search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வரைபடம்"

    • 16 கால் மண்டபம், கோவில் ராஜகோபுரம் ஆகியவற்றை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பார்வையிட்டார்.
    • கோவிலின் வரைபடத்தை வைத்து மின்விளக்குகள் பொருத்துதல் தொடர்பாக ஆய்வு செய்தார்.

    மன்னார்குடி:

    மன்னார்குடி ராஜகோபா லசாமி கோவிலில் குடமு ழுக்கு திருப்பணி ஆயத்த பணிகளை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அப்போது நுழைவு வாயிலில் உள்ள 16 கால் மண்டபம், கோவில் ராஜகோபுரம், மற்றும் செங்க மலத்தாயார், ராஜ கோபாலசாமி சன்ன திகள் ஆகியவற்றை பார்வையி ட்டார்.

    தொடர்ந்து, கோவிலின் வரைபடத்தை வைத்து கோவிலில் மின்விளக்குகள் பொருத்துதல் தொடர்பாக ஆய்வு செய்தார்.

    ஆய்வின்போது, கோவில் நிர்வாக அலுவலர் மாதவன், இந்து சமய அறநிலையத்துறை மின்சார பிரிவு செயற்பொறியாளர் வெங்கட சுப்பிரமணியன், தொல்லியல் துறை சேகர், மாவட்ட வன அலுவலர் ஸ்ரீதர், மன்னார்குடி நகர்மன்ற தலைவர் மன்னை சோழராஜன், கோவில் அறங்காவலர் குழு தலைவர் இளவரசன், தி.மு.க. நகர செயலாளர் வீரா கணேசன், ஒன்றிய செயலாளர் முத்துவேல் சிவா, தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர்கள் பாக்கியசாமி, பைங்காநாடு இளையராஜா உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • வேறு தொழில் தெரியாது என்பதால் வாழ்வாதாரம் பாதிக்கும்.
    • முடிந்த அளவு விவசாய நிலங்களை தவிர்த்து வாழ்வாதாரத்தை காக்க வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஒன்றியம் பருவாய் கிராமத்தில் 86.38 ஏக்கர் நிலம் விமானப்படை தள விரிவாக்கத்துக்காக கையகப்படுத்தப்பட உள்ளது.பல ஆண்டுகளாக விவசாயம் மற்றும் கால்நடைவளர்ப்பு தொழில் செய்துவருகிறோம். விவசாயத்தை விட்டால் வேறு தொழில் தெரியாது என்பதால் வாழ்வாதாரம் பாதிக்கும். சூலூர் விமானப்படை தளத்தை ஒட்டி, ஏறத்தாழ 400 ஏக்கர் தரிசு நிலம் கேட்பாரற்று நீண்ட காலமாக கிடைக்கிறது.

    மொத்தம் கையகப்படுத்தப்பட உள்ளதாக கூறப்படும், 86.38 ஏக்கருக்காக விவசாய நிலங்களை எடுக்காமல், பயன்பாடின்றி கிடக்கும் தரிசு நிலத்தை எடுக்க தமிழக அரசின் வருவாய்த்துறை முன்வர வேண்டும் எனவிவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இக்கோரிக்கையை எழுத்துப்பூர்வமாக முதல்வர், மத்திய அமைச்சர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், விவசாயிகளே வரைபடம் ஒன்றை தயாரித்துள்ளனர். அதில் கையகப்படுத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ள 86.38 ஏக்கர் விவசாய நிலம் மற்றும் பயன்பாடு இன்றி கிடக்கும் தரிசு நிலம் ஆகியவற்றை இரு வேறு வண்ணங்களில் காட்டும்படியாக உள்ளது. முடிந்த அளவு விவசாய நிலங்களை தவிர்த்துவாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    முழு காஷ்மீர் பகுதியும் இந்தியாவின் அங்கமாக இருப்பது போல சமூக அறிவியல் பாடத்தில் வரைபடம் இருந்ததை அடுத்து அந்த புத்தகங்களுக்கு பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண அரசு தடை விதித்துள்ளது.
    இஸ்லாமாபாத்:

    காஷ்மீரின் ஒரு பகுதி இந்தியா உடன் இணைந்தும், மற்றொரு பகுதியை பாகிஸ்தான் ஆகிரமித்தும் வைத்துள்ளது. இந்நிலையில், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் 2 முதல் 8-ம் வகுப்புக்கு வழங்கப்பட்டுள்ள சமூக அறிவியல் பாட புத்தகத்தில் முழு காஷ்மீர் பகுதியும் இந்தியாவின் அங்கமாக இருப்பது போன்ற வரைபடம் இருந்துள்ளது.

    இந்த தகவல்கள் வெளியானதும் மாகாண அரசு இந்த புத்தகங்களுக்கு தடை விதித்தது. மேற்கண்ட பள்ளிகளுக்கு இது தொடர்பாக நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. 

    மேலும், வரும் காலத்தில் இது போன்ற நிகழ்வுகள் நடக்காத வண்ணம் இருக்குமாறு பாட புத்தக வடிவமைப்பு குழு விதிகளை உருவாக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    ×