

திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட அமைப்பு சாரா கட்டுமான தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
திருப்பூர் மேற்கு வஞ்சிப்பாளையம் சென்னிமலை கவுண்டர் நகருக்கு செல்லும் ரெயில்வே பாதை அைடக்கப்பட்டுள்ளது. இந்த நகருக்குள் 60க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். பல ஆண்டுகளாக போக்குவரத்து சாலையாக ரெயில்வே பாதையை பயன்படுத்தி வந்தோம். சாலையை விரிவுப்படுத்துவதற்காக தற்போது ரெயில்வே பாதை அடைக்கப்பட்டதால் வழித்தடம் இல்லாமல் சிரமத்திற்கு ஆளாகி உள்ளோம். எனவே வழித்தடம் அமைத்து தர வேண்டும் என கூறியுள்ளனர்.