி 2022 ஏப்ரலில் துவங்கியது. 2024 மார்ச் மாதம் நிறைவு பெறும்.கோவை , திருப்பூர் மாவட்டத்தில் வறட்சி அதிகமாக ஏற்படும் பகுதிகள், நிலத்தடிநீர்மட்டம் குறைவாக உள்ள பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    இப்பணியைத் தொடர்ந்து, கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களிலிருந்து 24,168 தென்னை மரங்கள் கண்டறியப்பட்டு அதிலிருந்து 2,037 தாய் மரங்கள் தேர்வு செய்யப்பட்டது.இந்த தாய் தென்னை மரங்களிலிருந்து, விதை காய்களை சேகரித்து திருமூர்த்திநகர் தென்னை வளர்ச்சி வாரிய பண்ணையில் நடவு செய்யப்பட்டு தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ள ப்பட்டு வருகிறது.

    இதன் அடிப்படையில் வறட்சியை தாங்கும் தகவமைப்பு, மரபணு குழுவை கண்டறிந்து புதிதாக உருவாக்கப்பட்டு, புதிய ரகம் உற்பத்தி செய்யப்படும். ஆய்வு முடிவுகள் அடிப்படையில் உருவாக்கப்படும் தென்னை ரகம் விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார். 

    • ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் 2 வகுப்பறை கட்டிடங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
    • அரசுஆரம்ப சுகாதார நிலையம் ரூ.1 கோடி மதிப்பில் கட்டப்பட உள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமரு கல் ஒன்றியம் எரவாஞ்சேரி ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் 2 வகுப்பறை கட்டிடம் கட்டும் பணிகளை முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து திருப்பய த்தங்குடியில் அரசுஆரம்ப சுகாதார நிலையம் ரூ.1 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள நிலையில் அதற்கான இடத்தையும், அதை தொடர்ந்து வடகரை ஊராட்சியில் ரேஷன் கடை கட்டுவதற்கான இடத்தையும் ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின் போது திருமருகல் தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.டி.எஸ்.சரவணன்,ஊராட்சி மன்ற தலைவர்கள் ரஜினி தேவி பாலதண்டாயுதம், பாண்டியன், மோகன், ஊராட்சி செயலர் பிரகாஷ் குமார் மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்.

    • மழைநீர் வீடுகளில் புகுந்து பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
    • சாட்டை வாய்க்காலை ஆக்கிரமிப்புகள் அகற்ற அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    சீர்காழி:

    சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட 3-வது வார்டில் பூந்தோட்ட தெருவில் சாட்டை வாய்க்கால் அமைந்துள்ளது.

    இந்த வாய்க்கால் பல ஆண்டுகளாக தூர்வாரப்ப டாமல் இருந்து வருகிறது.

    இதனால் அப்பகுதி விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    மேலும் மழைக்காலங்களில் மழைநீர் வீடுகளில் புகுந்து பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

    சாட்டை வாய்க்காலை ஆக்கிரமிப்புகள் அகற்றி தூர்வார வேண்டுமென தொடர்ந்து அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இதனை தொடர்ந்து 3 -வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் கஸ்தூரிபாய்செந்தில் சீர்காழி நகராட்சி ஆணையர் ஹேமலதாவிடம் சாட்டை வாக்காளர் தூர்வாரக்கோரி கோரிக்கை மனு அளித்தார்.

    இதனை தொடர்ந்து நகராட்சி ஆணையர் ஹேமலதா, நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகர், நகரமைப்பு ஆய்வாளர் மரகதம் ஆகியோர் சாட்டை வாய்க்காலை நேரடியாக சென்று பார்வையிட்டு அப்பகுதி மக்களிடம் விரைவில் வாய்க்காலை தூர்வாரி தருவதாக உறுதியளித்தனர்.

    இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்து நகராட்சி ஆணையருக்கும், நகர மன்ற உறுப்பினருக்கும் நன்றியும் பாராட்டுதலையும் தெரிவித்துள்ளனர்.

    விளையாட்டு மேம்பாட்டுக் குழு துணை அமைப்பாளர் செந்தில் உடனிருந்தார்.

