search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "railway tracks"

    • திருப்பூர் ரெயில்வே எல்லைக்கு உட்பட்ட திருப்பூர் - வஞ்சிபாளையம் வழித்தட தண்டவாளத்தில் சோதனை பணிகள் தொடங்கியது.
    • ரெயில் தண்டவாளங்கள் நிலையை அறிய, ஆண்டுக்கு ஒருமுறை இதுபோன்ற சோதனை நடத்தப்படும் என்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் ெரயில்வே எல்லைக்கு உட்பட்ட திருப்பூர் - வஞ்சிபாளையம் வழித்தட தண்டவாளத்தில் சோதனை பணிகள் தொடங்கியது. இதில் தண்டவாளத்தின் உட்பகுதியில் ஏற்படும் நுண்ணிய, லேசான விரிசலையும் கண்டறியும் யு.எஸ்.எப்.டி., (அல்ட்ரா சானிக் பிளா ரீடெக்டர்) டிஜிட்டல் கேமரா மூலம் தண்டவாளங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. மேலும் திருப்பூர் ெரயில் நிலையத்தில் இருந்து தொடங்கி, சிக்கண்ணா கல்லூரி வரையிலும், இரண்டாம் கட்டமாக அணைப்பாளையம் முதல் வஞ்சிபாளையம் என இரு பிரிவுகளாக சோதனை நடத்தப்பட்டது. எந்த இடத்திலும் விரிசல் கண்டறியப்படவில்லை. இதுகுறித்து ெரயில்வே பொறியியல் கண்காணிப்பு பிரிவு அதிகாரிகள் கூறுகையில், கண்ணுக்கு தெரியாத, வெளியே புலப்படாத விரிசல் தண்டவாளத்தில் இருப்பதை யு.எஸ்.எப்.டி., கருவி மூலம் அறிந்து கொள்ள முடியும். ெரயில் தண்டவாளங்கள் நிலையை அறிய, ஆண்டுக்கு ஒருமுறை இதுபோன்ற சோதனை நடத்தப்படும் என்றனர்.

    • ரெயில்வே பாதை அடைக்கப்பட்டதால் வழித்தடம் இல்லாமல் சிரமத்திற்கு ஆளாகி உள்ளோம்.
    • இந்த நகருக்குள் 60க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட அமைப்பு சாரா கட்டுமான தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூர் மேற்கு வஞ்சிப்பாளையம் சென்னிமலை கவுண்டர் நகருக்கு செல்லும் ரெயில்வே பாதை அைடக்கப்பட்டுள்ளது. இந்த நகருக்குள் 60க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். பல ஆண்டுகளாக போக்குவரத்து சாலையாக ரெயில்வே பாதையை பயன்படுத்தி வந்தோம். சாலையை விரிவுப்படுத்துவதற்காக தற்போது ரெயில்வே பாதை அடைக்கப்பட்டதால் வழித்தடம் இல்லாமல் சிரமத்திற்கு ஆளாகி உள்ளோம். எனவே வழித்தடம் அமைத்து தர வேண்டும் என கூறியுள்ளனர். 

    • ரெயில்வே தண்டவாளம் பகுதியில், மது, கஞ்சா பயன்படுத்தும் நபர்கள் தேவையில்லாமல் சுற்றி வந்தால், அவர்கள் கைது செய்யப்பட்டு, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
    • ஒதுக்குப்புறமான பகுதியாக உள்ளதால் கஞ்சா ஆசாமிகளும், சட்ட விரோத செயல்களும் அதிகரித்து வருகிறது.

    உடுமலை:

    கோவை- திண்டுக்கல் வழித்தடத்தில்உடுமலை- கொழுமம் ரெயில்வே கேட் பகுதியில் தண்டவாள சந்திப்பு பகுதியில் சிறிய அளவிலான ஜல்லி கற்கள் காணப்பட்டது. இதனை கண்ட ரெயில்வே ஊழியர்கள் உடனடியாக கற்களை அப்புறப்படுத்தினர். இச்சம்பவத்தால் ரெயில்வே போக்குவரத்தில் எவ்வித பாதிப்பும் இல்லை. இது குறித்து ரெயில்வே போலீசார் கூறியதாவது: -

