search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெயில்வே தண்டவாளங்கள்"

    • திருப்பூர் ரெயில்வே எல்லைக்கு உட்பட்ட திருப்பூர் - வஞ்சிபாளையம் வழித்தட தண்டவாளத்தில் சோதனை பணிகள் தொடங்கியது.
    • ரெயில் தண்டவாளங்கள் நிலையை அறிய, ஆண்டுக்கு ஒருமுறை இதுபோன்ற சோதனை நடத்தப்படும் என்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் ெரயில்வே எல்லைக்கு உட்பட்ட திருப்பூர் - வஞ்சிபாளையம் வழித்தட தண்டவாளத்தில் சோதனை பணிகள் தொடங்கியது. இதில் தண்டவாளத்தின் உட்பகுதியில் ஏற்படும் நுண்ணிய, லேசான விரிசலையும் கண்டறியும் யு.எஸ்.எப்.டி., (அல்ட்ரா சானிக் பிளா ரீடெக்டர்) டிஜிட்டல் கேமரா மூலம் தண்டவாளங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. மேலும் திருப்பூர் ெரயில் நிலையத்தில் இருந்து தொடங்கி, சிக்கண்ணா கல்லூரி வரையிலும், இரண்டாம் கட்டமாக அணைப்பாளையம் முதல் வஞ்சிபாளையம் என இரு பிரிவுகளாக சோதனை நடத்தப்பட்டது. எந்த இடத்திலும் விரிசல் கண்டறியப்படவில்லை. இதுகுறித்து ெரயில்வே பொறியியல் கண்காணிப்பு பிரிவு அதிகாரிகள் கூறுகையில், கண்ணுக்கு தெரியாத, வெளியே புலப்படாத விரிசல் தண்டவாளத்தில் இருப்பதை யு.எஸ்.எப்.டி., கருவி மூலம் அறிந்து கொள்ள முடியும். ெரயில் தண்டவாளங்கள் நிலையை அறிய, ஆண்டுக்கு ஒருமுறை இதுபோன்ற சோதனை நடத்தப்படும் என்றனர்.

    ×