என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வரைபடம்"

    • 16 கால் மண்டபம், கோவில் ராஜகோபுரம் ஆகியவற்றை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பார்வையிட்டார்.
    • கோவிலின் வரைபடத்தை வைத்து மின்விளக்குகள் பொருத்துதல் தொடர்பாக ஆய்வு செய்தார்.

    மன்னார்குடி:

    மன்னார்குடி ராஜகோபா லசாமி கோவிலில் குடமு ழுக்கு திருப்பணி ஆயத்த பணிகளை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அப்போது நுழைவு வாயிலில் உள்ள 16 கால் மண்டபம், கோவில் ராஜகோபுரம், மற்றும் செங்க மலத்தாயார், ராஜ கோபாலசாமி சன்ன திகள் ஆகியவற்றை பார்வையி ட்டார்.

    தொடர்ந்து, கோவிலின் வரைபடத்தை வைத்து கோவிலில் மின்விளக்குகள் பொருத்துதல் தொடர்பாக ஆய்வு செய்தார்.

    ஆய்வின்போது, கோவில் நிர்வாக அலுவலர் மாதவன், இந்து சமய அறநிலையத்துறை மின்சார பிரிவு செயற்பொறியாளர் வெங்கட சுப்பிரமணியன், தொல்லியல் துறை சேகர், மாவட்ட வன அலுவலர் ஸ்ரீதர், மன்னார்குடி நகர்மன்ற தலைவர் மன்னை சோழராஜன், கோவில் அறங்காவலர் குழு தலைவர் இளவரசன், தி.மு.க. நகர செயலாளர் வீரா கணேசன், ஒன்றிய செயலாளர் முத்துவேல் சிவா, தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர்கள் பாக்கியசாமி, பைங்காநாடு இளையராஜா உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • வேளச்சேரி பகுதியில் உள்ள மக்கள் தங்களது கார்களை பாதுகாப்பாக மேம்பாலத்தில் நிறுத்தி இருந்தனர்.
    • புதிதாக இடம் வாங்குபவர்கள் அந்தந்த பகுதிகளுக்கு சென்று இங்கு தண்ணீர் தேங்குமா? என்று அடுத்தவர்களிடம் கேட்பது வழக்கம்.

    சென்னை:

    சென்னையில் ஒவ்வொரு பருவமழையின் போதும் பல பகுதிகள் வெள்ளத்தில் மிதப்பது வாடிக்கையாக உள்ளது. சென்னை மாநகரம் மட்டுமின்றி புறநகர் பகுதிகளிலும் வெள்ளம் தேங்குவதும் அதை மக்கள் எதிர்கொள்வதும் தொடர்கதையாகவே உள்ளது.

    கடந்த வாரம் மழை வந்தபோது சென்னையில் 20 செ.மீ. அளவுக்கு மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்ததால், வேளச்சேரி பகுதியில் உள்ள மக்கள் தங்களது கார்களை பாதுகாப்பாக மேம்பாலத்தில் நிறுத்தி இருந்தனர்.

    ஏனென்றால் அவர்கள் வசிக்கும் வீடுகளில் முட்டளவுக்கு மேல் தண்ணீர் தேங்கும் என்பதால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டனர்.

    இதேபோல் பல பகுதிகளிலும் மக்கள் தங்களது உடைமைகளை பாதுகாப்பாக வைக்க தொடங்கினார்கள்.

    இதை கருத்தில் கொண்டு மழை காலங்களில் எந்தெந்த பகுதிகளில் எவ்வளவு மழைநீர் தேங்கும் என்பதை மக்கள் தெரிந்து கொள்ள சென்னை சி.எம்.டி.ஏ. இப்போது புதிதாக வரைபடம் தயாரித்துள்ளது. இதற்கு அரசு அனுமதி அளித்ததும் மாநகராட்சிக்கு வரைபடம் வழங்கப்படும்.