    • ரேஷன் கடையில் பொருட்களின் இருப்பு விவரம் சரியாக உள்ளதா? என ஆய்வு செய்தார்.
    • அரிசி, பருப்பு மற்றும் இதர பொருட்களின் தரம் குறித்து ஆய்வு செய்தார்.

    பாபநாசம்:

    பாபநாசம் வடக்கு வீதியில் உள்ள வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்துக்கு உட்பட்ட ரேஷன் கடை உள்ளது.

    இந்த கடையில் இருந்து பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசி, பருப்பு மற்றும் இதர பொருட்களின் தரம் குறித்து மாவட்ட வழங்கல் அலுவலர் வாசுதேவன் திடீரென பார்வயைிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும், பொருட்களின் இருப்பு விவரம் சரியாக உள்ளதா? என அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    ஆய்வின்போது வருவாய் ஆய்வாளர் அஜித்குமார், சங்க செயலாளர் சரவணன், விற்பனையாளர் சிவகாம சுந்தரி மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்.

    • உலக அளவில் பட்டினி குறியீட்டு எண்ணில் இந்தியா 28.7 புள்ளிகள் பெற்றுள்ளது.
    • தவறான மதிப்பீடு, தவறான நோக்கம் கொண்டதாக இருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    உலக அளவில் உணவு பற்றாக்குறை, ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவற்றை ஆய்வு செய்து ஆண்டு தோறும் உலகப் பட்டினி குறியீடு வெளியிடப்படுகிறது. அயர்லாந்தை சேர்ந்த கன்சர்ன் வேர்ல்ட் வைட் மற்றும் ஜெர்மனியை சேர்ந்த வெல்ட் ஹங்கர் ஹில்பே ஆகிய நிறுவனங்கள் இப்பட்டியலை வெளியிட்டு வருகின்றன.

    இதில் ஊட்டச்சத்து குறைபாடு, குழந்தைகளின் வயதுக்கு ஏற்ற உயரம், 5 வயதுக்கு கீழ் இருக்கும் குழந்தைகளில் எத்தனை பேர் வயதுக்கு ஏற்ற உடல் எடை, உயரம் இல்லாமல் இருக்கிறார்கள் ஆகியவற்றை கொண்டு பட்டியல் தயாரிக்கப்படுகிறது.

    ஐ.நா.சபை, யுனிசெப் உள்ளிட்டவைகளிடம் இருந்து பெறப்படும் தரவுகளின் அடிப்படையில் கணக்கிடப்பட்டு உலக பட்டினி குறியீடு பட்டியல் வெளியாகிறது.

    இந்நிலையில் உலக பட்டினி குறியீடு பட்டியல் வெளியிடப்பட்டது. மொத்தம் 125 நாடுகள் தர வரிசைப்படுத்தப்பட்டிருந்தன. இதில் இந்தியா 111-வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு இந்தியா 107-வது இடத்தில் இருந்தது.

    இந்த ஆண்டு 4 இடங்கள் பின் தங்கி உள்ளது. உலக அளவில் பட்டினி குறியீட்டு எண்ணில் இந்தியா 28.7 புள்ளிகள் பெற்றுள்ளது. இது பட்டினி அளவு தீவிரமாக இருக்கிறது என்பதை குறிக்கிறது.

    அண்டை நாடுகளான பாகிஸ்தான் 102-வது இடத்திலும், வங்காளதேசம் 81-வது இடத்திலும், நேபாளம் 69-வது இடத்திலும், இலங்கை 60-வது இடத்திலும் உள்ளது. தெற்காசியா மற்றும் ஆப்பிரிக்கா சவுத் ஆப் தி சஹாரா ஆகிய பிராந்தியங்கள் கடைசி இடங்களில் உள்ளன.

    இந்த உலக பட்டினிக் குறியீடு பட்டியலை இந்தியா நிராகரித்துள்ளது. இப்பட்டியல், இந்தியாவின் உண்மை நிலையை பிரதிபலிக்கவில்லை என்றும், தவறான மதிப்பீடு, தவறான நோக்கம் கொண்டதாக இருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    ×