search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாட்டுத்தாவணியில் அமைச்சர் சிவசங்கர் திடீர் ஆய்வு
    X

    மதுரை மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் இன்று அதிகாலை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    மாட்டுத்தாவணியில் அமைச்சர் சிவசங்கர் 'திடீர்' ஆய்வு

    • மதுரை மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் அமைச்சர் சிவசங்கர் ‘திடீர்’ ஆய்வு செய்தார்.
    • முன்பதிவு செய்துள்ள பயணிகளி டையே பஸ் வசதிகள் குறித்து கருத்துகளையும் அமைச்சர் எஸ்.எஸ்.சிவ சங்கர் கேட்டறிந்தார்.

    மதுரை

    தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் முடிந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வசிப்போர் அவரவர் சொந்த ஊர்களுக்கும், பணிபுரியும் இடத்திற்கும் செல்வதற்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சிறப்பு ஏற்பாடுகளை செய் துள்ளது.

    அதேவேளையில் ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்பது தொடர்பாக தீவிரமாக கண்காணிக்கவும் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் தீபாவளியை கொண்டாட சொந்தஊர் சென்ற பயணிகள் எந்தவித சிரமமும் இன்றி அவர்கள் ஊர் திரும்ப வேண்டிய ஏற்பாடுகளை செய்து தருமாறு அறிவுறுத்திய தோடு, அதனை பல்வேறு இடங்களுக்கு சென்று ஆய்வு நடத்தி யும் வருகிறார்.

    அந்த வகையில் மதுரை பைபாஸ் கிளை சார்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. நேற்று பொது விடுமுறை என்பதால் ஏராளமானோர் மதுரை ஆரப்பாளையம், மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர். ஒருங்கிணைந்த பேருந்து நிலையங்களில் குவியத் தொடங்கினர்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், தீபாவளி பண் டிகை முடிந்து சென்னை மற்றும் பல்வேறு பகுதிக ளுக்கு பயணிகள் பயணிக்க ஏதுவாக இயக்கப்படும் சிறப்பு பஸ்கள் குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டார். டிக்கெட் கட்டணம் குறித்த தகவல்களையும் அதிகாரிக ளிடம் கேட்டார்.

    அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு போக்குவ ரத்துக் கழகம் மதுரை கோட்ட முன்பதிவு விசாரணை மையம் மற்றும் அரசு விரைவு போக்குவரத்துக் கழக முன்பதிவு விசாரணை மையங்களில் ஆய்வு செய் தார்.

    மேலும் அனைத்து வழித்தடத்திலும் சிறப்பு பஸ்கள் இயக்கங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். முன்பதிவு செய்துள்ள பயணிகளிடையே பஸ் வசதிகள் குறித்து கருத்துகளையும் அமைச்சர் எஸ்.எஸ்.சிவ சங்கர் கேட்டறிந்தார்.

    இந்த ஆய்வின்போது தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மதுரை கோட்ட மேலாண்மை இயக்குநர் ஆறுமுகம் மற்றும் போக்குவரத்து கழக அதிகா ரிகள் உடனிருந்தனர்.

    Next Story
    ×