    சென்னை சி.எம்.டி.ஏ.வின் பழைய எல்லைக்குட்பட்ட அதாவது, சென்னை, ஆவடி, தாம்பரம் மாநகராட்சி பகுதிகளை உள்ளடக்கிய 1189 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்கான பகுதிகளில் (வண்டலூர் வரை) புதிதாக யாரேனும் வீடு கட்ட மாநகராட்சியில் விண்ணப்பிக்கும்போது அவர்களுக்கு இந்த வரைபடம் காண்பிக்கப்படும். அந்த பகுதியில் எவ்வளவு தண்ணீர் தேங்கும் என்ற விவரங்களை தெரிவித்து அதிகாரிகள் ஆலோசனை வழங்குவார்கள்.

    2 அடி தண்ணீர் தேங்குமா? அல்லது 5 அடி தண்ணீர் தேங்குமா? 10 அடிக்கு தண்ணீர் நிற்குமா? போன்ற விவரங்களின் அடிப்படையில் அதற்கேற்ப கட்டுமானங்களை மேற்கொள்ள தேவையான தகவலை கொடுப்பார்கள்.

    இதன் மூலம் பொதுமக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் வீடு கட்ட முடியும். புதிதாக இடம் வாங்குபவர்கள் அந்தந்த பகுதிகளுக்கு சென்று இங்கு தண்ணீர் தேங்குமா? என்று அடுத்தவர்களிடம் கேட்பது வழக்கம்.

    ஆனால் இப்போது சி.எம்.டி.ஏ. வரைபடம் (மேப்) தயாரித்துள்ளதால் அதனை பார்த்து தண்ணீர் தேங்கும் பகுதிகளை மக்கள் தெரிந்து கொண்டு அதற்கேற்ப முடிவெடுக்க வாய்ப்பு உருவாக்கப்பட்டு உள்ளது. விரைவில் இது நடைமுறைக்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மொத்தம் 741 பண்டைய தமிழ் எழுத்துக்களால் உருவான அசத்தலான உருவப்படம். தமிழரை பாராட்டி ஆனந்த் மஹிந்திரா வெளியிட்ட ட்விட் வைரலாகி வருகிறது.


    தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த நபர் வரைந்த ஓவியம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கனேஷ் என்ற நபர் மஹிந்திரா குழும தலைவர் ஆனந்த் மஹிந்திராவின் உருவ படத்தை மிக வித்தியாசமாக வரைந்து அசத்தி இருக்கிறார். 

    ஓவியத்தில் கணேஷ் பண்டைய தமிழ் எழுத்துக்களை மட்டுமே பயன்படுத்தி இருக்கிறார். இதனை உற்று பார்க்கும் போது உருவப்படத்தில் தமிழ் எழுத்துக்கள் மட்டுமே தெரியும். ஓவியத்தில் ஆனந்த் மஹிந்திரா உருவப்படத்தை வரைய கணேஷ் மொத்தம் 741 பண்டை கால தமிழ் எழுத்துக்களை பயன்படுத்தி இருக்கிறார்.

     ஆனந்த் மஹிந்திரா

    கணேஷ் இந்த உருவப்படத்தை வரைந்த போது எடுத்த வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டு அதில் ஆனந்த் மஹிந்திரா மற்றும் மஹிந்திரா குழும நிறுவனங்களையும் டேக் செய்து இருக்கிறார். இதை கவனித்த ஆனந்த் மஹிந்திரா கணேஷ் ட்விட்-ஐ ரி-ஷேர் செய்தார். மேலும் இந்த வரைபடத்தின் பிரேம் செய்யப்பட்ட நகலை தனக்கு வழங்குமாறு ஆனந்த் மஹிந்திரா கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வரைபடத்தை தனது அறையில் வைத்து அலங்கரிக்க விரும்புவதாக அவர் மேலும் தெரிவித்தார். 

    இதுகுறித்து ஆனந்த் மஹிந்திரா ட்விட்டர் பதிவில், “ஆஹா, என் உருப்படம் 741 பழமையான தமிழ் எழுத்துக்களால் வடிவானது, நான் வியக்கிறேன். தமிழ் மொழி பிரம்மாண்டத்தின் பொருட்டு, உருவாக்கியவரின் பாராட்டாக, உருவ படத்தை என் வீட்டில் வைக்க  விருப்பபடுகிறேன்..” என குறிப்பிட்டு இருக்கிறார்.
    ×