    ரெயில்வே வழித்தடம் அருகில், டாஸ்மாக் கடை உள்ளதால், தண்டவாளம் பகுதியில் அமர்ந்து பலர் மது அருந்தி வருகின்றனர். மேலும் ஒதுக்குப்புறமான பகுதியாக உள்ளதால் கஞ்சா ஆசாமிகளும், சட்ட விரோத செயல்களும் அதிகரித்து வருகிறது. இது சதிச்செயலாக இருக்க வாய்ப்பில்லை. தண்டவாளத்திற்கு மேல் பெரிய அளவிலான கல் வைத்தால் மட்டுமே, சதிச்செயலாக கருத முடியும். கேட் பகுதியில், தண்டவாளம் மற்றும் ரோட்டில் உள்ள இரும்பு பகுதிக்கு இடையில் ஜல்லிக்கற்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளதால், போதை குடிமகன்கள் யாராவது இதனை செய்திருக்கலாம். ரெயில்வே வழித்தடத்தில், கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும். ரெயில்வே தண்டவாளம் பகுதியில், மது, கஞ்சா பயன்படுத்தும் நபர்கள் தேவையில்லாமல் சுற்றி வந்தால், அவர்கள் கைது செய்யப்பட்டு, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். கற்களை அகற்றும் வகையில், ரெயில்வே கேட் சிறிது நேரம் மூடப்பட்டதால் சாலை போக்குவரத்து பாதித்தது.

    மும்பையில் ரெயில் தண்டவாளங்களை கடந்தபோதும், கவனக்குறைவாக பயணித்தபோதும் ரெயில்களில் அடிபட்டு ஒரே நாளில் 12 பேர் உயிரிழந்தனர். #RailTracksDeaths #RailwayPolice #Mumbai
    மும்பை:

    ரெயில்வே கிராசிங்கை கடக்கும்போது கவனமாக கடந்து செல்ல வேண்டும், ரெயில் நிலையங்களில் தண்டவாளத்தை கடக்கக்கூடாது என தொடர்ந்து அறிவுறுத்தியபோதிலும் பயணிகளின் கவனக்குறைவால் உயிர்ப்பலி அதிகரித்து வருகிறது. மக்கள் தொகை அதிகம் உள்ள மும்பை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்று மட்டும் 12 பேர் உயிரிழந்துள்ளனர். 5 பேர் காயமடைந்துள்ளனர்.

    தண்டவாளத்தை கடந்தபோதும், அதிக கூட்ட நெரிசலின்போது ரெயிலில் இருந்து தவறி விழுந்தும், தற்கொலை செய்தும் உயிரிழந்துள்ளனர்.



    தானே மாவட்டம் மற்றும் கல்யாண் நகரில் தலா 3 பேர் உயிரிழந்துள்ளனர். மும்பை வடாலா பகுதியில் 2 பேரும், குர்லா, மத்திய மும்பை, பாந்த்ரா, டோம்பிவிலி பகுதியில் தலா ஒருவரும் ரெயிலில் அடிபட்டு இறந்துள்ளதாக அரசு ரெயில்வே காவல்துறை தெரிவித்துள்ளது.

    கடந்த ஆண்டு மும்பை மற்றும் புறநகர்ப் பகுதியில் மொத்தம் 3014 பேர் ரெயில்களில் அடிபட்டு இறந்ததாக, தகவல் அறியும் உரிமைச் சட்ட மனுவிற்கு ரெயில்வே காவல்துறை பதில் அளித்தது குறிப்பிடத்தக்கது. #RailTracksDeaths #RailwayPolice #Mumbai
    திருச்சி அருகே இன்று காலை தண்டவாளத்தில் ஒரு ஆணின் பிணம் கிடந்தது. அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    திருச்சி:

    திருச்சி ஜீயபுரம் - எலமனூர் ரெயில் பாதையில் இன்று காலை தண்டவாளத்தில் ஒரு ஆணின் பிணம் கிடந்தது. இது குறித்து திருச்சி ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் லெட்சுமி சம்பவ இடத்திற்கு சென்று வாலிபரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார். அப்போது இறந்த வாலிபர் அந்தநல்லூர் முத்தமிழ் நகரைச் சேர்ந்த வீரமணி - பாக்கியலெட்சுமி தம்பதியினரின் மகன் சுரேஷ்குமார் (வயது 35) என்பது தெரியவந்தது.

    சிறிது மனநலம் பாதிக்கப்பட்ட சுரேஷ்குமார் இன்று காலை அந்த வழியாக சென்ற போது ரெயில் மோதி இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    சுரேஷ்குமார் உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது உடல் டாக்டர்கள் மூலம் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. பிரேத பரிசோதனையின் முடிவில் அவர் எப்படி இறந்தார் என்பது தெரியவரும். இந்த சம்பவம் ஜீயபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ×